கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NEET லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
NEET லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Changes made in UG NEET – 2025 Exam

 

 

UG NEET - 2025 தேர்வில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் - தேசிய தேர்வு முகமை Natoinal Testing Agency NTA Public Notice 


Changes made in UG NEET – 2025 Exam - NTA Public Notice 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




NEET 2025 UPDATE

26.01.2025


2019 முதல் நடைபெறும் NEET தேர்வு

180 கேள்விகள் Phy45 Che 45 Bio 90

180 நிமிடம் (3 மணி நேரம்)


என நடைபெற்று வந்த நிலையில் Covid பெருந்தொற்று காரணமாக 200 கேள்விகளாக மாற்றப்பட்டிருந்தது.


மீண்டும் இந்த ஆண்டு NEET 2025 தேர்வு 180 கேள்விகள் 180 நிமிடங்கள் என்ற பழைய முறைப்படியே நடத்தப்படும் என NTA அறிவித்துள்ளது. அறிவிப்பு நாள் 25.01.2025. தேவைப்படுவோருக்கு தெரிவிக்கவும். நன்றி.



NOTIFICATION FOR FRESH APPLICATIONS INVITED FOR REDUCED CUT-OFF PERCENTILE PG-MD/MS DEGREE /DIPLOMA /DNB COURSES 2024-2025

 

2024-2025  முதுநிலை - எம்டி/எம்எஸ் பட்டப்படிப்பு/டிப்ளமோ/டிஎன்பி படிப்புகளுக்கான குறைக்கப்பட்ட சதவீத கட்-ஆஃப்களுக்கான புதிய விண்ணப்பங்களுக்கான அறிவிப்பு


NOTIFICATION FOR FRESH APPLICATIONS INVITED FOR REDUCED CUT-OFF PERCENTILE PG-MD/MS DEGREE /DIPLOMA /DNB COURSES 2024-2025



Reduction in qualifying percentile in NEETPG 2024 - National Board of Examinations in Medical Sciences Notice

முதுநிலை நீட் தேர்வு 2024 இல் தகுதி சதவீதம் குறைப்பு - மருத்துவ அறிவியல் தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு


 Reduction in qualifying percentile in NEETPG 2024 - National Board of Examinations in Medical Sciences Notice 



Producing fake NEET score certificate - Trying to get admission in Madurai AIIMS Medical College - Himachal Pradesh student arrested



போலியாக நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழை தயாரித்து மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சேர முயன்ற இமாச்சல பிரதேச மாநில மாணவன் கைது


💯%    போலியாக நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழை தயாரித்து எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சேர முயன்ற அபிஷேக் கைது



💯%     மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்காக   போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த மகேந்திர சிங் என்பவரின் மகன் அபிஷேக்  கைது



💯%    மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாக அலுவலர் கணேஷ் பாபு கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை


ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் இயங்கி வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுரியில் மாணவர் சேர்க்கைக்கு போலி நீட் சான்றிதழை அளித்த வட மாநில மாணவரை போலீஸார் கைது செய்தனர்.


ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் கல்லூரி தற்காலிகமாக இயங்கி வருகிறது. நீட் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நிறைவடைந்த நிலையில், இமாச்சல பிரதேசம் மாநிலம் மாண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திர சிங் என்பவரின் மகன் அபிஷேக் (22) என்ற மாணவர் தனது தந்தையுடன் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேருவதற்காக வந்துள்ளார்.


மாணவர் அபிஷேக்கின் சான்றிதழ்களை சரிபார்த்த எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினர் சான்றிதழ் மீது சந்தேகம் ஏற்பட்டு கேணிக்கரை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விசாரணையில், அபிஷேக் இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மூன்றாவது முறையாக நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணிற்கு வெறும் 60 மார்க் எடுத்ததால் தனது தந்தைக்கு தெரியாமல் போலியான நீட் தேர்வு சான்றிதழ் தயாரிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.


தொடர்ந்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸார் அபிஷேக் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அரசு மருத்துவக்கல்லுரியில் மாணவர் சேர்க்கையில் போலி சான்றிதழுடன் வந்து வட மாநில மாணவர் ஒருவர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


MBBS கலந்தாய்வு : நீட் கட்-ஆஃப் வெளியானதாக வதந்தி...


 எம்பிபிஎஸ் கலந்தாய்வு : நீட் கட்-ஆஃப் வெளியானதாக வதந்தி...


MBBS Counseling : NEET Cut-Off Released Rumors...




நீட் 2024 தேர்வு முடிவு மாநிலம்/ நகரம்/ மையம் வாரியாக வெளியீடு...

நீட் 2024 தேர்வு முடிவு மாநிலம்/ நகரம்/ மையம் வாரியாக வெளியீடு...


 Publishing the result of NEET UG 2024 State/ City/ Centre-wise...


தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை!


உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, exams.nta.ac.in என்ற இணையதளத்தில் தேசிய தேர்வு முகமை முடிவுகளை வெளியிட்டது...





நீட் முறைகேடு - 22 மாணவர்களுக்கு 3 ஆண்டு தடை...



 நீட் முறைகேடு - 22 மாணவர்களுக்கு 3 ஆண்டு தடை...


இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. மேலும் நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.


இது தொடர்பான வழக்கு கடந்த 8 ஆம் தேதி (08.07.24) மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, “20 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை சார்ந்த விவகாரம் இது. 67 மாணவர்கள் 100% மதிப்பெண்கள் பெற்றதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். வெளிநாட்டில் தேர்வெழுதுவோருக்கு நீட் வினாத்தாள் எப்படி அனுப்பி வைக்கப்படுகிறது?. நீட் வினாத்தாள் எப்போது தயாரிக்கப்படுகிறது?. எப்போது அச்சிடப்படுகிறது?. வினாத்தாள்களைத் தேர்வு மையங்களுக்கு அனுப்புவது எப்போது?. இது தொடர்பான முழு விவரங்களைத் தேசிய தேர்வு முகமை வழங்க வேண்டும்” என்று ஆணை பிறப்பித்து இந்த வழக்கை 11ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டிருந்தார்.




NEET examination malpractice Affidavit filed in the Supreme Court

இந்நிலையில் இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை இன்று (10.07.2024) உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில், “நீட் தேர்வு ரத்து என்பது தவறிழைக்காத லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அநீதி இழைப்பது போன்று ஆகிவிடும். தேசிய தேர்வு முகமையின் அலுவலகத்தில் தான் நீட் தேர்வு வினாத்தாளுக்கான கேள்விகளை நிபுணர்கள் குழு தயாரிப்பார்கள். வினாத்தாளுக்கான கேள்விகள் எவை என்பது நிபுணர்களுக்கே தெரியாது. இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நிகழ்ந்ததாகக் கூறி 63 புகார்கள் பதிவாகியுள்ளன. இது தொடர்பான விசாரணையில் 33 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 22 மாணவர்கள் 3 ஆண்டுகள் வரை நீட் தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 9 பேரின் முடிவுகளை வெளியிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இன்று (06-07-2024) நடைபெறுவதாக இருந்த இளநிலை மருத்துவக் கலந்தாய்வு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு...

 இன்று (06-07-2024) நடைபெறுவதாக இருந்த இளநிலை மருத்துவக் கலந்தாய்வு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு...



நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு...

 நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு...


கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்காக நடத்தப்பட்ட நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது.


நீட் மறுதேர்வு முடிவுகளை exams.nta.ac.in/NEET இணையதளத்தில் காணலாம்.


நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 பேருக்கு மறுதேர்வு நடந்தது; 813 மாணவர்கள் மறுதேர்வு எழுதினர்...



முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு - விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என தகவல்...

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு - விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என தகவல்...


NEET-PG Entrance Examination, conducted by National Board of Examination postponed...




தேர்வு முகமையின் தலைவரை மாற்றம் செய்து ஒன்றிய அரசு உத்தரவு...

 தேசிய தேர்வு முகமையின் தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமனம்.


நீட் தேர்வு முறைகேடு எதிரொலியாக தேசிய தேர்வு முகமையின் தலைவரை மாற்றம் செய்து ஒன்றிய அரசு உத்தரவு...




நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு மறுதேர்வு...


 நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கு ஜூன் 23 ஆம் தேதி மறு தேர்வு; ஜூன் 30ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படுகிறது - அறிவிக்கை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை NTA...


நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கிய 1563 மாணவர்களுக்கு மறுதேர்வு...



தற்போது நீட் தரவு முடிவுகளை ரத்து செய்ய இயலாது;


கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது, கலந்தாய்வை தொடர்ந்து நடத்தலாம்"


- உச்சநீதிமன்ற நீதிபதிகள் 



1,563 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த முடிவு; NEET தேர்வில் கருணை மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும்”


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், கருணை மதிப்பெண்ணுகக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்பு...




நீட் தேர்வின் பாதகங்கள்: இந்திய மொழிகளில் நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்...



நீட் தேர்வின் பாதகங்கள்: இந்திய மொழிகளில் நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்...


 “நீட் தேர்வுக்கு முதல் எதிர்ப்பு” - நீதியரசர் ஏ.கே.ராஜன் அறிக்கையை பகிர்ந்து முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிவு...


சென்னை: “திமுகதான் நீட்தேர்வின் தீமைகளை கண்டறிந்து முதன் முதலில் அதை எதிர்த்து பரப்புரை செய்தது” என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை பகிர்ந்துள்ளார்.


இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவு: “திமுகதான்

நீட்தேர்வின்

தீமைகளை முதன்முதலில் கண்டுணர்ந்து, பெரிய அளவில் அதற்கெதிராக பரப்புரை மேற்கொண்டது. ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை மேற்கொள்வதால் ஏற்படும் தாக்கங்களை ஆராய, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்தோம்.


அக்குழு மிக விரிவான தரவுப் பகுப்பாய்வுகள், மாணவர்கள், பெற்றோர், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கிய அறிக்கை வெளியிடப்பட்டது. நீட் தேர்வு ஏழைகளுக்கும், சமூகநீதிக்கும் எதிரானது என்பதை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பிற மாநில அரசுகளுக்கும் அந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.



அந்த அறிக்கையில் இடம்பெற்ற பரிந்துரைகளின் அடிப்படையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஏற்படுத்திய தேவையற்ற தாமதத்தையடுத்து, தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. நீட் தேர்வில் அண்மையில் நடந்த பரவலான குளறுபடிகளால், நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த வேளையில், நீட் தேர்வின் பாதகங்களை அனைத்துத் தரப்பினரும் அறிந்துகொள்ள ஏதுவாக, நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையை ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் பகிர்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.


நீட் தேர்வின் தாக்கம் குறித்த நீதியரசர் ஏ.கே.ராஜன் அறிக்கை - 9 மொழிகளில்...



DMK was the first to foresee the hazards of #NEET and undertook a large-scale campaign against it.


After coming to power, we constituted a High-Level Committee headed by Justice A.K. Rajan to study the impact of NEET-based admission process. The Committee's report, based on extensive data analysis and inputs from students, parents, and the public, has been published and shared with various State Governments to expose NEET's anti-poor and anti-social justice nature.


Based on the recommendations in the report, a Bill seeking exemption from NEET was unanimously passed by the Tamil Nadu Legislative Assembly. It is now awaiting Presidential assent, after an inordinate delay from the Tamil Nadu Governor's side.


As nationwide opposition to NEET grows due to the recent largescale discrepancies, we are sharing the report of Justice A.K. Rajan Committee in English and all major Indian languages for everyone to better understand the ill-effects of NEET.


Download here:  👇

English:

Tamil: https://drive.google.com/file/d/172WcMZMRNNdO8pxGTZcXXU3V4Fzn1wzg/view?usp=drivesdk


Malayalam: https://drive.google.com/file/d/1ywnaMe5RdN8xsZWGVmx4I5UAlc2kXaZ5/view?usp=drivesdk


Telugu: https://drive.google.com/file/d/1Gy68yWV8IfXAv2MwzcJ9JuiAxBxNQfWE/view?usp=drivesdk


Kannada: https://drive.google.com/file/d/1F9NnMro4Ov22HVopyTXlkp-YWhUDQknA/view?usp=drivesdk


Hindi: https://drive.google.com/file/d/12QMsjL1E4VUhwYaL2DYFB4HZ6KUOt2Zo/view?usp=drivesdk


Marathi: https://drive.google.com/file/d/1jMtiD3__IeLAeHMCciAkkEb6SHWXxb8C/view?usp=drivesdk


Punjabi: https://drive.google.com/file/d/1R_N0ek2eodABHJXDNGvpDCFF6gRmRilH/view?usp=drivesdk


Bengali:



இன்று (05-05-2024) நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கான முக்கியக் குறிப்புகள்...



இன்று (05-05-2024) நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கான முக்கியக் குறிப்புகள்...


🔹🔸 🩺நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவச் செல்வங்களே உங்களுக்கான மிக முக்கிய அறிவுரைகள் ஒரு நிமிடம் இதை முழுமையாக படித்துவிட்டு நீட் தேர்வு எழுத செல்லுங்கள் உங்களுக்கு நிச்சயம் பயனளிக்கும்...


1. மாணவர்கள் நுழைய சீட்டில் உள்ளபடி உரிய நேரத்திற்கு தேர்வு மையத்தை அடைய வேண்டும்


2. தேர்வு மையத்தின் நுழைவு வாயிலை மூடிய பிறகு எந்த மாணவரையும் அனுமதிக்க இயலாது


3. தேர்வு முடிவதற்கு முன்னர் எக்காரணத்திற்காகவும் மாணவர்கள் தேர்வு அறையை விட்டு வெளியேறக்கூடாது


4. தேர்வு முடிந்த பிறகு தேர்வு கண்காணிப்பாளர் தேர்வு அறையினை விட்டு வெளியேறலாம் என்று கூறிய பிறகு அறையை விட்டு வெளியேற வேண்டும்


5. மாணவர்கள் நுழைச்சீட்டிலுள்ள அனைத்து அறிவுரைகளையும் நன்கு படித்து அதன்படி நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


6. நுழைவு சீட்டில் உள்ள மூன்று பக்கங்களையும் பதிவிறக்கம் செய்து தேர்வு அறைக்கு எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்


7. மாணவர்கள் தேர்வு மையத்தின் முகவரியை கொண்டு ஒரு நாள் முன்னதாக விசாரித்துக் கொண்டால் தேர்வு நாள் என்று தேவையற்ற மன உளைச்சலை தவிர்க்கலாம்.


8. சில மாணவர்கள் தங்கள் சார்ந்த மதத்தின் அடிப்படையில் ஆடைகள் அணிந்திருப்பர். அதுபோன்றோர் தேர்வு மையத்திற்கு முன்னதாகவே சென்று முழுமையான சோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.


9. நுழைவு சீட்டு அடையாள அட்டை போன்றவை அவசியம் தேர்வு அறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மாணவர்கள் மெட்டல் டிடெக்டர்களை கொண்டு மட்டுமே ஆய்வு மேற்கொள்ளப்படுவதை தவிர கைகளால் தொட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட மாட்டாது.


10. மாணவர்கள் தேர்வு அறைக்கு கீழ்க்கண்டவற்றை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்


i. ஒளிபுகு தண்ணீர் பாட்டில்


ii. வருகை பதிவேட்டில் ஒட்டுவதற்கு கூடுதலாக ஒரு புகைப்படம் (விண்ணப்பத்தில் உள்ளபடி)


iii. நுழைவு சீட்டு மற்றும் சுய உறுதிமொழி படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து தபால் அட்டை அளவு புகைப்படத்தை உரிய இடத்தில் ஒட்டவும்.


iv. PwD சான்றிதழ் மற்றும் ஆவண எழுத்தர் சம்பந்தமான ஆவணங்கள் தேவைப்படின்


11. மாணவர்கள் தங்களது கையெழுத்தை உரிய இடத்தில் இட்டும் மற்றும் புகைப்படத்தை சரியான இடத்தில் ஒட்ட வேண்டும். இடதுகை கட்டை விரல் முழுமையாகவும் தெளிவாகவும் இட வேண்டும்.


12. பேன் அட்டை/ ஓட்டுநர் உரிமம்/ வாக்காளர் அடையாள அட்டை/ பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு நுழைவு சீட்டு/ பாஸ்போர்ட்/ ஆதார் அட்டை/ e-ஆதார்/ ரேஷன் அட்டை மற்றும் அனைத்து அடையாள அட்டைகள்/ கைபேசியில் ஸ்கேன் செய்யப்பட்ட நுழைவு சீட்டுகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது


13. மாணவர்கள் எலக்ட்ரானிக் உபகரணங்கள், கைபேசிகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. தங்களது உடைமைகள் காணாமல் போனால் அதற்கு யாரும் பொறுப்பேற்க இயலாது.


14. சீரான உடை மற்றும் காலணிகள் அணிய வேண்டும். தடித்த அடித்தோல் கொண்ட காலணிகளை அணியக் கூடாது. பெரிய பொத்தான் கொண்ட உடையை அணியக்கூடாது.


15. தேர்வு அறைக்கு உள்ளே வெற்றுக் காகிதங்கள் எடுத்துச் செல்லக்கூடாது. வினாத்தாளின் இறுதியில் உள்ள வெற்றிடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். 


16. தேர்வு முடிவுற்ற பிறகு நுழைவு சீட்டை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். தவறினால் தங்களது விடைத்தாள் திருத்தப்பட மாட்டாது.


17. CCTV கேமராக்கள் மற்றும் ஜேமர்கள் வழியாக மாணவர்கள் தவறிழைப்பது கண்டறியப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.


18. AI தொழில்நுட்பம் மூலமாக மாணவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். மேலும் தவறிழைக்கும் மாணவர்கள், AI தொழில்நுட்ப கருவிகள் மூலம் கண்டறியப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.


19. தேர்வு முடிந்த பிறகு மாணவர்கள், OMR தாள்கள் ( உண்மை மற்றும் நகல்), நுழைவு சீட்டு ஆகியவற்றை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். வினாத்தாளை மட்டும் மாணவர்கள் வெளியே எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. OMR தாளில் தங்களது கையொப்பம் மற்றும் கண்காணிப்பாளரின் கையொப்பம் இரண்டையும் சரி பார்ப்பது மாணவர்களின் கடமையே ஆகும்.


20. மாணவர்கள் NTA வெப்சைட்டை தினம் தோறும் பார்க்க வேண்டும். மேலும் e-mail மற்றும் SMS ஐ தினந்தோறும் ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.


21. சந்தேகம் அல்லது உதவிக்கு, NTA விற்கு neet@nta.ac.in என்ற e-mail மூலமாகவோ அல்லது 011-40759000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


🔹👉அன்பான மாணவச் செல்வங்களே தன்னம்பிக்கையுடன், பொறுமையாக மற்றும் சிந்தித்து விடை எழுதவும்.  நீட் தேர்வினை சிறப்பாக எழுதி அதிக மதிப்பெண் பெற்று மருத்துவராகி சமுதாயத்திற்கு சேவை செய்ய வாழ்த்துகள்!



கல்வி மாவட்ட அளவில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் கால அட்டவணை - 25.03.2024 முதல் 02.05.2024 வரை நடைபெறுதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


கல்வி மாவட்ட அளவில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் - 25.03.2024 முதல் 02.05.2024 வரை நடைபெறுதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


Education District Level NEET Coaching Classes - Conducted from 25.03.2024 to 02.05.2024 - Proceedings of Director of School Education...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


நீட் MDS 2024 தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்...

 Applications Invited for National Eligibility cum Entrance Test NEET MDS 2024...


நீட் MDS 2024 தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Environment Clubs to be established in all schools - Chief Minister

 தமிழ்நாட்டின் எல்லாப் பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...