கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மருத்துவ விடுப்பு விண்ணப்பம் மற்றும் மருத்துவர் வழங்கும் விடுப்பு / விடுப்பு நீட்டிப்பு மற்றும் உடற்தகுதி சான்றிதழ் (Application for Medical Leave and Leave / Extension of leave and fitness certificate from doctor)...

 


>>> மருத்துவ விடுப்பு விண்ணப்பம் மற்றும் மருத்துவர் வழங்கும் விடுப்பு / விடுப்பு நீட்டிப்பு மற்றும் உடற்தகுதி சான்றிதழ் (Application for Medical Leave and Leave / Extension of leave and fitness certificate from doctor)...



>>> மருத்துவர் வழங்கும் விடுப்பு / விடுப்பு நீட்டிப்பு மற்றும் உடற்தகுதி சான்றிதழ் (Medical Leave / Extension of leave and fitness certificate from doctor)...



>>> மருத்துவ விடுப்பு விண்ணப்பம் மற்றும் மருத்துவர் வழங்கும் விடுப்பு / விடுப்பு நீட்டிப்பு மற்றும் உடற்தகுதி சான்றிதழ் - மாதிரி 2 (Application for Medical Leave and Leave / Extension of leave and fitness certificate from doctor - Model 2)...


FORM : 4 [See Rule 19] MEDICAL CERTIFICATE FOR LEAVE OR EXTENSION OF LEAVE OR  COMMUTATION OF LEAVE &  FORM : 5 [See Rule 24 (3)] MEDICAL CERTIFICATE OF FITNESS TO RETURN TO DUTY...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




+1, +2 செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் மாற்றம் - 01.03.2023 முதல் 09.03.2023 வரை நடைபெறும் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு (Change of Dates of +1, +2 Practical Examinations - 01.03.2023 to 09.03.2023 - Directorate of Government Examinations Notification)...


>>> +1, +2 செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் மாற்றம் - 01.03.2023 முதல் 09.03.2023 வரை நடைபெறும் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு (Change of Dates of +1, +2 Practical Examinations - 01.03.2023 to 09.03.2023 - Directorate of Government Examinations Notification)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




பள்ளி மாணவர்கள் செய்முறைத் தேர்வு - புதிய தேதி அறிவிப்பு...

பொதுத்தேர்வு எழுத உள்ள 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் வரும் மார்ச் 1 முதல் 9ம் தேதி வரை நடைபெறும். 

ஏற்கனவே மார்ச் 6 முதல் 10ம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில் தேதி மாற்றம். 
- தேர்வுத்துறை.

பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்கள் தட்கல் முறையில் விண்ணப்பித்தல் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதம் (Individual Private Candidates Writing Public Examination Applying in Tatkal Mode - Letter from Director of Government Examinations)...


>>> பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்கள் தட்கல் முறையில் விண்ணப்பித்தல் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கடிதம் (Individual Private Candidates Writing Public Examination Applying in Tatkal Mode - Letter from Director of Government Examinations)...



>>> செய்திக்குறிப்பு (Press Release)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு (10th, 11th and 12th Standard Public Examination Result Release Dates - School Education Minister Announced)...

 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு (10th, 11th and 12th Standard Public Examination Result Release Dates - School Education Minister Announced)...


12ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே 5ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே 17ஆம் தேதியும் வெளியாக உள்ளதாக தகவல். 


11ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே 19ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) விதிகள் 2023 - அரசாணை நிலை எண்: 14, பள்ளிக்கல்வித்துறை, நாள்: 13-01-2023 & தேவையான படிவங்கள் அரசிதழில் வெளியீடு [TN Private Schools (Regulation) Rules 2023 - G.O.Ms.No.14, School Education (Ms), Dated: 13-01-2023 & Needed Forms - Gazette Published]...



>>> தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) விதிகள் 2023 - அரசாணை நிலை எண்: 14, பள்ளிக்கல்வித்துறை, நாள்: 13-01-2023 அரசிதழில் வெளியீடு [TN Private Schools (Regulation) Rules 2023 - G.O.Ms.No.14, School Education (Ms), Dated: 13-01-2023 - Gazette Published]...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இன்றைய (31-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

இன்றைய (31-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஜனவரி 31, 2023



சாமர்த்தியமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கால்நடை சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாகனத்தில் சிறு சிறு மாற்றங்களைச் செய்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : இழுபறிகள் குறையும்.


பரணி : முன்னேற்றம் ஏற்படும். 


கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும். 

---------------------------------------



ரிஷபம்

ஜனவரி 31, 2023



பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். வியாபார மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில விஷயங்களின் மூலம் மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். உத்தியோக ரீதியான பணிகளில் உழைப்பு அதிகரிக்கும். அதிகார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். தனித்து செயல்படுவதில் ஆர்வமும், ஈடுபாடும் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் 



கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.


ரோகிணி : உழைப்பு அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : ஈடுபாடு ஏற்படும்.

---------------------------------------



மிதுனம்

ஜனவரி 31, 2023



எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். உணவு சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபார ரீதியான தொழிலில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் மாற்றம் உண்டாகும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பங்களும், மன அமைதியின்மையும் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



மிருகசீரிஷம் : சேமிப்பு குறையும். 


திருவாதிரை : நெருக்கம் அதிகரிக்கும். 


புனர்பூசம் : அமைதியின்மையான நாள்.

---------------------------------------



கடகம்

ஜனவரி 31, 2023



முதலீடு தொடர்பான விஷயங்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சிப் பெறுவீர்கள். குத்தகை தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரம் சார்ந்த பணிகளில் எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வரவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென் மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



புனர்பூசம் : லாபம் அதிகரிக்கும். 


பூசம் : ஆதாயம் உண்டாகும். 


ஆயில்யம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------



சிம்மம்

ஜனவரி 31, 2023



தொழில் தொடர்பான பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். முன்யோசனையுடன் செயல்பட்டு சாதகமான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். உத்தியோகத்தில் திறமைக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். அறிவியல் சார்ந்த துறைகளில் ஈடுபாட்டுடன் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்களும், விரயமும் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



மகம் : அனுபவம் ஏற்படும்.


பூரம் : வாய்ப்பு கிடைக்கும்.


உத்திரம் : விரயம் உண்டாகும்.

---------------------------------------



கன்னி

ஜனவரி 31, 2023



வெளியூர் தொடர்பான வர்த்தகத்தில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். வேளாண்மை தொடர்பான விஷயங்களில் மேன்மையான சூழல் நிலவும். கௌரவப் பொறுப்புகளின் மூலம் பலதரப்பட்ட மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். தெளிவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திரம் : முன்னேற்றமான நாள்.


அஸ்தம் : தேடல் உண்டாகும்.  


சித்திரை : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------



துலாம்

ஜனவரி 31, 2023



பேச்சுக்களில் நிதானம் வேண்டும். வியாபாரம் சார்ந்த முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். செயல்பாடுகளில் திருப்தியற்ற மனநிலையினால் குழப்பம் உண்டாகும். மருந்து சார்ந்த விஷயங்களில் ஆலோசனை பெறவும். உலக நடைமுறைகளின் மூலம் மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



சித்திரை : சிந்தித்து செயல்படவும். 


சுவாதி : குழப்பமான நாள்.


விசாகம் : மாற்றங்கள் ஏற்படும். 

---------------------------------------



விருச்சிகம்

ஜனவரி 31, 2023



வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் அதிகரிக்கும். மனதில் புதிய துறை சார்ந்த தேடல் மேம்படும். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். தவறிய சில பொருட்களை பற்றிய விவரங்களைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். வெளிப்படையான குணத்தின் மூலம் பலருடைய அறிமுகம் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



விசாகம் : தேடல் மேம்படும்.


அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.


கேட்டை : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------



தனுசு

ஜனவரி 31, 2023



உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். எதிர்பாலின மக்களின் ஆதரவு கிடைக்கும். நம்பிக்கையானவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். மருத்துவத் துறைகளில் திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். மறதி குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மூலம் : மேன்மையான நாள்.


பூராடம் : ஆதரவு கிடைக்கும்.


உத்திராடம் : அறிவு வெளிப்படும்.

---------------------------------------



மகரம்

ஜனவரி 31, 2023



கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகளும், எண்ணங்களும் உண்டாகும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் நன்மை ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபிட்சம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை: மேற்கு 


அதிர்ஷ்ட எண்: 2


அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை 



உத்திராடம் : அன்பு அதிகரிக்கும்.


திருவோணம் : எண்ணங்கள் கைகூடும்.


அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------



கும்பம்

ஜனவரி 31, 2023



மாணவர்களுக்கு மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்பும், அலைச்சலும் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அவிட்டம் : பிரச்சனைகள் குறையும். 


சதயம் : லாபம் அதிகரிக்கும். 


பூரட்டாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

---------------------------------------



மீனம்

ஜனவரி 31, 2023



பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய முயற்சிகளில் சாதகமான முடிவு உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கற்பனை சார்ந்த துறையில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


உத்திரட்டாதி : ஆர்வமின்மை குறையும். 


ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.01.2023 - School Morning Prayer Activities...

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.01.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: நடுவுநிலைமை


குறள் : 114

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்ப படும்.


பொருள்:

ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்


பழமொழி :

Failures are stepping stones to success.


தோல்வியே வெற்றிக்கு முதல் படி. 


இரண்டொழுக்க பண்புகள் :


1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் நாம் நமது கடமையை தவறாமல் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். 


2. கல்லடி பட்டாலும் கனி தரும் மரங்கள் நாம் பலன் எதிர் பாராமல் பணி செய்ய ஒரு நல் உதாரணம்.


பொன்மொழி :


உணர்ச்சியுள்ள மனிதன் பிறரைத் திருத்துவதில் நேரத்தைச் செலவு செய்கிறான். ஆனால், அறிவுள்ள மனிதனோ தன்னைத் திருத்திக் கொள்வதில் கவனத்தைச் செலுத்துகிறான்.


பொது அறிவு :


1. புனுகு என்னும் நறுமணம் எந்த விலங்கில் இருந்து எடுக்கப்படுகிறது ?


 புனுகுப் பூனை. 


 2. சங்கின் இரண்டு வகை தெரியுமா?


 வலம்புரி , இடம்புரி.


English words & meanings :


weather - climate. noun. வானிலை. பெயர்ச் சொல். whether - if. expressing a doubt . conjunction. இரண்டில் ஒன்று. இணைப்புச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :


சின்ன வெங்காயத்தில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது ஆக்ஸினேற்ற அழுத்தத்தில் இருந்து நம் செல்களை பாதுகாக்கிறது. உடலில் ஏற்படும் அழற்சி க்கு எதிராக செயல்படுகிறது.

இதில் குவர்செடின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டுள்ளது. இதனால் இதய நோய்கள், புற்றுநோய்கள் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு எதிராக செயல்படுகிறது.


NMMS Q


பாக்டீரியாவில் புரதச்சேர்க்கை கீழ்கண்ட எந்த வகை ரிபோசோம்களால் நடைபெறும்? 


 a) 70s. b) 80s. c) 90s. d) 85s. 


 விடை: 70s



நீதிக்கதை


ஓநாயும் ஆடும்


ஒரு காட்டில் ஒரு ஓநாயும். ஒரு வெள்ளாடும் இருந்தது. கொழுத்த அந்த ஆட்டின் மீது ஓநாய்க்கு எப்போதும் ஒரு கண். அதை அடித்து சாப்பிடவேண்டும் என்று. அதற்காக பலமுறை ஓநாய் அந்த ஆட்டை சண்டைக்கு இழுத்தது. ஓநாயின் குணம் அறிந்த ஆடு ஓநாயிடம் இருந்து தன் புத்திசாலித்தனத்தால் தப்பிவந்தது.


ஒரு சமயம் ஒரு நதியின் நடுவில் குறுகலான ஒரு பாலத்தில் ஆடு சென்றது. அப்பாலம் ஒரு நபர் சென்றால் ஒருவர் எதிரே வர முடியாத அளவு குறுகலானது. பாலத்தில் ஆடு வருவதைக்கண்டு, பெரும்பகுதியை ஆடு கடந்ததும், ஓநாய் அந்த முனையிலிருந்து ஆட்டை நோக்கி வந்தது. இப்போது ஆடும், ஓநாயும் எதிரெதிரே வந்துவிட்டன.


ஆடு ஓநாயிடம் நான் கிட்டத்தட்ட பாலத்தைக் கடந்துவிட்டேன். சற்று நீங்கள் பின் சென்று எனக்கு இடம் கொடுத்தால் நான் சென்றுவிடுவேன் என்றது. இதுதான் சரியான தருணம் என எண்ணி ஓநாய் ஆட்டை வீண் சண்டைக்கு இழுத்தது. நான் முட்டாள்களுக்கு இடம் தர மாட்டேன். நீயே எனக்கு இடம் கொடுத்துப் பின்னால் போ என்றது.


ஓநாயின் நோக்கம் அறிந்த ஆடு, நான் முட்டாள்களுக்கு முதல் இடம் தருவேன் என தான் பின்னால் சென்று ஓநாய் பாலத்தை கடக்கச் செய்தது. ஓநாயும் தன் செயல் இம்முறையும் பலிக்கவில்லையே என சென்றுவிட்டது.


ஆடு தன் புத்திசாலித்தனத்தால் ஓநாயை முட்டாள் என மறைமுகமாக சொன்னதுடன், கெட்டவர்களுடன் வீண்வாதம் கூடாது என்று உணர்ந்ததால் உயிர் பிழைத்தது. 



இன்றைய செய்திகள்


31.01.2023


* ஜி20 கல்வி செயற்குழு மாநாடு: சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை.


* இணையதளம் மூலமாக மின்கட்டணம் செலுத்தும்போது போலி ரசீது வழங்கப்படுவதைத் தடுக்கஒரே மாதிரியான ரசீது வழங்கும் முறையை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.


* வானிலை முன்னறிவிப்பு: பிப்ரவரி 1-ல் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.


* பனிப்பொழிவு காரணமாக சுவிட்சர்லாந்து போல் காட்சியளிக்கும் அருணாச்சலப் பிரதேசம்.


* சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க லடாக் எல்லையில் 135 கி.மீ.தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.


* ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.


* உலக கோப்பை ஹாக்கி போட்டி: பெல்ஜியத்தை வீழ்த்தி 3-வது முறையாக ஜெர்மனி அணி கோப்பையை வென்றது.


Today's Headlines


* Due to G20 Executive committee Conference , Drones were banned for 3 days in Chennai


 * The Electricity Board has introduced a uniform receipt system to prevent fake receipts from being issued while paying electricity bill online.


 * Weather forecast: Heavy rain likely in 11 districts of Tamil Nadu on February 1.


*  Arunachal Pradesh looks like Switzerland due to snowfall.


 * To overcome the threat of China, construction of a New High Way of length 135 Km has been started in the Ladakh border


* A prize money of Rs 5 crore has been announced for the Indian women's team who won the title of champion in the Junior 20 Over Cricket World Cup.


* Hockey World Cup: Germany win the  World Cup for the 3Rd time after defeating Belgium.



தமிழ்நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட இ.ஆ.ப. அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அரசாணை (G.O.Rt.No.344, Dated: 30-01-2023 ) வெளியீடு...

 

>>> தமிழ்நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட இ.ஆ.ப. அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அரசாணை (G.O.Rt.No.344, Dated: 30-01-2023 ) வெளியீடு...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.


தமிழ்நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு


நெல்லை ஆட்சியராக கார்த்திகேயன், தென்காசி ஆட்சியராக ரவிச்சந்திரன், கன்னியாகுமரி ஆட்சியராக ஸ்ரீதர் நியமனம் - தமிழ்நாடு அரசு



>>>   பள்ளிக் கல்வித் துறை சிறப்புச் செயலாளராக திருமதி.ச.ஜெயந்தி இ.ஆ.ப. & ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக திருமதி. P.ஸ்ரீ வெங்கடபிரியா இ.ஆ.ப. ஆகியோர் நியமனம்...



தமிழ்நாட்டில்


*திருநெல்வேலி - *கார்த்திகேயன்*


*தென்காசி- *ரவிச்சந்திரன்*


*குமரி-ஸ்ரீதர்*


*விருதுநகர்-ஜெயசீலன்*


*கிருஷ்ணகிரி- தீபக் ஜேக்கப்*


*விழுப்புரம்-பழனி*


*பெரம்பலுார்-கற்பகம்*


*தேனி-சஜ்ஜீவனா*


*கோவை-கிராந்திகுமார்*


*திருவாரூர்-சாருஸ்ரீ*


*மயிலாடுதுறை- மகாபாரதி*


*ஆகிய 11 மாவட்ட ஆட்சியர்கள் பணியிடமாற்றம் மூலம் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.*


*மேலும் தொழிலாளர் நலத்துறை திறன் மேம்பாட்டுத்துறை மேலாளராக ஆகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.*


*ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக வேங்கடப்ரியா நியமிக்கப்பட்டுள்ளார்.*


*விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலராக மேகநாத ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.*


*இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.*


*கோவை வணிகவரித்துறை இணை ஆணையராக காயத்ரி கிருஷ்ணன்,*


*தொழில்நுட்ப கல்வி இயக்குனராக லலிதா,*


*பள்ளி கல்வித்துறை சிறப்பு செயலராக ஜெயந்தி,* 


*சாலை மேம்பாட்டுத்திட்ட இயக்குனராக கதிரவன்,*


*கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனராக லெட்சுமி,*


*தொழில்த்துறை, முதலீடு மற்றும் வணிகத்துறை சிறப்பு செயலராக பூஜா குல்கர்னி,*


*திட்ட மேம்பாட்டுத்துறை சிறப்பு செயலராக ராஜசேகர்,* 


*வருவாய் நிர்வாக இணை ஆணையராக சிவராசு,* 


*ஊரக மேம்பாடு, மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையராக சகாய் மீனா,*


*ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல செயலராக லட்சுமிப்ரியா,*


*தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் துறை செயலராக குமரகுருபரன்,* 


*நீர்பாசனம், விவசாயம் நவீனபடுத்துதல் திட்ட கூடுதல் செயலராக ஜவஹர்,* 


*நில நிர்வாக ஆணையராக சுப்புலெட்சுமி,*


*ஊரக மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குனராக பிரசாந்த்,*


*தகவல் மற்றும் பொதுமக்கள் தொடர்பு இயக்குனராக மோகன்,*


*தொழில்த்துறை வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி இயக்குனராக விஷ்ணு* 


*உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.*


பள்ளிக் கல்வித் துறை சிறப்புச் செயலாளராக திருமதி.ச.ஜெயந்தி இ.ஆ.ப. & ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக திருமதி. P.ஸ்ரீ வெங்கடபிரியா இ.ஆ.ப. ஆகியோர் நியமனம் (Mrs. S.Jayanthi I.A.S. Appointed as Special Secretary, School Education Department & Mrs.P.Sree Venkatapriya I.A.S. as Controller of Examination of Teachers'Recruitment Board )...



 பள்ளிக் கல்வித் துறை சிறப்புச் செயலாளராக திருமதி.ச.ஜெயந்தி இ.ஆ.ப. & ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக திருமதி. P.ஸ்ரீ வெங்கடபிரியா இ.ஆ.ப. ஆகியோர் நியமனம் (Mrs. S.Jayanthi I.A.S. Appointed as Special Secretary, School Education Department & Mrs.P.Sree Venkatapriya I.A.S. as  Controller of Examination of Teachers'Recruitment Board )...








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் ஊதியப்பிரச்சனைக்கு இரண்டு நாட்களில் தீர்வு காணப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் (Salary issue of Government Aided Schools Teachers will be resolved in two days - Minister Anbil Mahesh Poyyamozhi said)...

 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் ஊதியப்பிரச்சனைக்கு இரண்டு நாட்களில் தீர்வு காணப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் (Salary issue of Government Aided Schools Teachers will be resolved in two days - Minister Anbil Mahesh Poyyamozhi said)...







2022-ஆம் ஆண்டு கல்வி நிலை குறித்த ‘ஏசா் (ASER)’ ஆய்வறிக்கை (Annual Status of Education Report (Rural) 2022 )...



>>> 2022-ஆம் ஆண்டு கல்வி நிலை குறித்த ‘ஏசா் (ASER)’ ஆய்வறிக்கை (Annual Status of Education Report (Rural) 2022 )...


(தமிழ்நாடு குறித்த அறிக்கை பக்க எண்: 217-222)


தினமணி தலையங்கம்...


தேசிய அளவில் 2005-ஆம் ஆண்டு முதல் கல்வி நிலை குறித்த ‘ஏசா்’ ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. 3 முதல் 16 வரையிலான குழந்தைகளின் பள்ளிச் சோ்க்கை, படிக்கும் திறன், கணிதத் திறன் உள்ளிட்டவை மாவட்ட, மாநில, தேசிய அளவில் இந்த அறிக்கையில் ஆய்வு செய்யப்படுகிறது. தொடா்ந்து பல மாதங்கள் மூடிக்கிடந்த பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பாதிப்பின் அளவைக் கணிக்கும் இந்த முதலாவது ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.


சமீபத்தில் 2022-ஆம் ஆண்டுக்கான கல்வி நிலை குறித்த ‘ஏசா்’ அறிக்கை வெளிவந்திருக்கிறது. கொள்ளை நோய்த்தொற்று காரணமாக கடந்த நான்கு ஆண்டுகள் தடைபட்டிருந்த அந்த அறிக்கை, பல புதிய வெளிச்சங்களைத் தருகிறது. கற்கும் திறனில் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று இந்தியாவில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய அளவில் நடத்தப்பட்ட இந்த அறிக்கை பதிவு செய்கிறது. இந்தியாவிலுள்ள 616 மாவட்டங்களில் உள்ள 19,000 கிராமங்களில் ஏழு லட்சத்துக்கும் அதிகமான மாணவா்களை ஆய்வு செய்து, கிராமப்புற கல்வி நிலை குறித்து 2022 ‘ஏசா்’ அறிக்கை பதிவு செய்திருக்கிறது. 2018-க்கும் 2022-க்கும் இடையிலான நான்கு ஆண்டுகளில் பரவலாக அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை அதிகரித்திருக்கிறது. படிக்கும் திறனும், கணிதத் திறனும் பெரும்பாலான மாநிலங்களில் குறைந்திருக்கிறது.


மிஸோரம், ஜம்மு - காஷ்மீா் மாநிலங்களைத் தவிர, ஏனைய அனைத்து மாநிலங்களிலும் 6 முதல் 14 வரையிலான குழந்தைகளின் கிராமப்புற அரசுப் பள்ளி சோ்க்கை அதிகரித்திருக்கிறது. 2018 போலவே மிக அதிகமான அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கையில் மேற்கு வங்கம் முதலிடம் வகிக்கிறது. 2018-இல் ஏழு மாநிலங்களில் மாணவா் சோ்க்கை 50 %-க்கும் குறைவாக இருந்தது. 2022-இல் மேகாலயம், மணிப்பூா் இரண்டு மாநிலங்களில் மட்டுமே அந்த நிலைமை. கேரளத்திலும், உத்தர பிரதேசத்திலும் மாணவா் சோ்க்கை கணிசமாக அதிகரித்திருக்கின்றன. தேசிய அளவில் 65.6 % (2018) இருந்த மாணவா் சோ்க்கை, 2022-இல் 72.9 %-ஆக அதிகரித்திருக்கிறது.


2018 வரை தொடா்ந்து அதிகரித்து வந்த தனியாா் பள்ளிகள் மீதான மோகம் திடீரெனக் குறைந்திருப்பதை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. 2018-இல் 30.9 %-ஆக இருந்த கிராமப்புற தனியாா் பள்ளிகளுக்கான வரவேற்பு, 2022-இல் 25.1 %-ஆகக் குறைந்திருக்கிறது. மிஸோரம், ஜம்மு - காஷ்மீா், மத்திய பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூா் மாநிலங்களில் தொடா்ந்து தனியாா் பள்ளிகளுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதையும் குறிப்பிடுகிறது 2022 ‘ஏசா்’ அறிக்கை.


2014 முதல் 2018 வரை கற்கும் திறன் அதிகரித்து வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென்று ஒரு வீழ்ச்சி தெரிகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்தாலும்கூட, 3, 5, 8 வகுப்புகளில் படிக்கும் மாணவா்களின் வாசிக்கும் திறனும், கணிதத் திறனும் பரவலாகவே எல்லா மாநிலங்களிலும் குறைந்திருப்பதை சுட்டுக்காட்டுகிறது அறிக்கை.


2-ஆம் வகுப்பு பாடங்களை படிக்க முடிந்த 3-ஆம் வகுப்பு மாணவா்களின் எண்ணிக்கை 24 மாநிலங்களில் குறைந்திருக்கிறது. அதேபோல, 5-ஆம் வகுப்பு 8-ஆம் வகுப்பு மாணவா்களில் 2-ஆம் வகுப்புப் பாடத்தை படிக்கத் தெரிந்தவா்களின் எண்ணிக்கையும் குறைந்திருப்பது தெரிகிறது. படிக்கும் திறனுடன் ஒப்பிடும்போது, கணிதத் திறன் அந்த அளவுக்கு மோசமில்லை.


இன்னொரு குறைபாட்டையும் அறிக்கை தெரிவிக்கிறது. அரசுப் பள்ளி மாணவா்களின் கற்கும் திறன் குறைந்திருப்பது போலவே, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் தனியாக கட்டணம் செலுத்தி பயிற்சி எடுத்துக்கொள்வது அதிகரித்திருக்கிறது. 22 மாநிலங்களில் தனிப் பயிற்சி ஆசிரியா்களும் (டியூஷன்), தனியாா் பயிற்சி நிலையங்களும் அதிகரித்திருப்பதை அறிக்கை கூறுகிறது. ஐந்து மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட மாணவா்கள் கட்டணம் செலுத்தி தனிப் பயிற்சி பெறுகிறாா்கள் என்றும், 73.9 % அரசுப் பள்ளி மாணவா்கள் மேற்கு வங்கத்தில் தனிப் பயிற்சி எடுத்துக் கொள்கிறாா்கள் என்றும் தெரிவிக்கிறது அறிக்கை.


கிராமப்புறங்கள் உள்பட எல்லா பகுதிகளிலும் இணையவழிக் கல்வி சென்றடைந்திருக்கிறது. சமநிலையிலான தொழில்நுட்ப வசதி ஆரம்பகட்டத்தில் இணையவழி கட்டமைப்புக்குத் தடையாக இருந்தது மாறி, அந்த வழிமுறை குக்கிராமங்கள் வரை பரவலாக இருப்பதாக தெரிவிக்கிறது அறிக்கை. கொள்ளை நோய்த்தொற்றுக்கு முன்பு 36 % மட்டுமே குடும்பங்களில் இருந்த கைப்பேசிகளின் எண்ணிக்கை 2022-இல் 74 %-ஆக அதிகரித்திருக்கிறது. ‘ஏசா்’ ஆய்வாளா்கள் எடுத்த புள்ளிவிவரத்தின்படி, 10-இல் 9 குடும்பங்களில் கைப்பேசிகளும், இணைய இணைப்பும் காணப்பட்டதாக தெரிகிறது.


பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால் பெரிய அளவில் மாணவா் சோ்க்கை குறைந்து, பள்ளிக்கூடங்கள் மூடப்படும் என்கிற அச்சத்தைப் பொய்யாக்கி அரசுப் பள்ளிகளிலும், தனியாா் பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கை அதிகரித்திருக்கிறது. 2018-இல் 66 %-ஆக இருந்த அரசுப் பள்ளிகளின் பங்கு, 73 %-ஆக அதிகரித்திருக்கிறது. 2022-இல் பள்ளிக்கு வராத பெண் குழந்தைகளின் விகிதம் இரண்டு சதவீதம் அளவில் மட்டுமே என்பது அறிக்கை குறிப்பிடும் இன்னொரு முக்கியமான தகவல்.


‘ஏசா்’ அறிக்கை நம்பிக்கை அளிக்கிறது. அதே நேரத்தில், கிராமப்புற அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மட்டுமல்லாமல், கற்பிக்கும் திறனும் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே மாணவா் சோ்க்கையால் வருங்காலத் தலைமுறை பயன் அடையும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பிப்ரவரி - 2023 மாதத்தில் அகத் தணிக்கை (Internal audit) மேற்கொள்ளப்பட உள்ள பள்ளிகளின் பட்டியல் வெளியீடு (Publication of list of schools to be conducted for internal audit in February - 2023)...



>>> பிப்ரவரி - 2023 மாதத்தில் அகத் தணிக்கை (Internal audit) மேற்கொள்ளப்பட உள்ள பள்ளிகளின் பட்டியல் வெளியீடு (Publication of list of schools to be conducted for internal audit in February - 2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வலைதள முகவரி (Website address to check if Aadhaar number is linked with Electricity Board connection number)...



மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வலைதள முகவரி (Website address to check if Aadhaar number is linked with Electricity Board connection number)...


 மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ம் தேதி கடைசி நாள் ஆகும். இதன்படி ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன. 


இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. 


https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை அளித்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்திய ஆட்சிப் பணி - ஐ.ஏ.எஸ். (IAS - Indian Administrative Service) பணிநிலை என்பது என்ன?

 


இந்திய ஆட்சிப் பணி - ஐ.ஏ.எஸ். (IAS - Indian Administrative Service) பணிநிலை என்பது என்ன?


அரசு என்பது ஒரு அறக்கட்டளை மாதிரி. அரசின் அதிகாரிகள்தான், அந்த அறக்கட்டளை நிர்வாகிகள். அந்த இரண்டுமே மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும் என்று ஒரு அறிஞர் கூறியுள்ளார்.


ஐ.ஏ.எஸ். அதிகாரி


இந்தியாவின் உயர்ந்த ஆட்சிப் பணி அதிகாரிதான் ஐ.ஏ.எஸ். அதிகாரி எனப்படுகிறார். ஆங்கிலேயர் காலத்தில் ஐ.சி.எஸ் (Indian Civil Service) என்று இருந்தது, சுதந்திர இந்தியாவில் IAS (Indian Administrative Service) என்று பெயர் மாற்றப்பட்டது.


இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தலைமை நிர்வாகப் பதவிகளை வகிக்கிறார்கள். சுருக்கமாக சொல்லப்போனால், அரசு இயந்திரத்தை தலைமையேற்று இயக்குபவர்கள் இவர்களே.


அரசு என்பது வேறு. அரசு இயந்திரம் என்பது வேறு. ஏனெனில், ஆட்சிக்கு வருபவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். எனவே, அரசு அவ்வப்போது மாறும். ஆனால், அரசு இயந்திரம் மாறாது. அது, எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டே இருக்கும். ஒரு அரசாங்கம் (Ministry) எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதுதான் அரசு இயந்திரம்.


ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, மத்திய அரசு அல்லது மாநில அரசு ஆகிய இரண்டிலும் பணியமர்த்தப்பட முடியும். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மத்திய அரசில் பணியமர்த்தப்படுவார் மற்றும் ஏதேனும் ஒரு மாநிலத்தில் பணியமர்த்தப்படுவார்.


இந்தியாவைப் பொறுத்தவரை, ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பவர், சமூகத்தில் உயர்ந்த மதிப்பு பெற்றவராக திகழ்கிறார். நான் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்று சொல்வதை ஏறக்குறைய 60% இந்திய மாணவர் சமூகம் வழக்கமாக வைத்துள்ளது, பலருக்கு அதைப்பற்றி பெரிதாக எதுவும் தெரியாமல் இருந்தாலும்கூட.


ஐ.ஏ.எஸ். எனும் பணி


ஐ.ஏ.எஸ். என்பது அரசு நிர்வாகத்தை தலைமையேற்று நடத்தும் பணி என்பதால், ஒரு நேர்மையான அதிகாரியால், சமூகத்திற்கு நிறைய சேவைகளை செய்ய முடியும். ஆனால், இப்பணியில் உள்ள அதிகாரம், சலுகைகள், வெகுமதிகள், சமூக அந்தஸ்து உள்ளிட்ட பல காரணங்களே, இப்பணிக்கு வர வேண்டும் என்று பலரைத் தூண்டுகிறது.


ஐ.ஏ.எஸ். பணி என்பது இந்திய நிர்வாக கட்டமைப்பில், அதிக அதிகாரத்தையும், அதிக பொறுப்பையும் கொண்டதாகும். மத்திய அரசின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் கேபினட் செயலாளர் என்ற பதவியிலும், மாநில அரசின் உத்தரவுகளை செயல்படுத்தும் தலைமைச் செயலாளர் என்ற பதவியிலும் இருப்பவர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே.


ஐ.ஏ.எஸ். பணி நிலைக்கு சமமாக, இந்திய வெளியுறவு பணிகள்(Indian Foreign Service) எனப்படும் பணி உள்ளது. ஆனால், உள்நாட்டு நிர்வாகத்தில் இதற்கு சம்பந்தமில்லை. உள்நாட்டு நிர்வாகத்தைப் பொறுத்தவரை, IAS பணிதான் உயர்ந்தது. இதற்கு அடுத்த நிலையில் ஐ.பி.எஸ்.(இந்திய காவல் பணிகள்) வருகிறது. அதற்கடுத்து IFS (Indian Forest Service) எனப்படும் இந்திய வனப் பணிகள் வருகின்றன.


IAS பணிக்கு தேவையான தகுதிகள்


நேர்மறை எண்ணம்

தலைமைத்துவ பண்பு

ஆளுமைத் திறன்

தைரியம்

உறுதியான மனப்பாங்கு

தன்னம்பிக்கை

ஒவ்வொரு நெருக்கடி சூழலிலும் அமைதியைக் கடைபிடித்தல்

நல்ல தகவல்தொடர்பு திறன்

நல்ல அறிவுத்திறன்

சிறப்பான பொதுஅறிவு


ஐ.ஏ.எஸ். தேர்வெழுதுவதற்கான அடிப்படை தகுதிகள்


ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளின் மூலமாகவே தேர்வு செய்யப்படுகிறார்கள். அத்தேர்வை எழுதும் ஒருவர் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.


குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட இளநிலைப் பட்டப்படிப்பை முடித்த ஒருவர், ஐ.ஏ.எஸ். தேர்வை எழுதலாம். மேலும், பட்டப் படிப்பு இறுதித் தேர்வை எழுதப் போகிறவர்கள் அல்லது எழுதி முடித்து, தேர்வு முடிவுகளுக்கு காத்திருப்பவர்களும் ஐ.ஏ.எஸ். தேர்வின், முதல்நிலைத் தேர்வை (Preliminary) எழுதலாம்.


MBBS அல்லது வேறொரு மருத்துவ பட்டப் படிப்பை மேற்கொள்வோர், அவர்கள் தங்களின் இறுதியாண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்து, அதேசமயம், இன்டர்ன்ஷிப்பை நிறைவு செய்யாமல் இருந்தாலும், அவர்கள் ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வை எழுதலாம். அதேசமயம், அவர்கள், மெயின் தேர்வு விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.


ஐ.ஏ.எஸ். தேர்வு, முதல்நிலைத் தேர்வு (Preliminary), மெயின் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்று மொத்தம் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.


பணிகள் மற்றும் பொறுப்புகள்


* தொடர்புடைய அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து, தனது மாவட்டம் அல்லது பிராந்தியத்திற்கான கொள்கைகளை வடிவமைப்பதில் உதவுதல்.


* மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைகள், நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணித்தல். இதன்பொருட்டு, அதுதொடர்புடைய பகுதிகளுக்கு பயணம் செய்து, அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கிறதா என்பதைக் கண்காணித்தல். அதன்பிறகு, நடைபெறும் பணிகள் பற்றி, தொடர்புடைய அமைச்சகத்திற்கு தனது கருத்துக்களை (feedback) தெரிவித்தல்.


* பொது நிதியானது, முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பது ஐ.ஏ.எஸ். அதிகாரியின் முக்கியப் பணியாகும். அதில், ஏதேனும் முறைகேடு நடந்தால், அவர் மாநில சட்டசபைக்கும், நாடாளுமன்றத்திற்கும் பதில்சொல்ல வேண்டியிருக்கும்.


* வெள்ளம், நிலநடுக்கம் மற்றும் கலவரம் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நிகழும்போது, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்கள், துன்பத்திலிருந்து மக்களை மீட்டு, நிலைமைய கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.


* ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தங்களது கண்களையும், காதுகளையும் கூர்மையாக வைத்து, நாட்டில் என்ன நடக்கிறது என்பதை கவனித்து, சிறப்பான முடிவுகளை எடுக்க, அரசுக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டியுள்ளது.


பணி நிலை


ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பணித்தன்மை என்பது, பன்முகத்தன்மை வாய்ந்தது, சவால் மிகுந்தது, ஆர்வமூட்டக்கூடியது அதேசமயத்தில் நிறைவுத்தன்மை கொண்டது.


ஒரு இளநிலை ஐ.ஏ.எஸ். அதிகாரி, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உருவாக்கும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிறார் மற்றும் அவரும் சீனியர் நிலைக்கு உயரும்போது, கொள்கைகள் மற்றும் திட்டங்களை அவரும் சேர்ந்து உருவாக்குகிறார். பொதுத்துறை நிறுவனங்கள் சம்பந்தமான விவகாரங்களை கையாளுதல் உள்பட, பல சிக்கல்களை தீர்த்து வைக்கும் நபராகவும் இருக்கிறார்.


சம்பளம்


ஜுனியர் ஸ்கேல்


Pay Band - ரூ.15,600 முதல் ரூ.39,100

கிரேடு pay ரூ.5,400


சீனியர் டைம் ஸ்கேல்


Pay Band - ரூ.15,600 முதல் ரூ.39,100

கிரேடு pay ரூ.6,600


ஜுனியர் Administrative கிரேடு


Pay Band - ரூ.15,600 முதல் ரூ.39,100

கிரேடு pay ரூ.7,600


Selection கிரேடு


Pay Band - ரூ.37,400 முதல் ரூ.67,000

கிரேடு pay ரூ.8,700


சூப்பர் டைம் ஸ்கேல்


Pay Band - ரூ.37,400 முதல் ரூ.67,000

கிரேடு pay ரூ.10,000


வாய்ப்புகள்


உள்துறை செயலர் என்ற பொறுப்பை வகிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிதான், ஐ.பி.எஸ். அதிகாரிகளை வழிநடத்தும் பொறுப்பை வகிக்கிறார்.

நிதித்துறை செயலர் என்ற பொறுப்பை வகிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி, ஒரு அரசின் அனைத்து நிதி செயல்பாடுகளுக்கும் தலைவர்.

சுருக்கமாக சொல்வதென்றால், ஐ.ஏ.எஸ். அதிகாரி பணி என்பது, பல்வகை பொறுப்புகளை நிறைவேற்றும் மற்றும் அவற்றை மாறிமாறி மேற்கொள்ளும் நிலையில் உள்ள ஒரு பணியாகும். ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு நேரடியாக உதவக்கூடிய ஒரு பணியாகும்.

நாட்டின் உயர்ந்த பதவியாக உள்ள ஐ.ஏ.எஸ்., பணியில் ஒருவருக்கான பொறுப்புகள் எவ்வளவு அதிகமோ, அந்தளவிற்கு சலுகைகளும் அதிகம்.


நாம் செய்ய வேண்டியது


இந்தியாவைப் பொறுத்தவரை, நாட்டின் நிர்வாகத்தை நடத்துபவர்கள் என்பதால், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால், சமூகத்திற்கு எத்தனையோ நன்மைகள் கிடைத்துள்ளன. அதே நேரத்தில், பல தீமைகளும் சமூகத்திற்கு நிகழ்ந்துள்ளன.


எனவே, பெரியளவில் நன்மை செய்ய இயலாவிட்டாலும், முடிந்தளவு, தீமை செய்யாமல் இருப்போம் என்பதை உறுதியாக எடுத்துக்கொண்டு, ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகுங்கள் மாணவர்களே!






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




தியாகிகள் தினம் - ஜனவரி 30 (Martyrs' Day - January 30)...

 


 தியாகிகள் தினம் - ஜனவரி 30 (Martyrs' Day - January 30)...


🏁 இந்திய நாட்டின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டு தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த விடுதலைப் போராட்ட வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக  தியாகிகள் தினம் ஜனவரி 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.


🏁 தேசத்தந்தை மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஜனவரி 30ஆம் தேதி இந்தியாவில் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.


🏁 தியாகிகளின் வீரச் செயல்களை நினைவுப்படுத்தி இளம் தலைமுறையினரிடம் நாட்டுப்பற்றை ஏற்படுத்தவும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...





எண்ணும் எழுத்தும் - பருவம் 3 - அலகு 3 - கற்றல் கற்பித்தல் கருவிகள் - தமிழ், ஆங்கிலம், கணக்கு (Ennum Ezhuthum - Term 3 - Unit 3 - TLM - Tamil, English, Mathematics)...

   


>>> எண்ணும் எழுத்தும் - அலகு 3 - கற்றல் கற்பித்தல் கருவிகள் - தமிழ் (Ennum Ezhuthum - Unit 3 - TLM - Tamil)...












>>>  எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 3 - பிப்ரவரி முதல் வாரம் - 2023...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 3 - பிப்ரவரி முதல் வாரம் - 2023 (Ennum Ezhuthum Lesson Plan - Unit 3 - February 1st Week)...

 

 

           


>>> எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 3 - பிப்ரவரி முதல் வாரம் - 2023 (Ennum Ezhuthum Lesson Plan - Unit 3 - February 1st Week)...



>>> எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 3 - பிப்ரவரி முதல் வாரம் - 2023 - மாதிரி 2 (Ennum Ezhuthum Lesson Plan - Unit 3 - February 1st Week - Model 2)...



>>>  எண்ணும் எழுத்தும் - பருவம் 3 - அலகு 3 - கற்றல் கற்பித்தல் கருவிகள் - தமிழ், ஆங்கிலம், கணக்கு...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு... 27-04-2024 – Press News – Date Extension for Online Application - Direct R...