கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TET லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆசிரியர் தகுதித் தேர்வு நிலைப்பாட்டில் தமிழ்நாடு அரசு இரட்டை வேடம் - சிறுபான்மையினர் பள்ளி நிர்வாகிகள் அதிருப்தி



ஆசிரியர் தகுதித் தேர்வு நிலைப்பாட்டில் தமிழ்நாடு அரசு இரட்டை வேடம் - சிறுபான்மையினர் பள்ளி நிர்வாகிகள் அதிருப்தி - நாளிதழ் செய்தி 


Tamil Nadu government's double standard in Teacher Eligibility Test - minority school correspondents unhappy


"ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) குறித்து தமிழ்நாடு அரசு இரட்டை வேடம் போடுகிறது," என சிறுபான்மையினர் பள்ளி நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


மத்திய அரசின் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 23.8.2010 முதல் நடைமுறைக்கு வந்தது. அதன் கீழ் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு டி.இ.டி. (TET) தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.


ஆனால், தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் (மைனாரிட்டி) பள்ளிகள் TET விலக்கு பெற்றிருந்தன.


இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், அரசு பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவை என உத்தரவு வழங்கப்பட்டது. இதில், சிறுபான்மையினர் பள்ளிகள் விலக்கு பெறும் வகையில் தனியாக வகைப்படுத்தப்பட்டன.


பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால், பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டது. சில வழக்குகள் உச்ச நீதிமன்றத்திலும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.


அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் “ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை; அது பணி நியமனங்களுக்கு மட்டுமே உண்டு” என மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.


வழக்குகள் நீடித்ததால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு நிறுத்தப்பட்டிருந்தது.


ஆசிரியர் சங்கங்கள் நடத்திய போராட்டங்களால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதன் பின்னர், தமிழ்நாடு அரசு தானாகவே மேல்முறையீட்டை திரும்ப பெற்றது.


இந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்றத்தில் நடந்த மற்றொரு வழக்கில், உதவிபெறும் சிறுபான்மையினர் பள்ளிகள் உட்பட அனைத்து வகை கல்வி நிறுவனங்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என உத்தரவு வழங்கப்பட்டது.


இதனால் இதுவரை ஆசிரியர் தகுதித் தேர்வு விலக்கு பெற்றிருந்த சிறுபான்மையினர் பள்ளிகளின் ஆசிரியர் நியமனங்கள் சந்தேகத்திற்குள்ளாகி உள்ளது.


தொடரும் குழப்பங்கள்


இதைப் பற்றி தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு செயல் தலைவர் கனகராஜ் கூறியதாவது:


> "இவ்விஷயத்தில், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு நிலைப்பாடு, உயர்நீதிமன்றத்தில் வேறு ஒரு நிலைப்பாடு எடுத்துள்ளது. மேல்முறையீட்டை திரும்ப பெற்ற பிறகும், அதனைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு தெளிவாக வழிகாட்டவில்லை.


> இதனால், மேல்முறையீட்டிற்கு முந்தைய நிலையைத் தொடர்ந்து கல்வித்துறை செயல்பட்டது. அதேபோல், மதுரை உயர்நீதிமன்ற வழக்கிலும் அதிகாரிகள் அந்த நிலைப்பாட்டையே பின்பற்றினர்.


> அரசின் இரட்டை வேட நிலைப்பாட்டால், சிறுபான்மையினர் பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன," எனக் குறிப்பிட்டார்.


பதவி உயர்வுக்கு TET அவசியமா? என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு



பதவி உயர்வுக்கு TET அவசியமா?  என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு


Supreme Court order in the case of Is TET necessary for promotion?



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பதவி உயர்வுக்கு TET அவசியமா?  என்ற வழக்கில் 27-03-2025 அன்று மாண்பமை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் முடிவில்,


NCTE நிறுவனம் மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் அலுவலகத்திற்கு TET இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளவர்கள், TET யாருக்கெல்லாம் அவசியம் என்பது குறித்து தெளிவான விபரங்களை அளித்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணைக்கு உதவிட மாண்பமை உச்சநீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


UPON hearing the counsel the Court made the following

 O R D E R

1. Heard in part.

2. List on 03rd April, 2025 once again, high on board.

3. In the meanwhile, National Council for Teacher Education (NCTE) shall provide to the office of the learned Attorney General for India all data and information that is sought to facilitate advancement of submissions on the point of the Teachers’ Eligibility Test (TET) being a mandatory qualification for teachers in position although, in the past, NCTE has issued orders granting exemption to a specified class.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


உச்சநீதிமன்றத்தில் TET வழக்கு ஒத்திவைப்பு


 உச்சநீதிமன்றத்தில் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு TET தேவை  வழக்கு 03.04.2025க்கு ஒத்திவைப்பு


 Teacher Eligibility Test required for promotion case in Supreme Court adjourned to 03.04.2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


01.01.2025 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு (2%), ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சுப் பணியாளர்கள் விவரம் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்

 


01.01.2025 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு (2%), ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அமைச்சுப் பணியாளர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள், நாள் : 22-03-2025


Details of Ministerial employees who have passed the Teacher Eligibility Test for promotion to Graduate Teacher (2%) as on 01.01.2025 - Proceedings of the Joint Director of School Education




>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Promotion only for those who have completed TET - Order issued - Proceedings of ADW Officer, Dated: 24-02-2025

 

 

ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்களுக்கு மட்டுமே தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - ஆணை வெளியீடு - புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரின் செயல்முறைகள், நாள்: 24-02-2025


Promotion only for those who have completed the Teacher Eligibility Test to the post of Head Master - Order issued - Proceedings of Pudukkottai District Adi Dravidar and Tribal Welfare Officer, Date: 24-02-2025



ஆதிதிராவிடர் நலத்துறையில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு அவசியம் என்பதை மேற்கோள்காட்டி டெட் முடித்தவர்களுக்கு மட்டுமே தற்காலிக பதவி உயர்வு ஆணை வழங்கப்பட்டது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

Case trial on TET mandatory for promotion completed in Supreme Court - when is the verdict?


பதவி உயர்வுக்கு TET அவசியம் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிறைவடைந்தது - தீர்ப்பு எப்பொழுது?


அதாவது TET பதவி உயர்வு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நிறைவடைந்தது. நீதிபதிகள் உத்தரவுப்படி, வரும் திங்கட்கிழமைக்குள் (03-03-2025) தங்கள் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு NCTE-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


06.03.2025ல் மீண்டும் அமர்வு கூடுகிறது.. அன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படும் தேதி அறிவிக்கப்படலாம்... அநேகமாக ஏப்ரல் 10க்குள் பதவி உயர்வு சார்ந்த வழக்குகள் அனைத்தும் முடிவடையும்..


TET Promotion/Appointment Related Supreme Court Case


- Pending Final Hearing Continuation 


Feb-6


Feb-13


Feb-20


Feb-27


( இன்றும் தீர்ப்பு இல்லை)


 Next Upcoming


 March-6 ( Thursday) அன்று விசாரணை தொடரும்...,


The  hearing for the TET promotion case was completed today in the Supreme Court. The NCTE has been instructed to submit their affidavit by the coming 3-March-2025 (Monday), as directed by the judges.


TET Compulsory for Promotion Case – Details in 3 Forms to file reply on 03.03.2025 – DEE Proceedings

 

 பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு TET கட்டாயம் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பாணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு - 03.03.2025 அன்று நடைபெறும் விசாரணையில் பதிலுரையாக தாக்கல் செய்யும் பொருட்டு, 3 படிவங்களில் விவரங்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 27-02-2025...



A case filed in the Supreme Court challenging the Madras High Court judgment that Teacher Eligibility Test TET is mandatory for teachers for promotion – Details in 3 Forms to file reply on 03.03.2025 – Proceedings of Director of Elementary Education






An appeal filed by the Tamil Nadu government in the Supreme Court has been withdrawn against the Madras High Court Judgment that TET (Teacher Eligibility Test) is not mandatory for minority school teachers



 சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு TET (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு கட்டாயம் இல்லை என்கிற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட  மேல்முறையீட்டு மனு  வாபஸ் 


An appeal filed by the Tamil Nadu government in the Supreme Court has been withdrawn against the Madras High Court Judgment that TET (Teacher Eligibility Test) is not mandatory for minority school teachers.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




வணக்கம்,


சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு TET (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு கட்டாயம் இல்லை என்கிற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட  மேல்முறையீட்டு மனு  வாபஸ் பெறப்பட்டுள்ளது என்கின்ற நிறைவான  செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.


இதனால் தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் பதவி உயர்வு, சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்டவைகளில் இருந்த பல நெருக்கடிகள்  இந்த மனு வாபஸ் மூலம் விலகும் என்பதை அறிவீர்கள்.


இந்நிலையில், ஆசிரியர் பெருமக்களின் நலனை முன்னிறுத்தி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்ட சட்டரீதியிலான  முயற்சிகளின் பலனாக ஏற்பட்டிருக்கும் இந்த சட்டத்தீர்வின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவும் , நன்றி தெரிவிக்கவும் நாளை (20.02.2025) சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் நலன்  காக்கும்  மாண்புமிகு தமிழக முதல்வர், அவர்களை  சந்திக்க  முடிவு செய்து இருக்கிறோம்.


சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்லாமல்,

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கும்,

அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கும், அங்கு பணிபுரியும் ஆசிரியர்,ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் பாதுகாப்பு அரணாக திகழும் அண்ணன் தளபதி அவர்களின் திராவிட மாடல் அரசிற்கு என்றும் தோள் கொடுப்போம்.


என்றும் மக்கள் பணியில்,


இனிகோ இருதயராஜ், எம்எல்ஏ.,


B.Ed., படிப்பை முடிப்பதற்கு முன்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு ஆசிரியர் பணி - TRB க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

 


பி.எட்., படிப்பை முடிப்பதற்கு முன்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு ஆசிரியர் பணி - ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது பி.எட். படிப்பை முடிப்பதற்கு முன்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிஎட் முடிக்காமலேயே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் பணி வழங்க உத்தரவிட்டிருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.


நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், " தமிழக அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பம் கோரி கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 25-ந் தேதி அறிவிப்பு வெளியானது. நானும் விண்ணப்பித்தேன். அந்த தேர்வில் 97 மதிப்பெண் எடுத்தேன்.


பின்னர், கடந்த மே மாதம் 31-ந் தேதி சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடந்தது. இதன் பின்னர் வெளியிடப்பட்ட தேர்ச்சி பட்டியலில் என்னுடைய பெயர் இல்லை. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு விதிகளின்படி எனக்கு இப்பதவி பெற தகுதியில்லை என்று கூறி ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரித்தது. மேலும் தகுதி இல்லாதோர் பட்டியலில் என் பெயர் முதலில் இடம் பெற்று இருந்தது. இந்த பட்டியலை ரத்து செய்து, எனக்கு ஆசிரியர் பணி வழங்க தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று ராஜேஸ்வரி கூறியிருந்தார்.


இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் கதிவரன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறும் போது, "மனுதாரர் ஆசிரியர் தகுதித்தேர்வில் 2017-ம் ஆண்டு தேர்ச்சி பெற்று விட்டார். ஆனால், பி.எட். படிப்பை 2018-ம் ஆண்டுதான் முடித்துள்ளார். அதனால், அவருக்கு பணி பெற தகுதி இல்லை" என்று வாதிட்டார்.


மனுதாரர் ராஜேஸ்வரி தரப்பில் வக்கீல் என்.கவிதா ராமேஸ்வர் ஆஜராகி, '2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையில், 2016-17 கல்வியாண்டில் இறுதியாண்டு படிக்கும் பி.எட். மாணவர்கள் பங்கேற்கலாம் என்றும், பி.எட். தேர்ச்சி பெற்ற பின்னர், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், அதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.


அதன்படி மனுதாரர் தகுதித் தேர்வில் கலந்துகொண்டு 2017-ம் ஆண்டு தேர்ச்சி பெற்றார். ஆனால், பி.எட். படிப்பில் அவர் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தார். அந்த பாடத்திற்கான தேர்வை எழுதி 2018-ம் ஆண்டு பி.எட். பட்டம் பெற்றுவிட்டார்' என்று வாதிட்டார்.


அரசு தரப்பு , மனுதாரர் தரப்பு என இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்தார். அவர் தனது உத்தரவில், "2017-ம் ஆண்டு தகுதி தேர்விலும், 2018-ம் ஆண்டு பி.எட். தேர்விலும் மனுதாரர் தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஆகவே, மனுதாரரை ஆசிரியர் பணியை பெற தகுதியில்லாதவர் என்று கூற முடியாது. மனுதாரரை தகுதியில்லாதவர் பட்டியலில் சேர்க்க எந்த காரணமும் கிடையாது.  எனவே, மனுதாரரின் பெயரை தகுதி பட்டியலில் சேர்க்க வேண்டும். அதன்பின்னர், அவருக்கு பணி வழங்கும் நடவடிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளவேண்டும்" என்று குறிப்பிட்டார்.


பதவி உயர்வுக்கு TET கட்டாயம் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் தேதி குறித்த தகவல்...

 

 பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற வழக்கு 13.09.2024 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது...



 Teacher Elegibility Test mandatory for promotion Case is coming up for hearing in the Supreme Court on 13.09.2024...







 

ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் பெறுவதற்கு (BRTE to BT Conversion) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

 

ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பணி மாறுதல் பெறுவதற்கு (BRTE to BT Conversion) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு - W.P. No. 7639 of 2023 and WP Nos.7796, 7797 and 7799 of 2023...



>>> சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

DATED : 19.08.2024

CORAM

THE HONOURABLE MR. JUSTICE N. ANAND VENKATESH

W.P. No. 7639 of 2023 and WP Nos.7796, 7797 and 7799 of 2023..


7. In the facts of the present case, there is no scope for interfering with the action taken by the respondents in transferring BRTEs to the post of B.T. Assistants for those who were all recruited between 2002 to 2010 and were selected to the respective post before 23.08.2010. The problem arises only in those cases where such appointment/promotion/transfer has been made after 29.07.2011. The learned Government Advocate appearing on behalf of the respondents relied upon the adhoc arrangement that was made under G.O.Ms.52 dated 30.03.2006. This adhoc arrangement that was made will not override the judgment of the Division Bench which categorically holds that any appointment made to the post of B.T.Assistant after 29.07.2011, whether by direct recruitment or promotion or by way of transfer, must necessarily pass TET. In view of the same, when a BRTE is interchanged and transferred as a B.T.Assistant after 29.07.2011, to hold the position of the B.T. Assistant, the concerned candidate must have passed TET.


8. Even though the post of BRTE and B.T.Assistant are interchangeable, it is not as if the same person will be holding a dual post. At any given point of time, the concerned person may be holding the post as BRTE or as B.T.Assistant. Therefore, when the person is adorning the role of BRTE and is intended to be changed as B.T.Assistant, it involves a transfer to the post of B.T.Assistant. Once that happens, automatically the mandate prescribed by the Division Bench will come into operation and for all those transfers made after 29.07.2011, for holding the post of B.T.Assistant, TET becomes mandatory.


9. The above clarification will suffice and the same is to be kept in mind by the official respondents when they undertake the exercise of interchangeability between BRTEs and B.T.Assistants.


10. This Writ Petition is disposed of with the above observation. There shall be no order as to costs. Consequently, the connected miscellaneous petitions are closed.


19.08.2024

10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...



10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...


IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

DATED : 10.07.2024

CORAM :

THE HONOURABLE MR.R.MAHADEVAN, ACTING CHIEF JUSTICE

and

THE HONOURABLE MR. JUSTICE MOHAMMED SHAFFIQ

Writ Petition Nos. 26084, 26133, 27571, 27807, 28291, 32081, 32218, 32698 and 35350 of 2023

and

Writ Miscellaneous Petition Nos. 35331 and 7354 of 2023



>>> உயர்நீதிமன்றத் தீர்ப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 சென்னை உயர்நீதிமன்றத்தில் TET  தேர்ச்சி பெற்று மீண்டும் பணியில் சேர TRB EXAM எழுத வேண்டும் என்ற தமிழக அரசு நிலைப்பாட்டை எதிர்த்து 410 பேர் வழக்கு தொடுத்தனர்.


அந்த வழக்கில் நாங்கள் ஏற்கனவே சீனியாரிட்டி லிஸ்டில் உள்ளோம் மேலும் TET தேர்ச்சி பெற்றுள்ளோம் தற்போதைய முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கழக அரசு வந்தால் TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படும் என்று உறுதி கூறினார்


ஆனால் தற்போது TRB EXAM பணி நியமனத்திற்கு வைக்கப்படுகிறது அதிலிருந்து எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் நேரடியாக TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமனம் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தனர்.


 அந்த வழக்கின் தீர்ப்பு  வழங்கப்பட்டது. அதில் வழக்கு தொடுத்த 400 பேருக்கு பணி நியமனம் செய்வதில் முன் உரிமை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது...


410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் - சென்னை ஐகோர்ட் உத்தரவு...


10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு, தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


போட்டித் தேர்வு மூலம் தேர்வு என்ற அரசாணை அடிப்படையில், தகுதி தேர்வு அறிவிப்பை எதிர்த்து 410 ஆசிரியர்கள் மனு தாக்கல் செய்தனர்.


இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.


இந்நிலையில், 2014 முதல் 2017ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில், 410 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்து, 10 ஆண்டாக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


மனு மீதான விசாரணையின்போது, முந்தைய காலத்தில் துவங்கிய தேர்வு நடைமுறையை கைவிட முடியாது என்றும், போட்டித்தேர்வு மூலம் தேர்வு என்று 2018ம் ஆண்டு முடிவை எதிர்வரும் காலத்தில் அமல்படுத்தியிருக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.


அதனால் 10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு, தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


188 பக்க தீர்ப்பு நகல் TET தேர்ச்சி பெற்றோர்  Seniority இல் உள்ளோர் நீதிமன்றம் சென்ற நிலையில்  410  பேருக்கும் பணி வழங்க வேண்டும் வெயிட்டேஜ் மற்றும் இட ஒதுக்கீட்டு முறையில் நீதிமன்றம் தீர்ப்பு...


23.8.2010க்கு முன்னர் NCTE Norms 2001ன் படி பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு TET இல்லாமல் பதவி உயர்வுக்கு பரிசீலிக்க தெலங்கானா உயர்நீதிமன்றம் தீர்ப்பு...


 23.8.2010க்கு முன்னர் NCTE Norms 2001ன் படி பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு TET - Teachers Eligibility Test இல்லாமல் பதவி உயர்வுக்கு பரிசீலிக்க தெலங்கானா உயர்நீதிமன்றம் தீர்ப்பு Writ Petition No.12410 of 2024...



Telangana High Court Judgment Order to consider promotion without TET for Teachers appointed as per NCTE Norms 2001 prior to 23.8.2010...



>>> தீர்ப்பு நகல் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


29.07.2011க்கு முன்னர் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை - சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு...


 29.07.2011க்கு முன்னர் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை - சென்னை உயர்நீதிமன்றத்தின் Judgment...


W.P.Nos.693 & 695 of 2024

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS

DATED : 11.01.2024



29.07.2011க்கு முன்னர் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு உதவிபெறும் சிறுபான்மை அற்ற பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை என்றும் ஆண்டு ஊதிய உயர்வு (increment) ஊக்க ஊதிய உயர்வு (incentive) தேர்வுநிலை ஊதிய உயர்வு (Selection Grade) ஆகியவை உடனே வழங்கிடவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



>>> Click Here to Download Judgment W.P.Nos.693 & 695 of 2024 - IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS - DATED : 11.01.2024...


பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் (TET Compulsory for Promotion) என்பதற்கு எதிராக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தொடர்ந்துள்ள வழக்கை 25.01.2024க்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம் (The Supreme Court has adjourned to 25.01.2024 the ongoing case of the Tamil Nadu Teachers' Federation against the mandatory Teacher Eligibility Test for Promotion)...


 பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் (TET Compulsory for Promotion) என்பதற்கு எதிராக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தொடர்ந்துள்ள வழக்கை 25.01.2024க்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம் (The Supreme Court has adjourned to 25.01.2024 the ongoing case of the Tamil Nadu Teachers' Federation against the mandatory Teacher Eligibility Test for Promotion)...



>>> Click Here to Download - Diary No.37664 / 2023 - Tamilnadu Aasiriyar Koottani Vs State of Tamilnadu...


பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அவசியம் என்னும் வழக்கு - இன்றைய விசாரணையின் முழு விவரம் - உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன? (Teacher Eligibility Test (TET) Need for promotion case - Full details of today's hearing - What happened in the Supreme Court?)...


  பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அவசியம் என்னும் வழக்கு - இன்றைய விசாரணையின் முழு விவரம் - உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன? (Teacher Eligibility Test (TET)  Need for promotion case - Full details of today's hearing - What happened in the Supreme Court?)...


இன்று (20.11.2023) வழக்கு  உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது உண்மை.


பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவை என்ற என்ற சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதியரசர்கள் கொண்ட பெஞ்ச் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை ஏதும் வழங்கப்படவில்லை 


அதே நேரத்தில் வழக்கு விசாரணைக்கு உகந்தது என விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது 



TET பதவி உயர்வு வழக்கு 


இன்று 20/11/23 உச்சநீதிமன்றத்தில் கோர்ட் எண் எட்டில் நீதிமன்ற அரசர்கள் ஹரிகேசராய் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் தலைமையில் TET EXAM தேர்ச்சி பெற்றோருக்கு பதவி உயர்வு வழங்கல் வழக்கானது வந்தது 


வழக்கு dismiss செய்யப்படவில்லை 


இடைக்கால தடை வழங்கப்படவில்லை 


1.12.2023 அன்று வரவேண்டிய வழக்கு சனிக்கிழமை இரவு பட்டியல் இடப்பட்டு இன்று 20/11/23 எடுத்துக்கொள்ளப்பட்டது 


இனி வரக்கூடிய முடிவை பொருத்தே TET EXAM தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்படுமா ? இல்லையா ? என்பது தெரியவரும்.





*AIFETO..20.11.2023*


*உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த TETவழக்கின் விசாரணைத் தொகுப்பு...*


🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖


*தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:36/2001.*


📕📗📘📙📕📗📘📙📕📗📘📙



*நாம் புலனப் பதிவில் ஏற்கனவே தெரிவித்தபடி உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி TET  சம்பந்தமான வழக்கு இன்று (20.11.2023) விசாரணைக்கு வந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி (TET) பெற்றவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தவர்களும், பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்து அரசு வழக்கறிஞர்களும் அவர்களுடன்  கூடுதல் வழக்கறிஞர்களும் வாதிட்டார்கள். இவ்வழக்கினை இரு அமர்வு நீதியரசர்கள் ஹரிகேஷ் ராய், சஞ்சய் கரோல் ஆகியோர் விசாரித்தார்கள்.*


 *அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் டாக்டர் அபிஷேக் சிங்கி அவர்களுடைய தலைமையில் மூத்த வழக்கறிஞர்களும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சார்பில் வழக்கறிஞர்  கவிதா ராமேஸ்வர்  வாதாடினார்கள்.*


*தமிழ் நாடு அரசு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர்கள்  உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு தடையும் இடைக்காலத் தீர்ப்பும்  வழங்க வேண்டும் என்று வாதிட்டார்கள். ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்புக்கு தடை விதிக்க இயலாது, வழக்கினை முழுவதும் விசாரணை செய்து தீர்ப்பினை  வழங்குவதாக  விசாரணையின் போது தெரிவித்தார்கள்.*


 *தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில் கொள்கை முடிவு எடுத்து பதவி உயர்வு பெற பணி மூப்பு அடிப்படையில்தான் என்பதை கொள்கை முடிவாக வலியுறுத்தியுள்ளார்கள்.... என்பது நமக்கு ஆறுதல் அளிக்கிறது.*


 *இந்த வழக்கில் தமிழக ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள்  (டிட்டோஜாக்) சார்பில்  உச்சநீதிமன்றத்தில் இணைத்துக் கொள்ள  திறமையான மூத்த வழக்கறிஞரை கொண்டு மனு செய்ய  திடமிட்டு இருக்கிறோம்.*


 *எப்படி இருந்தாலும் பதவி உயர்வுக்கு பணிமூப்பு அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு அளிக்க முடியுமென்ற அரசின் கொள்கை முடிவு நமக்கு சாதகமான தீர்ப்பினைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.*


 *மற்றபடி எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம்!.. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்தால் தான் வழக்கிற்கு வலு சேர்க்கும்!.. என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்!..*


*அடுத்த வழக்குவிசாரணை டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.*



 *மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர், மதிப்புமிகு  தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரிடம் அண்ணன் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு பெற்றுள்ள தகவல் தொகுப்பாகும்.*


*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர். AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.*


*மா. நம்பிராஜ், மாநிலத்தலைவர்.*


*அ. வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர்.*


*க. சந்திரசேகர், மாநிலப் பொருளாளர்.*


*தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை, 52,நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.*


பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்னும் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு - முழு விவரம் (Diary No 43850/2023 Filed on 19.10.2023 - Tamil Nadu Govt Appeals Supreme Court Against High Court Verdict Making Teacher Eligibility Test (TET) Compulsory For Promotion - Full Details)...

 

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்னும் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு - முழு விவரம் (Diary No 43850/2023 Filed on 19.10.2023 - Tamil Nadu Govt Appeals Supreme Court Against High Court Verdict Making Teacher Eligibility Test (TET) Compulsory For Promotion - Full Details)...


ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வுக்கு அவசியம் என்னும் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது...


>>> Diary No 43850/2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் பணி நியமன தேர்வில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) - தாள் 2ல் வெற்றி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும் முறை (Calculation of Weightage Marks in Direct Recruitment of Graduate Teachers / Block Resource Center Teacher Educators Appointment Exam who are passed in Teacher Eligibility Test (TET) - Paper 2)...



பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் பணி நியமன தேர்வில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) - தாள் 2ல் வெற்றி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும் முறை (Calculation of Weightage Marks in Direct Recruitment of Graduate Teachers / Block Resource Center Teacher Educators Appointment Exam who are passed in Teacher Eligibility Test (TET) - Paper 2)...


>>> Click Here to Download...


DIRECT RECRUITMENT OF GRADUATE TEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS (BRTE) – 2023


2012 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 5.5 மதிப்பெண் போனஸ்...


2013 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 5 மதிப்பெண் போனஸ்...


2014 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 4.5 மதிப்பெண் போனஸ்...


2017 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 3 மதிப்பெண் போனஸ்...


2019 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 2 மதிப்பெண் போனஸ்...


2022 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 0.5 மதிப்பெண் போனஸ் வழங்கப்படும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு தேவை (TET is Compulsory for Promotion) என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்குத் தொடர்பான சிறப்புச் செய்தி (Special news related to the appeal filed by the Tamil Nadu Teachers' Federation in the Supreme Court against the High Court's judgment requiring Teacher Elegibility Test for promotion)...

 

 

*தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு தேவை (TET is Compulsory for Promotion) என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்குத் தொடர்பான சிறப்புச் செய்தி (Special news related to the appeal filed by the Tamil Nadu Teachers' Federation in the Supreme Court against the High Court's judgment requiring Teacher Elegibility Test for promotion):*


 நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நமது பொதுச் செயலாளர் ஐயா செ. முத்துசாமி Ex.MLC அவர்கள் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு தேர்ச்சி தேவை என்ற சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நபர் அமர்வின் தீர்ப்பினை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரம் மூலம் உயர் நீதிமன்றத்தில் நாம் மேல் முறையீடு செய்திருந்தது அனைவரும் அறிந்ததே.


 பொதுவாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் விசாரணைக்கு விரைவாக வருவது கடினம்.


 எனினும் நமது வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.


இன்றைய விசாரணையின் பொழுது ஏற்கனவே எதிர் தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்ததன் காரணமாக அவர்கள் தரப்பின் வாதத்தையும் நீதிபதிகள் கேட்டனர்.


எதிர் தரப்பு வழக்குரைஞர் உயர்நீதிமன்ற தீர்ப்பில் தமிழ்நாடு அரசின் பதவி உயர்வு தொடர்பான அடிப்படை விதிகளை ரத்து செய்துள்ளனர்.


 அவ்வாறு அடிப்படை விதிகள் ரத்து செய்யப்பட்டதை அரசு ஏற்றுக்கொண்டால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததே அல்ல என்று வாதிட்டார் .


எனவே பதவி உயர்வு தொடர்பான அடிப்படை விதிகளை ரத்து செய்ததை அரசு ஏற்றுக் கொண்டதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


 அதற்கு அரசு தான் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தனிநபரோ, சங்கமோ மேல்முறையீடு செய்திருப்பது விசாரணைக்கு உகந்தது அல்ல என வாதிட்டார்.


 நீதிபதி அவர்கள் உடனடியாக அரசு தரப்பு நிலவரத்தை பதிவு செய்ய கேட்டுக்கொண்டு, தானும் இவ்வழக்கினை முழுமையாக படித்துப் பார்த்து அதன் பின் முழு விசாரணை மேற்கொள்வதாக கூறி வழக்கினை  ஒத்தி வைத்துள்ளார்.


இத்தகவலை உடனடியாக நமது வழக்கறிஞர் நமது பொதுச் செயலாளர் அவர்களிடம் தெரியப்படுத்தி  இந்த விஷயத்தை உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று கல்வித் துறை சார்பில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.


அதன் அடிப்படையில் நமது பொதுச் செயலாளர், மாநில பொருளாளர் மற்றும் மாநில தலைவர்  துணைப் பொதுச் செயலாளர் சாந்தகுமார் ஆகியோர்களை உடனடியாக தொடர்பு கொண்டு வழக்கு விவரங்களை தெரிவித்து உடனடியாக சென்னை சென்று தொடக்கக் கல்வி இயக்குனர், பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் ஆகியோரை சந்தித்து இன்றைய வழக்கின் விசாரணை விவரங்களை தெரிவித்து உடனடியாக அரசு மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்க செய்யவேண்டும் என தெரிவித்து அதற்குண்டான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் .


மேலும் பொதுச்செயலாளர் உடனடியாக மதிப்புமிகு பள்ளிக் கல்வி இயக்குனர் முனைவர் அறிவொளி மற்றும் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் முனைவர் கண்ணப்பன் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வழக்கு நிலவரத்தையும் மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் அவர்களின் வேண்டுகோளையும் உடனடியாக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார்.


 இது சார்பாக வரும் திங்கள் அன்று நேரடியாக அவர்களையும், முதன்மைச் செயலாளரையும் சந்திக்க இருப்பதாக தெரிவித்து நேரம் ஒதுக்கி தர கேட்டுக் கொண்டார் .


தாங்கள் இது விஷயத்தில் உடனடியாக வருகைதரலாம் என்றும் ஏற்கனவே பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் சார்பில் வழக்கு மேல்முறையீடு செய்வதற்கு உண்டான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டதாகவும், அரசு தரப்பில் உடனடியாக வழக்கு மேல்முறையீடு செய்வதற்குண்டான நடவடிக்கை விரைவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்து கொண்டனர்.


இதன் அடிப்படையில் வரும் திங்கள் அன்று நமது பொதுச் செயலாளர் மற்றும் மாநிலப் பொருளாளர் ஆகியோர் பள்ளிக் கல்வி இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்குனர் மற்றும் பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் ஆகியோரை சந்திக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.


 அதற்கு உண்டான ஏற்பாடுகளை மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சாந்தகுமார் செய்து வருகிறார்.


நிகழ்வு தொகுப்பு:


2:27 PM. மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் அவர்கள் நமது ஐயாவை தொடர்பு கொள்ள தொலைபேசியில் அழைப்பு(missed call)


2:31 PM. வழக்கறிஞரின் அழைப்பை பார்த்து ஐயா அவர்கள் உடனடியாக மூத்த வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரம் அவர்களுடன் தொடர்பு கொண்டு வழக்கு விவரங்களை கேட்டு அறிதல். வழக்கறிஞர் உடனடியாக அரசு அப்பீல் செய்ய தேவையான நடவடிக்கையை எடுக்க கேட்டுக் கொள்ளுதல். அதற்காக சென்னை செல்ல வலியுறுத்துதல்.


2:40. பொதுச் செயலாளர் சென்னை செல்ல வேண்டி உள்ள அவசியத்தை மாநிலப் பொருளாளர் உடன் கலந்தாலோசனை செய்தல்


2:45 PM பொதுச்செயலாளர் நாமக்கல் அலுவலக தலைமை நிலைய செயலாளர் கருப்பண்ணன் அவர்களுடன் தொடர்பு கொண்டு சென்னை செல்ல வேண்டியதால் திங்கள் கிழமை மகிழுந்து ஓட்டிச் செல்ல வசதியாக விடுமுறை எடுக்க வலியுறுத்துதல். அதற்கு அவர் ஒப்புதல் அளித்தல்.


2:45PM மாநிலப் பொருளாளர் உடன் கலந்து ஆலோசனை செய்து சென்னை செல்ல தயாராகும்படி கேட்டுக் கொள்ளுதல்


2:47.PM  சென்னை சாந்தகுமார் அவர்களை பொதுச் செயலாளர் தொடர்பு கொண்டு திங்கட்கிழமை தாங்கள் வருவதாகவும் அன்றைய தினம் இயக்குனர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் வரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு வலியுறுத்துதல்


2:50PM மேற்கண்ட அனைத்து விஷயங்களையும் மாநில தலைவர் அவர்களுடன் பொதுச் செயலாளர் பகிர்ந்து கொள்ளுதல். அப்பொழுது உடனடியாக இயக்குனர் இருவரையும் தொடர்பு கொள்ள முடிவாற்றுதல்.


2:54PM பொதுச் செயலாளர் அவர்கள் மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வழக்கு விவரங்களை தெரிவித்து திங்கள் வருவதாக தகவல் கூறுதல். மதிப்புமிகு இயக்குனர் அவர்கள் வாருங்கள் என ஒப்புதல் தருதல்.


2:58PM பொதுச் செயலாளர் மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் முனைவர் கண்ணப்பன் அவர்களை தொடர்பு கொண்டு வழக்கு விபரங்களை தெரிவித்து திங்கட்கிழமை வருவதாக தகவல் தெரிவித்தல். இயக்குனர் அவர்கள் அவசியம் வாருங்கள் என ஒப்புதல் தருதல்.


3:03PM பொதுச் செயலாளர் மீண்டும் மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் அவர்களிடம் தொடர்பு கொண்டு நடந்த விஷயங்களை கூறுதல். விரைந்து அரசை அப்பீல் செய்ய வலியுறுத்துமாறு வழக்கறிஞர் பொதுச்செயலாளர் ஐயாவை கேட்டுக் கொள்ளுதல்.


03:06 பொதுச் செயலாளர் மாநில தலைவருடன் தொடர்பு கொண்டு நடந்த விஷயங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டு திங்கட்கிழமை சென்னை சென்று திட்டமிட்டபடி தொடக்கக் கல்வி இயக்குனர், பள்ளிக்கல்வி இயக்குனர், பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளரை சந்தித்து வழக்கறிஞர் கூறிய ஆலோசனைப்படி அரசை மேல்முறையீடு செய்ய வலியுறுத்த உள்ளதை பகிர்ந்து கொள்ளுதல்


3:12PM பொதுச்செயலாளர் அய்யா அவர்கள் மீண்டும் சாந்தகுமார் அவர்களை தொடர்பு கொண்டு அனைத்து விவரங்களையும் கூறி திங்கள் வருவதை உறுதி செய்தல்


குறிப்பு: நமது நல்ல நேரம் இன்று மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் அவர்கள் தொடர்பு கொண்டதிலிருந்து இயக்குனர்கள், மாநிலத் தலைவர், மாநில பொருளாளர், சாந்தகுமார் ஆகியோர்களை தொடர்ந்து பொதுச்செயலாளர் அய்யா அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் போதெல்லாம் உடனுக்குடன் அவர்களுக்கு தொடர்பு கிடைத்து வழக்கு சம்பந்தமாக விரிவான ஆலோசனை நடத்தியது இன்றைய தினம் சிறப்பாக அமைந்தது என்றால் மிகையல்ல.


வெற்றி நமதே என்ற நம்பிக்கையுடன்...

மாநில அமைப்பு, 

*தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி*






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக்கல்வித்துறைக்கு சாதனையாளர் விருது வழங்கியது இந்திய தனித்துவ அடையாள ஆணையம்

  தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கு சாதனையாளர் விருது வழங்கியது ஒன்றிய அரசின் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் UIDAI The Union Government...