கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 தொலைதூரக் கல்வி மாணவா் சோ்க்கைக்கு நவ.30 வரை அவகாசம் நீட்டிப்பு...

 


தொலைதூரக் கல்வி மாணவா் சோ்க்கைக்கு நவ.30-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக யுஜிசி தெரிவித்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலா் ரஜினிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பு: நாடு முழுவதும் 2020-21-ஆம் கல்வியாண்டில் திறந்தநிலை, இணையவழி மற்றும் தொலைத்தூரக் கல்வி படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையை அக்.31-ம் தேதி வரை மேற்கொள்ள வழங்கப்பட்ட அவகாசம் நவ.30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. தொடா்ந்து மாணவா் சோ்க்கை விவரங்களை தொடா்புடைய கல்வி நிறுவனங்கள் டிசம்பா் 15-ஆம் தேதிக்குள் யுஜிசிக்கு அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது

🍁🍁🍁 நவம்பர் 16 முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மற்றும் அனைத்து கல்லூரிகளும் செயல்பட தமிழக அரசு அனுமதி...

 






>>> Click here to Download CM Announcement...


🍁🍁🍁 01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி பெற்று 02.08.2018 மற்றும் 04.08.2018 ஆகிய தேதிகளில் பதவி உயர்வு பெற்ற 1145 தலைமையாசிரியர்களுக்கான பணிவரன்முறை ஆணை...

பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 54485 /சி1 /இ2/ 2019, நாள்: 24-10-2020...

 >>> பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


>>> 1145 தலைமையாசிரியர்கள் பட்டியல் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




🍁🍁🍁 ரூ.50ஆயிரத்திற்கு மேல் காசோலை பரிவர்த்தனைக்கு புதிய திட்டம் அமல் - ரிசர்வ் வங்கி அதிரடி...

 பெரிய தொகைக்கான அதாவது ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் காசோலைகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும்போது சம்மந்தப்பட்ட வங்கிக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் அந்த காசோலை மூலம் பணம் பெறவோ, பணம் செலுத்தவோ முடியாது என்ற புதிய திட்டத்தை ரிசர்வ் வங்கி ஜனவரி 1 முதல் அறிமுகம் செய்யவுள்ளது. வணிகம், சொந்த செலவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பணம் பெறவோ, பணத்தை செலுத்தவோ  வங்கிகளில் நாம் காசோலைகளை கொடுக்கிறோம். இந்த காசோலைகளை பணமாக மாற்றும்போது பணம் பெறும் நபரின் வங்கி கணக்கு எண், பெயர் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். 

இந்த நிலையில் கையெழுத்திட்ட காசோலைகள் தொலைந்து விட்டாலோ, தவற விட்டாலோ, அல்லது திருடப்பட்டாலோ அந்த காசோலை மூலம் வேறு நபர்கள் வங்களில் பணம் பெற வாய்ப்பு ஏற்பட்டு விடும். இதை தடுக்க காசோலை தொலைந்தவுடன் சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு தகவல் தெரிவித்து பணம் கொடுப்பதை நிறுத்திவைக்க முடியும். காசோலை பரிவர்த்தனை உள்ள வங்கி கணக்கில் பணம் இல்லை என்றாலும் பணம் பட்டுவாடாவை நிறுத்தி வைக்க முடியும். இதுவரை இந்த நடைமுறைதான் இருந்துவந்தது. ஆனால், இதிலும் பல்வேறு பிரச்னைகளும், நடைமுறை சிக்கல்களும், தகவல் பரிமாற்றம் தாமதமும் ஏற்படுவதால் பணத்தை இழக்கும் அபாயம் உள்ளது. 

இந்த பிரச்னையை தீர்ப்பதற்காக ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான தொகைக்கான காசோலை பரிவர்த்தனை செய்யும்போது அது தொடர்பாக வங்கிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று ரிசர்வ்வங்கி அறிவித்துள்ளது. இதற்காக ‘’காசோலை துண்டிப்பு முறை’’ என்ற புதிய திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த திட்டம் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் காசோலையை வங்கியில் செலுத்துவதற்கு முன் எஸ்எம்எஸ், மொபைல் ஆப், இன்டர்நெட் பேங்கிங், ஏடிஎம் ஆகியவை மூலம் சம்மந்தப்பட்ட வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதில் பணத்தை பெறுபவரின் பெயர், தொகை, தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். 

இதற்கான ஏற்பாடுகளை வங்கிகள் செய்ய வேண்டும். இந்த முறை மூலம் யாருக்கு காசோலை தரப்படுகிறது. அந்த காசோலை உண்மையானதா என்பன உள்ளிட்ட தகவல்கள் உறுதி செய்யப்படும். ரூ.5 லட்சத்திற்கு அதிகமான தொகை உள்ள காசோலைகளுக்கு இந்த முறை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் காசோலை முறைகேடுகள் நடப்பது தடுக்கப்படும். இந்த புதிய முறை குறித்து சம்மந்தப்பட்ட வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ், வங்கிகளில் அறிவிப்பு பலகை ஆகியவை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

🍁🍁🍁 மருத்துவப்படிப்பிற்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த அரசுப்பள்ளி மாணவர்கள் பட்டியல்... (மாவட்ட வாரியாக, நீட் மதிப்பெண்களுடன் முழு விவரம்)...

 >>> Click here to Download List of Eligible Govt school students to apply for Medical Counselling (All District)...


🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 31.10.2020 (சனி)...

நாம் வாழும் வரை நம்மை யாரும் வெறுக்கக்கூடாது. வாழ்ந்து முடித்தபின் நம்மை யாரும் மறக்கக்கூடாது. அதுதான் நம் வாழ்வின் வெற்றி.!

🌹🌹ஆகாயமும், பூமியும் நமக்கு சொந்தமில்லை.

படைத்த உயிரும்,உடலும் நமக்கு சொந்தமில்லை.

சேமித்த பணமும்,பொருளும் நமக்கு சொந்தமில்லை.

நாம் செய்த தர்மமும்,கருணையும் மட்டுமே கடைசி வரை நிலைத்து நிற்கும்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍒🍒புதிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள் குறித்து, தமிழக உயர் கல்வித் துறை, மீண்டும் ஆலோசனை

🍒🍒அனைத்து பல்கலைகளிலும், 'அரியர்' தேர்வு முடிவுகளை, விரைவில் வெளியிட உயர் கல்வித்துறை உத்தரவு

🍒🍒அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு தமிழக கவர்னர் ஒப்புதல்

🍒🍒அண்ணாமலை பல்கலைக்கழகம் மே-2020 தேர்வு முடிவுகள் வெளியீடு.

🍒🍒 போலி ஆவணங்கள் மூலம் பணி நியமனம் - ஆசிரியர் உட்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை- திருவையாறு கோர்ட் தீர்ப்பு.

🍒🍒ஆசிரியர் பணி நியமனம் - வயது வரம்பு 40ஆக குறைப்பு - ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் கோரிக்கை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

🍒🍒துருக்கியில் நேற்று சுனாமி

பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து உருவான சுனாமி:

ஏகன் நகருக்குள் கடல்நீர் புகுந்ததால் பரபரப்பு.

ரிக்டர் அளவில் 7 ஆகப் பதிவான பயங்கர நிலநடுக்கம் - இடிந்து விழுந்த கட்டடங்கள்.

கிரீஸ் நாட்டின் சமோஸ் தீவின் அருகே கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பல்கேரியா, கிரீஸ், வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம்.

🍒🍒திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 45 நாட்கள் கழித்து, கலந்தாய்வுக்கான காலம் நெருங்குகையில், வேறு வழியின்றி 7.5% #Reservation-க்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி! திமுக-வின் போராட்டமும் நீதியரசர்கள் வைத்த மனச்சாட்சி வேண்டுகோள்களும் ஆளுநரின் மனமாற்றத்துக்கு காரணம்.இறுதியில் வென்ற சமூகநீதி, எப்போதும் வெல்லும், எனத் தெரிவித்துள்ளார்.

🍒🍒உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியது தமிழர்களின் ஒன்றுபட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவதே ஆளுநர் நோக்கமாக இருந்திருக்கும்; அது தகர்த்தப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

🍒🍒விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதென்ற தமிழக அமைச்சரவையின் பரிந்துரைமீது முடிவெடுக்காமல் காலந்தாழ்த்துவது சரியல்ல என உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தும் ஆளுநர் முடிவெடுக்காததால், முடிவெடுக்கும்வரை அவர்களை பரோலில் விடுவிக்கத் தமிழக அரசு முன்வரவேண்டும் என்றார்.

🍒🍒குற்றப்பரம்பரை என்று

குறிவைக்கப்பட்ட கூட்டத்தைக்

கொற்றப்பரம்பரை என்று

முற்றும் விடுதலை பெற்றுத்தந்த

வெற்றித் தலைவர் தேவர் திருமகனார்.

அவர் பிறந்த மண்ணைக்

கசிந்த கண்ணோடும்

கனத்த நெஞ்சோடும்

கைகூப்பித் தொழுகிறேன்.

கவிஞர் வைரமுத்து

🍒🍒ஆரோக்கிய சேது செயலியை ஜே.என்.யு மாணவர்கள் கட்டாயம் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து ஜே.என்.யு பதிவாளர் உத்தரவு

🍒🍒மெரினா கடற்கரையை திறப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

🍒🍒வானில் 'புளூ மூன்’ தோன்றும் அரிதான நிகழ்வு இன்று நடக்க உள்ளது.

👉புளூ மூன் என்ற சொல் ஒரு மாதத்தில் வரும் இரண்டாவது பவுர்ணமியைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. 

இதற்கும் சந்திரனின் நிறத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றாலும் சில சமயங்களில் பௌர்ணமி நிலவு நீல நிறமாக தெரியும்.

இதற்கு அறிவியல் ரீதியாக நீல நிலா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கடந்த 1ந்தேதி பவுர்ணமி வந்த நிலையில் இன்று இரண்டாவது பவுர்ணமி தோன்றுகிறது. 

அடுத்த நீல நிலா, 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ல் ஏற்படும்.

🍒🍒இந்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் அமைத்துள்ள குழுவில் தென்னிந்தியாவை சார்ந்தவர்கள் ஒருவர்கூட இல்லை; வடகிழக்கு மாநிலங்களை புறக்கணித்து, தென்னிந்தியாவை புறக்கணித்து இந்தியாவின் வரலாற்றை ஒருவர் எழுத முடியுமா?

தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி

🍒🍒குறைவாக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 2ம் முறையாக நீட் பயிற்சி அளிக்கப்படும் :அமைச்சர் செங்கோட்டையன்

🍒🍒டிசம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வசதி, 80 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட்போன் வசதி, 928 பள்ளிகளில் அடல் டிங்கரிங் லேப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்

🍒🍒அரியர் தேர்வுகளை ஏன் ஆன்லைன் மூலம் நடத்த கூடாது? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

🍒🍒ஓவிய கல்லுாரி சேர்க்கைக்கு நவம்பர் 3ல் நேர்முக தேர்வு

🍒🍒கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான நிலுவைத்தொகை: டிச.14-ம் தேதிக்குள் பள்ளிக்கல்வித்துறை செலுத்த உயர் நீதிமன்றம் இறுதி கெடு

🍒🍒இந்தியாவில் நேற்று முதல் பப்ஜிக்கு முற்றிலுமாக தடை

அனைத்து விதமான சேவைகளையும் நேற்று முதல் நிறுத்திக்கொள்வதாக PUBG அறிவிப்பு.

🍒🍒கற்போம் எழுதுவோம் இயக்கம் புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் செயல்படுத்துதல் 5.11.20 அன்று காணொளி வாயிலானா கூட்டம் நடத்துதல் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

🍒🍒தமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில்,திரையரங்குகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

🍒🍒குஜராத், நர்மதா மாவட்டம் கெவாடியாவில்

உள்ள சர்தார் படேல் உயிரியல் பூங்காவை

நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார் பிரதமர்

மோடி.

🍒🍒ரஜினியின் அறிவிப்பை அடுத்து, அவரது

இல்லத்தில் ரசிகர்கள் திரண்டனர்;

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டாம்

திருமாவளவன், சீமான் உள்ளிட்டோர் கருத்து.

🍒🍒முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்தை காங்கிரஸ் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் இருந்து  நீக்கியது தேர்தல் ஆணையம். மத்தியபிரதேச இடைத்தேர்தலில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக தேர்தல் ஆணையம் நடவடிக்கை.

🍒🍒50 ஆயிரத்திற்கு மேல் காசோலை பரிவர்த்தனைக்கு வங்கியில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்: ரிசர்வ் வங்கி அதிரடி திட்டம் - ஜனவரி முதல் அமல்.

🍒🍒நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பணிகளை ஒருங்கிணைக்க குழுக்களை அமைக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

🍒🍒தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

🍒🍒ஐபிஎல் தொடர்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.

🍒🍒ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 52-ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸ்-சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

🍁🍁🍁 அன்னை தெரசா பல்கலை., எம்.பில்., படிப்பு குறித்த RTI பதில்...

 


🍁🍁🍁 இ.பி.எஃப் (EPF - Employee Provident Fund) பென்ஷன்... என்ன சொல்கிறது தீர்ப்பு?

 இ.பி.எஃப் பென்ஷன்... என்ன சொல்கிறது தீர்ப்பு? (நன்றி : விகடன்.com )

ஓய்வுபெறும் ஓர் ஊழியர் இ.பி.எஃப்  பென்ஷன் பெறுபவராக இருந்தால், அவரின் கடைசிச் சம்பளம் லட்சம் ரூபாயாகவே இருந்தாலும், பொதுவாக அவருக்கான பென்ஷன் 15,000 ரூபாய்க்கே கணக்கிடப்படும். இந்த 15,000 ரூபாய்க்கும் பென்ஷன் கணக்கிடப்படுமா எனக் கேட்டல், கிடையாது. பணியாளர் கடைசியாக வாங்கும் சம்பளம் ரூ.15,000 (அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி) என்று வைத்துக் கொண்டால், 12,511 ரூபாய்க்குத்தான் பென்ஷன் கணக்கிடப்படும். அதாவது, கடைசி சம்பளத்தை அடிப்படையாக வைத்து பென்ஷனைக் கணக்கிடாமல், அந்த ஊழியரின் கடைசி ஐந்து வருடங்களில் பெற்றிருந்த சம்பளத்தின் சராசரிக்கே பென்ஷன் கணக்கிடப்படும். 

இந்தக் கணக்கீட்டு முறை தன்னிச்சையானது  என்று கேரள உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து, மேல்முறையீடு செய்தது இ.பி.எஃப் அமைப்பு. ஆனால், கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே என்று உறுதிசெய்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

இந்தத் தீர்ப்பினால் இ.பி.எஃப் திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு இனி கிடைக்கப்போகும் பணப்பலன் என்னென்ன என்று பார்ப்போம்.

* நாற்பது ஆண்டுகாலப் பணியை நிறைவு செய்து, ஒரு லட்சம் ரூபாய் கடைசி சம்பளத்துடன்  ஓய்வுபெறும் அரசு ஊழியருக்குக் கிடைக்கும் பென்ஷன் ரூ.50,000-ஆக இருக்கும்.

இதே கடைசி  சம்பளத்துடன் 33 ஆண்டுகள் பணி செய்து ஓய்வுபெறப்போகும் இ.பி.எஃப் ஊழியரின் இ.பி.எஸ் பென்ஷனும் 50,000 ரூபாயாகவே இருக்கும். இந்தத் தீர்ப்புக்கு முந்தைய கணக்கீட்டின்படி பெற்ற இ.பி.எஸ் பென்ஷன் வெறும் 7,500 ரூபாயாகவே இருந்திருக்கும்.

அதுமட்டுமல்ல, அரசுப் பணியினரின் அதிகபட்ச மாதச் சம்பளம் ரூ.2.5 லட்சம். எனவே, அதிகபட்ச அரசு பென்ஷன் ரூ.1.25 லட்சம்தான். இ.பி.எஸ்-ல் அதிகபட்ச சம்பள வரம்பு எதுவும் இல்லாததால், அரசு ஊழியரைவிடவும் கூடுதல் பென்ஷன் பெறவும் வாய்ப்புண்டு.

அதேநேரத்தில், உறுப்பினர் இ.பி.எஃப் கணக்கில் சேரும் தொகை குறைவாக இருக்கும். அதனால், அவர் இடையிடையே கடனாகப் பெறும் தொகையும் குறைவாக இருக்கும். மேலும், இறுதியாகக் கிடைக்கும் பி.எஃப் தொகையும் மிகக் குறைவாக இருக்கும்.

தீர்ப்பின் தொடர் விளைவுகள்

மத்திய அரசுப் பணியினரின் குறைந்தபட்ச பென்ஷன் ரூ.9,000-ஆகவும், தமிழக அரசின் குறைந்தபட்ச பென்ஷன் ரூ.7,850-ஆகவும் உள்ளபோது, இ.பி.எஸ் தரும் குறைந்தபட்ச பென்ஷன் 1,000 ரூபாய் மட்டுமே என்பதால், பல்வேறு நிறுவனங்களில் சிறிது சிறிது காலம் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்கள், தனது பணிக்காலத்தை ஒருங்கிணைத்து பென்ஷன் பெறும் முயற்சியில் ஈடுபடாமல் இருந்திருக்கலாம்.

இந்தத் தீர்ப்பின் பலனாக, அசல் சம்பளத்துக்கே பென்ஷன் கணக்கீடு என்றானதால், துண்டு துண்டுகளாகச் சிதறிக்கிடக்கும் தனது பணிக் காலத்துக்கு சான்றிதழ்களைப் பணி செய்த நிறுவனங்களில் பெற்று, பென்ஷனுக்கு முயற்சி  செய்யலாம். இதனால் பென்ஷன் பெற இருப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம்.

பி.எஃப் டிரஸ்ட்

இ.பி.எஃப் அமைப்பு (EPFO) தனது சந்தாதாரர் களுக்கு மட்டும் பென்ஷன் வழங்கவில்லை. இந்த அமைப்பில் இணையாத 1,552 நிறுவனங்கள் உள்ளன. இத்தகைய நிறுவனங்கள் தனது ஊழியர்களின் பி.எஃப் சந்தாவை இ.பி.எஃப் அமைப்புக்குச் செலுத்துவதில்லை. ஊழியர்களின் பி.எஃப் கணக்கை தாமே பராமரித்துக் கொள்கின்றன.

தனது பி.எஃப் கணக்கை தானே நிர்வகித்துக் கொள்ளும் பிற நிறுவனங்களின் மொத்த ஊழியர் எண்ணிக்கை சுமார் 80 லட்சம். இந்த நிறுவனங் களுக்கும் பென்ஷன் வழங்கும் பொறுப்பு இ.பி.எஃப் அமைப்புக்குத்தான் உள்ளது.

அதாவது, உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி இனி மொத்தம் ஏழு கோடியினருக்குக் கூடுதலான பென்ஷன் தொகை வழங்கப்பட வேண்டும். இதற்கான நிதி ஆதாரம் இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வி.

நிதி ஆதாரம்

* ரூ.15,000 என்ற உச்சவரம்புக்கு 8.33% பணம் செலுத்திவிட்டு, அசல் சம்பளத்துக்கு பென்ஷன் பெற இயலாத நிலையே உள்ளது. ஆனாலும், பென்ஷன் பங்களிப்பை உயர்த்தி வசூலிக்க தற்போதைய விதிமுறைகளில் இடமில்லை என்பதும் முக்கியமான விஷயம்.

*  அசல் சம்பளத்துக்கு ஏற்றவாறு அதிகமான சந்தா செலுத்தியவர்களுக்கும், 15,000 பணவரம்பைக் கணக்கிட்டு சந்தா செலுத்தியவர் களுக்கும் தனித்தனியாக கணக்கு வைத்துப் பராமரிப்பது இதுவரையில் நடைமுறையில் இல்லாத ஒன்று.

* உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி உயர்த்தப்பட்ட பென்ஷனை வழங்கத் தேவையான நிதியானது ஊழியரின் பி.எஃப் கணக்கிலிருந்து பெற வேண்டியிருக்கலாம். ஆனால், சுமார் 1552 நிறுவனங்கள் தனது ஊழியர்களின் பி.எஃப் பணத்தைத் தாமே நிர்வகித்து வரும்போது, இந்த நிறுவனங்களிடமிருந்து பி.எஃப் பணத்தைப் பெறுவதில் நிர்வாக ரீதியான சிரமங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

தீர்ப்பு தீர்க்கமானது

ஆனாலும், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு தீர்க்கமானது என்பதால், இந்தத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படலாம்.

அப்படி வகுக்கப்படும்போது இ.பி.எஸ் பயனாளிகள் மூன்று வகைகளாக இருக்கக்கூடும்.

1. ஏற்கெனவே ஓய்வுபெற்றவர்கள்

இவர்கள் கூடுதல் பென்ஷன் பெற கையிருப்பிலுள்ள பி.எஃப் தொகையை, தேவையான அளவுக்குத் திரும்பச் செலுத்தலாம். அல்லது பி.எஃப் தொகையை லாபகரமான முறையில் முதலீடு செய்துவிட்டு, பழைய நடைமுறைப்படி பென்ஷன் பெறலாம். இதில் எதை அவர்கள் தேர்வு செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து நடைமுறை மாறக்கூடும்.

2. ஓய்வு பெறப்போகிறவர்கள்

உயர்த்தப்பட்ட பென்ஷனைப் பெறத் தேவையான தொகையானது இவர்கள் தரும் அனுமதியைப் பொறுத்து, உறுப்பினரின் பி.எஃப் நிதியிலிருந்து பெறப்படலாம்.

3. புதிய ஊழியர்கள்

இவர்களைப் பொறுத்தவரை, பென்ஷன் கணக்கீட்டில் எந்தவொரு தடங்கலும் இருக்காது. ஏனென்றால், தொடக்கத்திலிருந்தே இவர்களது பென்ஷன் பங்களிப்புத்தொகை, அவர்களது அசல் சம்பளத்துக்கே பிடித்தம் செய்யப்பட்டுவிடும்.

என்.பி.எஸ் முன்மாதிரி

என்.பி.எஸ் சந்தாதாரர்களாக உள்ள மத்திய அரசு ஊழியர்கள், தனது பென்ஷன் பங்களிப்பாக தனது சம்பளத்தில் 10% தொகையைச் செலுத்து கிறார்கள். இதற்கு இணையான பணத்தை (10%) மத்திய அரசும் செலுத்திவந்தது.

01.04.2019 முதல், என்.பி.எஸ்-க்கான மத்திய அரசின் பங்களிப்பு 10 சதவிகிதத்திலிருந்து 14 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

ஆக, தற்போது   என்.பி.எஸ்-ல் சேரும் தொகை அதாவது 10 + 14 = 24%

இப்படிச் சேர்க்கும் பணம் மொத்தத்தையும் கடைசிவரை விட்டுவைத்தால், கடைசியாகப் பெறும் சம்பளத்தில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக பென்ஷனை ஓய்வுக்காலத்தில் பெற வாய்ப்புண்டு. 

அப்படிப் பார்த்தால், இ.பி.எஃப் சந்தாவும் (12+12) 24 சதவிகிதம்தான். பென்ஷனுக்கான முதலீடு போக, நிகரத்தொகை பி.எஃப் தொகைக்கு நிகரானதாகவே அமையக்கூடும்.

எனவே, கடைசிச் சம்பளத்தில் சரிபாதியான 50 சதவிகிதத் தொகையை பென்ஷனாகப் பெறுவதிலும், பி.எஃப்-க்கு இணையான தொகையைப் பெறுவதிலும் தடையேதும் இருக்காது.

எனவே, இனிவரும் காலத்திலாவது  இ.பி.எஃப் பயனாளிகளுக்குக் கூடுதலான பென்ஷன் கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்.

ப.முகைதீன் சேக்தாவூது

🍁🍁🍁 TNPSC - EQUIVALENCE OF QUALIFICATION - G.O.s - 30 Pages...

 >>> CLICK HERE TO DOWNLOAD TNPSC - EQUIVALENCE OF QUALIFICATION - G.O.s List - 30 Pages


🍁🍁🍁 ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பகுதி நேரம் / மாலை நேரம் / அஞ்சல் வழியில் உயர் கல்வி பயில சார்ந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலரே (AEEO) துறை அனுமதி வழங்கலாம் என்ற தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 023458/இ1/2014, நாள்: .11.2014...

 


🍁🍁🍁 கற்போம் கற்பிப்போம் - படிவங்கள் (FORMATS)...

 >>> கற்போம் கற்பிப்போம் - படிவங்கள் (FORMATS) தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


🍁🍁🍁 உடற்கல்வி ஆசிரியர் (PET) அனைத்து மாவட்ட காலிப்பணியிடங்கள் விவரம்...

 >>> Click here to Download PET Vacant Places List...


🍁🍁🍁 WANTED- ACCOUNTANT, JUNIOR ASSISTANT, PHYSICAL DIRECTRESS, PROGRAMMER, COMPUTER OPERATOR, LAB ASSISTANT, SUPERVISOR, WARDEN, ATTENDER - INTERVIEW DATE-01.11.2020

 


🍁🍁🍁 MADURAI KAMARAJ UNIVERSITY - APPLICATIONS INVITED FOR CONTROLLER OF EXAMINATIONS, ADDITIONAL CONTROLLER OF EXAMINATIONS, DEAN, DIRECTOR POSTS, LAST DATE - 20.11.2020...

 


🍁🍁🍁 பணிக்கொடை (DCRG - Death Cum Retirement Gratuity) - தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கணக்கிடப்படும் முறை...

பணிக்கொடை என்பது அரசு /அரசு சார்ந்த ஊழியர் அல்லது ஆசிரியர் பணி ஓய்வின் போது அல்லது பணியில் இருக்கும் போதே காலமான போது அவ்வூழியருக்கு, ஊதியம் வழங்கும் நிறுவனம், ஊழியரின் பணியை பாராட்டும் விதமாக வழங்கும் ஒரு ஒட்டு மொத்தத் தொகையாகும். பணிக்கொடை ஊதியத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இத்தொகை கணக்கிடுவதற்கு ஊழியரின் தகுதியான பணிக்காலமும் அவர் ஓய்வுபெறும்போது பெற்ற ஊதியமும் அடிப்படைகளாகக் கொள்ளப்படுகிறது.

அரசு & அரசு சார்ந்த ஊழியர்களுக்கு பணிக்கொடை கணக்கீடு முறை

பணி ஓய்வின் போது பணிக்கொடை கணக்கீடு செய்யும் போது ஊழியர் இறுதியாக வழங்கப்பட்ட ஊதியம் மற்றும் பணிக்காலம் ஆகிய இரண்டும் கணக்கீட்டில் எடுத்து கொள்ளப்படுகிறது.

இறுதியாக வழங்கப்பட்ட ஊதியம் (Last Pay Drawn)

அரசு மற்றும் அரசு சார்ந்த ஊழியர்களைப் பொருத்த வரை, அடிப்படை ஊதியம் (Basic Pay), தர ஊதியம் (Grade Pay), சிறப்பு ஊதியம் (Special Pay), தனி ஊதியம் (Personal Pay) மற்றும் அகவிலைப்படி (Dearness Allowance) ஆகியவற்றின் கூட்டுத்தொகையை, இறுதியாக வழங்கப்பட்ட ஊதியமாகக் (Last Pay Drawn) கொண்டு பணிக்கொடை கணக்கிடப்படுகிறது.

பணிக்காலம் கணக்கிடுதல்

ஓய்வு (Retirement) இனங்களில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளும் (அல்லது 4 ஆண்டு 9 மாதங்களுக்கு மேலும்) அரசுப் பணியில் இருந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 33 ஆண்டு பணிக்காலம் மட்டுமே பணிகொடை கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளபடுகிறது.

32 ஆண்டுகள் 9 மாதங்களுக்கு மேல் பணி செய்திருந்தால் 33 ஆண்டு பணிக்காலமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 32 ஆண்டுகள் 5 மாதங்கள் பணி செய்திருந்தால் 32 ஆண்டுகள் மட்டுமே பணிக்காலமாக கணக்கில் கொள்ளப்படுகிறது.

பணிக்கொடை கணக்கீடு

மொத்தப் பணி செய்த ஆண்டிற்கு அரை மாத ஊதியம் வீதம், குறைந்த பட்சமாக இரண்டரை மாத ஊதியமும், அதிக பட்சமாக பதினாறறை (16 ½) மாத ஊதியமும் பணிக்கொடையாக வழங்கப்படும். ஆனால் அதிகபட்ச வரம்பு ரூபாய் 20 இலட்சம்.

பணிக்கொடை வருவாய்க்கு வருமான வரி சட்டம் 10 (10)-இன் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கப்பட மாட்டாது.

அரசு மற்றும் அரசு ஒப்புதல் பெற்ற நிறுவனங்களுக்கு ஊழியர் செலுத்த வேண்டிய தொகைகள் நிலுவை இருப்பின், அதனை பணிக்கொடைத் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும்.

பணியின் போது காலமான ஊழியர்களுக்கு பணிக்கொடை

பணியின் போது இறந்த அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச பணிக்காலம் கணக்கில் கொள்ளாமல், பணியில் சேர்ந்த ஓராண்டுக்குள் இறந்தவர்களுக்கு இரண்டு மாத ஊதியமும், ஒன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் இறந்தவர்களுக்கு ஆறு மாத ஊதியமும், ஐந்து முதல் 20 ஆண்டுகளுக்குள் பணி செய்து இறந்த ஊழியர்களுக்கு 12 மாத ஊதியமும், 20 ஆண்டும் அதற்கு மேலும் பணி செய்து இறந்த ஊழியர்களுக்கு, ஆண்டுக்கு அரை மாத ஊதியம் வீதம் கணக்கிட்டு பணிக்கொடை வழங்க வேண்டும்.

🍁🍁🍁 ஓய்வுக்காலத்தில் பென்ஷனைக் குறைக்கும் கம்யூடேஷன்..! - அரசு ஊழியர்கள் உஷார்!

ஓய்வுக்காலத்தில் பென்ஷனைக் குறைக்கும் கம்யூடேஷன்..! - அரசு ஊழியர்கள் உஷார்!

முகைதீன் சேக் தாவூது . ப (நன்றி : விகடன்.com)


இன்றைக்கு குடும்பச் செலவுக்கு ரூ.20,000 தேவையெனில், 20 ஆண்டுகள் கழித்து ரூ.64,140 தேவை!

பத்து மாதங்களுக்கு முன் அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஒருவர், 10 வருடங்களுக்கு முன், அதே பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த தன் நண்பரிடம், தற்போது எவ்வளவு ஓய்வூதியம் பெறுகிறீர்கள் என்று கேட்டார்.

மூத்த ஓய்வூதியதாரர் தனது மாதாந்தர ஓய்வூதியத் தொகையைச் சொல்லக் கேட்டதும் சமீபத்தில் ஓய்வுபெற்றவர் மயங்கி விழாத குறை. காரணம், மூத்த ஓய்வூதியதாரர் வாங்கிய தொகை மிக மிக அதிகமாக இருந்தது.

“அதெப்படி? உங்களைவிட இரண்டரை மடங்கு சம்பளம் வாங்கியவன் நான். என்னைவிட 10 வருடத்துக்கு முன் ரிட்டையரான உங்களது மாதாந்தர பென்ஷன் ரூ.4,200 அதிகமாக இருக்கிறதே!’’ என வியப்புடன் கேட்டார். “நீங்கள் என்னைவிட அதிகமாக கம்யூடேசன் தொகை வாங்கியிருப்பீர்கள்… அதற்கான பிடித்தமும் அதிகமாக இருக்கும். எனவே, பிடித்தம் போக நிகர பென்ஷன் உங்களுக்குக் குறைவாக இருக்கும்’’ என்று சொல்ல, இளைய ஓய்வூதியதாரருக்கு தான் செய்த தவறு என்ன என்று புரிந்தது (பார்க்க, கீழே உள்ள அட்டவணை)

அவர் மட்டுமல்ல, ஓய்வுக்காலப் பலனாகக் கிடைக்கப்போகும் பணத்தை எப்படிப் பத்திரப்படுத்துவது என்ற எந்த நிதித்திட்டமும் வகுக்காமல், வந்த பணத்தை எல்லாம் இஷ்டத்துக்குச் செலவு செய்துவிட்டு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய ஓய்வுக்காலத்தை மன உளைச்சலுடன் நகர்த்திக்கொண்டிருப்போர் பலர். என்ன காரணம் என்று கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.

ஓய்வு பலவகை

அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெறுவது பலவகைகளாக உள்ளன. வயது முதிர்வில் (Superannuation) ஓய்வு, விருப்ப ஓய்வு, உடல் இயலாமை காரணமாகப் பணியில் தொடர முடியாதவர்களுக்கு மருத்துவக்குழு பரிந்துரையின் பேரில் ‘இயலாமை’ ஓய்வு மற்றும் கட்டாய ஓய்வு.

பணப்பலன்கள் என்னென்ன?

மேற்கண்ட அனைத்து வகை ஓய்வினருக்கும், ஓய்வூதியம் பணிக்கொடை (graduity), பணிக்காலத்தில் சேர்த்து வைத்த விடுப்புக்கான சம்பளம் (leave encash) ஆகியவற்றுடன் ஊழியரின் சொந்த சேமிப்பான பிராவிடன்ட் ஃபண்ட் பணமும் தரப்படுகிறது.

இவை அல்லாமல் ‘வேண்டும்’ என்று விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு மட்டும் ஓய்வூதிய கம்யூடேசன் தொகை தரப்படுகிறது. அப்படி என்றால் என்ன?

கம்யூடேசன் என்பது என்ன..?

ஓய்வுபெற்ற அரசுப் பணியாளருக்கு மாநிலக் கணக்காயரால் ஏற்பளிக்கப்படும் ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்கை அரசிடம் ஒப்படைத்து விட்டு, ஒட்டுமொத்தமான (Lumpsum) தொகை ஒன்றைப் பெற்றுக்கொள்வதுதான் ஓய்வூதிய கம்யூடேசன். உதாரணமாக, தமிழக அரசில் ஓய்வு பெற்ற ஒருவருக்கு மாநிலக் கணக்காயர் ஏற்பளிப்பு செய்த ஓய்வூதியம் ரூ.30,000 என்றால், அந்த ஓய்வூதியதாரர் தனது ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்கு தொகையான 10,000 ரூபாயை ‘கம்யூட்’ செய்யலாம். அதாவது, முன்கூட்டியே பெறலாம். இது ஓய்வூதியத்தில் 33.33% (மத்திய அரசுப் பணியினருக்கு 40% ராணுவப் பணி ஓய்வினருக்கு 50% வரை கம்யூட் செய்யலாம்) ஆகும்.

ஓய்வு பெறும்போது ஒருவரது வயது 59 எனில், 10,000 ரூபாயை கம்யூடேசன் செய்து அவர் முன்கூட்டியே பெறக்கூடிய தொகை ரூ.10,04,520 ஆகும். அதாவது, ஒன்றுக்கு நூறாகத் தருகிறது அரசு. இது மிகப்பெரிய பரிசு என்றுகூட சொல்லலாம். ஆனால், இது என்றோ கிடைக்க வேண்டிய பணத்தை முன்கூட்டியே பெறுவதுதான்; ஒரு வகை முன்பணம்தான். எவ்வளவு ரூபாய் நாம் கம்யூடேசன் செய்கிறோமோ, அதைப்போல நூறு மடங்கு தொகை தரப்படுகிறது. 180 மடங்கு பிடித்தம் செய்யப்படுகிறது.

பென்ஷனை கம்யூட் செய்து முன்பணமாகப் பெற்று வீடு கட்டலாம் அல்லது நல்ல மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். வங்கி எஃப்.டி-யில் வைத்திருப்பதில் பயனில்லை!

உடனே தொடங்கும் பிடித்தம்

மொத்தத் தொகையான ரூ.10 லட்சத்தை என்றைக்கு பெறுகிறோமோ அன்று முதல் அந்தத் தொகைக்கான பிடித்தம் தொடங்கிவிடும். அதாவது, ரூ.30,000 என்றிருந்த அடிப்படை பென்ஷன் 20,000 ரூபாயாகக் குறைந்துவிடும். தொகை பெற்ற நாளிலிருந்து 180 மாதங்களுக்குப் பிடித்தம் தொடரும். எனவே, தேவை உணர்ந்து பெற வேண்டிய தொகை ‘ஓய்வூதிய கம்யூடேசன்’ ஆகும்.

ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?

ஊழியர் ஓய்வுபெறும் ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே ஓய்வூதியம், பணிக்கொடை, பிராவிடன்ட் ஃபண்ட் முதலானவற்றுக்கான விண்ணப்பம் மாநில கணக்காயரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுவிடுகிறது. எனவே, தனக்குக் கிடைக்கப்போகும் மாதாந்தர ஓய்வூதியம் எவ்வளவு, பணிக்கொடை எவ்வளவு என்பதெல்லாம் அப்போதே ஓய்வு பெறும் ஊழியருக்குத் தெரிந்துவிடும்.

பொதுவான கணக்கு என்னவென்றால், 33 வருடப் பணியை முழுமையாக நிறைவு செய்த ஒருவருக்குப் பணிக்கொடையாக 16.5 மாத சம்பளம் விடுப்புக்கான 11 மாத சம்பளம், பிராவிடன்ட் ஃபண்ட் இருப்பு (சுமார்) 16 மாத சம்பளம் என மொத்தம் 43.5 மாத சம்பளம் கிடைக்கும்.

தற்போதைய நிலையில், நடுத்தரமான ஒரு பணியிலிருந்து ஓய்வுபெறும் ஒருவர் ரூ.70,000 அளவில் கடைசிச் சம்பளம் பெறக்கூடும். இந்த சம்பளத்துக்குரிய அகவிலைப்படி மற்றும் வீட்டு வாடகைப்படியுடன் சுமார் ரூ.32 லட்சத்தை ஓய்வுக்கால ரொக்கப் பலனாக பெறக்கூடும். இத்துடன் அவரது மாதாந்தர ஓய்வூதியம் 35,000 ரூபாயாக இருக்கும். இந்த ஓய்வூதியத்துடன் அகவிலைப்படி, மருத்துவப் படி சேரும்.

நிதி ஆலோசனை கட்டாயம் தேவை

இந்த ரூ.32 லட்சத்துடன் முன்னதாக உள்ள கையிருப்பு, கொடுக்கல் வாங்கல் முதலான விவரங்களை விவரித்து, ஒரு நல்ல நிதி ஆலோசகரிடம் ஓய்வுக்கால நிதித் திட்டத்தைப் பெற்றுக்கொண்டு, நிச்சயமாகப் பணம் தேவைப்பட்டால் மட்டுமே ஓய்வூதிய கம்யூடேசன் பெற விண்ணப்பிக்க வேண்டும். காரணம், இன்றைக்கு குடும்பச் செலவுக்கு ரூ.20,000 தேவை எனில் 10 ஆண்டுகள் கழித்து 35,817 ரூபாயும், 20 ஆண்டுகள் கழித்து 64,140 ரூபாயும் இருந்தால்தான் நம்மால் நிம்மதியாக இருக்க முடியும். (பணவீக்கம் 6% என்ற கணக்கில்)

ஏனென்றால், முழுமையான பணிக்காலத்தை நிறைவு செய்து முறையாக பிராவிடன்ட் ஃபண்ட் கணக்கைப் பராமரித்துவரும் ஒருவருக்கு எவ்வளவு ஓய்வூதியம் தீர்மானிக்கப் படுகிறதோ, அதைப்போல் 100 மடங்கு தொகை பணிக்கொடை, விடுப்பு சம்பளம் மற்றும் பி.எஃப் ஆகியவற்றின் மூலம் ரொக்கமாகத் தரப்படும். இதைவிடவும் கூடுதலாக நிதி தேவைப்படுமேயானால் ஓய்வு பெற்ற ஒருவர் வேறு எவரையும் நாடக்கூடாது என்ற தாராள மனதுடன் தரப்படுவதுதான் ‘கம்யூடேசன்’ என்னும் முன்பணம். அதை அதிக பலன் தரக்கூடிய ஏதேனும் ஒன்றில் முதலீடு செய்து தானும் பலன் பெற்று, பிந்தைய தலைமுறைக்கும் விட்டுச் செல்லலாம். உதாரணமாக, இந்தப் பணத்துடன் கொஞ்சம் சொந்தப் பணம், கொஞ்சம் வீட்டுக் கடன் என ஒரு வீடு கட்டி விட்டால், காலத்துக்கும் நாம் அதில் இருந்து கொள்ளலாம். அல்லது சராசரியாக 10 சதவிகி தத்துக்குமேல் வருமானம் தரக்கூடிய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தில் (உதாரணம் மியூச்சுவல் ஃபண்ட்) முதலீடு செய்யலாம். மாறாக, ‘கிடைக்கிறதே’ என்பதற்காகப் பணத்தை வாங்கி, வங்கி எஃப்.டி-யில் வைத் திருப்பதாலோ, செலவு செய்வதாலோ எந்தப் பயனும் இல்லை. பிற்பாடு மிகுந்த கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பதை மனதில் கொண்டு அரசு ஊழியர்கள் செயல்படுவது நல்லது.

ஓய்வுக்காலத்தில் வங்கிக் கடன் சரியா?

ஓய்வுக்கால வாழ்வில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், வங்கிக் கடன். ஓய்வூதியம் தரும் வங்கிகள் தனது ஓய்வூதியர்களுக்குக் கடன் வழங்கி வருகிறது. இது நல்ல விஷயம்தான். ஆனால், ஓய்வூதியத்தை ஏற்கெனவே கம்யூட் செய்து முன்பணமாகப் பெற்றவர்கள், குறைவான பென்ஷன் தொகையே பெறுவார்கள். இந்த நிலையில், மேலும் கடன் வாங்கினால், அந்தக் கடனைத் திரும்பச் செலுத்த பென்ஷனிலிருந்து இன்னொரு பகுதியைத் தர வேண்டியிருக்கும். ஆக, பென்ஷனாகக் கிடைக்க வேண்டிய பணத்தில் மூன்றில் ஒருபங்குதான் கிடைக்கும். அதாவது, கடைசியாக வாங்கிய சம்பளத்தில் ஆறில் ஒரு பங்குதான் ஓய்வூதியமாகக் கிடைக்கும். இந்தப் பணத்தை வைத்து அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லையெனில், பலவிதமான கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். எனவே, பென்ஷன் காலத்தில் வங்கியில் கடன் வாங்க வேண்டுமா என்பதை நன்கு யோசித்து வாங்குவது அவசியத்திலும் அவசியம்!

🍁🍁🍁 கம்யூட்டேசன் (Commutation) என்றால் என்ன?

 ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் , உள்ளாட்சி பணியாளர்கள் தாங்கள் பெற இருக்கும் ஓய்வூதியத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தொகையை ஒப்புவிப்பு செய்து அதனைத் தொகுத்து ஒட்டுமொத்தத் தொகையாக பெற்றுக் கொள்வதே கம்யூட்டேசன் ஆகும். இவ்வாறு பெறும் கம்யூட்டேசன் தொகை வட்டியும் முதலுமாக 15 ஆண்டுகளில் பிடித்தம் செய்யப்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. 

கம்யூட்டேசனின் கடந்த கால கதை 

ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்த காலத்தில் 1925 ம் ஆண்டில் சிவில் ஓய்வூதியர்கள் (தொகுப்பு) விதிகளின்படியும், தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் மெட்ராஸ் சிவில் ஓய்வூதியர்கள் (தொகுப்பு) விதிகளின் படியும், கம்யூட்டேசன் வழங்கப்பட்டது. அப்போது ஓய்வூதியத்தில் 50 சதவீதம் வரை ஒப்புவிப்பு செய்து ஒட்டுமொத்த தொகை பெறும் நிலை இருந்தது . அவ்வாறு 50 சதவீதம் ஒப்புவிப்பு செய்த பின்னர் எஞ்சியுள்ள 50 சதவீதம் மட்டுமே தமது வாழ்நாள் முழுவதும் பெறும் ஓய்வூதியமாக இருந்து . பின்னர் அரசாணை 242 நிதி (ஒய்வூதியம்), நாள்:01.04.1981ன் படி கம்யூட்டேசன் செய்த தொகை அசல் வட்டியுடன் 15 ஆண்டுகள் பிடித்தம் செய்யப்பட்டு 15 ஆண்டுகள் முடிவற்றதும் முழு ஓய்வூதியம் பெறும் ( Restoration ) முறை நடைமுறைக்கு வந்தது .

 1950 ம் வருடத்திய தளர்த்தப்பட்ட ஓய்வூதிய விதிகளின்படி கம்யூட்டேசன் செய்யும் தொகை 50 சதவிதத்தில் இருந்து ஓய்வூதியத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என்றாயிற்று . 1998 ம் ஆண்டில் இது 40 சதவீதம் என்று அதிகரித்தாலும் கூட 2003 ல் மீண்டும் மூன்றில் ஒரு பகுதி என்ற முறை மீண்டும் அமுலுக்கு வந்தது . 01.12.1963 முதல் ஓய்வூதியர் கம்யூட்டேசன் செய்யும் தேதியில் உள்ள அவரது வயதின் அடிப்படையில் ஒப்படைப்பு செய்து பெறும் தொகையினை கணக்கிடக் காரணி ( Factor ) கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டு அந்த அட்டவணையின்படி கம்யூட்டேசன் தொகை வழங்கும் முறை வந்தது . 01.12.1953 முதல் அமுல்படுத்தப்பட்ட அட்டவணை ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருத்தியமைக்கப்பட்டு 01.5.2009 முதல் புதிய அட்டவணை அமலுக்கு வந்து, அதுவே தற்போது நடைமுறையில் உள்ளது .

 கம்யூட்டேசன் கணக்கிடும் முறையும் திருப்பி செலுத்தும் காலமும் 

1.1.2006 முதல் அமல்படுத்தப்பட்ட ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் . 318 நிதித் (ஓய்வூதியம் ) துறை, நாள் . 23.7.2009 ன்படி தயாரிக்கப்பட்ட அட்டவணையின்படி வயது 20 முதல் வயது 81 வரையில் உள்ளவர்கள் ஓய்வூதியத்தினை கம்யூட்டேசன் செய்வதற்கான காரணிகள் உள்ள திருத்திய அட்டவணையினை வெளியிட்டுள்ளது . இதன்படி 58 வது வயதில் ஓய்வு பெறும் ஒருவர் கம்யூட்டேசன் பெறுவதற்கான காரணி 8.371 ஆகும். அதாவது கம்யூட்டேசன் பெறப்படும் அசல் தொகை சற்று ஏறக்குறைய 8 வருடம் 3 மாதத்தில் முடிவடையும் எனக் கொள்ளலாம் . ஓய்வூதியர் அவர் பெறுகின்ற ஓய்வூதியத்தில் அதிகபட்சமாக மூன்றில் ஒரு பகுதியினை மட்டுமே கம்யூட்டேசன் செய்ய முடியும் .

🍁🍁🍁 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்...

 






🍁🍁🍁 குறைவாக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 2ம் முறையாக நீட் பயிற்சி அளிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்...

 


குறைவாக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 2 ஆம் முறையாக நீட் பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘நீட் தேர்வில் குறைவான மார்க் எடுத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் முறையாக ஆன்லைனில் நீட் பயிற்சி அளிக்கப்படும். பிளஸ் டூ முடித்த 9,438 மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்’ என்றார்.

🍁🍁🍁 ஆந்திராவில் நவம்பர் 2 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு...

 ஆந்திராவில் வரும் நவம்பர் 2-ம் தேதி பள்ளிகள், ஜூனியர் கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன. இதற்கான அட்டவணையை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 20 -ம் தேதிமுதல் ஆந்திராவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. இப்போது கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பள்ளிகளை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, வரும் நவம்பர் மாதம் 2-ம்தேதி பள்ளிகள், ஜூனியர் கல்லூரிகள் (பிளஸ் 1, 2) திறக்கப்படும் என ஆந்திர அரசு ஏற்கெனவே அறிவித்தது. இந்நிலையில், நேற்று இதற்கான அட்டவணையை மாநில முதன்மைச் செயலாளர் நீலம் சாஹ்னி வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:

நவம்பர் 2-ம் தேதி 9, 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதே தேதியில் இண்டர்மீடியட் ஜூனியர் கல்லூரிகளும் (முதலாம் ஆண்டு) திறக்கப்படவுள்ளன. 12-ம் தேதி 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

23-ம் தேதி முதல் 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கும், டிசம்பர் 14-ம் தேதி 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் இதே அட்டவணை பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🍁🍁🍁 கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான நிலுவைத்தொகை - டிச.14ஆம் தேதிக்குள் பள்ளிக்கல்வித்துறை செலுத்த உயர்நீதிமன்றம் இறுதி கெடு...

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான 2019-20 ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டண நிலுவைத் தொகையை டிச.14-ம் தேதிக்குள் அரசு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் பள்ளிக் கல்வித்துறைச் செயலர் நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரித்துள்ளது.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 11 ஆயிரம் ரூபாயாகக் குறைக்கப்பட்டதை எதிர்த்தும், 2017-18, 2018-19, 2019-20 ஆம் கல்வியாண்டுகளில் கல்விச் செலவை மறு நிர்ணயம் செய்யக் கோரியும், 2020-21 ஆம் ஆண்டுக்கு நியாயமான செலவை நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, 2018 - 2019 ஆம் கல்வியாண்டிற்கான அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்காக ரூ.303.70 கோடி நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், 2019 - 2020 ஆம் கல்வியாண்டுக்கான நிலுவைத் தொகை விரைவில் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 2018-2019 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகை கிடைக்காத தனியார் பள்ளிகள் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்கும் பட்சத்தில், பள்ளிகளின் தகுதியைப் பொறுத்து நிலுவைத் தொகை வழங்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், 2019-2020 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகையைச் செலுத்த கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, , 2019-2020 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகையை டிசம்பர் 14-ம் தேதிக்குள் செலுத்த கடைசி வாய்ப்பு வழங்குவதாகத் தெரிவித்த நீதிபதி, அவ்வாறு செலுத்தாதபட்சத்தில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தார்.

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 30.10.2020(வெள்ளி)...

🌹எல்லாம் தெரிந்தாலும் எதுவும் தெரியாததது போல் இருந்து விடுவது நல்லது. ஏனெனில் அந்த பண்பு மேலும் பலவற்றை கற்றுத் தரும்.!

🌹🌹வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஜெயித்தால் அது வெற்றி...

ஏராளமான பிரச்சனைகளைக் கடந்து ஜெயித்தால் அது வரலாறு.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎀🎀மிலாது நபி இன்று கொண்டாட்டம்.. அமைதி-வளம் பெருகட்டும் என  ஆசிரியர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

🎀🎀மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் தொடர்பாக நேற்று அரசாணை வெளியிடப்பட்டது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை வழங்குவதற்கான சட்ட மசோதாவை தமிழக சட்டசபையில் குரல் ஓட்டெடுப்பு வழியாக இம்மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த உள் ஒதுக்கீடு சட்டம் நடப்பு ஆண்டிலேயே அமலுக்கு வரும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மீது கவர்னர் நேற்றுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டு 45 நாட்களை கடந்து விட்ட நிலையில் நேற்று இம்மசோதா தொடர்பாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

புதிய சட்டத்தின் வழியாக ஒரு ஆண்டுக்கு அரசு பள்ளியில் படிக்கும் 300 மாணவர்கள் வரை மருத்துவ இடங்களில் கூடுதலாக சேர முடியும். இந்த சட்டம் நடப்பு ஆண்டிலேயே அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் எழுதிய கடிதத்தில் சட்டம் குறித்து முடிவு எடுக்க 3 முதல் 4 வாரகால அவகாசம் தேவை எனவும், இதனை அமைச்சர்கள் குழுவிடம் கூறியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் சட்டத்திற்கு வழி வகை ஏற்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

🎀🎀அதிர்ச்சி தரும் துணைத்தேர்வு முடிவுகள் 10ம் வகுப்பில் தேர்ச்சி 22% பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி 12%: மாணவர்கள், பெற்றோர் கடும் அதிருப்தி

🎀🎀2021 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்கள் அட்டவணையினை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

🎀🎀சென்னை பல்கலைக்கழக அரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு - ஏப்ரல் மாதத்தில் தேர்வெழுத கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி 

🎀🎀நடப்பு ஆண்டு பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், பாடத்திட்டம் குறைப்பை இறுதி செய்வதில் சிக்கல் நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது - நாளிதழ் செய்தி

🎀🎀ரேசன் கடை ஊழியர்களுக்கு புதிய ஊதியத்தை பரிந்துரை செய்ய குழு -தமிழக அரசு உத்தரவு

🎀🎀டிசம்பர் மாதத்தில் செமஸ்டர் தேர்வுகள் துவங்க நிலையில் புதிதாக தொடங்கிய 10  அரசு கலைக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை மாணவர்கள் அச்சம் 

🎀🎀கருணை அடிப்படையிலான நியமனம் உள்பட தொடக்க நிலைப் பணியிடங்களை நிரப்பத் தடை ஏதும் இல்லை என்று நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

🎀🎀அனைத்து பள்ளிகள் மற்றும் அங்காடிகளில், குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதை உறுதிப்படுத்தி, அறிக்கை அளிக்க வேண்டும்,'' என, உள்ளாட்சிகளுக்கு, அமைச்சர் வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.

🎀🎀கருணை அடிப்படை பணி வழங்குவதில் நியாயமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு

🎀🎀SAI என்ற எளிய செய்தி பரிமாற்றி செயலியை இந்திய இராணுவம் உருவாக்கி உள்ளது.

WhatsApp, Telegram ஆகிய செயலிகளுக்கு மாற்றாக உருவாக்கம். விரைவில் உபயோகத்திற்கு வரும் என தகவல்.

🎀🎀 பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரை நிரந்தரமாக தடை செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் TRB வெளியீடு

🎀🎀மண்டல பூஜை, மகரவிலக்கு பூஜைக்கு நவம்பர் 15-ம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 26-ம் தேதி வரை மண்டல பூஜைக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🎀🎀நேற்று முதல்வர் பழனிசாமியும், மு.க.ஸ்டாலினும் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஒரே விமானத்தில் மதுரை விமான நிலையத்திற்கு பயணம் மேற்கொண்டனர்.

தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் இருந்து இருவரும் ராமநாதபுரம் செல்கின்றனர். ஒரே விமானத்தில் முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்து இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

🎀🎀மீலாதுன் நபி திருநாளில் இஸ்லாமிய பெருமக்களுக்குத் திமுக சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிப்பதாவது: அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த நாளான மீலாதுன் நபி திருநாளில் இஸ்லாமியச் சமுதாயப் பெருமக்களுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.                                                         🎀🎀”அரசியலமைப்பு பொறுப்பில் உள்ளவர்கள், பதிலளிக்கும் அளவிற்கு நடந்து கொள்ள மாட்டார்கள் எனும் நம்பிக்கை காரணமாகவே, 

ஆளுநர் எந்த நீதிமன்றத்திற்கும் பதிலளிக்க தேவையில்லை என்பது போன்ற விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன” - நீதிபதி கிருபாகரன் அமர்வு

🎀🎀IFHRMS உடன் இணைக்கப்படுவதால் CPS "Missing Credits" விபரங்களை 10.11.2020க்குள் சரிசெய்ய அரசுத் தகவல்  மைய (Govt. Data Centre) ஆணையர் கடிதம்.

🎀🎀தமிழகத்திலேயே முதல் முறை - காலையில் நுழைவுத்தேர்வு, மாலையில் முடிவுகள் - பாரதியார் பல்கலைக்கழகம் அசத்தல்.

🎀🎀அகவிலைப்படி கணக்கிட பழைய முறையே தொடர வேண்டும் - டிஆர்இயூ வலியுறுத்தல்.

🎀🎀போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 551 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 03.11.2020 மற்றும் 04.11.2020 ஆகிய நாட்களில் பணிநியமன கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவிப்பு.

🎀🎀இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய தேர்வுப்படி மதிப்பெண் தர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை- யூஜிசி

🎀🎀தமிழகத்தில் பொறியாளர்கள் உருவாவதில்லை, பட்டதாரிகள்தான் உருவாகின்றனர்: உயர்நீதிமன்ற மதுரை கிளை

🎀🎀IFHRMS உடன் இணைக்கப்படுவதால் CPS "Missing Credits" விபரங்களை 10.11.2020க்குள் சரிசெய்ய அரசுத் தகவல் மைய (Govt. Data Centre) ஆணையர் உத்தரவு.

🎀🎀இன்ஜி., பொது கவுன்சிலிங் நிறைவு 91 ஆயிரம் இடங்களுக்கு ஆள் இல்லை

🎀🎀5 ஆண்டு சட்டப்படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு

🎀🎀தமிழக கல்லூரி கல்வி இயக்குனராக பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

🎀🎀கொரோனா நிதி நெருக்கடியால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய பணி நியமனத்துக்கு தடை நீக்கம் தமிழக அரசு உத்தரவு

🎀🎀ஓய்வூதியர்களே! மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தங்களுடைய முறையீடு மாவட்ட ஆட்சியரால் நிராகரிக்கப்படும்போது, மாநில அளவிலான கமிட்டிக்குமேல்முறையீடு செய்தல் தொடர்பான வழிகாட்டுதல்கள் வெளியீடு.                                                        

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

🍁🍁🍁 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அஞ்சல் வழியில் உயர்கல்வி பயில அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்களே அனுமதி வழங்கலாம் என்ற பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள்: 12.04.2001. இணைப்பு: அரசாணை எண், 328, P & AR Department , நாள்: 09.04.1983...

 >>> Click here to Download School Education Director Proceedings.. & G.O.328...



🍁🍁🍁 அண்ணாமலை பல்கலைக்கழகம் மே-2020 தேர்வு முடிவுகள் வெளியீடு...

 


>>> Click here to go Result Page...


🍁🍁🍁 கற்போம் எழுதுவோம் இயக்கம் புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் செயல்படுத்துதல் - 5.11.20 அன்று காணொளி வாயிலான கூட்டம் நடத்துதல் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள்...

 >>> Click here to Download Director Proceedings...


🍁🍁🍁 AICTE- Approval process 2021-22 proposal for new courses - letter...

 


🍁🍁🍁 போலி ஆவணங்கள் மூலம் பணி நியமனம் - ஆசிரியர் உட்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை- திருவையாறு கோர்ட் தீர்ப்பு...

 


🍁🍁🍁 ஆசிரியர் பணி நியமனம் - வயது வரம்பு 40ஆக குறைப்பு - ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் கோரிக்கை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்...

 


🍁🍁🍁 பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி...


 

🍁🍁🍁 அரியர் தேர்வுகளை Onlineல் ஏன் நடத்த கூடாது உயர்நீதிமன்றம் கேள்வி...

 





🍁🍁🍁 டிசம்பர் மாத இறுதிக்குள் 7200 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளும், 80ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட்போர்டும், 8828 ஆய்வகங்களும் உருவாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்...

 திருப்பூர், கோவை, ஈரோடு, நிலகிரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கும் விழா பெருமாநல்லூர் கே.எம்.சி பப்ளிக் பள்ளியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சு.குணசேகரன்(திருப்பூர் தெற்கு), கே.என். விஜயகுமார்(திருப்பூர் வடக்கு), கரைப்புதூர் ஏ.நடராஜன்(பல்லடம்), உதனியரசு(காங்கயம்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது, "பொருளாதார மேம்பாடு அடைய கல்வி ஒன்றால் மட்டுமே முடியும். தனியார் பள்ளியும், அரசு பள்ளியும் போட்டியிடுகிறதே தவிர, பொறாமையில்லை. ஆனால் அரசு இரு தரப்பு மாணவர்களுக்கும் சிறப்பான முறையில் செயலாற்றுகிறது. உலக நாடுகளே அச்சப்படுகிற நேரத்தில், அதிலும் பள்ளி திறக்காத பொழுது கூட பள்ளிகள் பெரும் கஷ்டத்தில் இயங்கி வருகிறது. தனியார் பள்ளி நிறுவனங்களின் கோரிக்கைகள் ஒராண்டுக்குள் நிறைவேற்றப்படும்." என்றார்.

மேலும், "தனியார் பள்ளிகளுக்கு ஓராண்டு கொடுத்து வந்த அங்கீகாரம், தற்போது 2 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் 3 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. கும்பகோணம் நிகழ்ச்சிக்குப் பிறகு கட்டட அனுமதியின்றி, அங்கீகாரம் நீட்டிக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்டட அனுமதி பெற்றவுடன் விரைவில் நிரந்தர அங்கிகாரம் வழங்கப்படும். அரசின் தொலைநோக்கு சிந்தனை மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டிருக்கிறது." என்றார்.

தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதியே புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருக்கக் கூடிய 6 கேள்விகளைத் தவிர மீதமுள்ள 174 கேள்விகளுக்கான விடை தமிழக பாடத்திட்டத்தில் உள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் வகையில் தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக, 300க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில முடியும்" எனத் தெரிவித்தார்.

மாணவர்களின் தரமான எதிர்காலத்தை உருவாக்க தமிழக அரசு பாடுபடுகிறது. பள்ளி மாணவர்களுக்கு உயர்தர ஆய்வகங்கள், கணினி மையம், இணைய வழி உள்ளிட்ட உலகமே வியக்கும் அளவிற்கு புதிய திட்டங்கள் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன. செல்லிடப் பேசி மூலம் இணையவழியில் மாணவர்கள் கல்வி கற்பதில் உள்ள சிரமங்களைத் தவிர்க்க, கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடத்திட்டத்தை நடத்துவதை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் 7200 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளும், 80ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட்போர்டும், 8828 ஆய்வகங்களும் உருவாக்கப்படும். தமிழக அரசின் தொலைநோக்கு சிந்தனை எதிர்கால இந்தியாவில் தமிழக மாணவர்களை எவராலும் மிஞ்ச முடியாத என்ற அளவுக்கு உள்ளது. இதற்கு அனைவரும் உறுதுணையாக இருந்து செயல்படுவோம்." என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

🍁🍁🍁 UGC: EXTENSION OF TIMELINES FOR ONLINE APPLICATIONS FOR SCHOLARSHIPS...

 


🍁🍁🍁 அரசின் முன் அனுமதி பெறாமல் ஓய்வுபெற்ற ஊழியர்களை மறுநியமனம் செய்யக்கூடாது - நிதித்துறை...

 Re-Employment of Retired Employees - Revised instructions issued -Regarding - Finance Department

Letter No.2155/FS/T/2020, Dated: 27-10-2020



🍁🍁🍁 பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரை நிரந்தரமாக தடை (Permanently Debarred) செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் TRB வெளியீடு...

 List of candidates who have been permanently debarred for the reason of tampering of confidential official records (i.e., OMR Answer Sheets), relating to the written Examination held on 16.09.2017 for the Recruitment to the Posts of Direct Recruitment of Lecturers (Engineering / Non- Engineering) in Government Polytechnic Colleges for the year 2017-2018 (Notification No. 04/ 2017 Dated: 16.06.2017)...

>>> Click here to Download List of candidates - Permanently Debarred...

🍁🍁🍁 IFHRMS உடன் இணைக்கப்படுவதால் CPS "Missing Credits" விபரங்களை 10.11.2020க்குள் சரிசெய்ய அரசுத் தகவல் மைய (Govt. Data Centre) ஆணையர் கடிதம்...



 

🍁🍁🍁 G.O.(Ms).No.: 438, Dated: 29.10.20- மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிட்டது தமிழக அரசு...

 





>>> Click here to Download G.O.438, Dated: 29-10-2020


🍁🍁🍁 கல்லூரி கல்வி இயக்குனர் நியமனம் ரத்து - உயர்நீதிமன்றம் உத்தரவு...

கல்லூரி கல்வி இயக்குனர் நியமனம் ரத்து

கல்லூரி கல்வி இயக்குனராக பூரணச்சந்திரனை நியமித்த அரசின் உத்தரவு ரத்து. பணி மூப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என திருவாரூர் திரு.வி.க கல்லூரி முதல்வர்  கீதா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு...



🍁🍁🍁 தமிழகத்திலேயே முதல் முறை - காலையில் நுழைவுத்தேர்வு, மாலையில் முடிவுகள் - பாரதியார் பல்கலைக்கழகம் அசத்தல்...

 


தமிழகத்திலேயே முதல் முறையாகக் காலையில் நுழைவுத் தேர்வை நடத்தி மாலையில் அதன் முடிவுகளை பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்.பில்., பிஎச்.டி. படிப்புகள் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் நடத்தப்பட்டு வருகின்றன.

இப்படிப்புகளில் சேர விரும்பும் முதுநிலைப் பட்டதாரிகள், நுழைவுத் தேர்வு எழுத வேண்டியது அவசியம். பாரதியார் பல்கலைக்கழகம் இத்தனை ஆண்டுகளாக நேரடியாக நடத்திய இத்தேர்வை, நேற்று முன்தினம் (அக். 27) முதல் முறையாக இணையவழியில் நடத்தியதோடு மட்டுமல்லாமல் முடிவையும் அன்றே வெளியிட்டு சாதனை படித்துள்ளது.

இதுகுறித்து எம்.ஃபில்., பிஎச்.டி. நுழைவுத் தேர்வு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ம.இளஞ்செழியன் கூறியதாவது:

''2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான எம்.பில்., பிஎச்.டி. நுழைவுத்தேர்வு http://bucetonlineexam2020.b-u.ac.in என்ற இணையதளம் வழியாக நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கு 2,778 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இணையதளத்தில் முதல் முறையாக நுழைவுத்தேர்வு நடத்துவதால், தேர்வு நடைமுறைகள் குறித்த அனைத்து விவரங்களுக்கும் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து அக். 23-ம் தேதி இணைய வழியில் மாதிரி நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.

அப்போது கணினி வசதி, இணையதள வசதி இல்லாமை, மலைப்பகுதிகளில் நெட்வொர்க் பிரச்சினை ஆகியவை குறித்து மாணவர்கள் முறையிட்டனர். இது உடனடியாகத் துணைவேந்தரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, பல்கலைக்கழகத்தில் உள்ள இணையதள மையம், மற்றும் ஜவுளித்துறை அறைகளில் 200 கணினிகள் பொருத்தப்பட்டன.

மாணவர்களை நேரடியாக வரவழைத்துப் பல்கலைக்கழகத்திலேயே தேர்வெழுத வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததில், 94 பேர் கலந்து கொண்டனர். மீதமுள்ள 2,563 பேர் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, இணையதளம் வழியாகத் தேர்வெழுதினர். 215 பேர் மட்டுமே தேர்வெழுதவில்லை.

ஓஎம்ஆர் தாளில் விடையளிக்கும் வகையில், கணினியில் புரோக்ராமிங் செய்து வைத்திருந்தோம். வினாக்களுக்கு ஏற்ற விடைக்குறிப்புகளைத் தனியாகப் பதிவேற்றம் செய்து தயார் நிலையில் வைத்திருந்தோம்.

காலை 11 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது. 35 மதிப்பெண்களுக்கு 50 கேள்விகள் என்ற அடிப்படையில் இ-வினாத்தாள் தயாரிக்கப்பட்டது. தேர்வு முடிந்ததும், துறைவாரியாக வினாக்களும், விடைகளும் கணினி மூலமாகப் பொருத்தப்பட்டு, மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்பட்டன. பின்னர் துறைவாரியாகப் பொருத்தப்பட்டவை சரிதானா? என்று ஆய்வு செய்து, உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஒரே நாளில் நுழைவுத்தேர்வு நடத்தி முடிவுகளை அன்றே வெளியிடுவது தமிழகத்தில் இதுவே முதல் முறை''.

இவ்வாறு ம.இளஞ்செழியன் கூறினார்.

🍁🍁🍁 Provisional Certificate இருந்தாலே 2 ஆண்டுக்குள் பட்டச் சான்று சமர்ப்பிக்க வேண்டும் என நிபந்தனைக்கு உட்பட்டு ஊக்க ஊதியம் வழங்க அனுமதிக்கலாம்...

 


🍁🍁🍁 சட்ட படிப்பிற்கான கட் -ஆப் (CUT OFF ) மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது...

 சட்ட படிப்பிற்கான கட் -ஆப் (cut off ) மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் பல்கலைகழகம் அதிகாரபூர்வமான http://tndalu.ac.in  என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



🍁🍁🍁 G.O.NO: 18 -Dated- 18.1.2013 - M.phil Incentive G.O...

 




🍁🍁🍁 நடப்பு ஆண்டு பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், பாடத்திட்டம் குறைப்பை இறுதி செய்வதில் சிக்கல்...

 நடப்பு ஆண்டு பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், பாடத்திட்டம் குறைப்பை இறுதி செய்வதில் சிக்கல் நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 கரோனா வைரஸ் பரவலால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையிலான குழுவின் பரிந்துரைப்படி 40 சதவீதம் வரை பாடத்திட்டத்தை குறைக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது.

இதையடுத்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிமையம் (எஸ்சிஇஆர்டி) சார்பில் பாடஅளவு குறைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அறிவிப்பு வெளியாகி ஒரு மாதமாகியும் பாடஅளவு குறைப்பு சார்ந்த விவரங்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிடவில்லை. இதனால் மாணவர்களுக்கான கற்பித்தல் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

என்சிஇஆர்டி பரிந்துரை

கல்வியாண்டு தாமதத்தால், பாடத்திட்டத்தை கணிசமாக குறைக்க தேசிய கல்வியியல் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) பரிந்துரை செய்தது. அதையேற்று சிபிஎஸ்இ, கேந்திரிய வித்யாலயா உட்பட மத்தியவாரியப் பள்ளிகள் கடந்த ஜூலை மாதமே 30 சதவீத அளவுக்கு பாடங்களை குறைத்து, அதன் முழு விவரங்களையும் வெளியிட்டன.

அந்த வழிகாட்டுதலை பின்பற்றி சிபிஎஸ்இ, கே.வி. பள்ளிகள் பாடங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் 40 சதவீதம்வரை பாடஅளவு குறைக்கப்படும். அதற்கான பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை கடந்த செப்டம்பரில் அறிவித்தது. ஆனால், குறைக்கப்பட்ட பாடங்களின் விவரங்களை இதுவரை அரசு வெளியிடவில்லை.

மாணவர்களுக்கு சிரமம்

இதன் காரணமாக மாணவர்களுக்கு எந்தெந்தப் பாடங்களை நடத்துவது என்ற குழப்பம் ஆசிரியர்கள் மத்தியில் நிலவிவருகிறது. தனியார் பள்ளிகள் அனைத்து பாடங்களையும் நடத்தி வருகின்றன. ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தற்போது கல்வித் தொலைக்காட்சி மூலமே பாடங்கள் நடத்தப்படுகின்றன.

அதுவும் அனைத்து தரப்பு மாணவர்களையும் முழுமையாகச் சென்றடையவில்லை. இத்தகைய சிக்கல்கள், கற்றலில் பின்தங்கிய மாணவர்களின் கல்விக்கு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. இதைக்கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு, பொதுத்தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும். மேலும், பாடக்குறைப்பு விவரங்களையும் உடனே வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘நிபுணர் குழு பரிந்துரையின்படி 1 முதல் 10-ம் வகுப்பு வரை 40சதவீதமும், 11, 12-ம் வகுப்புகளுக்கு 30 சதவீதமும் பாடங்களைகுறைக்க முடிவானது. என்சிஇஆர்டி வழிகாட்டுதலின்படி பாடத்தின் முக்கிய பகுதிகளில் மாற்றம் செய்யாமல் கூடுதல் விளக்கங்கள் மட்டும் நீக்கப்பட்டன.

அதேநேரம் பள்ளிகள் திறப்பை அக்டோபர் மாத இறுதியில் மேற்கொள்ள திட்டமிட்டே பாடத்திட்டக் குறைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தொற்று தணியாததால் பள்ளிகள் திறப்பை முடிவு செய்வதில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது. இதனால் பாடஅளவு குறைப்பையும் இறுதிசெய்ய முடியவில்லை. ஏனெனில்,பள்ளிகள் திறப்பை முன்வைத்துதான் எவ்வளவு சதவீதம் பாடத்திட்டத்தை குறைக்கலாம் என்று முடிவெடுக்க முடியும்.

தீபாவளிக்குப் பிறகு...

தற்போதைய சூழலில் தீபாவளி முடிந்ததும் நவம்பர் இறுதியில் பள்ளிகளைத் திறந்து மேல்நிலை வகுப்புகளை மட்டும் சுழற்சி முறையில் நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், பள்ளிகள் திறப்பு, தமிழக அரசின் கொள்கை சார்ந்தவிவகாரம் என்பதால் முதல்வரே இதில் இறுதி முடிவை மேற்கொள்வார். பள்ளிகள் திறப்பு இறுதியானதும் பாடத்திட்டக் குறைப்பு விவரங்களை அமைச்சர் வெளியிடுவார்’’ என்றனர்.

🍁🍁🍁 அனைத்து துறைகளில் பணிபுரிபவர்களும் எழுத வேண்டிய பொதுவான துறைத்தேர்வுகள்...

 


🍁🍁🍁 துணை வட்டாட்சியர் பதவி உயர்வுக்கு தேர்ச்சி பெற வேண்டிய "துறை தேர்வுகள்" குறித்து வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையாளரின் சுற்றறிக்கை...

 துணை வட்டாட்சியர் பதவி உயர்வுக்கு தேர்ச்சி பெற வேண்டிய "துறை தேர்வுகள்" குறித்து வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையாளரின் சுற்றறிக்கை... 

Roc. No.Ser 3(1) / 24046 / 2020, Dated : 24-10-2020

Public service - Account test for subordinate officers - part -1 & part -II prescribed for promotion - circular- issued...

>>> Click here to Download Commisionerate of Revenue Administration Circular Roc. No.Ser 3(1) / 24046 / 2020, Dated : 24-10-2020...


🍁🍁🍁 HBA Clarification - HUB Dept Letter(Ms) No.156/HBA/2020-1, Dated: 15.10.2020 - அரசு ஊழியர்கள் வீடு கட்டும் முன் பணம் (HBA) பெறுவதற்கு விண்ணப்பிக்கும் நடைமுறையில் மாற்றம்...

 HBA Clarification - HUB Dept Letter(Ms) No.156/HBA/2020-1, Dated: 15.10.2020 - அரசு ஊழியர்கள் எந்த மாவட்டத்தில் வீடு கட்ட / வாங்க அரசிடம் வீடு கட்டும் முன் பணம் (HBA) பெறுவதற்கு விரும்பினாலும், உரிய சான்றுகளுடன் அவர்கள் பணிபுரிந்துவரும் மாவட்டத்தின் ஆட்சித் தலைவருக்கே விண்ணப்பிக்க வேண்டும்...

>>> Click here to Download HUB Dept Letter(Ms) No.156/HBA/2020-1, Dated: 15.10.2020...


🍁🍁🍁 PET - TURN WISE CUT OFF RELEASED BY TRB...

 உடற்கல்வி ஆசிரியர்களுக்கான இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் பணி நியமனம் குறித்த அறிவிப்பு வெளியீடு.

காலி பணியிடங்களுக்கு போட்டி தேர்வு மற்றும் இதர விதிகள் அடிப்படையில் 551 பேர் தேர்வு.

நவ. 3 - 4ம் தேதிகளில் கலந்தாய்வு மூலம் அனைவருக்கும் பணி நியமன ஆணை -  பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் .




🍁🍁🍁 அகவிலைப்படி கணக்கிட பழைய முறையே தொடர வேண்டும் - டிஆர்இயூ வலியுறுத்தல்...

 


🍁🍁🍁 TRB ANNOUNCED - PET - REVISED PROVISIONAL SELECTION LIST...

 >>> CLICK HERE TO DOWNLOAD - PET - REVISED PROVISIONAL SELECTION LIST...


🍁🍁🍁 இன்டேன் கேஸ் சிலிண்டர் பதிவு - அழைப்பு மொபைல் எண் மாற்றம்...

 




🍁🍁🍁 போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 551 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 03.11.2020 மற்றும் 04.11.2020 ஆகிய நாட்களில் பணிநியமன கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவிப்பு...

 >>> Click here to Download DSE Director Proceedings....


🍁🍁🍁 பணி நியமனத்திற்கு முன் பெற்ற உயர்கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க இயலாது என ஆணை எதுவும் பிறப்பிக்க வில்லை - அரசு செயலாளர் விளக்க கடிதம்...

 பணி நியமனத்திற்கு முன்னரே உயர்கல்வித் தகுதி பெற்றிருப்பினும் பணி நியமனத்திற்கு பின் உயர்கல்வித் தகுதி பெறினும்(Possessing Of Acquiring) ஊக்க ஊதிய உயர்வு உண்டு. 

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கடித எண் 22918/ பள்ளிக்கல்வி/ இ2/ 2005-6, நாள்: 23-02-2017

🍁🍁🍁 சென்னை பல்கலைக்கழக அரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு-ஏப்ரல் மாதத்தில் தேர்வெழுத கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி...

 




🍁🍁🍁 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் PG Diploma in English Language Teaching கல்விக்கு முதுகலை ஆசிரியர்களுக்கு 2வது ஊக்க ஊதிய உயர்வு வழங்க வழிவகை இல்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல்...

 


🍁🍁🍁 இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பு குறித்து கூறியவை...

 


>>> மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் அவர்களின் தொடக்கவுரை...


>>> மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் அவர்களின் முடிவுரை...


🍁🍁🍁 ஒருவரின் ஊக்க ஊதிய உயர்வுக்குரிய பணப்பலன் 10.03.2020க்கு முன், துறையால் அனுமதிக்கப்பட்டு பின் தடைபட்டிருந்தால் அவர்களுக்கு தற்போது நிதித்துறை அனுமதி பெற வேண்டியதில்லை...

 ஊக்க ஊதிய உயர்வு நிகழ்வில் தெளிவுரையாக வந்துள்ள அரசாணை எண்: 116, நாள் 15.10.2020 இல் வரிசை எண்:9 (a)ல் அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்னர்  உயர்கல்வித் தகுதி பெறப்பட்டு துறையால் பணப்பலன் பெற அனுமதி ஆணை வழங்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு தற்போது நிதித்துறை அனுமதி பெற வேண்டியதில்லை. அவர்களுக்கு கருவூலப்பட்டியலை தற்போது அனுமதிக்கலாம் என கீழ்கண்டவாறு ஆணை கூறுகிறது.

Point raised for clarification:

         9)Whether the bills for sanction of advance increment for acquiring higher qualification may be passed/allowed by the concerned pay and account office/Treasury office, after the date of issue of the Government order 1st read above?

Clarification

  9(a) The bill passing authority may pass the bills after due verification of the bills as follows:

    Whether the said higher qualification was acquired prior to the date of issue of the government order 1st read above and the proceedings/orders issued for sanction of advance increment is based on previous general orders issued by the department concerned and prior to the date of issue of the government order 1st read above.

           எனவே அரசாணை எண் 116 நாள் 16.10.2020ன் பாரா 9க்கு இணங்க  அரசாணைஎண் 37 நாள் 10.03.2020 வெளியிடப்படுவதற்கு முன்னர் ஒருவருக்கு ஊக்கஊதிய உயர்வு பெற சம்மந்தப்பட்ட துறையால் பணப்பலன் பெற ஆணைகள் வழங்கப்பட்டு பின்னர் கருவூலகத்தால் தடைபட்டிருந்தால் தற்போது நிதித்துறை அனுமதி பெறாமலே ஊக்க ஊதிய உயர்வினையும் அதற்க்குரிய பணப்பலனையும் அன்னாருக்கு அனுமதிக்கலாம்.

>>> அரசாணை எண். 116, நாள் : 16-10-2020 ஐ தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு... 27-04-2024 – Press News – Date Extension for Online Application - Direct R...