கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள்(Schools Re-Opening - School Education Minister Annoucements)...



 >>> பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள்...

பள்ளிகளுக்கு வர மாணவர்களை கட்டாயப்படுத்தவில்லை – உயர்நீதிமன்ற கிளையில் தமிழ்நாடு அரசு பதில்...


 தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறந்தாலும் மாணவர்கள் வகுப்புகளுக்கு வர வேண்டும் என கட்டாயம் இல்லை என்று தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் வகுப்புகளை தொடர உத்தரவிடக்கோரி அப்துல் வகாப் என்பவர் தொடர்ந்த வழங்கி விசாரணையின் போது உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் விளக்கமளித்துள்ளார்.




தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. முதலாவதாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை செயல்படும்.


இதுவரை இருந்தது போல் அல்லாமல் பள்ளிக்கூடங்களில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது. அதன்படி பள்ளிக்கூடங்கள் ஷிப்டு முறையில் செயல்பட வேண்டும். வகுப்பறையில் பாதி அளவு மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.


சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். மாணவர்களுக்கு தினமும் உடல் வெப்ப பரிசோதனை நடத்த வேண்டும். பள்ளிக்கூடத்தில் இருந்து மாணவர்கள் வீடு திரும்பியதுமே அவர்களுடைய ஆடைகளை துவைக்க வேண்டும் போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தொடக்கம் முதலே பாடம் நடத்தப்படாது; மாணவர்கள் உளவியல்ரீதியாக தயாரான பின்னரே பாடம் நடத்தப்படும்



பெற்றோர்கள், மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை. மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும்


மாணவர்கள் நேரடி வகுப்பிற்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தப் படமாட்டார்கள் - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல்.


பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் - தமிழக அரசு.


மாலை 3:30 மணிக்குள் வகுப்புகளை முடித்துக்கொள்ள வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு...





 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு நாளை பள்ளிகள் திறப்பு - மாலை 3:30 மணிக்குள் வகுப்புகளை முடித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது..


 மாணவர்கள் மாஸ்க் போடாமல் வந்தாலோ அல்லது கிழிந்து இருந்தாலோ பள்ளியில் மாஸ்க் தர ஏற்பாடு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி...


மாணவர்கள் நிச்சயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும். 

* ஒவ்வொரு வகுப்பறையிலும் கிருமிநாசினி பாட்டில் வைத்திருக்க வேண்டும். 

* 2 ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டும் செயல்படும். 

*விளையாட்டு நேரம் கிடையாது காலை 9.30 மணிமுதல் மாலை 3.30 மணிவரை , வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் தொடக்கம் முதலே பாடம் நடத்தப்படாது. 

*மாணவர்கள் உளவியல் ரீதியாக தயாரான பின்னரே பாடம் நடத்தப்படும் 

* பெற்றோர்கள் , மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை ; மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும்.

பள்ளி செல்லும் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.


* ஒரு முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். கூடுதல் முகக்கவசத்தை தேவைக்காக பைக்குள் வைத்து இருக்க வேண்டும்.


* முகக்கவசம் அணிவதுடன் கண்ணாடி கவசத்தையும் அணிந்து இருக்க வேண்டும். சாப்பிடும்போது மட்டுமே அவற்றை அகற்ற வேண்டும்.


* கைக்குட்டை அல்லது துடைக்கும் தாள் போன்றவற்றை வைத்து இருக்க வேண்டும்.


* சிறிய சானிடைசர் பாட்டில் ஒன்றையும் எடுத்து வர வேண்டும்.


* தண்ணீர் பாட்டில், நொறுக்கு தீனிகள் போன்றவற்றை சொந்தமாக எடுத்து வர வேண்டும். மற்றவர்களுடன் பகிரக்கூடாது.


* பயன்படுத்திய முகக்கவசத்தை போடுவதற்கு தேவைப்பட்டால் தனி பை எடுத்து வரவேண்டும்.


* மாணவிகள் அதிகளவில் தலைமுடி வளர்த்து இருந்தால் அவை முகத்தில் படாதவாறு கட்டி இருக்க வேண்டும்.


முகத்தை தொடக்கூடாது


* பள்ளிகளில் இருக்கும்போது அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.


* ஒன்றாக அமர்ந்து எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. ஒன்றாக சேர்ந்து விளையாடக்கூடாது.


* எந்த பொருட்களையும் பங்கிட்டுக் கொள்ளக்கூடாது.


*நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணிக்கு தொடங்கும் வகுப்புகளை மதியம் 3.30 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார்.


40-45 நாட்களுக்கு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி மட்டுமே வழங்கப்படும். வகுப்பறையில் மேஜையின் ஒருமுனையில் ஒரு மாணவரும், மறுமுனையில் மற்றொரு மாணவரும் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


மாணவர்கள் நிச்சயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும்; 


ஒவ்வொரு வகுப்பறையிலும் கிருமிநாசினி பாட்டில் வைத்திருக்க வேண்டும்


ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டும் செயல்படும். விளையாட்டு நேரம் கிடையாது


காலை 9.30 மணிமுதல் மாலை 3.30 மணிவரை வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும்

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு(Transfer Counselling to BRTEs) நடத்த கல்வித்துறை உத்தரவு...

 


பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு நிகழ் கல்வியாண்டில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது : 


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாநில , மாவட்ட திட்ட அலுவலகங்கள் , வட்டார மற்றும் குறுவள மையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணி மாறுதல் வழங்க அரசு உத்தரவிடுகிறது. நிகழ் கல்வியாண்டில் பணி மூப்பு அடிப்படையில் 500 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் செய்திட வேண்டும். மேலும் , தற்போது தேர்வு செய்யப்படும் பணியில் மூத்த ஆசிரியர் பயிற்றுநர்கள் பணி மாறுதலுக்கு விருப்பமின்மை தெரிவித்து, பணியில் தொடர விரும்பினாலும் அதனை அனுமதிக்கத் தேவையில்லை. 2014ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களில் சேர்ந்த 500 பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பணிமாறுதல் செய்யப்படும் போதும் , பணி இடங்களுக்கு பாடவாரியாக திறமையும் அனுபவமும் சேவை மனப்பான்மையும் உள்ள ஆசிரியர்களை பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான கலந்தாய்வு , ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும். கலந்தாய்வு அனைத்தும் கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தின் மூலம் மட்டுமே நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


>>> 500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு(BRTE) பட்டதாரி ஆசிரியர்களாக(B.T.) பணிமாறுதல் (Conversion) வழங்குதல் மற்றும் பணியிட மாறுதல் (Transfer) வழங்கிட நெறிமுறைகள் வகுத்து அரசாணை (1டி) எண்: 134, நாள்: 18-08-2021 வெளியீடு...


சிறந்த கற்போம் எழுதுவோம் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருது(PLA Award Proposal Format ) – பட்டியல் சேகரிக்க உத்தரவு...



 பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் அவர்களின் கடிதத்தில் உள்ளவாறு மாண்புமிகு . பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை எண்.43 அறிவிப்பின்படி, கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் கீழ் திட்டச் செயல்பாடுகளை புதுமைச் செயல்பாடுகளுடன் சிறப்பாக செயல்படுத்திய கற்போர் மையங்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில எழுத்தறிவு விருது வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தருமபுரி மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் இணைப்பில் கோரப்பட்டுள்ள விவரங்களின்படி கற்போம் எழுதுவோம் இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்திய ஏதேனும் 2 மையங்களை (ஒரு ஒன்றியத்திற்கு) தெரிவு செய்து இணைப்பில் உள்ள படிவத்தின்படி கருத்துருக்களை பரிந்துரை செய்து அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஒன்றியங்களிலிருந்து பெறப்படும் கருத்துருக்கள் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவினால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு இறுதியாக 5 மையங்கள் தேர்வு செய்யப்பட்டு மாநில இயக்ககத்திற்கு அனுப்பப்படும்.


மாநில இயக்ககத்தால் அமைக்கப்பட்டுள்ள குழுவினால் இம்மையங்கள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு இறுதியாக 3 மையங்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு மாநில எழுத்தறிவு விருது 2020-21 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறந்த கற்போர் மையங்களுக்கான எழுத்தறிவு விருது வழங்குதல் என்பது வயது வந்தோர் கல்வித் திட்ட செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்துகின்ற மையங்களை ( பள்ளிகளை ) தெரிவு செய்து ஊக்கப்படுத்தும் ஒரு செயல்பாடாகும் . எனவே முன்குறிப்பிட்டுள்ள சிறந்த கற்போர் மையங்களுக்கான மாநில எழுத்தறிவு விருது வழங்குதல் சார்ந்த செயல்பாடுகளில் முறையான வெளிப்படைத் தன்மையை கையாண்டு , எந்தவித தொய்விற்கும் , சிக்கல்களுக்கும் இடமளிக்காத வளமைய வகையில் தனிக்கவனம் செலுத்தி சார்ந்த வட்டாரக்கல்வி அலுவலர்கள் , வட்டார மேற்பார்வையாளர்கள் , மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பரிந்துரையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 2 சிறந்த மையங்களின் கருத்துருக்களை உரிய படிவத்தில் வருகின்ற 01.09.2021 க்குள் மாவட்டத்திட்ட வளமைய அலுவலகத்திற்கு வட்டார அனுப்பி வைக்குமாறு மேற்பார்வையாளர்களுக்கு தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு.


>>> சிறந்த கற்போம் எழுதுவோம் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருது - கருத்துரு படிவம்...



பிடித்தம் செய்த பங்களிப்பு ஓய்வூதியப் பணம்(Contributory Pension Scheme Fund) ரூ.அறுபது ஆயிரம் கோடி(60 Thousand Crores) எங்கே?

 ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக அரசு பிடித்தம் செய்த ரூ.60 ஆயிரம் கோடி தொகை எங்கே போனது’ என சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் கேள்வி எழுப்பியுள்ளனர்.


அவர் கூறியதாவது: தமிழகத்தில் 2003 ஏப்ரல்1 முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. இதில் அரசுஊழியர், ஆசிரியர்கள் 8 லட்சம் பேர் உள்ளனர். இவர்களிடம் இருந்து அடிப்படை ஊதியம் , அகவிலைப்படியில் அரசு 10 சதவீதம் பிடித்தம் செய்கிறது. அரசு சார்பிலும் 10 சதவீதம் பங்களிப்பு தொகை செலுத்தப்படுகிறது. இத்தொகை நடப்பு ஆண்டு வரை ரூ.60 ஆயிரம் கோடி அளவில் உள்ளது.


புதிய ஓய்வூதிய திட்டத்தில் (சி.பி.எஸ்.,) இறந்த ஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம், ஓய்வுக்கு பின்பு வழங்க வேண்டிய பணிக்கொடை வழங்காமல் பாதிக்கப்படுகின்றனர். இத்திட்டத்தில் தமிழக அரசால் பிடித்தம் செய்த தொகை ரூ.60ஆயிரம் கோடி எங்கே உள்ளது என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை. இந்த நிதி குறித்து அரசு வெள்ளை அறிக்கையை வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, பழைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், என்றார்.





பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருள் விற்போருக்கு கடும் தண்டனை தர புதிய சட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...



 பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருள் விற்போருக்கு கடும் தண்டனை தர புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். பேரவையில் கேள்வி நேரத்தில் பென்னாகரம் பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி கேள்விக்கு முதலமைச்சர் பதில் அளித்தார். தமிழகத்தில் குட்கா பொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும் எனவும் கூறினார். தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்போர், கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குட்கா விஷயத்தில் காவல்துறையினரை ஊக்குவிக்க தமிழக அரசு நிச்சயம் தயங்காது என தெரிவித்தார். தமிழகத்தில் இதுவரை 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 11,247 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார். குட்கா வழக்கில் 15 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறினார்.


போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் 89  பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசினார். தமிழக சட்டப்பேரவையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கேள்வி நேரத்தில் முதலமைச்சர் பதிலளித்துள்ளார். 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முதல்வர் சார்ந்த துறைகள் கேள்வி நேரத்தில் இடம் பெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கேள்வி நேரத்தில் முதல்வர் சார்ந்த துறைகளுக்கு பதில் வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டது. கேள்வி நெரத்தில் போதைப்பொருள் தடுப்பு குறித்து பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பதில் அளித்தார்.


சீனாவில் உள்ள 5D தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய சினிமா தியேட்டர் இங்கு எந்த சிறப்பு கண் கண்ணாடிகளையும் அணியாமல் வீடியோவைப் பார்க்க முடியும்(newest cinema theater in China with 5D technology where people can watch video without wearing any special glasses)...

இது சீனாவில் 5D தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய சினிமா தியேட்டர் ஆகும். அங்கு மக்கள் எந்த சிறப்பு கண் கண்ணாடிகளையும் அணியாமல் வீடியோவைப் பார்க்க முடியும்.


திரை இல்லை, சுற்றிலும் சுவர் மட்டுமே உள்ளது. இருக்கைகள் இல்லை.  மக்கள் நின்று மட்டுமே ரசிக்க முடியும். மேலும் அவர்கள் 360 டிகிரி பார்க்க முடியும். நடைபாதையும் திரையின் ஒரு பகுதியாகும்...


It is the newest cinema theater in China with 5D technology where people can watch video without wearing any special glasses. There is no screen and only the surrounding wall and there are no seats. People can only stand and walk and they can see 360 ​​degrees and the sidewalk is part of the screen.



>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...


2021-2022ஆம் ஆண்டு பள்ளி செல்லா(OSC)/ இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்புப்(Drop Out Children Survey) பணியினை 20-09-2021 வரை நீட்டித்து மாநிலத் திட்ட இயக்குநர்(SPD) உத்தரவு...



>>> 2021-2022ஆம் ஆண்டு பள்ளி செல்லா(OSC)/ இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்புப்(Drop Out Children Survey) பணியினை 20-09-2021 வரை நீட்டித்து மாநிலத் திட்ட இயக்குநர்(SPD) உத்தரவு...


15.09.2021 வரை நீட்டிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குக்கான அரசாணை (G.O.Ms.No:541, Dated: 31-08-2021) வெளியீடு...

 


15.09.2021 வரை நீட்டிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குக்கான அரசாணை (G.O.Ms.No:541, Dated: 31-08-2021) வெளியீடு...


>>> Click here to Download G.O.Ms.No:541, Dated: 31-08-2021...


>>> ஊரடங்கு கட்டுப்பாடுகள் 15-09-2021வரை நீட்டிப்பு - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 665, நாள்: 30-08-2021...


பள்ளிக் கல்வி- முதன்மை / மாவட்ட / வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணிபுரிகின்ற நிருவாகம் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் சார்பான விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின்(JD Proceedings) செயல்முறைகள் ந.க.எண்:044696/அ3/இ1/2021, நாள்:31-08-2021...



 பள்ளிக் கல்வி- முதன்மை / மாவட்ட / வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணிபுரிகின்ற நிருவாகம் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் சார்பான விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின்(JD Proceedings) செயல்முறைகள் ந.க.எண்:044696/அ3/இ1/2021, நாள்:31-08-2021...


>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:044696/அ3/இ1/2021, நாள்:31-08-2021...

இன்றைய (31-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஆகஸ்ட் 31, 2021



மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் எந்தவொரு காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். இளைய உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். மனை விருத்தி தொடர்பான முயற்சிகள் மற்றும் எண்ணங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



அஸ்வினி : சிந்தனைகள் அதிகரிக்கும்.


பரணி : அனுசரித்து செல்லவும்.


கிருத்திகை : அனுகூலமான நாள்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 31, 2021



வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த இடர்பாடுகள் குறையும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். குடும்ப பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் படிப்படியாக குறையும். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



கிருத்திகை : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


ரோகிணி : இடர்பாடுகள் குறையும்.


மிருகசீரிஷம் : சாதகமான நாள்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 31, 2021



மனதில் தேவையற்ற சிந்தனைகளை குறைத்துக்கொள்வதன் மூலம் புத்துணர்ச்சி ஏற்படும். வாகனப் பயணங்களின்போது தகுந்த ஆவணங்களில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியான நாள்.


திருவாதிரை : கவனம் வேண்டும்.


புனர்பூசம் : தெளிவு பிறக்கும்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 31, 2021



அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு பொருளாதாரம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அறிமுகமில்லாத புதிய நபர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


பூசம் : பொருளாதாரம் மேம்படும்.


ஆயில்யம் : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------





சிம்மம்

ஆகஸ்ட் 31, 2021



பெற்றோர்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். விவசாயப் பணிகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மகம் : திருப்திகரமான நாள்.


பூரம் : சேமிப்புகள் மேம்படும்.


உத்திரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 31, 2021



விடாப்பிடியாக செயல்பட்டு இழுபறியான சில செயல்களை விரைந்து முடிப்பீர்கள். சிறிய தூரப் பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். புதுவிதமான இடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளையும், திறமைகளையும் அறிந்து கொள்வீர்கள். தொழில் தொடர்பான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திரம் : மாற்றங்கள் உண்டாகும்.


அஸ்தம் : திறமைகள் வெளிப்படும்.


சித்திரை : முதலீடுகள் அதிகரிக்கும்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 31, 2021



கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவின் மூலம் தொழில் சார்ந்த உதவிகள் மற்றும் லாபங்கள் மேம்படும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு சுபிட்சம் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபகரமான சூழல்கள் அமையும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மற்றும் அதை சார்ந்த பயணங்களுக்கான வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



சித்திரை : ஆதரவு கிடைக்கும்.


சுவாதி : சுபிட்சமான நாள்.


விசாகம் : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 31, 2021



தேவையற்ற சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்கள் பற்றி புரிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை குறைத்துக்கொள்வது நல்லது.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



விசாகம் : பொறுமை வேண்டும்.


அனுஷம் : உதவிகள் காலதாமதமாகும்.


கேட்டை : புரிதல் உண்டாகும்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 31, 2021



மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



மூலம் : மேன்மையான நாள்.


பூராடம் : விழிப்புணர்வு வேண்டும்.


உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 31, 2021



மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். நீண்ட நாள் சேமிப்பு திட்டங்கள் பற்றிய எண்ணங்கள் உண்டாகும். நண்பர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.


திருவோணம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 31, 2021



தொழில் சார்ந்த புதிய முயற்சிகள் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். பயணங்களின் மூலம் மாற்றமும், லாபமும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவருடன் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



அவிட்டம் : முயற்சிகள் அதிகரிக்கும்.


சதயம் : அறிமுகம் கிடைக்கும்.


பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 31, 2021



வாக்குவன்மையின் மூலம் நன்மை உண்டாகும். மனதிற்கு பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களின் வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தாய்மாமனிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பணி சார்ந்த இடங்களில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



பூரட்டாதி : நன்மை உண்டாகும்.


உத்திரட்டாதி : உதவிகரமான நாள்.


ரேவதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------


பள்ளிகள் திறப்பு - பின்பற்றப்படவேண்டியவை குறித்து தலைமையாசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலரின் தெளிவுரைகள்...



>>> பள்ளிகள் திறப்பு - பின்பற்றப்பட வேண்டியவை குறித்து தலைமையாசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலரின் தெளிவுரைகள்...

பள்ளிகள் திறப்பதற்கு தலைமையாசிரியர்களால் சரிபார்க்கப்பட வேண்டிய விவரங்கள்(School Opening Check List)...



>>> பள்ளிகள் திறப்பதற்கு தலைமையாசிரியர்களால்  சரிபார்க்கப்பட வேண்டிய விவரங்கள்(School Opening Check List-1)...


>>> பள்ளிகள் திறப்பதற்கு தலைமையாசிரியர்களால்  சரிபார்க்கப்பட வேண்டிய விவரங்கள்(School Opening Check List-2)...

கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் 15-09-2021வரை நீட்டிப்பு - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 665, நாள்: 30-08-2021...



 கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் 15-09-2021வரை நீட்டிப்பு - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 665, நாள்: 30-08-2021...


>>> செய்தி வெளியீடு எண்: 665, நாள்: 30-08-2021...


01-09-2021 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு...

 01-09-2021 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு...






01-09-2021முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சீருடை மற்றும் அடையாள அட்டையைக் காட்டி, அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணிக்கலாம் - போக்குவரத்துத்துறை - செய்தி வெளியீடு எண்:30/2021, நாள்: 30-08-2021...

 01-09-2021முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள்  சீருடை மற்றும் அடையாள அட்டையைக் காட்டி, அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணிக்கலாம் - போக்குவரத்துத்துறை - செய்தி வெளியீடு எண்:30/2021, நாள்: 30-08-2021...





பள்ளிகள் திறப்பு(School Opening) - சுற்றறிக்கை (Circular)- 1 - கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்(CEO Proceedings)ந.க.எண்:7898/இ4/2021, நாள்: 28-08-2021...



>>> பள்ளிகள் திறப்பு -  சுற்றறிக்கை - 1 - கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்:7898/இ4/2021, நாள்: 28-08-2021...


புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் (INSPIRE Award MANAK Scheme 2021-2022) விருதுக்கு 15.10.2021க்குள் பதிவு செய்ய பள்ளிக்கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்:031591/எம்/இ2/2021, நாள்:24-08-2021 & Tamilnadu Science and Technology Centre Executive Director Letter...



 புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் (INSPIRE Award MANAK Scheme 2021-2022) விருதுக்கு 15.10.2021க்குள் பதிவு செய்ய பள்ளிக்கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்:031591/எம்/இ2/2021, நாள்:24-08-2021 & Tamilnadu Science and Technology Centre Executive Director Letter...


>>> பள்ளிக்கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்:031591/எம்/இ2/2021, நாள்:24-08-2021 & Tamilnadu Science and Technology Centre Executive Director Letter...



தமிழ்நாடு அரசு - கூடுதல் தலைமை வழக்குரைஞர்களாக(Additional Advocate General) 9 பேரை நியமித்து அரசாணை (G.O.Ms.No.761, Dated: 28-08-2021) வெளியீடு...



 தமிழ்நாடு அரசு - கூடுதல் தலைமை வழக்குரைஞர்களாக(Additional Advocate General) 9 பேரை நியமித்து அரசாணை (G.O.Ms.No.761, Dated: 28-08-2021) வெளியீடு...


>>> Click here to Download G.O.Ms.No.761, Dated: 28-08-2021...


EMIS வலைதளம் 27.08.21 முதல் 30.08.21 வரை நிர்வாக காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்படுகிறது - SPD Letter... EMIS portal and the other EMIS related services will be shut down for a scheduled maintenance from 27.08.21 to 30.08.21.



Dear ALL,

The EMIS portal and the other EMIS related services will be shut down for a scheduled maintenance from 27.08.21 to 30.08.21.

Note :- The Training related modules will continue to work on 27.08.21 for the Basic ICT Training purposes.

Inconvenience is regretted.

Warm Regards,

TN EMIS Team


>>> Click here to Download SPD Letter...


அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் விவசாயம், பொறியியல், பாலிடெக்னிக் போன்ற தொழில்முறை படிப்புகளில் படிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் - உடல்நலம் மற்றும் தடுப்பு மருந்துகள் இயக்குனர் கடிதம்(Vaccination of Students of above 18 years studying in Government, Aided and Private Arts & Science Colleges and Professional Courses like Agriculture, Engineering, Polytechnics etc., - Regarding)...

R.No.91298 /Immn/S1/2019 Office of the Director of Public Health and Preventive Medicine, Chennai-6. Dated: 28-08-2021. 


Sub: 


Public Health and Preventive Medicine - Immunization - COVID-19 "Vaccination - Vaccination of Students of above 18 years studying in Government, Aided and Private Arts & Science Colleges and Professional Courses like Agriculture, Engineering, Polytechnics etc., - Regarding". 


Ref: 


1. Guidance note issued by Government of India dated on 26.02.2021. 


2. G.O.(Ms).No: 252, Health and Family Welfare (P1) Department, dated:22-05-2021.


 3. This office R.No.91298 /Immn/S1/2019 Dated 14.05.2021, 9.06.2021, 17.06.2021. 


4. Hon'ble Minister for Medical and Family Welfare announcement made in the inauguration function of vaccination for students above 18 years in Govt. Nandanam Arts College, Chennai on 28.08.2021. *


 All Deputy Directors of Health Services are informed that as per Gol instructions and guidelines Covid-19 Vaccination drive in the State has been initiated from 16.1.2021 and continuing till now. 


Till date, (27.08.2021) 2,86,14,582 beneficiaries have been vaccinated with both Covishield and Covaxin. 


In the reference 2nd cited, the category of people of age group of 18+ years to be vaccinated at free of cost were communicated. 


In the reference 4th cited, the Hon'ble Minister for Medical and Family Welfare and Hon'ble Minister for Higher Education have announced that all students of above 18 years studying in Government. Aided and Private Arts &Science Colleges have to be vaccinated with Covid vaccines immediately 


In this regard, all the Principals of Government, Aided and Private Arts & Science Colleges have been requested to instruct all students to get vaccinated immediately from 29-08-2021 and complete by 01-09-2021. 


Further, the Director of Collegiate Education have been requested to instruct all the Principals to co-ordinate with concerned DDHS of the Health Unit Districts for conducting the "Special Vaccination Campaigns for the students above 18 years" immediately from 29-08-2021...


Hence, all the Deputy Directors of Health Services are instructed to plan for utilizing all the MMU/RBSK Teams for conducting "Special Vaccination Campaign to vaccinate the students studying in Government, Aided and Private Arts & Science Colleges" and Professional Courses like Agriculture, Engineering and Polytechnics etc., immediately from 29-08-2021 onwards and to ensure the entries in Co-WIN portal. 


Also, all the Principals were instructed by the Director of Collegiate Education to ensure the Vaccination Certificate as a proof of evidence for the vaccination status of the students. 


A separate Google sheet is being sent for report updates.


 T.S.Selvavinayagam, 

Director of Public Health and Preventive Medicine, 

Chennai-6. 


To 


All Deputy Directors of Health Services. The City Medical Officer, Greater Chennai Corporation, Chennai-3. 


Copy to: 


The Director of Medical Education, Kilpauk, Chennai-10. 

The Director of Medical and Rural Health Services, Chennai-6. 


Copy submitted to: 1. 


The Secretary to Government, Higher Education Department, Chennai-9. 

2. The Principal Secretary to Government, H&FW Dept., Chennai-9. 3. 

The Mission Director, National Health Mission, Chennai-6.

 4.The Director of Collegiate Education, DPI campus, Chennai-6. 

5.Dr.M.K.Aggarwal, Additional Commissioner (UIP), MoH&FW, New Delhi //


True copy - 


Forwarded // For Director of Public Heath and Preventive Medicine Chennai




கல்லூரி மாணவர்கள் 1-ம் தேதிக்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.


இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள்  1ஆம் தேதிக்குள்ளாக செலுத்தியிருக்க வேண்டியது கட்டாயம்.


நாளை முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்கள்.

அண்டை மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாமா?அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்ப்பு...

தலைமை செயலகத்தில் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கேரளாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் பாதிப்பு அதிகரிக்காமல் இருப்பது குறித்தும் , கூடுதலாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் , பள்ளி ,கல்லூரிகள் திறப்பு மற்றும் எல்லைகளில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.


கேரளாவிலிருந்து தமிழகத்திலுள்ள எல்லையோர மாவட்டங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என்று முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


இதனால் அண்டை மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கலாமா?


 அல்லது ஒத்தி வைக்கலாமா என்பது குறித்து இன்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.


 அதேசமயம் பள்ளி, கல்லூரிகள் திறப்பு என்பது சற்று தள்ளி போக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








ஹார்ட் ஃபுல்னெஸ் கட்டுரை எழுதும்(Heart Fullness Essay Writing) நிகழ்ச்சி 2021 - 14 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். முழு விவரங்கள்...



 ஹார்ட் ஃபுல்னெஸ் கட்டுரை எழுதும்(Heart Fullness Essay Writing) நிகழ்ச்சி 2021 - 14 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். முழு விவரங்கள்...


>>> போட்டி பற்றிய விவரங்கள்...


>>> கட்டுரை சமர்ப்பிக்கும் வழிமுறை...


பள்ளிகள் திறப்பு - செய்ய வேண்டியவை & செய்யக் கூடாதவை - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 7898/இ3/2020, நாள்: 28.08.2021(School Reopening - Do's & Dont's - Karur CEO Proceedings) பள்ளி திறக்கும் நாள் : 01.09.2021...



 >>> பள்ளிகள் திறப்பு - செய்ய வேண்டியவை & செய்யக் கூடாதவை - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 7898/இ3/2020, நாள்: 28.08.2021...


பள்ளி திறக்கும் நாள் : 01.09.2021...


வெளிநாட்டில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு(Overseas Manpower Corporation) அறிவிப்பு...


வெளிநாடுகளில் நர்ஸ், ஓட்டுநர், சமையல்காரர், வீட்டுவேலை, மெஷின் ஆப்பரேட்டர் போன்ற வேலைகளில் சேர வேண்டுமா? 


044-22505886 / 044-22502267 என்ற எண்களுக்கு அழைக்கலாம் - முனைவர் சி. ந.மகேஸ்வரன் இ.ஆ.ப. தகவல்...


வெளிநாட்டில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு...





எந்தெந்த நாட்களில் வகுப்புகள்? கல்லூரிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை வெளியீடு...G.O.(Ms).No:164, Dated: 27-08-2021 - College - Re-Opening - SOP & Guidelines Orders Issued...



 கல்லூரிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (G.O.(Ms).No:164, Dated: 27-08-2021 - College - Re-Opening - SOP & Guidelines Orders Issued) வெளியீடு...


>>> Click here to Download G.O.(Ms).No:164, Dated: 27-08-2021...


கல்லூரிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள்  வெளியான நிலையில் , அதில் சுழற்சி முறையில் வகுப்புகள் , சில மாணவர்களுக்கு 6 நாட்களும் வகுப்புகள் என்று கூறப்பட்டிருக்கிறது.


அந்தவகையில் , எந்தெந்த நாட்களில் , யாருக்கெல்லாம் வகுப்புகள் நடத்தப்படும் என்பது குறித்த விவரம் வருமாறு :



இன்றைய (30-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

ஆகஸ்ட் 30, 2021



வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். பேச்சுத்திறமைகளின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



அஸ்வினி : ஆதாயம் உண்டாகும். 


பரணி : இழுபறிகள் அகலும்.


கிருத்திகை : சேமிப்புகள் குறையும்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 30, 2021



மனதில் புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். முடிவுகளை எடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும்.


ரோகிணி : முயற்சிகள் அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 30, 2021



குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்படவும். புதிய நபர்களின் மூலம்  எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



மிருகசீரிஷம் : புதுவிதமான நாள்.


திருவாதிரை : சிந்தித்து செயல்படவும்.


புனர்பூசம் : முதலீடுகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 30, 2021



மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு



புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.


பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


ஆயில்யம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 30, 2021



நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களின் மூலம் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மகம் : தீர்வு கிடைக்கும்.


பூரம் : மாற்றங்கள் உண்டாகும்.


உத்திரம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 30, 2021



வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தநிலைகள் அகலும். தனவரவுகள் மேம்படும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைகளின் கல்வி தொடர்பான செலவுகள் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



உத்திரம் : மந்தநிலை அகலும்.


அஸ்தம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.


சித்திரை : சிந்தனைகள் உண்டாகும்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 30, 2021



வியாபாரம் சார்ந்த பணிகளில் நிதானம் வேண்டும். வாழ்க்கைத்துணைவருடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. அரசு சார்ந்த பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். தந்தை வழி உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். கடன் தொடர்பான சிந்தனைகள் மனதில் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



சித்திரை : நிதானம் வேண்டும்.


சுவாதி : இழுபறியான நாள்.


விசாகம் : அலைச்சல்கள் ஏற்படும்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 30, 2021



உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். புதிய வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மனதில் உண்டாகும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். திறமைக்கேற்ப பாராட்டுகளும், அங்கீகாரங்களும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



விசாகம் : ஆலோசனைகள் கிடைக்கும்.


அனுஷம் : சாதகமான நாள்.


கேட்டை : அங்கீகாரங்கள் கிடைக்கும்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 30, 2021



எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் திருப்திகரமான சூழ்நிலைகள் உண்டாகும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மூலம் : தனவரவுகள் உண்டாகும்.


பூராடம் : திருப்திகரமான நாள்.


உத்திராடம் : சுபிட்சம் உண்டாகும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 30, 2021



வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், அன்யோன்யமும் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.


திருவோணம் : சாதகமான நாள்.


அவிட்டம் : நெருக்கம் அதிகரிக்கும்.

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 30, 2021



உடல் ஆரோக்கியத்தில் மந்தமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் சாதகமாக முடியும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



அவிட்டம் : மந்தமான நாள்.


சதயம் : பிரச்சனைகள் குறையும்.


பூரட்டாதி : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 30, 2021



திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். நுட்பமான சிந்தனைகள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கற்பனை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்



பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.


உத்திரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.


ரேவதி : முன்னேற்றமான நாள்.

---------------------------------------


ஈரோடு, சாலை மற்றும் போக்குவரத்து(IRTT) பொறியியல் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரியாக மாற்றப்படுகிறது. பணியாளர்களின் பிள்ளைகளுக்கு 35% இடஒதுக்கீடு வழங்கப்படும் - அரசாணை G.O. (Ms) No.165, Dated : 27.08.2021 வெளியீடு - Erode, Institute of Road Transport and Technology Engineering College is being converted into a Government Engineering College. 35% reservation for children of employees - G.O. (Ms) No.165, Dated: 27.08.2021 Released...



 ஈரோடு, சாலை மற்றும் போக்குவரத்து(IRTT) பொறியியல் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரியாக மாற்றப்படுகிறது. பணியாளர்களின் பிள்ளைகளுக்கு 35% இடஒதுக்கீடு வழங்கப்படும் - அரசாணை G.O. (Ms) No.165, Dated : 27.08.2021 வெளியீடு...


>>> Click here to Download G.O. (Ms) No.165, Dated : 27.08.2021...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு... 27-04-2024 – Press News – Date Extension for Online Application - Direct R...