Comparison of UPS vs NPS vs CPS in Tamilnadu
UPS - Unified Pension Scheme Effect from 01.04.2025 for Central Govt Employees
Comparison of UPS vs NPS vs CPS in Tamilnadu
UPS - Unified Pension Scheme Effect from 01.04.2025 for Central Govt Employees
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
*****
GOVERNMENT OF INDIA
MINISTRY OF FINANCE
DEPARTMENT OF FINANCIAL SERVICES
*****
RAJYA SABHA
UNSTARRED QUESTION NO. 1505
TO BE ANSWERED ON 14th MARCH, 2023 (TUESDAY)/ 23 PHALGUNA, 1944 (SAKA)
STATES ADOPTING NATIONAL PENSION SCHEME
1505. Shri Ram Nath Thakur
Will the Minister of Finance be pleased to state:
(a) the states which have implemented the National Pension Scheme;
(b) the liability along with interest payable towards OPS by the employees of the States implementing the said scheme;
(c) the names of OPS implementing States that are demanding deposits;
(d) the action taken by Government to give deposits under OPS so that the employees can be benefitted ; and
(e) whether Government is considering re-implementation of OPS on the lines of those States?
ANSWER
THE MINISTER OF STATE IN THE MINISTRY OF FINANCE
(DR. BHAGWAT KARAD)
(a) and (b) The National Pension System (NPS) was introduced by the Government of India vide notification dated 22.12.2003 to replace the defined benefit pension system by defined contribution pension scheme in order to provide old age income security in a fiscally sustainable manner and to channelize small savings into productive sectors of the economy through prudential investments. It was made mandatory for all new recruits to the Government service (except armed forces) with effect from 01.01.2004, and has also been rolled out for all citizens with effect from 01.05.2009, on voluntary basis. As informed by the Pension Fund Regulatory and Development Authority (PFRDA), 26 State Governments except the State Government of Tamil Nadu and the State Government of West Bengal , have notified and implemented NPS for their employees. As such liability under Old Pension Scheme (OPS)- a defined benefit pension system- is an unfunded liability of State Government, which will be met from their future revenues.
(c) and (d) The State Governments of Rajasthan, Chhattisgarh, Jharkhand, Punjab, and Himachal Pradesh have informed the Central Government/PFRDA about their decision to restart Old Pension Scheme (OPS) for their State Government employees, and have requested refund of corpus accumulated under NPS. There is no provision under Pension Fund Regulatory and Development Authority Act, 2013 read along with PFRDA (Exits and Withdrawals under the National Pension System ) Regulations, 2015, and other relevant Regulations, vide which the accumulated corpus of the subscribers viz Government contribution, Employees' contribution towards NPS along with accruals , can be refunded and deposited back to the State Government.
(e) There is no proposal under consideration of Government of India for restoration of old pension scheme in respect of Central Government employees recruited on or after 01.01.2004 on the lines of those States.
********
(Google Translate மூலம் தமிழாக்கம் செய்யப்பட்டது)
இந்திய அரசு
நிதி அமைச்சகம்
நிதி சேவைகள் துறை
*****
ராஜ்ய சபா
நட்சத்திரமிடப்படாத கேள்வி எண். 1505
14 மார்ச், 2023 (செவ்வாய்கிழமை)/
23 பல்குனா, 1944 (சகா)
அன்று பதில் அளிக்கப்படுகிறது.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற மாநிலங்கள்
1505. ஸ்ரீ ராம் நாத் தாக்கூர் நிதியமைச்சர் :
(அ) தேசிய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்திய மாநிலங்கள்;
(ஆ) அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் மாநிலங்களின் ஊழியர்கள் OPS க்கு செலுத்த வேண்டிய வட்டியுடன் கூடிய பொறுப்பு;
(இ) பழைய ஓய்வூதிய தி்ட்டத்தை (OPS) செயல்படுத்தும் மாநிலங்களின் பெயர்கள்;
(ஈ) ஊழியர்கள் பயன்பெறும் வகையில் பழைய ஓய்வூதிய தி்ட்டத்தை (OPS) கீழ் டெபாசிட் வழங்க அரசு எடுத்த நடவடிக்கை; மற்றும்
(உ) அந்த மாநிலங்களின் வழியில் பழைய ஓய்வூதிய தி்ட்டத்தை (OPS)-ஐ மீண்டும் செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறதா?
பதில்
நிதி அமைச்சகத்தில் மாநில அமைச்சர் (டாக்டர். பகவத் கரத்)
(a) மற்றும் (b) தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) இந்திய அரசாங்கத்தால் 22.12.2003 தேதியிட்ட அறிவிப்பின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது நிலையான முறை மற்றும் விவேகமான முதலீடுகள் மூலம் பொருளாதாரத்தின் உற்பத்தித் துறைகளில் சிறு சேமிப்பை மாற்றுதல். 01.01.2004 முதல் (ஆயுதப் படைகள் தவிர) அரசுப் பணியில் சேரும் அனைவருக்கும் இது கட்டாயமாக்கப்பட்டது, மேலும் இது 01.05.2009 முதல் தன்னார்வ அடிப்படையில் அனைத்து குடிமக்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) தெரிவித்தபடி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் தவிர 26 மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு NPS அறிவித்து செயல்படுத்தியுள்ளன. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) கீழ் இத்தகைய பொறுப்பு- வரையறுக்கப்பட்ட நன்மை ஓய்வூதிய முறை- மாநில அரசின் நிதியில்லாத பொறுப்பாகும், இது அவர்களின் எதிர்கால வருவாயில் இருந்து ஈடுசெய்யப்படும்.
(c) மற்றும் (d) ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில அரசுகள், தங்கள் மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் தொடங்கும் முடிவைப் பற்றி மத்திய அரசு/PFRDA-க்கு தெரிவித்து, பணத்தைத் திரும்பக் கோரியுள்ளன. NPS இன் கீழ் திரட்டப்பட்ட கார்பஸ். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டம், 2013 இன் கீழ், PFRDA (தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் வெளியேறுதல் மற்றும் திரும்பப் பெறுதல்) விதிமுறைகள், 2015 மற்றும் பிற தொடர்புடைய ஒழுங்குமுறைகள் ஆகியவற்றுடன் சேர்த்துப் படிக்க எந்த ஏற்பாடும் இல்லை. 'என்பிஎஸ்க்கான பங்களிப்பை, திரட்டல்களுடன் சேர்த்து, திரும்பப் பெற்று, மாநில அரசிடம் டெபாசிட் செய்யலாம்.
(இ) 01.01.2004 அன்று அல்லது அதற்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட மத்திய அரசு ஊழியர்களைப் பொறுத்த வரையில் அந்த மாநிலங்களைப் போன்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பதற்கான எந்த முன்மொழிவும் இந்திய அரசின் பரிசீலனையில் இல்லை.
********
மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தில் குறைந்தபட்ச தொகை நிர்ணயிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணைய பொதுமேலாளர் பதில்மனு தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. தபால்துறை செயலர், தலைமை போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் ஆகியோரும் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த சின்னத்துரையின் வழக்கை ஏப்ரல் 28க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (என்பிஎஸ்) பயனாளா்கள் தங்கள் சேமிப்புத் தொகையிலிருந்து 40 சதவீதத்தை ஓய்வூதிய நிதி சேமிப்பாக முதலீடு செய்வது கட்டாயமில்லை
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பயனாளா்களுக்கு இனி முழு பணப் பலனும் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.
இது தொடா்பாக, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை வளா்ச்சி ஆணையத்தின் (பிஎஃப்ஆா்டிஏ) தலைவா் சுப்ரதீம் பந்தோபாத்யாய கூறுகையில்,
‘‘என்பிஎஸ் பயனாளா்கள் தங்கள் சேமிப்புத் தொகையிலிருந்து 40 சதவீதத்தை ஓய்வூதிய நிதி சேமிப்பாக முதலீடு செய்ய வேண்டியது சட்டத்தின்படி கட்டாயமாக இருந்தது. அத்தொகையானது சந்தை சாா்ந்த வட்டி விகிதத்துக்கு ஏற்ப மாதந்தோறும் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள 60 சதவீத தொகையை ஒரே நேரத்தில் அவா்கள் பெற்றுக் கொள்ளலாம்.
வட்டி விகிதம் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் முதலீடு செய்யப்படும் தொகையின் வாயிலாக கிடைக்கும் லாபம் குறைந்துள்ளது. எனவே, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் பயனாளா்கள், சேமிப்புத் தொகையிலிருந்து 40 சதவீதத்தை முதலீடு செய்ய வேண்டியது
இனி கட்டாயமில்லை. முழு பணத்தையும் அவா்கள் பெற்றுக் கொள்ளலாம்.
இதன்படி, ஓய்வூதியத் திட்டத்தில் ரூ.5 லட்சம் வரை சேமிப்புத் தொகை கொண்ட பயனாளா்கள், பணி ஓய்வு பெறும்போது மொத்த தொகையையும் பெற்றுக் கொள்வதற்கு விரைவில் அனுமதி அளிக்கப்படவுள்ளது.
இதுவரை ரூ.2 லட்சம் வரை சேமிப்புத் தொகை கொண்ட பயனாளா்களுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டு வந்தது. ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக சேமிப்புத் தொகை கொண்ட பயனாளா்கள் மட்டும், அதில் 40 சதவீதத்தை அக்கணக்கிலேயே வைத்துக் கொள்ளவும், தொகையை படிப்படியாக எடுத்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கும் வகையில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
40 சதவீத முதலீட்டுத் தொகை விவகாரத்தில் பயனாளா்கள் பலா் அதிருப்தி தெரிவித்ததையடுத்து, இந்த மாற்றங்கள் புகுத்தப்பட்டுள்ளன’’ என்றாா். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்
என்று 2019-20-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது மத்திய நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. உறுதியளிக்கப்பட்ட முதிா்வுத் தொகையை அளிக்கும் திட்டமும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை தேசிய ஓய்வூதியத் திட்டத்துடன் இணைக்கும் எண்ணம் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், நடுத்தர மக்களில் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதியை திருப்பி அளிப்பதில் உள்ள ஆறுதலைத் தம்மால் புரிந்து கொள்ள முடிவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் எந்த வங்கிகளை தனியார்மயமாக்குவது என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய - மாநில அரசு ஊழியர் களுக்கான பழைய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய பென்ஷன் திட்டம் நடைமுறைக்கு வந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ‘மீண்டும் பழைய பென்ஷன்’ என்பதே ஊழியர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது. காரணம், பணப்பலன்! இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதெனில் மாதாந்திர பென்ஷன்!
பழைய பென்ஷன் என்ன கிடைக்கும்?
தமிழக அரசில் 31.3.2003-க்குமுன்பும், மத்திய அரசில் 31.12.2003-க்குமுன்பும் அரசுப்பணியில் சேர்ந்து பணியாற்றி ஓய்வு பெறுவோர்க்குத் தரப்படுவது பழைய பென்ஷன் திட்டம். மாதாந்திர பென்ஷன், குடும்ப பென்ஷன், கிராஜுட்டி, பென்ஷன் கம்யூடேசன் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும். இந்த நான்கு வகைப் பணப்பலனும் அரசே வழங்குபவை. இதற்காக ஊழியர்கள் தமது சம்பளத்திலிருந்து சந்தா தொகையாக எதுவும் செலுத்தத் தேவையில்லை.
புதிய பென்ஷன் திட்டம்
பழைய பென்ஷன் திட்டத்துக்கு மாற்றாக வந்திருக்கும் புதிய பென்ஷன் திட்டத்துக்கு மத்திய அரசாங்கம் வைத்திருக்கும் பெயர் தேசிய பென்ஷன் திட்டம் (National Pension System). சுருக்கமாக, என்.பி.எஸ். இந்தத் திட்டத்தின் படி, ஊழியரின் சம்பளத்திலிருந்து 10% தொகை பிடித்தம் செய்யப்பட்டு, ‘பென்ஷன் நிதி’யில் சேர்க்கப்படும். மத்திய அரசும் தனது பங்களிப்பாக ஊழியரின் அடிப்படைச் சம்பளம் + அகவிலைப் படியில் 10% தொகையை ஊழியரின் பென்ஷன் கணக்கில் வரவு வைக்கும். இதனை பென்ஷன் நிதிஒழுங்கு மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Pension Fund Regulatory And Development Authority of India) நிர்வகிக்கும்.
என்.பி.எஸ். திட்டம் சார்ந்த மத்திய அரசு ஊழியர் ஓய்வுபெறும் போது குறைந்தபட்சம் 40% முதிர்வுத்தொகையை மாதாந்திர பென்ஷன் பெற முதலீடு செய்துவிட்டு, 60% தொகையை ஒட்டு மொத்தமாகப் பெற்றுச் செல்லலாம். முதலீடு செய்த தொகைக்கு, சந்தை நிலவரப்படி கிடைக்கும் தொகை மாதாந்திர பென்ஷனாகக் கிடைக்கும். இதுவே என்.பி.எஸ்.-ன் அடிப்படை.
ரத்து செய்யப்பட்ட சலுகைகள்
புதிய பென்ஷன் திட்டம் வந்தபின் பழைய பென்ஷன் திட்டத்திலிருந்து ரத்து செய்யப்பட்ட சலுகைகள்...
* அரசே மாதாந்திர பென்ஷன் தருவதற்குப் பதிலாக ஊழியரின் முதலீட்டிலிருந்து மாதாந்திர பென்ஷன் பெறவேண்டி உள்ளது.
* குடும்ப பென்ஷன் இல்லை.
* கிராஜுட்டி கிடைக்காது.
* பென்ஷன் கம்யூடேசனுக்கு வாய்ப்பில்லை.
திரும்பக் கிடைத்த சலுகைகள்
ஆனால், பழைய பென்ஷன் திட்டத்தில் இருந்த சில சலுகைகள் பின்னர் என்.பி.எஸ் திட்டத்துக்கும் கிடைத்துள்ளன. அவை...
* பணியில் இருக்கும்போது இறந்துபோகும் என்.பி.எஸ். உறுப்பினரின் குடும்பத்துக்கும் (2009 முதல்) குடும்ப பென்ஷன் கிடைக்கும்.
* பழைய பென்ஷன் திட்டத்தில் உள்ளது போலவே, என்.பி.எஸ்.-க்கும் (2016-ல்) கிராஜுட்டி வந்து சேர்ந்துவிட்டது.
* பத்து சதவிகிதமாக இருந்துவந்த அரசுத்தரப்பு பென்ஷன் பங்களிப்புத் தொகை 14 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* அரசின் பங்களிப்பு உயர்வதனால், 10+10= 20% என இருந்த என்.பி.எஸ். பென்ஷன் சந்தா, 10+14= 24 சதவிகிதமாக உயரும். இதனால் ஓய்வுபெறும்போது கிடைக்கும் என்.பி.எஸ். முதிர்வுத்தொகை அதிகரிக்கும்.
இந்த முதிர்வுத் தொகை முழுவதையும் பென்ஷனுக்கான முதலீடாக விட்டு வைத்தால் கிடைக்கக்கூடிய என்.பி.எஸ். பென்ஷன் தொகை, பழைய பென்ஷன் தொகையைவிட அதிகமாக இருக்கும் என்பது கணக்கீடு.
அடிப்படைக் கேள்வி
என்.பி.எஸ். திட்டத்தின்மூலம் கிடைக்கும் முதிர்வுத் தொகை முழுவதையும் பென்ஷனுக்கான முதலீடாக விட்டு வைத்தால், பழைய பென்ஷனை விட, என்.பி.எஸ். பென்ஷன் அதிகமாக இருக்கும் என்றால், பழைய பென்ஷனையே வழங்கலாமே என்று கேட்கலாம், காரணம் என்னவெனில், என்.பி.எஸ். திட்டத்தின்கீழ் மத்திய அரசு தனது பங்களிப்பாக, ஊழியர்களின் இப்போதைய சம்பளத்தில் 14% மட்டும் செலுத்தினாலே போதுமானது. இதுவே பழைய பென்ஷன் என்றால் ஊழியரின் அப்போதைய சம்பளத்தில் அதாவது, ஓய்வு பெறும்போது பெறப்போகும் சம்பளத்தில் 50% + அகவிலைப்படி தரவேண்டி இருக்கும்.
என்.பி.எஸ். சந்தாவை 30 ஆண்டுக் காலம் முதலீடு செய்வதால், 10% - 12% வரை கூட்டு வளர்ச்சி அடைய வாய்ப்புண்டு என்று எதிர்பார்க்கலாம். இதனால்தான் என்.பி.எஸ். பென்ஷன் தொகை பழைய பென்ஷனைவிட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் அரசின் நிதிச்சுமை குறையவும் வழி வகுக்கிறது.
மத்திய அரசில் தற்போது, பழைய பென்ஷன் மற்றும் என்.பி.எஸ். எனும் தேசிய பென்ஷன் திட்டம் ஆகிய இரண்டும் நடைமுறையில் உள்ளன.
தமிழக அரசு ஊழியர்களுக்கான சி.பி.எஸ்.
தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய பென்ஷன் திட்டம் 31.03.2003 வரை அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கே பொருந்தும். 01.04.2003 அன்றும், அதன்பிறகும் தமிழக அரசுப் பணியில் சேர்ந்த ஏ, பி, சி, டி உள்ளிட்ட நான்கு பிரிவினருக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே (Contributory Pension Scheme) அதாவது, சி.பி.எஸ். திட்டமே நடைமுறையில் உள்ளது இந்தத் திட்டத்தின்கீழ் 5,06,000-க்கும் அதிகமான ஊழியர்கள் இதன் சந்தாரர்களாக உள்ளனர். சி.பி.எஸ் திட்டத்தைத் தமிழக அரசு, தனது கருவூலக் கணக்குத் துறை மூலம் நிர்வகிக்கிறது.
சி.பி.எஸ். திட்டத்தின்படி, ஒரு ஊழியரின் சம்பளத்தில் 10% பிடித்தம் செய்யப்படுகிறது. அரசுத் தரப்புப் பங்களிப்பாக 10% சேர்க்கப்பட்டு, மாதந்தோறும் 20% பென்ஷன் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
ஓய்வுபெறும் ஊழியருக்கு அவரது சந்தா, அதற்கான வட்டி, அரசின் பங்களிப்பு சந்தா மற்றும் அதற்கான வட்டி ஆகிய நான்கு இனங்களும் தனித்தனியே பட்டியலிடப்பட்டு ஊழியரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது.
இந்த முதிர்வுத் தொகையை முதலீடு செய்து மாத வருமானத்துக்கு வழிசெய்துகொள்வது ஊழியரின் விருப்பம் சார்ந்தது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை மாற்றம் ஏதுமின்றி தொடர்கிறது. இதற்கான வட்டி விகிதம் ஜி.பி.எஃப்-க்கு உள்ள வட்டி விகிதம்தான்.
தமிழக அரசில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.எஃப்ஸ் போன்ற அகில இந்திய அதிகாரிகளும் (All India Service Officers) பணிபுரிகின்றனர். 01.01.2004-க்குப்பிறகு பணிக்கு வந்த இவர்களுக்கு மத்திய அரசின் என்.பி.எஸ். திட்டமே பொருந்தும். எனவே, இவர்களுக்கான சந்தா தொகையை, பென்ஷன் நிதிய ஆணையத்துக்கு (PFRDAI) செலுத்தி வருகிறது தமிழக அரசு. ஆக மொத்தம், பழைய பென்ஷன், என்.பி.எஸ்., மற்றும் சி.பி.எஸ். ஆகிய மூன்று பென்ஷன் திட்டங்கள் தமிழக அரசில் உள்ளன.
வேறுபடும் பணப்பலன்...
பழைய பென்ஷன், என்.பி.எஸ். மற்றும் சி.பி.எஸ். திட்டங்களின்கீழ் ஓய்வு பெறும் போது கிடைக்கும் பணப்பலன் வேறுபடுகிறது. அவ்வாறு வேறுபடும் பணப்பலன் எவ்வளவு என்பதை ஒப்பீட்டு அட்டவணையில் தரப்பட்டு உள்ளது. 01.01.2006 அன்று, தமிழக அரசுப் பணியில் சேர்ந்து 31.03.2036 அன்று ஓய்வு பெற உள்ள ஓர் அலுவலர் இந்த அட்டவணைக்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இந்தக் கணக்கீடு எவற்றின் அடிப்படையில் செய்யப் பட்டுள்ளது என்பதற்கான விளக்கம் இனி...
* 31.03.2025 வரை ஏழாவது சம்பள கமிஷன்படி அடிப்படைச் சம்பளம் கணக்கிடப்பட்டுள்ளது.
* 01.01.2026 முதல் 1.84 என்ற காரணியின் அடிப்படையில் சம்பள நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நான்கு பதவி உயர்வுகள் தரப்பட்டு உள்ளன.
* என்.பி.எஸ்-ல் அரசின் பங்களிப்பு 31.03.2019 வரை 10% எனவும், 01.04.2019 முதல் 14% எனவும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
* என்.பி.எஸ். வளர்ச்சி 10% என்ற அளவிலும், முதிர்வுத் தொகை மூலமான பென்ஷனுக்கு 8% வட்டியும் கணக்கிடப் பட்டுள்ளது.
* சி.பி.எஸ்-க்கு 8% வட்டி கணக்கிடப்பட்டுள்ளது.
* தற்போதைய நிலவரத்துக்கு ஏற்றபடி அகவிலைப்படி கணக்கிடப்பட்டுள்ளது.
சில சலுகைகள் இல்லாமல் போனாலும், தற்போதைய நிலையில் என்.பி.எஸ். திட்டமே பெஸ்ட் என்பதில் சந்தேகமில்லை!
- ப.முகைதீன் சேக்தாவூது (நன்றி: விகடன்.com)
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-02-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்:பொருட்பால் அதிகாரம்:...