கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தபால் ஓட்டு எந்தெந்த சமயங்களில் தள்ளுபடியாகும் / செல்லாததாகும்...?

தள்ளுபடி செய்யவேண்டிய தபால் ஓட்டுகள் குறித்து தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.தபால் ஓட்டு பதிவில், செல்லாத ஓட்டு கண்டறிய, தேர்தல் கமிஷன் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. 




தபால் ஓட்டு உறைக்குள், உறுதிமொழி படிவம் இல்லை என்றாலோ, படிவத்தில் வாக்காளர் மற்றும் சான்றொப்பம் செய்த அதிகாரியின் கையெழுத்து இல்லை என்றாலோ, அது செல்லாத ஓட்டாக கருதப்படும்.உறுதிமொழி படிவத்தில் 



உள்ள வாக்காளர் வரிசை எண்ணும், ஓட்டு சீட்டு உறை மீது எழுதியுள்ள வரிசை எண்ணும் வேறுபட்டு இருந்தால், தள்ளுபடி செய்யலாம்.




உறுதிமொழி படிவத்தை, தனியாக உறைக்குள் வைக்காமல், ஓட்டு சீட்டுடன் சேர்த்து சிறிய உறைக்குள் வைத்திருந்தாலும் தள்ளுபடி செய்யலாம். ஓட்டு சீட்டை 'படிவம் ~ 13பி'க்குள் வைக்காமல், தனியே வைத்திருந்தாலும், ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளருக்கு ஓட்டளித்திருந்தாலும், போலி ஓட்டு சீட்டு என்றாலும் தள்ளுபடி செய்யலாம். 




சேதமாகி, முற்றிலும் கிழிந்த மற்றும் கசங்கிய நிலையிலோ உள்ள தபால் ஓட்டுகளையும் தள்ளுபடி செய்யலாம். இவற்றை தள்ளுபடி செய்ய தேர்தல் நடத்தும் அலுவலரின் முன் அனுமதி பெற வேண்டும்.

கர்ப்பிணிகளுக்கு அவரசகால வாட்ஸ்ஆப் உதவி எண் – தேசிய பெண்கள் ஆணையம் அறிமுகம்...

 நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணிகளுக்காண அவசர கால உதவி எண்ணை புதிதாக அறிமுகப்படுத்தியுளளது தேசிய பெண்கள் ஆணையம். இந்த எண் எல்லா நேரங்களிலும் செயல்பாட்டில் இருக்கும் என அறிவித்துள்ளது.


அவசர கால உதவி எண்:

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் பாதிப்பும் புதிய உச்சம் அடைகிறது. கொரோனா இரண்டாம் அலை 



தற்போது இந்தியாவில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த வருடத்தை விட இந்த கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை உருவாக்கியுள்ளது.


இதனால் மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. போதுமான படுக்கை வசதிகள் 



இல்லாததால் தரையில் படுக்கும் அவல நிலை ஏற்படுகிறது. கொரோனா வைரஸ் பரவியதில் இருந்தே மருத்துவமனைகளில் மற்ற நோய்களுக்கு சிகிக்சை அளிப்பதில்லை.


அதே போல் கர்பிணிகளையும் சில தனியார் மருத்துவமனைகள் அனுமதிப்பதில்லை. இதனால் கர்ப்பிணிகளுக்கு உரிய நேரத்தில் சிகிக்சை அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. தற்போது நாடு முழுவதும் இரவு நேர மற்றும் வார இறுதி ஊரடங்குகள் இருப்பதால் 



கர்ப்பிணிகளுக்கு அவசரமான நேரங்களில் போக்குவரத்து சேவைகள் கிடைப்பதில்லை. இதனை கருத்திற்கொண்டு இந்திய தேசிய பெண்கள் ஆணையம் கர்ப்பிணிகளுக்கு என அவசர உதவி வாட்ஸ் ஆப் எண்ணை 9354954224 மேலும் helpatnew@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எண் எல்லா நேரங்களிலும் செயல்பாட்டில் இருக்கும் எனவும் பெண்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

பள்ளிக் கல்வி - இடைநிற்றலை தவிர்க்க வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை - 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களின் முழுமையான வங்கிக் கணக்கு விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு...



 பள்ளிக் கல்வி - இடைநிற்றலை தவிர்க்க வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை - 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களின் முழுமையான வங்கிக் கணக்கு விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 31944/ கே / இ2/ 2020, நாள்: 23-04-2021...


>>>  பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 31944/ கே / இ2/ 2020, நாள்: 23-04-2021...




624 தற்காலிகப் பணியிடங்களுக்கு (G.O.No.47, Dated:20.03.2013) ஏப்ரல் - 2021 முதல் 3 மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை வெளியீடு...



624 தற்காலிகப் பணியிடங்களுக்கு (G.O.No.47, Dated:20.03.2013) ஏப்ரல் - 2021 முதல் 3 மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை வெளியீடு -  Proceedings of the Director of School Education R.C.No.000688/ L / E3 / 2021, Dated: 27-02-2021...


>>> Click here to Download Proceedings of the Director of School Education R.C.No.0011657/ L / E3 / 2021, Dated: 26-03-2021...



5000 ஆசிரியரல்லா பணியிடங்களில் தற்போது பணிபுரியும் 1272 பணியாளர்களுக்கு ஏப்ரல் 2021 மாத ஊதிய நீட்டிப்பு ஆணை...



5000 ஆசிரியரல்லா பணியிடங்களில் தற்போது பணிபுரியும் 1272 பணியாளர்களுக்கு ஏப்ரல் 2021 மாத ஊதிய நீட்டிப்பு ஆணை - பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் கடிதம் எண்: 8082/ ப.க.4(1) / 2021-1, நாள்: 30-04-2021...

>>> பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் கடிதம் எண்: 8082/ ப.க.4(1) / 2021-1, நாள்: 30-04-2021...





தனியார் பள்ளி ஆசிரியர்களும் நாளை முதல் பள்ளிக்கு வர தேவையில்லை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அறிவிப்பு...

 






கொரோனா தடுப்பூசி போடுவதற்கு விருப்பமுள்ள ஆசிரியர்கள் விவரம் கோருதல் - முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள்...



>>> கொரோனா தடுப்பூசி போடுவதற்கு விருப்பமுள்ள ஆசிரியர்கள் விவரம் கோருதல் - முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள்...


முகநூல் பதிவை விமர்சித்ததால் அரசு பள்ளியில் புகுந்து ஆசிரியருக்கு மிரட்டல்...

 மேட்டூர் அருகே முகநூல் பதிவில் விமர்சித்ததால் அரசுப்பள்ளிக்கு புகுந்து வேறு பள்ளி ஆசிரியர்கள் 



ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   இது குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர் CEO விடம் புகார் அளித்துள்ளார் .




3 ஆண்டில் 2 பாடங்கள் படித்தவருக்கு ஆசிரியர் பணி வழங்கும் தனி நீதிபதி உத்தரவு ரத்து...

 மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் பாபு. இவர் பிஎஸ்சி கணிதம் படிப்பில் முதல், இரண்டாம் ஆண்டை முடித்துள்ளார். மூன்றாம் ஆண்டில் பிஏ வரலாறு முடித்துள்ளார். இதையடுத்து அவர் கடந்த   1995ல் காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டம் வழங்கப்பட்டது. பின்னர் பாரதியார் 



பல்கலைக்கழகத்தில் B.Ed., முடித்தார். இதன்படி பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டார். 3ஆண்டில் 2 பாடங்கள் படித்துள்ளதால் ஆசிரியர் தேர்வு வாரியம்  நிராகரித்தது. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பணி வழங்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர் தேர்வாணைய தலைவர் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது 




இந்த மனுவை நீதிபதி கிருபாகரன், புகழேந்தி விசாரித்தனர். தேர்வாணைய தரப்பில் வக்கீல் சண்முகநாதன் ஆஜராகி நிர்ணயிக்கப்பட்ட படிப்பிற்கான தகுதி விண்ணப்பதாரர் பெறவில்லை. மூன்றாண்டில் இரண்டு பாடங்களை படித்து உள்ளார். இதை பணிக்கான தகுதியாக கருத முடியாது என வாதிட்டார். இந்த மனு மீது நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள் தேர்வாணைய தரப்பு வாதம் ஏற்புடையது என்பதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தனர்.




ஒரே பதவியில் 30 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு போனஸ் ஊதிய உயர்வு தொடர்பான அரசாணைகள்...

 


ஒரே பதவியில் 30 ஆண்டுகள் ( Super Grade / Senior Grade ) பணிபுரிந்தவர்களுக்கு போனஸ் ஊதிய உயர்வு தொடர்பான அரசாணைகள்...

Bonus Increment 30 Years Service G.O.No.562, Dated: 28.09.1998...


G.O.(Ms).No.483, Dated : 08.09.1998 - Tamil Nadu Revised Scale of Pay Rules, 1998—Sanction of stagnation increment - Orders-Issued...


>>> Click here to Download G.O.No.562, Dated: 28.09.1998...


>>> Click here to Download G.O.(Ms).No.483, Dated : 08.09.1998...




துறைத் தேர்வுகள் (Departmental Examinations) மே - 2021 அறிவிப்பு வெளியீடு...



 துறைத் தேர்வுகள் (Departmental Examinations) மே - 2021 அறிவிக்கை வெளியீடு...


தேர்வு தொடங்கும் நாள் : 22.06.2021 


தேர்வு முடியும் நாள் : 30.06.2021 


இணையவழி முன்பதிவு முடியும் நாள் : 28.05.2021 இரவு 11.59...



DEPARTMENTAL EXAMINATION MAY 2021...


💥 APPLY ONLINE...


💥 NOTIFICATION...


💥 ANNEXURE-I - INSTRUCTION...


💥 ANNEXURE-III - FEES...


💥 ANNEXURE-IV - TIME TABLE...


என்பிஎஸ்: இனி முழு பணப் பலன் கிடைக்கும்...

 தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (என்பிஎஸ்) பயனாளா்கள் தங்கள் சேமிப்புத் தொகையிலிருந்து 40 சதவீதத்தை ஓய்வூதிய நிதி சேமிப்பாக முதலீடு செய்வது கட்டாயமில்லை 



என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பயனாளா்களுக்கு இனி முழு பணப் பலனும் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.



இது தொடா்பாக, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை வளா்ச்சி ஆணையத்தின் (பிஎஃப்ஆா்டிஏ) தலைவா் சுப்ரதீம் பந்தோபாத்யாய கூறுகையில், 


‘‘என்பிஎஸ் பயனாளா்கள் தங்கள் சேமிப்புத் தொகையிலிருந்து 40 சதவீதத்தை ஓய்வூதிய நிதி சேமிப்பாக முதலீடு செய்ய வேண்டியது சட்டத்தின்படி கட்டாயமாக இருந்தது. அத்தொகையானது சந்தை சாா்ந்த வட்டி விகிதத்துக்கு ஏற்ப மாதந்தோறும் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள 60 சதவீத தொகையை ஒரே நேரத்தில் அவா்கள் பெற்றுக் கொள்ளலாம். 


வட்டி விகிதம் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் முதலீடு செய்யப்படும் தொகையின் வாயிலாக கிடைக்கும் லாபம் குறைந்துள்ளது. எனவே, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் பயனாளா்கள், சேமிப்புத் தொகையிலிருந்து 40 சதவீதத்தை முதலீடு செய்ய வேண்டியது 



இனி கட்டாயமில்லை. முழு பணத்தையும் அவா்கள் பெற்றுக் கொள்ளலாம்.


இதன்படி, ஓய்வூதியத் திட்டத்தில் ரூ.5 லட்சம் வரை சேமிப்புத் தொகை கொண்ட பயனாளா்கள், பணி ஓய்வு பெறும்போது மொத்த தொகையையும் பெற்றுக் கொள்வதற்கு விரைவில் அனுமதி அளிக்கப்படவுள்ளது. 


இதுவரை ரூ.2 லட்சம் வரை சேமிப்புத் தொகை கொண்ட பயனாளா்களுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டு வந்தது. ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக சேமிப்புத் தொகை கொண்ட பயனாளா்கள் மட்டும், அதில் 40 சதவீதத்தை அக்கணக்கிலேயே வைத்துக் கொள்ளவும், தொகையை படிப்படியாக எடுத்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கும் வகையில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. 


40 சதவீத முதலீட்டுத் தொகை விவகாரத்தில் பயனாளா்கள் பலா் அதிருப்தி தெரிவித்ததையடுத்து, இந்த மாற்றங்கள் புகுத்தப்பட்டுள்ளன’’ என்றாா். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் 



என்று 2019-20-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது மத்திய நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. உறுதியளிக்கப்பட்ட  முதிா்வுத் தொகையை அளிக்கும் திட்டமும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.



12 மணிநேரம் வேலையா..? ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்குமா புதிய கொள்கை.. உண்மை என்ன...?

 


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு உள்ள புதிய Wage Code கொள்கையின் மூலம் ஊழியர்களின் வேலை நேரம், சம்பள கணக்கீட்டு, பிஎப் தொகை, கிராஜுவிட்டி ஆகியவை முக்கிய மாற்றங்களை அடைய உள்ளது. இதில் 



குறிப்பாக ஊழியர்களின் வேலை நேரத்தில் செய்யப்பட்டு உள்ள மாற்றங்கள் ஊழியர்கள் மத்தியில் அதிகளவிலான பயத்தையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.



புதிய ஊதிய குறியீடு மசோதா

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய ஊதிய குறியீடு மசோதாவில் மக்களுக்குப் பல்வேறு சந்தேகங்கள் உள்ளது, குறிப்பாகத் தற்போது இருக்கும் 9 மணிநேர வேலை நேரத்தை 12 மணிநேரம் உயர்த்துவது குறித்து ஊழியர்கள் மட்டத்தில் அச்சம் எழுந்துள்ளது.



4 நாட்கள் மட்டுமே வேலை

உலக நாடுகளில் பல நிறுவனங்கள் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் முறையை அமல்படுத்திப் பெரிய அளவிலான வர்த்தக மாற்றத்தைச் செய்துள்ளது. இது ஊழியர்களுக்கும் சரி, நிறுவனங்களுக்கும் சரி அதிகளவிலான லாபம் அளிப்பதாக ஆய்வுகள் கூறும் நிலையில், இந்தியாவிலும் இதுபோன்ற முறையை அமல்படுத்த நிறுவனங்களுக்கு இந்தப் புதிய ஊதிய குறியீடு மசோதா மூலம் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.



12 மணிநேரம் வேலைக்கு அனுமதி

தற்போது நடைமுறையில் தினமும் 9 மணிநேரம் வேலை என்பதில் எவ்விதமான மாற்றமும் இல்லை, ஆனால் ஒரு நிறுவனம் விரும்பினால் ஒரு நாளுக்கு 12மணிநேரம் ஊழியர்களைப் பணியில் அமர்த்தலாம். அப்படி அமர்த்து போதும் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலைநாட்களாக இருக்க வேண்டும் என்பதையும் இந்த மசோதாவில் தெளிவுபடுத்தியுள்ளது.



ஊழியர்களுக்குச் சாதகமானது

இதன் மூலம் நிறுவனங்களுக்குக் கூடுதலாகத் தினமும் 3 மணிநேரம் ஊழியர்களின் பணிகளைப் பெற முடியும், அதேநேரத்தில் ஊழியர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை பெற முடியும். இதனால் ஊழியர்களின் Work Life Balance மேம்படும்.



30 நிமிடம் இடைவேளை கட்டாயம்

இதே ஊதிய குறியீடு மசோதா கொள்கையில் ஊழியர்களின் நலனுக்காக 5 மணி நேரத்திற்குக் கட்டாயம் 30 நிமிடம் இடைவேளை அளிக்க வேண்டும் என்பதை உறுதி செய்துள்ளது. மேலும் 5 மணிநேரத்திற்கும் அதிகமான தொடர் வேலை செய்யும் முறையைத் தடை செய்துள்ளது.



ஓவர்டைம் கணக்கீடு

மேலும் தற்போது நடைமுறையில் 15 முதல் 30 நிமிடத்திற்குள் கூடுதலாக வேலை செய்தால் ஓவர்டைம் கணக்கிடப்படாது. 30 நிமிடத்திற்கு அதிகமாக வேலை செய்தால் மட்டுமே கூடுதல் பணிநேரம் கணக்கிடப்படும்.



இப்புதிய ஊதியக் குறியீடு மசோதாவில் 15 நிமிடத்திற்கு அதிகமாக ஒரு நிமிடம் பணியாற்றினாலே 30 நிமிடத்திற்கான ஓவர்டைம் கணக்கிடப்பட வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது.



அடிப்படை சம்பள கணக்கீடு

மேலும் ஒரு ஊழியரின் மொத்த சம்பளத்தில் 50 சதவீதம் மற்றும் அதற்கு அதிகமான தொகையை அடிப்படை சம்பளமாகக் கணக்கிடப்பட வேண்டும் எனப் புதிய உத்தரவை புதிய ஊதிய குறியீடு மசோதாவில் அறிவிக்கப்பட்டு உள்ளது.



Take Home Salary அளவு குறையும்

இந்தச் சம்பள கணக்கீட்டு முறையில் ஏற்பட்டு உள்ள மாற்றத்தால் ஊழியர்களுக்கான பிஎப் மற்றும் கிராஜுவிட்டி ஆகியவை அதிகரிக்கும். இது ஓய்வுபெற்றும் போது பெரிய அளவில் உதவும், ஆனால் அதேவேளையில் பிஎப் மற்றும் கிராஜுவிட்டிக்கு அதிகப் பணம் பிடித்தம் செய்யப்படுவதால் டேக் ஹோம் சேலரி அளவீட்டில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படும்.



ஏப்ரல் 1 முதல் அமலாக்கம்

இப்புதிய கொள்கை மாற்றங்கள் அனைத்தும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட வேண்டும், ஆனால் மாநில அரசுகளும், நிறுவனங்களும் முழுமையாகத் தயாராக நிலையிலும், கொரோனா பாதிப்பால் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ள சூழ்நிலையிலும் கால தாமதம் ஆகி வருகிறது.


இன்றைய (30-04-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஏப்ரல் 30, 2021



தீர்ப்புகளில் சாதகமான எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் சில காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். முடியும் என எதிர்பார்த்த சில காரியங்களில் காலதாமதம் உண்டாகும். செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : காலதாமதம் உண்டாகும்.


பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும். 


கிருத்திகை : கவனம் வேண்டும்.

---------------------------------------




ரிஷபம்

ஏப்ரல் 30, 2021



புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவுநிலை மேம்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் நட்பு வட்டம் விரிவடையும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் ஏற்படும். புதிய ஆடைச்சேர்க்கை உண்டாகும். திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.


ரோகிணி : உறவுநிலை மேம்படும். 


மிருகசீரிஷம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

ஏப்ரல் 30, 2021



விளையாட்டுத்துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். சபைகளில் ஆதரவு அதிகரிக்கும். பணியில் எடுத்த செயலை முடிப்பதன் மூலம் செல்வாக்கு உயரும். புதிய எண்ணங்களாலும், சாதகமான முயற்சியாலும் பொருட்சேர்க்கை உண்டாகும். உடல் தோற்றத்தின் மாறுதலுக்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் இருந்துவந்த தேவையற்ற குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மிருகசீரிஷம் : சாதகமான நாள். 


திருவாதிரை : செல்வாக்கு உயரும். 


புனர்பூசம் : மகிழ்ச்சி உண்டாகும். 

---------------------------------------




கடகம்

ஏப்ரல் 30, 2021



சமூகச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். சுயதொழில் புரிபவர்களுக்கு இருந்துவந்த பணச்சிக்கல்கள் நீங்கும். நிர்வாகத்தில் மாற்றங்கள் உண்டாகும். சங்கீத இசைக்கலைஞர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். 



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும். 


பூசம் : மாற்றங்கள் உண்டாகும். 


ஆயில்யம் : எச்சரிக்கையுடன் செயல்படவும்.

---------------------------------------




சிம்மம்

ஏப்ரல் 30, 2021



மறைமுக விமர்சனங்கள் தோன்றி மறையும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சொத்து வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்கள் லாபகரமாக அமையும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது நன்மையளிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மகம் : விமர்சனங்கள் மறையும்.


பூரம் : லாபகரமான நாள். 


உத்திரம் : நன்மை உண்டாகும்.

---------------------------------------




கன்னி

ஏப்ரல் 30, 2021



அரசு தொடர்பான பணிகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பனையாகும். மனதில் தைரியத்துடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். தடைபட்டு வந்த செயல்களை செய்து முடிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



உத்திரம் : ஆதாயம் உண்டாகும். 


அஸ்தம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும். 


சித்திரை : அனுபவம் உண்டாகும். 

---------------------------------------




துலாம்

ஏப்ரல் 30, 2021



உத்தியோகத்தில் இழந்த இடத்தை மீண்டும் பெறுவீர்கள். சில செயல்களை செய்து முடிக்க அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. மனதிற்கு நெருங்கியவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



சித்திரை : அலைச்சல்கள் அதிகரிக்கும். 


சுவாதி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


விசாகம் : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------




விருச்சகம்

ஏப்ரல் 30, 2021



கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். புத்திரர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவது நன்மையளிக்கும். கடினமான வேலையை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



விசாகம் : ஆதரவான நாள். 


அனுஷம் : மனம் மகிழ்வீர்கள்.


கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




தனுசு

ஏப்ரல் 30, 2021



தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். மனதிற்கு விருப்பமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நன்மையளிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவிகள் கிடைக்கும். கோபத்தை குறைத்து நிதானத்துடன் செயல்படவும். சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வீட்டில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மூலம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.


பூராடம் : உதவிகள் கிடைக்கும். 


உத்திராடம் : பொறுப்புகள் குறையும்.

---------------------------------------




மகரம்

ஏப்ரல் 30, 2021



போட்டிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வி பயிலும் விதங்களில் மாற்றங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் செய்யும் சிறு மாற்றங்களின் மூலம் லாபம் மேம்படும். மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கிடையே செல்வாக்கு உயரும். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : வெற்றிகரமான நாள். 


திருவோணம் : லாபம் மேம்படும். 


அவிட்டம் : செல்வாக்கு உயரும். 

---------------------------------------




கும்பம்

ஏப்ரல் 30, 2021



சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் குறையும். அநாவசியமான செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



அவிட்டம் : திருப்திகரமான நாள்.


சதயம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.


பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள். 

---------------------------------------




மீனம்

ஏப்ரல் 30, 2021



உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் தடை, தாமதங்கள் உண்டாகும். மனைவி வழி உறவினர்களின் மூலம் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும். 


உத்திரட்டாதி : தாமதங்கள் உண்டாகும். 


ரேவதி : லாபகரமான நாள்.

---------------------------------------


வருமான வரிச் சலுகை திட்டம் - அவகாசம் நீட்டிப்பு...


 வருமான வரி வழக்குகளை விரைந்து தீர்ப்பதற்கான, 'விவாத் சி விஸ்வாஸ்' திட்டம், ஜூன், 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம், 


வருமான வரி மதிப்பீடு, அபராதம், வட்டி ஆகியவை தொடர்பான பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு காண, 'விவாத் சி விஸ்வாஸ்' எனப்படும், சலுகை திட்டத்தை அறிமுகப்படுத்தியது.



இந்த திட்டத்தில், மதிப்பீடு செய்யப்பட்ட வருமான வரியை செலுத்துவோருக்கு அபராதம், வட்டி, காலதாமத கட்டணம் ஆகியவை தள்ளுபடி செய்யப்படும். நீதிமன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட மாட்டாது. அதனால், இந்த திட்டம், வருமான வரி செலுத்துவோரிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 



  ஏராளமான வழக்குகளுக்கு துறை ரீதியாக தீர்வு காணப்பட்டுள்ளது. இதுவரை, இத்திட்டத்தில், 54 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இம்மாதம், 30ம் தேதியுடன் முடிவடைய இருந்த 



இத்திட்டத்தை, கொரோனா காரணமாக, நீட்டிக்கக் கோரி, வரி செலுத்துவோர், வரி ஆலோசகர்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதை ஏற்று, ஜூன், 30ம் தேதி வரை திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு வெளியீடு...

 தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது...

































ரிபப்ளிக் டிவி - சி.என்.எக்ஸ் - கணிப்பு!


ரிபப்ளிக் டிவி - சி.என்.எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய இந்த கருத்துக்கணிப்பின் முடிவு வெளியாகி உள்ளது.


திமுக கூட்டணி: 160-170


அதிமுக கூட்டணி - 58-68


அமமுக கூட்டணி - 4-6


ம.நீ.ம கூட்டணி - 0-2


சி வோட்டர் - தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள்..!

சி வோட்டர் நிறுவனம் நடத்திய இந்த கருத்துக்கணிப்பின் முடிவு வெளியாகி உள்ளது.


திமுக கூட்டணி: 160-172


அதிமுக கூட்டணி - 58-70


அமமுக கூட்டணி - 0-4


ம.நீ.ம கூட்டணி - 0


மற்றவை - 0


India Today-Axis My India நிறுவனத்தின் கருத்து கணிப்பு முடிவுகள்:

India Today-Axis My India நிறுவனத்தின் கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.


திமுக கூட்டணி: 175-195


அதிமுக கூட்டணி - 38-54


அமமுக கூட்டணி - 1-2


ம.நீ.ம கூட்டணி - 0-2


மற்றவை - 0


தொடர்ந்து பல்வேறு செய்தி நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளது...


நன்றி : விகடன் இணையதளம்


ஆசிரியர்களுக்கு மானிய ஊதியம் தொடர்ந்து பெற்றுத்தர ₹ 2.50 லட்சம் லஞ்சம் வாங்கிய மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் & இணை மறுவாழ்வு அலுவலர் கைது...

 


பத்தாம் வகுப்பு முடிவு தெரியாமலேயே பிளஸ்-1 சேர்க்கைக்கு ஆர்வம் காட்டும் தனியார் பள்ளிகள்...

 தமிழகத்தில் கடந்த ஆண்டை போலவே நடப்பு ஆண்டும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்களின் மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து இதுவரை எதுவித முடிவும் வெளியாகவில்லை. இதனிடையே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான பிளஸ் 1 மாணவர் சேர்க்கை ஜோராக நடந்து வருகிறது. இதனால் பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 இதுகுறித்து பெற்றோர்கள் சிலர் கூறியதாவது:

 தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் செய்முறைத் தேர்வு நிறைவு செய்யப்பட்டு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது மற்றபடி பத்தாம் வகுப்பு உட்பட பிற வகுப்பினர் அனைவரும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வு நடந்ததால் அந்த மதிப்பெண்கள் மாணவர்களின் பொதுத் தேர்வு மதிப்பெண்களாக வழங்கப்பட்டது. ஆனால் நடப்பாண்டில் அந்த தேர்வுகள் ஏதும் நடக்கவில்லை. இதனால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்கும் விவகாரத்தில் குழப்பமான நிலையே நீடிக்கிறது. மேலும் மீண்டும் பரவி வரும் நிலையில் அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்தும் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் பல்வேறு மாவட்டங்களில் அரசு உதவி பெறும் மற்றும் தனியார்  பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அழகாபுரம் சூரமங்கலம் நெத்திமேடு அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதியில் உள்ள பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை முற்றிலுமாக முடிந்து விட்டது. ஒரு சில பள்ளிகளில் வகுப்புகள் கூட நடந்து வருகிறது. அரசு எவ்வித வழிகாட்டுதலும் வழங்காத நிலையில் இவர்கள் தன்னிச்சையாகவும் , விதிகளை மீறி மாணவர்கள் சேர்க்கை நடத்தி வருகின்றனர். மாணவர்களிடம் கல்வி கட்டணத்தை வசூலிக்கவே, தற்போது  சேர்க்கை நடைபெறுகிறது. சேர்க்கைக்கு கடும் போட்டி என காரணம் காட்டி எளிதாக மாணவர் சேர்க்கையை முடித்து விடுகின்றனர். தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் மாணவர் சேர்க்கையை தள்ளி வைப்பதே சிறந்தது. எனவே இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு பெற்றோர்கள் தெரிவித்தனர்.



கடனை திருப்பி செலுத்தாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - பள்ளிக் கல்வித் துறை உத்தரவு...

 கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று,செலுத்தாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.



இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:



அரசுப் பள்ளிகள் மற்றும் கல்வித் துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடனை சரிவர திரும்பச் செலுத்தவில்லை என தெரியவருகிறது.



பள்ளித் தலைமை ஆசிரியரின் ஒப்புதல்படியே பிற பணியாளர்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. ஆனால், கடன் தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்ய தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆசிரியர்கள் கடனை திரும்பச் செலுத்தவில்லை எனில் பெரும் நிதி இழப்புஏற்படும் சூழல் உள்ளது என்றுபல்வேறு கூட்டுறவு சங்கங்கள் புகார் தெரிவித்துள்ளன.



ஆசிரியர்கள் கடன்பெற்ற விவரங்களை ஊதியச் சான்றிதழில் மறைத்து, இதர வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்குவதற்கு தலைமை ஆசிரியர்கள் உதவி செய்வதாகத் தெரிய வருகிறது. இது தவறானது. அரசுப் பணியாளர் நடத்தை விதிகளுக்கு எதிரானதாகும்.



எனவே, அவ்வாறு தவறு செய்தவர்கள் மீது ஒழுங்கு விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், அவர்கள் பெற்ற கடன் தொகையை உரிய முறையில் திரும்பச் செலுத்தவும் முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.



அதேபோல, ஆசிரியர்கள் கடன் பெற்ற விவரத்தை மறைத்து, முழு ஊதியம் பெற வழிசெய்த தலைமை ஆசிரியர்கள் மீதும்ஒழுங்கு விதிகளின்கீழ் நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரங்களை அனுப்ப வேண்டும்.


இனிவரும் காலங்களில் கடன்பெற்ற ஆசிரியர்களின் ஊதியத்தில் உரிய தொகையைப் பிடித்தம்செய்து அதை வங்கிக் கணக்கில் செலுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




உத்தரவை அமல்படுத்தாவிட்டால், பள்ளிக்கல்வி அதிகாரிகள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் - உயர் நீதிமன்றம்...

 உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால், பள்ளிக்கல்வி அதிகாரிகள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என்று உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.


 

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 2008-ம் ஆண்டு உதவி தொடக்கக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர் புனிதவதி. இவரை பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பதவி இறக்கம் செய்து, தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டார்.


 

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் புனிதவதி வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புனிதவதியின் இடமாற்றத்துக்கு தடை விதித்தது. இந்நிலையில், 2008 செப்டம்பர் முதல் 2010 அக்டோபர் வரை கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட புனிதவதி, பிறகு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.



இதை எதிர்த்து புனிதவதி மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் பரிசீலிக்குமாறு உத்தரவிட்டது.


 

இந்நிலையில், புனிதவதி 2014 மே 31-ம் தேதி ஓய்வு பெற்றதால், தனது பணியை 2008 முதல் 2020 வரை பணிவரன்முறை செய்யக்கோரி தொடக்கக் கல்வி ஆணையரிடம் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.


 

இந்த வழக்கு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “மனுதாரர் 2020-ம் ஆண்டு கொடுத்த மனுவைப் பரிசீலித்து, 90 நாட்களில் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்” என தொடக்கக் கல்வி ஆணையருக்கு உத்தரவிட்டார்.


 

மேலும், “மனுதாரர் தனது மனு, மொபைல் எண், இ-மெயில் முகவரி போன்றவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் உடனடியாக வழங்க வேண்டும். அவரது மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அந்த அதிகாரி மனுதாரருக்கு குறுஞ்செய்தி, இ-மெயில் அல்லது பதிவு தபால் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.



ஒருவேளை இந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிறை தண்டனை அனுபவிக்கவும் நேரிடும்” எனவும் எச்சரித்தார்.



1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தமிழ் வாசித்தல் பயிற்சி பதிவேடு 39 பக்கங்களில்...



>>> 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தமிழ் வாசித்தல் பயிற்சி பதிவேடு 39 பக்கங்களில்...


கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை 400 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக குறைத்துள்ளது சீரம் இன்ஸ்டிடியூப் ஆப் இந்தியா....



 இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் என இரண்டு தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. கோவிஷீல்டு மருந்தை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய தொகுப்பிற்கு 50 சதவீதம் போக மீதமுள்ள 50 சதவீத மருந்துகளை மாநில அரசுகள் மற்றும் வெளிச்சந்தையில் (தனியார்) விற்பனை செய்ய 


மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. அதற்கான விலையை அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது.



அதன்படி மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் 400 ரூபாய் எனவும், தனியாருக்கு ஒரு டோஸ் 600 ரூபாய் எனவும் நிர்ணயித்தது. ஏற்கனவே பொருளாதாரம் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு மேலும் நிதிச்சுமையை உயர்த்தும் என 


மாநில அரசுகள் தங்களது அதிருப்திகளை தெரிவித்தன. மேலும், மத்திய அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன.



 18 வயது நிரம்பியவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதனால் கொரோனா தடுப்பூசி அதிக அளவில் தேவைப்படும். இந்த நிலையில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, மாநில அரசுகளுக்கு வழங்கும் விலையை ரூ.400-ல் இருந்து 300 ரூபாயாக குறைத்துள்ளது.

அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை உயர்த்தியது ஏன்? விளக்கம் வேண்டும் - தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவு...



 அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு


பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59-ல் இருந்து 60 ஆக உயர்த்தி தமிழக அரசு கடந்த பிப்ரவரி 25-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து 


செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும் திருச்சி, துறையூரைச் சேர்ந்த பாலமுரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்தார்.


அந்த மனுவில், 'ஓய்வு வயதை அதிகரித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், அதற்கான காரணம் எதையும் குறிப்பிடவில்லை. அதனால் ஏற்படும் கூடுதல் செலவினம் குறித்தும் எதுவும் விளக்கவில்லை. கொரோனா காரணமாக   


  அரசுப் பணிகளுக்கான தேர்வில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு வயது உச்சவரம்பை தளர்த்தாமல், அரசு ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் மட்டும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.


அதாவது தமிழகத்தில் 30 லட்சம் பேர் வேலைவாய்ப்பில்லாமல் உள்ள நிலையில் 2020-21-ம் ஆண்டுகளில் ஓய்வுபெற இருந்த 45 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு தேவையில்லாமல் ஓய்வு வயது அதிகரிக்கப்பட்டுள்ளது' என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


 இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் எழுப்பிய கேள்விகளுக்கு  நீதிமன்றத்தில் உரிய பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்தனர்.

2021-22ம் ஆண்டிற்கான அமைச்சுப் பணியாளர்கள் காலிப்பணியிட மதிப்பீடு விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு...



 2021-22ம் ஆண்டிற்கான அமைச்சுப் பணியாளர்கள் காலிப்பணியிட மதிப்பீடு விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 18727/ அ4 / இ4/ 2021, நாள்: 15-04-2021...

>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 18727/ அ4 / இ4/ 2021, நாள்: 15-04-2021...




01.04.2021 முதல் 30.06.2021 வரையிலான மூன்று மாதங்களுக்கு GPF மீதான வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு...

 


01.04.2021 முதல் 30.06.2021 வரையிலான மூன்று மாதங்களுக்கு GPF மீதான வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை G.O.Ms.No.125, Dated: 28-04-2021 வெளியீடு...


>>> Click here to Download G.O.Ms.No.125, Dated: 28-04-2021...



இன்றைய (29-04-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஏப்ரல் 29, 2021



எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். மற்றவர்களை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். கூட்டாளிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். மனதில் பழைய நினைவுகளின் மூலம் சோர்வு ஏற்படும். செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அஸ்வினி : அலைச்சல்கள் உண்டாகும்.


பரணி : அனுசரித்து செல்லவும்.


கிருத்திகை : சோர்வு ஏற்படும்.

---------------------------------------




ரிஷபம்

ஏப்ரல் 29, 2021



அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். பொருளாதார மேன்மை உண்டாகும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் நட்பு உண்டாகும். நண்பர்களுடன் விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



கிருத்திகை : தாமதங்கள் அகலும்.


ரோகிணி : நட்பு உண்டாகும்.


மிருகசீரிஷம் : மனமகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




மிதுனம்

ஏப்ரல் 29, 2021



நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வங்கிகளில் எதிர்பார்த்த சூழல் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான பணிகளில் புதிய முயற்சிகளை செய்வீர்கள். தொழிலில் செல்வாக்கு மற்றும் மேன்மையான சூழல் உண்டாகும். தந்தையிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். பொதுப்பணி சார்ந்த செயல்பாடுகளால் அலைச்சல்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



மிருகசீரிஷம் : தீர்வு கிடைக்கும்.


திருவாதிரை : மேன்மையான நாள்.


புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------




கடகம்

ஏப்ரல் 29, 2021



தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு லாபம் அடைவீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவரின் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சிந்தனைகளில் மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



புனர்பூசம் : லாபம் கிடைக்கும்.


பூசம் : விழிப்புணர்வு வேண்டும்.


ஆயில்யம் : கலகலப்பான நாள்.

---------------------------------------




சிம்மம்

ஏப்ரல் 29, 2021



உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகளின் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் அகலும். பணிகளில் உழைப்பிற்கேற்ற முன்னுரிமை கிடைக்கும். புதுவிதமான தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் ஆதரவான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மகம் : முன்னேற்றம் உண்டாகும்.


பூரம் : குழப்பங்கள் அகலும்.


உத்திரம் : அன்பு அதிகரிக்கும்.

---------------------------------------




கன்னி

ஏப்ரல் 29, 2021



தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சந்தேக உணர்வுகளால் நெருக்கமான உறவினர்களுக்கிடையே விரிசல்கள் உண்டாகும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். தாய் சம்பந்தப்பட்ட கவலைகள் மேலோங்கும். பிள்ளைகளால் சுபச்செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்



உத்திரம் : முயற்சிகள் மேம்படும்.


அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.


சித்திரை : கவலைகள் மேலோங்கும்.

---------------------------------------




துலாம்

ஏப்ரல் 29, 2021



குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். கேளிக்கை தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும். பொதுநலத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



சித்திரை : ஆதரவு கிடைக்கும்.


சுவாதி : ஆர்வம் அதிகரிக்கும்.


விசாகம் : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------




விருச்சகம்

ஏப்ரல் 29, 2021



அமைதியான செயல்பாடுகளால் எண்ணிய சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களின் வருகை ஏற்படும். போட்டிகளில் சாதகமான சூழல் உண்டாகும். எந்தவொரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும்.


அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும்.


கேட்டை : திருப்தியான நாள்.

---------------------------------------




தனுசு

ஏப்ரல் 29, 2021



திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் தொடர்பான புதிய ஆர்டர்கள் கிடைக்கும். எந்தவொரு சூழ்நிலைகளையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். அக்கம்-பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். மனதிற்கு பிடித்த சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மூலம் : அங்கீகாரம் கிடைக்கும்.


பூராடம் : வெற்றிகரமான நாள்.


உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------




மகரம்

ஏப்ரல் 29, 2021



கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். புத்திக்கூர்மையும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் கிடைக்கும். மனதில் ஒருவிதமான பதற்றங்கள் ஏற்பட்டு மறையும். கலைத்துறையினருக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


திருவோணம் : வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.


அவிட்டம் : பதற்றமான நாள்.

---------------------------------------




கும்பம்

ஏப்ரல் 29, 2021



அரசாங்கத்திடமிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தொழில் விரிவாக்கம் தொடர்பான முயற்சியில் ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் சிந்தித்து பேசவும். புதுமையான செயல்பாடுகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த சில வாய்ப்புகள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.


சதயம் : சிந்தித்து பேசவும்.


பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




மீனம்

ஏப்ரல் 29, 2021



எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் எண்ணங்கள் ஈடேறும். சபைகளில் தனக்கான ஒத்துழைப்பு அதிகரிக்கும். அறக்காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள். தந்தையுடன் எழுந்த பிரச்சனைகள் குறையும். நிர்வாகத்துறையில் உள்ளவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். பொருள் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.


உத்திரட்டாதி : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.


ரேவதி : கீர்த்தி உண்டாகும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு... 27-04-2024 – Press News – Date Extension for Online Application - Direct R...