கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.07.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.07.2022 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: பெருமை


குறள் : 973

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்

கீழல்லார் கீழல் லவர்.


பொருள்:

பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான காரியங்களில் ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள்


பழமொழி :

Measure thrice before you cut once


ஒரு செயலை செய்யும் முன் பலமுறை சிந்திக்கவும்



இரண்டொழுக்க பண்புகள் :


1. பிறகு என்று தள்ளிப் போடப்படும் செயல்கள் சில சமயங்களில் இயலாமலேயே போய்விடும். எனவே அன்றைய வேலை அன்றே செய்து விடுவேன்.


 2. என் நண்பர்கள் என் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே நல்ல நண்பர்களோடு சேருவேன்.


பொன்மொழி :


நிம்மதிக்கான இரண்டு வழிகள்.

விட்டு கொடுங்கள்.

இல்லை விட்டு விடுங்கள்.

- புத்தர்


பொது அறிவு :


1.கோடைகாலத்தில் சாலைகளில் கானல் நீர் தோன்ற காரணம் : 


ஒளி பிரதிபலிப்பு.


 2. பிளாஸ்டிக் தொழிலில் பயன்படும் பிவிசி என்னும் சொல் எதைக் குறிக்கும்? 


பாலிவினைல் குளோரைடு.


English words & meanings :


nascent - just coming into existence. Adjective. புதிதாக உருவாகிய, பெயரளபடை

ஆரோக்ய வாழ்வு :


மனிதர்களின் உடலில் இருக்கும் கல்லீரல் ஒரு முக்கிய உறுப்பாகும். நமது உடலில் இருக்கும் கல்லீரல் உணவுகளில் இருக்கும் விஷத்தன்மைகளை முறித்து, உடலுக்கு நன்மையை செய்கிறது. இப்படியான கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க தினமும் சில வெள்ளரிக்காய்களை சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கி விடும். கல்லீரல் பலம் பெறும்.

NMMS Q 15:


ஒருநாளில் கடிகாரத்தில் மணி மற்றும் நிமிட முட்கள் ஒன்று சேரும் நேரங்களின் எண்ணிக்கை? 


விடை: 24


ஜூலை 1


தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day) 

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை திங்கள் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.


வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது.[1] 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார்.[2] இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.[சமூகம் மற்றும் தனிமனிதருக்கு மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டதே தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day) ஆகும்.




கல்பானா சாவ்லா அவர்களின் பிறந்த நாள்






கல்பானா சாவ்லா ஓர் இந்திய அமெரிக்க விண்ணோடி ஆவார்.விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டினார் கல்பனா சாவ்லா. 41வது வயதில் உலக மக்களின் நட்சத்திரமாகிப் போன ஒரு இந்தியப் பெண் வீராங்கனை



நீதிக்கதை


பழைய நிலைமையை மறந்து விடாதே!


முன்னொரு காலத்தில், ஒரு நாட்டை ஆண்ட அரசரிடம் விவேகமிக்க மந்திரி ஒருவர் இருந்தார். அவர் பெயர் தனயன். அரசர், எங்கு சென்றாலும், தனயனை அழைத்துச் செல்வார். தனயனின் ஆலோசனைப்படியே அனைத்தையும் செய்வார்.


இதனால், மந்திரி தனயனின் புகழ், நாடு முழுவதும் பரவியது. இதைக்கண்ட சிலர், மந்திரி மீது பொறாமை கொண்டனர். தனயன் எங்கு சென்றாலும், தன்னுடன் ஒரு பெட்டியை எடுத்துச் செல்வது வழக்கம். பொறாமைக்காரர்கள் இதை வைத்தே அரசனிடம் கோள் மூட்ட எண்ணினர்.


அரசே, மந்திரி நல்லவர் போல் நடித்து, நம்மை ஏமாற்றுகிறார். அரண்மனையில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் அபகரித்து தன் பெட்டியில் வைத்துள்ளார். வேண்டுமானால் அதைச் சோதனை செய்து பாருங்கள் என்றனர்.


அரசனுக்கும், சிறிது சந்தேகம் ஏற்பட்டது. ஒருநாள் வேட்டைக்குப் போகும்போது, மந்திரி வழக்கம் போல் பெட்டியை தன்னோடு எடுத்து வந்தார். பெட்டியில் என்ன? என்று கேட்டார் அரசர். உடனே மந்திரி, பெட்டியைத் திறந்து காட்டினார், ஆடு மாடு மேய்ப்பவன் உடுத்தும் கந்தல் துணி இருந்தது.


இதெல்லாம் என்ன? என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் அரசர். அரசே! ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, என் புத்திக்கூர்மையை பார்த்து, என்னை மந்திரி ஆக்கினீர்கள். இவ்வளவு உயர் பதவி கிடைத்தால், சிலர் பழைய நிலைமையை மறந்து விடுவர். எனக்கு அப்படியிருக்க மனம் வரவில்லை. பழைய நிலைமையை சுமந்தபடியே, மந்திரி பதவியில் இருக்க விரும்புகிறேன். அதனால் தான், இப்பெட்டியை எந்நேரமும் என்னுடன் வைத்திருக்கிறேன் என்றார் மந்திரி.


மந்திரியை பெரிதும் பாராட்டியதோடு, பொறாமைக்காரர்களுக்கு தக்க தண்டனையும் கொடுத்தார் அரசர். மந்திரிக்கு பல பரிசுகள் கொடுத்து கௌரவித்தார். பொறாமைக்காரர்கள், தாங்கள் செய்த சூழ்ச்சியே, தங்களது வீழ்ச்சிக்கு காரணமானதை எண்ணி வருந்தினர்.


இன்றைய செய்திகள்


01.07.22


◆குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: நேர்காணலுக்கு 137 பேர் தேர்ச்சி.


◆மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக கிழக்குகடற்கரை சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கின. இதேபோல் தேவனேரி முதல் பூஞ்சேரி வரை தமிழக பாரம்பரிய சின்னங்களை விளக்கும் சாலையோர சுவரோவியங்கள் வரையப்படவுள்ளன.


◆சமூகநலத் துறை சார்பில் குழந்தைகள் நலனுக்கான 3 புதிய திட்டங்கள் தொடக்கம் - ரூ.7.32 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு.


◆தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினி மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.


◆கோ-லொக்கேஷன் வழக்கு: என்எஸ்இ-க்கு ரூ.7 கோடி; சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.5 கோடி அபராதம் - ‘செபி’ நடவடிக்கை.


◆பிலிப்பைன்ஸ்: நோபல் பரிசு வென்ற பத்திரிகையாளரின் செய்தி நிறுவனத்தை மூட அரசு உத்தரவு.


◆இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று: காமன்வெல்த் போட்டிகளுக்கான பயிற்சி பாதிப்பு.


◆விம்பிள்டன் டென்னிஸ்; 3-வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்.


Today's Headlines


◆Group-1 Main Exam Results Released: 137 Candidates Qualified for Interview.


 ◆East coast road repair work has started for the International Chess Olympiad to be held in Mamallapuram.  Similarly, roadside murals depicting the traditional symbols of Tamil Nadu will be drawn from Devaneri to Pooncherry.


 ◆The Government of Tamil Nadu has allocated Rs.7.32 crores for the initiation of 3 new schemes for the welfare of children under the Department of Social Welfare.


 ◆Central Cabinet approves computerization of Primary Agricultural Credit Unions.


 ◆Co-location case: Rs 7 crore to NSE;  Chitra Ramakrishna fined Rs 5 crore - 'SEBI' action.


 ◆Philippines: Government orders closure of Nobel Prize-winning journalist's news agency.


 ◆Coronavirus infection among Indian hockey players: Training for Commonwealth Games affected.


 ◆Wimbledon Tennis;  Djokovic advanced to the 3rd round.

2022-2023ஆம் ஆண்டில் பின்பற்ற வேண்டிய கல்வி சார் வழிகாட்டு நெறிமுறைகள் - ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Educational Guidelines to be followed in 2022-2023 - Advice for Teachers - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 012280/ ஜெ2/ 2021, நாள்: 30-06-2022...



>>>  2022-2023ஆம் ஆண்டில் பின்பற்ற வேண்டிய கல்வி சார் வழிகாட்டு நெறிமுறைகள் - ஆசிரியர்களுக்கான அறிவுரைகள் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Educational Guidelines to be followed in 2022-2023 - Advice for Teachers - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 012280/ ஜெ2/ 2021, நாள்: 30-06-2022...





இன்றைய (30-06-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூன் 30, 2022



ரகசியங்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. சமூக பணிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அஸ்வினி : அனுபவம் ஏற்படும். 


பரணி : அனுகூலமான நாள். 


கிருத்திகை : இன்னல்கள் குறையும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூன் 30, 2022



ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். முதலீடுகள் சார்ந்த செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சிந்தித்து செயல்படவும். லாபகரமான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




கிருத்திகை : மேன்மை உண்டாகும். 


ரோகிணி : தெளிவு பிறக்கும். 


மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------





மிதுனம்

ஜூன் 30, 2022



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.  புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் அமையும். நண்பர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். தந்தை வழியில் பணவரவு கிடைக்கும். சோர்வு குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.


திருவாதிரை : மாற்றமான நாள்.


புனர்பூசம் : வரவு உண்டாகும்.

---------------------------------------





கடகம்

ஜூன் 30, 2022



உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். தொழில் ரீதியான வங்கி கடன் கிடைக்கும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களின் உதவியால் பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




புனர்பூசம் : மனக்கசப்புகள் நீங்கும். 


பூசம் : மாற்றம் உண்டாகும்.


ஆயில்யம் : பொறாமைகள் குறையும்.

---------------------------------------





சிம்மம்

ஜூன் 30, 2022



பிள்ளைகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.  பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் கற்பனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் அனுகூலமான முடிவு கிடைக்கும். துணிவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மகம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


பூரம் : இழுபறிகள் அகலும்.


உத்திரம் : அனுகூலமான நாள்.

---------------------------------------





கன்னி

ஜூன் 30, 2022



புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு திருப்தியை ஏற்படுத்தும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திரம் : ஆதரவு ஏற்படும்.


அஸ்தம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.


சித்திரை : ஆர்வம் உண்டாகும். 

---------------------------------------





துலாம்

ஜூன் 30, 2022



சிக்கலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். எதிர்பாலின மக்கள் தொடர்பான செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. காது தொடர்பான இன்னல்கள் குறையும். செல்வாக்கு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




சித்திரை : காரியசித்தி உண்டாகும்.


சுவாதி : பொறுப்புகள் கிடைக்கும்.


விசாகம் : இன்னல்கள் குறையும்.

---------------------------------------





விருச்சிகம்

ஜூன் 30, 2022



தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை குறைத்துக் கொள்வது நல்லது. கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது உத்தமமாகும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




விசாகம் : கருத்துக்களை தவிர்க்கவும். 


அனுஷம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.


கேட்டை : ஏற்ற, இறக்கமான நாள்.

---------------------------------------





தனுசு

ஜூன் 30, 2022



நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தினை ஏற்படுத்தும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




மூலம் : மாற்றமான நாள்.


பூராடம் : லாபம் மேம்படும்.


உத்திராடம் : ஆதரவு ஏற்படும்.

---------------------------------------





மகரம்

ஜூன் 30, 2022



இழுபறியாக இருந்துவந்த பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். விற்பனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உதவி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திராடம் : தீர்வு கிடைக்கும்.


திருவோணம் : அனுபவம் உண்டாகும். 


அவிட்டம் : லாபகரமான நாள்.

---------------------------------------





கும்பம்

ஜூன் 30, 2022



பிள்ளைகளால் நன்மை உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் அமையும். மனதில் புதுவிதமான கற்பனைகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். ஓய்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




அவிட்டம் : செல்வாக்கு மேம்படும்.


சதயம் : மேன்மையான நாள்.


பூரட்டாதி : நம்பிக்கை மேம்படும். 

---------------------------------------





மீனம்

ஜூன் 30, 2022



உலகியல் வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதுவிதமான மாற்றம் ஏற்படும். பயணங்கள் சார்ந்த புதுமையான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதுவிதமான துறைகளின் மீது ஆர்வம் உண்டாகும். அரசு தொடர்பான அனுகூலம் ஏற்படும். நட்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




பூரட்டாதி : புதுமையான நாள்.


உத்திரட்டாதி : அனுபவம் கிடைக்கும்.


ரேவதி : ஆர்வம் உண்டாகும்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.06.2022 - School Morning Prayer Activities...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.06.2022 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: பெருமை


குறள் : 972

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.


பொருள்:

பிறப்பினால் அனைவரும் சமம் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்


பழமொழி :

If all wish to command who is to obey?

எல்லோரும் பல்லக்கில் உட்கார்ந்தால் பல்லக்குத் தூக்குவது யார்?


இரண்டொழுக்க பண்புகள் :


1. பிறகு என்று தள்ளிப் போடப்படும் செயல்கள் சில சமயங்களில் இயலாமலேயே போய்விடும். எனவே அன்றைய வேலை அன்றே செய்து விடுவேன்.


 2. என் நண்பர்கள் என் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே நல்ல நண்பர்களோடு சேருவேன்.


பொன்மொழி :


வாழ்க்கையின் நோக்கம்

பிறருக்கு உதவி செய்வதே ஆகும்.

- புத்தர்


பொது அறிவு :


1.மலட்டுத்தன்மையை நீக்க பயன்படும் வைட்டமின் எது? 


வைட்டமின் ஈ.


2. தக்காளியின் சிவப்பு நிறத்திற்கு காரணம் எது? 


குரோமேடோபேர்.


English words & meanings :


minced - cut up into very small pieces, Adjective. மிக சிறிய துண்டுகளாக வெட்டுதல். பெயரளபடை


ஆரோக்ய வாழ்வு :


வெப்பம் அதிகம் ஏற்பட்டால் கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடும். மேலும் முதுமைகாலம் வரை கண்பார்வை தெளிவாக இருப்பதற்கு சத்து நிறைந்த உணவுகளை உண்பது அவசியமாகும். வெள்ளரிக்காயில் இருக்கும் சத்துகள் கண்களின் கருவிழிகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, அதீத வெப்பத்தால் கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடாமல் பாதுகாக்கிறது.


NMMS Q 14:


A என்பவர் B என்பவரின் சகோதரன். ஆனால் B என்பவர் A என்பவரின் சகோதரன் அல்ல எனில் A மற்றும் B ஆகியோரின் உறவுமுறை என்ன? 


விடை: A - சகோதரன் ; B - சகோதரி


ஜூன் 30


மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ்  அவர்களின் பிறந்த நாள்

மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ் II (மைக்கல் பிரெட் பெல்ப்சு II) (Michael Fred Phelps II, பி ஜூன் 30, 1985, பால்ட்டிமோர், மேரிலன்ட்) பல நீச்சல் வகைகளில் உலக சாதனைகளைப் படைத்த அமெரிக்க நீச்சல் வீரர் ஆவார். 28 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்ற ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிக தங்கப் பதக்கம் பெற்றவர் ஆவார்.


நீதிக்கதை


ஜூடோ பயிற்சி


சிறுவன் ஒருவன் ஜூடோ பயில விரும்பினான். அவனுக்கோ ஒரு விபத்தினால் இடது கை போய்விட்டது. எனினும் இந்தக் குறையைப் பொருட்படுத்தாமல், குரு ஒருவர் அவனுக்குப் பயிற்சி அளிக்க ஒப்புக் கொண்டார். 


தினமும் பயிற்சி அளித்தார் குரு. ஆனால் ஒரே ஒரு குத்து வித்தை தான் சொல்லிக் கொடுத்தார். நான்கைந்து மாதங்கள் சென்றன. அப்போதும் அதே பயிற்சிதான். சிறுவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டான். 


ஒரு நாள் சிறுவன் குருவைக்கேட்டே விட்டான். இந்த ஒரு குத்து போதும் உனக்கு என்று சொல்லிவிட்டார். நாட்கள் கடந்தன. குரு சிறுவனைப் போட்டிக்கு அனுப்பினார். ஒரு கையுடன் வந்த சிறுவனைப் பார்த்து பலரும் அற்பமாய் எண்ணினர். ஆனால் நீங்கள் நினைத்ததுசரிதான். வெற்றி சிறுவனுக்கே. தன்னை விட பலசாலிகளை எல்லாம் ஆக்ரோஷமாய் எதிர் கொண்டு வீழ்த்தி விட்டான். எல்லோருக்கும் ஆச்சர்யம். சிறுவனுக்கும். 


எப்படி குருவே என்னால் ஒருகையை வைத்துக் கொண்டு, ஒரே ஒரு குத்துப் பயிற்சியை மட்டும் கற்று வெற்றி பெற முடிந்தது? என்று கேட்டான். 


குரு சொன்னார்: இரண்டே காரணங்கள் தான். ஒன்று, நீ பயிற்சி செய்தது ஜூடோவிலேயே மிகவும் கடினமான குத்து. இரண்டு, இந்தக் குத்தை தடுக்க வேண்டும் என்றால் குத்துபவனின் இடது கையை மடக்க வேண்டும். உன்னிடம் அது இல்லை. 


குருவுக்கு ஆத்மார்த்தமாகநன்றி சொன்னான் சிறுவன்.


இன்றைய செய்திகள்


30.06.22


◆பள்ளி வாகனங்களில் சிசிடிவி மற்றும் சென்சார் ஆகியவற்றை கட்டாயமாக்கும் வகையில் மேட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


◆ரத்த சோகையைத் தடுக்க 19 மாவட்டங்களில் தீவிர விழிப்புணர்வு இயக்கத்தை நடத்த 4.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


◆மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட 2021-ம் ஆண்டுக்கான இந்திய வனப்பணி தேர்வின் இறுதி முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இத்தேர்வில் நாடு முழுவதும் மொத்தம் 108 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


◆நீலத்தடி நீரை பயன்படுத்தும் அனைவரும் நாளைக்குள் (ஜூன் 30) பதிவு செய்யாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அறிவித்துள்ளது.


◆பிஎஸ்எல்வி-சி53 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது - கவுன்ட்-டவுன் நேற்று தொடக்கம்.


◆ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்போம் என்று அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் உறுதியேற்றன.


◆மலேசியா ஓபன் பேட்மிண்டன் : இந்தியாவின் பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.


◆தேசிய இளையோர் குத்துச்சண்டை போட்டி: ஜூலை 5-ந் தேதி சென்னையில் நடக்கிறது.


◆அயர்லாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி  வெற்றிபெற்றது.



Today's Headlines


◆The Government of Tamil Nadu has decided to amend the Motor Vehicle Act to make CCTV and sensors mandatory in school vehicles.


 ◆The Government of Tamil Nadu has allocated Rs. 4.75 crore for conducting intensive awareness campaigns in 19 districts to prevent anemia.


 ◆The final results of the 2021 Indian Forest Service Examination conducted by the Central Civil Service Commission were released yesterday.  A total of 108 students across the country have passed the exam.


 ◆The Central Groundwater Authority has announced that stern action will be taken if all those who use underground water if not register by tomorrow (June 30).


 ◆PSLV-C53 rocket launches today - Countdown begins yesterday.


 ◆At the G7 summit in Germany, countries including the United States and India pledged to protect freedom of expression.


 ◆Malaysia Open Badminton: India's PV Sindhu advances to the next round.


 ◆National Youth Boxing Tournament will be held on 5th July in Chennai.


◆ India won the 2nd Twenty20 cricket match against Ireland by 4 runs.






VRS weightage அரசாணை எண்: 53, நாள்: 08-06-2022 ஏன்? எதற்கு?



VRS weightage அரசாணை எண்: 53, நாள்: 08-06-2022 ஏன்? எதற்கு?


விருப்ப ஓய்வூதியர் வெயிட்டேஜ் தொடர்பாக, தமிழ்நாடு மனிதவள மேம்பாட்டுத் துறை (FR-II)-ன்  அரசாணை நிலை எண் 53 (நாள் 8.6.2022) சில தினங்களுக்குமுன் வெளிவந்தது. இது தொடர்பான பல்வேறு செய்திகளும் ஊகங்களும் ஊடகங்களில் வெளிவந்தது நாம் அனைவரும் அறிந்ததே. அது சார்ந்த தெளிவை அரசு ஊழியர் & ஆசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்தவே இப்பதிவு.


முதலில் நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் அச்சு - காட்சி - மின்னணு செய்தி ஊடகத்தினரில் 99.9% பேருக்கு நமது துறைசார் நடைமுறைகள் 100% புரியவும் செய்யாது தெரியவும் செய்யாது. அவ்வப்போது வருவதை இயன்றவரை Highlight ஆக்கி வெளியிட்டுவிடுவர். அவ்வளவே.


சரி விசயத்த்திற்கு வருவோம்.


50 வயதிற்கு மேற்பட்ட / 20 வருடங்கள் பணி நிறைவு செய்த அரசு ஊழியர் தனது ஓய்வுக் காலத்திற்கு முன்பே தனது சொந்த விருப்பத்தின்பேரில் பணி  ஓய்வு  (Voluntary Retirement in Service) பெற விண்ணப்பிக்கலாம்.


வழக்கமான பணி மூப்பால் ஓய்வு பெறும் ஊழியரின் ஓய்வூதியம் என்பது அவரது இறுதி மாத அடிப்படை ஊதியத்தில் அதிகபட்சம் 50% என்ற அளவில் இருக்கும். அதற்கான கணக்கீடு,

Last month Basic Pay X (Years of service ÷ 66).


அதேபோன்று விருப்ப ஓய்வு பெறுவோருக்கான ஓய்வூதியக் கணக்கீட்டிற்கு, அவரது எஞ்சிய பணிக்காலத்தில் இருந்து அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை அவரது Years of service-ல் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளப்படும். இதற்குப் பெயர்தான் அந்த VRS Weightage. இது மிகப் பழைய வழக்கமான நடைமுறையே.


அந்த 5 ஆண்டுகளைக் கூட்டுவதால் அவரின் வயது 58-ஐத் தாண்டிவிடக்கூடாது / அவரது பணிக்காலம் 33 ஆண்டுகளைத் தாண்டிவிடக்கூடாது. அதாவது 55 வயதில் ஒருவர் VRS கோரினால் கூடுதலாக 3 ஆண்டுகளை மட்டுமே அவரது Pension Calculation-ல் சேர்த்து கணக்கிடலாம். அதேபோல் 32 வருடங்கள் பணிபுரிந்தவருக்கு கூடுதலாக 1 ஆண்டு மட்டும் சேர்த்துக் கொள்ளப்படும். அந்த Weightage-ற்கான மாதிரி அட்டவணை,


பணிக்காலத்தைப் பொறுத்து,

28 + 5 (= 33)

29 + 4 (= 33)

30 + 3 (= 33)

31 + 2 (= 33)

32 + 1 (= 33)


வயதைப் பொறுத்து எனில்,

53 + 5 (= 58)

54 + 4 (= 58)

55 + 3 (= 58)

56 + 2 (= 58)

57 + 1 (= 58)


இந்த Weightage 1997 முதல் நடைமுறையில் உள்ளது. இது தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அடிப்படை விதிகளின் 56-ஆம் விதியான ஓய்வூதிய விதிகளில் 3-வது பிரிவான விருப்ப ஓய்வூதியப் பிரிவில் வரிசை எண் D-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.


சரி. . . அதென்ன 58 வயது. . .? வேறொன்னுமில்ல அப்ப பணி ஓய்வு வயது 58. ஆனால் இப்ப பணி ஓய்வு வயது. . . .? 59-ஆகி 60 -ல வந்து நிக்குது.


பணிசார் அடிப்படை விதிகள் சார்ந்து மேற்கொள்ளப்படும் எந்தவொரு மாற்றமும் முதலில் துறைசார் அரசாணையாகப் பிறப்பிக்கப்பட்டாலும், அதன்பின் பணிசார் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதற்கான 'திருத்தத் தீர்மான அரசாணை' கூடுதலாகப் பிறப்பிக்கப்படும்.


அதன்படியே, 07.5.2020 முதல் ஓய்வு வயதை 59-ஆக்கியதற்கு  பின்வரும் திருத்தமும்,


54 + 5 (= 59)

55 + 4 (= 59)

56 + 3 (= 59)

57 + 2 (= 59)

58 + 1 (= 59)


பின்னர் 25.2.2021 முதல் 60-ஆக்கியதற்கு மேற்படி திருத்தத்தை மீண்டும் பின்வமாறு திருத்தியும்


55 + 5 (= 60)

56 + 4 (= 60)

57 + 3 (= 60)

58 + 2 (= 60)

59 + 1 (= 60)


புதிய ஓய்வு வயதிற்கான VRS Weightage பற்றிய 'திருத்தத் தீர்மான அரசாணை' தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


>>>  விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் தொடர்பான அரசாணை (நிலை) எண்: 53, நாள்: 08-06-2022 வெளியீடு (G.O.(Ms) No: 53, Dated: 08-06-2022 - Revision of Weightage with reference to age for Government Servants retiring Voluntarily)...






ஆசிரியர்களுக்கு மறு நியமன அடிப்படையில் கல்வி ஆண்டு முழுவதும் பணி - அரசாணை (நிலை) எண்: 115, நாள்: 28-06-2022 வெளியீடு (Teachers Re-employed throughout the academic year - G.O. (Ms) No: 115, Dated: 28-06-2022)...



பள்ளிக் கல்வி - மறுநியமனம் - அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் - கல்வியாண்டின் இடையில் வயது காரணமாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டில் கடைசி வேலை நாள் வரை ( Upto the end of Academic Session ) தேவைப்படும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம் - ஆணை வெளியிடப்படுகிறது...


>>> ஆசிரியர்களுக்கு மறு நியமன அடிப்படையில் கல்வி ஆண்டு முழுவதும் பணி - அரசாணை (நிலை) எண்: 115, நாள்: 28-06-2022 வெளியீடு (Teachers Re-employed throughout the academic year - G.O. (Ms) No: 115, Dated: 28-06-2022)...





இடைநிலை ஆசிரியர் - மாவட்ட மாறுதலுக்கான ஒட்டுமொத்த முன்னுரிமை பட்டியல் (Secondary Grade Teacher - District Transfer - Seniority List)...



>>> இடைநிலை ஆசிரியர் - மாவட்ட மாறுதலுக்கான ஒட்டுமொத்த முன்னுரிமை பட்டியல் (Secondary Grade Teacher - District Transfer - Seniority List)...





இன்றைய (29-06-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஜூன் 29, 2022



எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஒப்பந்தம் சார்ந்த தொழிலில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உறுதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




அஸ்வினி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


பரணி : மகிழ்ச்சியான நாள்.


கிருத்திகை : முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூன் 29, 2022



பணி சார்ந்த வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. செல்வாக்கு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும். 


ரோகிணி : கவனம் வேண்டும்.


மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





மிதுனம்

ஜூன் 29, 2022



உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தெளிவு பிறக்கும். சமூக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மறைமுகமான சில விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். புதிய ஆடைகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும். 


திருவாதிரை : பொறுப்புகள் மேம்படும். 


புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும். 

---------------------------------------





கடகம்

ஜூன் 29, 2022



வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் புதிய முதலீடுகள் மேம்படும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான குழப்பம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். ரகசியமான சில செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




புனர்பூசம் : முதலீடுகள் மேம்படும்.


பூசம் : குழப்பம் ஏற்படும்.


ஆயில்யம் : ஆதாயகரமான நாள்.

---------------------------------------





சிம்மம்

ஜூன் 29, 2022



செய்யும் தொழிலில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். விவசாயம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். சொத்துச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதியும், புத்துணர்ச்சியும் பெறுவீர்கள். செலவுகளை குறைத்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். தெளிவு பிறக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




மகம் : லாபகரமான நாள்.


பூரம் : முன்னேற்றம் ஏற்படும்.


உத்திரம் : சேமிப்பு மேம்படும்.

---------------------------------------





கன்னி

ஜூன் 29, 2022



செயல்பாடுகளில் திருப்தியற்ற மனநிலை உண்டாகும். உற்பத்தி சார்ந்த துறைகளில் அனுகூலம் ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகளும், அதிகாரங்களும் அதிகரிக்கும். அரசு சார்ந்த துறைகளில் மறைமுக ஆதாயம் உண்டாகும். ஆசிரியர் பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். திருப்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திரம் : திருப்தியற்ற நாள்.


அஸ்தம் : அதிகாரம் மேம்படும். 


சித்திரை : மாற்றமான நாள்.

---------------------------------------





துலாம்

ஜூன் 29, 2022



சமூக பணிகளில் உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சட்ட ரீதியான நுணுக்கங்களை தெரிந்து கொள்வீர்கள். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதிய ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கனிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




சித்திரை : புரிதல் உண்டாகும். 


சுவாதி : நுணுக்கங்களை அறிவீர்கள்.


விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 

---------------------------------------






விருச்சிகம்

ஜூன் 29, 2022



இயந்திரம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். உத்தியோக பணிகளில் காலதாமதம் உண்டாகும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் தேவையற்ற பகைமையை தவிர்க்கலாம். வீண் பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. அலைச்சல்கள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




விசாகம் : கவனத்துடன் செயல்படவும்.


அனுஷம் : குழப்பமான நாள்.


கேட்டை : பேச்சுக்களை குறைக்கவும்.

---------------------------------------





தனுசு

ஜூன் 29, 2022



புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மேன்மை ஏற்படும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவதன் மூலம் நம்பிக்கை மேம்படும். திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூக பணிகளில் செல்வாக்கும், மதிப்பும் மேம்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




மூலம் : மேன்மை ஏற்படும்.


பூராடம் : நம்பிக்கை மேம்படும். 


உத்திராடம் : செல்வாக்கு அதிகரிக்கும். 

---------------------------------------





மகரம்

ஜூன் 29, 2022



பயணங்களில் புதுவிதமான சூழ்நிலைகள் உண்டாகும். சிறு தொழில் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மற்றவர்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். மனை சார்ந்த கடன் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.


திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும்.


அவிட்டம் : உதவி கிடைக்கும்.

---------------------------------------





கும்பம்

ஜூன் 29, 2022



கவிதை தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பத்திரம் தொடர்பான துறைகளில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்யோன்யமும் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குழப்பம் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




அவிட்டம் : அனுகூலமான நாள்.


சதயம் : முன்னேற்றம் ஏற்படும்.


பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------





மீனம்

ஜூன் 29, 2022



புதுவிதமான ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் பிறக்கும். பழைய நினைவுகளின் மூலம் சோர்வும், சலிப்பும் ஏற்படும். குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சாந்தம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




பூரட்டாதி : மாற்றம் பிறக்கும்.


உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.


ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.06.2022 - School Morning Prayer Activities...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.06.2022 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :


பால் : பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம் :மானம் 


குறள் - 970 

இளிவரின் வாழாத மானம் உடையார்

ஒளிதொழுது ஏத்தும் உலகு. 


பொருள் - தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள்.


பழமொழி :

Bare words buy no barely.

வெறும் கையால் முழம் போட முடியுமா?


இரண்டொழுக்க பண்புகள் :


1. பிறகு என்று தள்ளிப் போடப்படும் செயல்கள் சில சமயங்களில் இயலாமலேயே போய்விடும். எனவே அன்றைய வேலை அன்றே செய்து விடுவேன்.


 2. என் நண்பர்கள் என் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே நல்ல நண்பர்களோடு சேருவேன்.


பொன்மொழி :


அமைதியை விட உயர்வான சந்தோசம்இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை.- புத்தர்


பொது அறிவு :


1. கரையான் நாள் ஒன்றுக்கு எத்தனை முட்டைகள் இடும்? 


30,000 


2. கப்பல் மிதக்கும் தத்துவம் என்ன? 


ஆர்க்கிமிடிஸ் தத்துவம்


English words & meanings :


liability - the state of being responsible, noun. ஒன்றுக்குப் பொறுப்பேற்கும் தன்மை. பெயர்ச் சொல்


ஆரோக்ய வாழ்வு :


கோடைகாலங்களில் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சுலபமாக தொற்று நோய்களால் பாதிக்கப்படுவார்கள். வெள்ளரிக்காயில் வைரஸ், பாக்டீரியா மற்றும் இதர நுண்கிருமிகளை அழிக்கும் திறன் அதிகம் உள்ளன. தொற்று நோய்கள் ஏற்படாமல் நம்மை பாதுகாத்துகொள்ள தினமும் ஒரு வெள்ளரிக்காயாவாது சாப்பிடும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.


NMMS Q 13 : 


மஞ்சு 29.2.1984 இல் பிறந்துள்ளார் எனில் அவர் 2020 வரை எத்தனை பிறந்த நாட்களை கொண்டாடியிருப்பார்? 


விடை : 9


நீதிக்கதை


அன்னையின் வளர்ப்பு


நோபல் பரிசு பெற்ற ஒரு விஞ்ஞானி இளம் வயதிலேயே சிறந்த அறிவாளியாக விளங்கினார். ஆனால் எந்த வேலையையும் ஒருமைப்பாட்டுடன் செய்யவில்லை. அவரின் போக்கை கண்ட அவரின் தாயார் மிகவும் வருந்தினார். ஒருநாள் அவரை அழைத்து பூதக்கண்ணாடியையும் சில காகிதங்களையும் கொண்டுவரசொல்லி, காகிதங்களை கீழே போட்டு கண்ணாடியை வெயிலில் காட்டினார்.


பூதக்கண்ணாடியை பிடித்த தாயின் கைகள் இங்கும் அங்குமாய் அசைந்து கொண்டிருந்தது. நீண்ட நேரத்திற்கு பிறகு தனது கைகளை பூதக்கண்ணாடியின் ஒளிக்குவியல் காகிதத்தின் மேல்படுமாறு நீட்டினார். ஒளியின் ஒருமுனையில் தீ காகிதத்தை எரித்தது. இதை கவனத்துடன் பார்த்த இந்த விஞ்ஞானி ஆச்சரியப்பட்டார். அப்போது தாயார் கூறினார். ஒருமுகபடுத்திய ஒளிக்கதிர்கள் நெருப்பாகி காகிதத்தை எரிக்கும். 


ஆனால் ஒருமுகபடுத்தாத கதிரின் ஒளியில் நெருப்பு உண்டாகாது. அதுபோல் நீயும் உள்ளத்தை ஒருமுகபடுத்தினால் எந்த வேலையிலும் வெற்றி அடையலாம் என தாயார் அவருக்கு அறிவுரை கூறினார். இந்த விஞ்ஞானி தனது மனதில் தாயாரின் வார்த்தைகளை வைத்துக்கொண்டார். அன்று முதல் மன ஒருமைப்பாட்டுடன் தனது செயல்களை செய்ய தொடங்கினார். பிற்காலத்தில் உலகமே போற்றும் சர். சி. வி இராமன் ஆனார்.


இன்றைய செய்திகள்


29.06.22


* நாடு முழுவதும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கும் ஜூலை முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.


* இந்தியாவின் தினசரி கோவிட்-19 பாதிப்பு ஒரே நாளில் 45 சதவீதம் அதிகரித்து காணப்படுகிறது. நாட்டின் தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 17,073 ஆக பதிவாகியுள்ளது.


* கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பாடபிரிவுகளுக்கு விண்ணப்பிக்க இன்று முதல் அடுத்த மாதம் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பல்கலை கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.


* அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு 40 புதிய விருப்ப பாடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் இனி விரும்பிய பாடங்களை தங்களின் விருப்ப பாடமாக எடுத்துப் படிக்கலாம்.


* இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மனும் இங்கிலாந்து அணிக்காக உலகோப்பையை வென்று தந்த கேப்டனுமான இயான் மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


* விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச்  2-வது சுற்றுக்கு முன்னேறினார்.


* அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியாவின் புவனேஷ்வர் குமார் 208 கி. மீ வேகத்தில் பந்து வீசி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.


Today's Headlines


* The Federal Ministry of Environment has announced a nationwide ban on the use of disposable plastic products from July.


 * India's daily covid - 19 cases are increasing by 45 percent in a single day.  The number of daily govt casualties in the country is reported to be 17,073.


 * Vice-Chancellor of the University of Tamil Nadu. Ms. Geethalakshmi said that one can apply for the undergraduate courses at the Tamil Nadu Agricultural University, Coimbatore from today till the 27th of next month.


 * Anna University has introduced 40 new optional courses for engineering students.  Interested students can now take the desired subjects as their preferred subjects.


 * Ian Morgan, England's action batsman and World Cup-winning captain for England has announced his retirement from international cricket.


 * Current champion Novak Djokovic advanced to the second round at the Wimbledon Tennis Men's Singles.


 * India's Bhuvneshwar Kumar 280k in the T20I match against Ireland.  He set a new world record by throwing the ball at a speed of 208 k.m.





தருமபுரி மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் (DSE) பணியிட விவரங்கள் வெளியீடு (Graduate Teacher (B.T.Assistant) / Secondary Grade Teacher (DSE) Vacancy Details to be filled by SMC in Dharmapuri District)...

 


>>> தருமபுரி மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் (DSE) பணியிட விவரங்கள் வெளியீடு (Graduate Teacher (B.T.Assistant) / Secondary Grade Teacher (DSE) Vacancy Details to be filled by SMC in Dharmapuri District)...




கடலூர் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு (Post Graduate / Graduate Teacher (B.T.Assistant) Vacancy Details to be filled by SMC in Cuddalore District)...

 


>>> கடலூர் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு (Post Graduate / Graduate Teacher (B.T.Assistant) Vacancy Details to be filled by SMC in Cuddalore District)...





15.3.2021 நிலவரப்படி நேர்முக உதவியாளர், முறையான கண்காணிப்பாளர் மற்றும் இருக்கை கண்காணிப்பாளர் பதவி உயர்வு உத்தேச தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் (15.3.2021 Personal Assistant, Regular Superintendent and Desk Superintendent Promotion - Tentative Panel Selection List Released - Proceedings of Tamil Nadu Joint Director of School Education) ந.க.எண்.50965/அ3/இ1/2021, நாள். .06.2022...



 15.3.2021 நிலவரப்படி நேர்முக உதவியாளர், முறையான கண்காணிப்பாளர் மற்றும் இருக்கை கண்காணிப்பாளர் பதவி உயர்வு உத்தேச தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் (15.3.2021 Personal Assistant, Regular Superintendent and Desk Superintendent Promotion - Tentative Panel Selection List Released - Proceedings of Tamil Nadu Joint Director of School Education) ந.க.எண்.50965/அ3/இ1/2021, நாள். .06.2022...



>>> 15.03.2021 நிலவரப்படியான உதவியாளர், பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கான திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் - ந.க.எண்.50964/அ3/இ1/2021, நாள். .06.2022...



>>> 15.03.2021 நிலவரப்படி பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவியிலிருந்து முறையான கண்காணிப்பாளர் பணிமாறுதலுக்கான உத்தேச தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் ந.க.எண்.50965/அ3/இ1/2021, நாள். .06.2022...



>>> 15.03.2021 நிலவரப்படியான முறையான பதவியிலிருந்து மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பதவி உயர்வுக்கான பெயர்ப்பட்டியல் - ந.க.எண்.50966/அ3/இ1/2021, நாள். .06.2022...



>>> தமிழ்நாடு அமைச்சுப்பணி – 15.03.2021 நிலவரப்படியான பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பணியிலிருந்து முறையான கண்காணிப்பாளர் பணிமாறுதல் மற்றும் உதவியாளர் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்குதல் -  மேல்முறையீடு - திருத்தம் / சேர்க்கை / நிராகரிக்கப்பட்டது - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள், ந.க.எண். 50965/அ3/இ1/2021, நாள். . 06.2022...






இராணிப்பேட்டை மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு (Graduate Teacher (B.T.Assistant) Vacancy Details to be filled by SMC in Ranipet District)...


>>> இராணிப்பேட்டை மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய பட்டதாரி  ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு (Graduate Teacher (B.T.Assistant) Vacancy Details to be filled by SMC in Ranipet District)...




புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை உடனுக்குடன் EMIS ல் பதிவு செய்ய பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள்(School Education Commissioner Proceedings for immediate registration of new student admission details in EMIS) ந.க.எண்: 43061/ கே/ இ3/ 2022, நாள்: 28-06-2022...



>>> புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை உடனுக்குடன் EMIS ல் பதிவு செய்ய பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள்(School Education Commissioner Proceedings for immediate registration of new student admission details in EMIS) ந.க.எண்: 43061/ கே/ இ3/ 2022, நாள்: 28-06-2022...




திருப்பூர் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய PG / BT / SGT ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு (Post Graduate / Graduate Teacher (B.T.Assistant) / Secondary Grade Teacher Vacancy Details to be filled by SMC in Tiruppur District)...



>>> திருப்பூர் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய PG ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு (Post Graduate Teacher Vacancy Details to be filled by SMC in Tiruppur District)...



>>> திருப்பூர் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய BT / SGT ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு ( Graduate Teacher (B.T.Assistant) / Secondary Grade Teacher Vacancy Details to be filled by SMC in Tiruppur District)...



எண்ணும் எழுத்தும் திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்தும் மாணவர் கற்றல்நிலை சார்ந்தும் பெற்றோர் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டிய தகவல்கள் சார்ந்து DEE & SCERT இயக்குநர்களின் இணை செயல்முறைகள் (Joint Proceedings of DEE & SCERT Directors based on the information to be reported at the parent meeting based on the Ennum Ezhuthum Scheme - Guidelines and Students Learning Level) ந.க.எண்: 2411/ ஈ2/ 2020, நாள்: 28-06-2022...



>>> எண்ணும் எழுத்தும் திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்தும் மாணவர் கற்றல்நிலை சார்ந்தும் பெற்றோர் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டிய தகவல்கள் சார்ந்து DEE & SCERT இயக்குநர்களின் இணை செயல்முறைகள் (Joint Proceedings of DEE & SCERT Directors based on the information to be reported at the parent meeting based on the Ennum Ezhuthum Scheme -  Guidelines and Students Learning Level) ந.க.எண்: 2411/ ஈ2/ 2020, நாள்: 28-06-2022...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு... 27-04-2024 – Press News – Date Extension for Online Application - Direct R...