கல்வி அஞ்சல்கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...கல்வி அஞ்சல்கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்... கல்வி அஞ்சல்தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...கல்வி அஞ்சல்கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...கல்வி அஞ்சல்கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்... கல்வி அஞ்சல்தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...கல்வி அஞ்சல்
இன்று 28.01.2025 நடைபெற்ற விவாதத்தில் NCTE ஆசிரியர் தகுதி தேர்வு (பதவி உயர்வு) சார்ந்த முக்கிய விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது என தகவல்.
அடுத்து பிப்ரவரி 06-02-2025 அன்று விசாரணைக்கு வரும் என்று (TENTATIVE) எதிர்பார்க்கப்படுகிறது
BSNL நிறுவனம் வழங்கியுள்ள இணைய இணைப்பு தொலைபேசி எண்ணை பள்ளியின் EMIS Login வாயிலாக உள்ளீடு செய்யும் முறை
Method of entering internet connection phone number provided by BSNL company through EMIS Login of school
அனைத்து வட்டார வள மேற்பார்வையாளர்கள்(பொ) மற்றும் வட்டார வளமைய ஆசிரியப்பயிற்றுனர்களின் கவனத்திற்கு,
அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்போதைய நிலையில் எந்த ஒரு நிறுவனம் மூலமாகவும் BSNL இணைய இணைப்பு பெற்று பயன்பாட்டில் இருந்தால் அந்த இணைய இணைப்பிற்காக BSNL நிறுவனம் வழங்கியுள்ள இணைய இணைப்பு தொலைபேசி எண்ணை மட்டும் எந்த பிழையும் இன்றி தங்கள் பள்ளியின் EMIS Login வாயிலாக உடனடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .
இந்த இணைய இணைப்பு தொலைபேசி எண் BSNL வழங்கும் Invoice Bill - இல் குறிப்பிடப்பட்டிருக்கும்.
தற்போதைய நிலையில் BSLN இணைய இணைப்பு பெற்று செயல்பாட்டில் உள்ள பள்ளிகள் மட்டும் இந்த தகவலை வழங்கினால் போதுமானது.
மேல் குறிப்பிட்ட இந்த தகவலை தங்கள் பள்ளியில் 13.01.2025 மதியம் 2.00 மணிக்குள் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .
Available in school login .
Under schools menu --> tech --> Internet connection BSNL.
1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு SCERTன் 120 காணொளிகளை காண்பிக்க வேண்டும் - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் (நிர்வாகம்) செயல்முறைகள், ந.க.எண். 029159/ஜெ3/2024, நாள். 07.01.2025
120 videos of SCERT must be shown to Class 1-5 students – Proceedings of Tamil Nadu Joint Director of Elementary Education (Administration), RC. No. 029159/J3/2024, Dated. 07.01.2025
*கலிபோர்னியா காட்டுத்தீ: சாம்பலான நூற்றுக்கணக்கான வீடுகள்
*லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கமலா ஹாரிஸின் வீடும் காட்டுத்தீ பரவும் மண்டலத்திற்குள் வந்துள்ளது; அங்குள்ள பொதுக்கள் உடனடியாக வெளியேறவும் உத்தரவு
*கட்டுக்கடங்காத காட்டுத்தீ வேகமாக பரவி கலிபோர்னியாவை சூறையாடி வருகிறது;
*மலிபு நகரில் எடுக்கப்பட்ட காட்சிகள் வேகமாக பரவிவரும் காட்டுத்தீயின் தீவிரத்தைக் காட்டுகிறது
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில், அதை அணைக்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை பற்றிய தீ, வனப்பகுதிகளில் ஏராளமான மரங்களையும் புல்வெளிகளையும் கருகச்செய்துள்ளது. மேலும், குடியிருப்புப் பகுதிகளுக்கும் தீ பரவியதால் ஏராளமான வீடுகள் பற்றி எரிகின்றன. இதுவரை 5 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான வனப்பகுதி மற்றும் குடியிருப்புப் பகுதிகளை காட்டு தீ அழித்து விட்டதாக மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வனத்தை ஒட்டிய லாஸ் ஏஞ்சல்ஸ் நகரப் பகுதியில் உள்ள 13 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதால் தீயினை கட்டுப்படுத்தும் பணியில் கலிஃபோர்னியா தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், தீயால் பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு வசிக்கும் பலர் அவசரஅவசரமாக வீட்டைவீட்டு வெளியேறினர். இதுவரை, 30 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
காட்டுத் தீயால் ஒரேநேரத்தில் வாகனங்கள் குவிந்ததால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனம் கிடைக்காத பலர் உடைமைகளை எடுத்துக்கொண்டு நடந்தே வெளியேறி வருகின்றனர். தீ ஏற்பட்ட பகுதிகளில் காற்று பலமாக வீசுவதால் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். பலத்த காற்று காரணமாக சுமார் ஒன்றரை லட்சம் வீடுகளில் மின் தடையும் ஏற்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் மட்டுமல்லாது கலிஃபோர்னியாவிலும் தீ வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட புயல் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது என்றும், வேகமான காற்றால்தான் தீ பரவி வருகிறது என்றும் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதி - அதிகளவில் குழந்தைகளை தாக்குமா? - பதற்றப்படக் கூடிய தொற்றா? - குடும்ப நல மருத்துவர் அருணாச்சலம் விளக்கம்
2 children confirmed with HMPV infection in Chennai - will more children be affected? - Worried infection? - Explained by Family Physician Arunachalam
மகாராஷ்டிர மாநிலம் தடோபாவில் 5 குட்டிகளுடன் அபூர்வமாக காணப்பட்ட புலி
தடோபா தேசிய பூங்காவில் 5 குட்டிகளுடன் புலி இருக்கும் வீடியோவை ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார்
ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள வீடியோ வனவிலங்கு ஆர்வலர்களுக்கான அசாதாரண தருணங்களைக் கொண்டுள்ளது.
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, சனிக்கிழமை (ஜனவரி 4) மகாராஷ்டிராவில் உள்ள தடோபா தேசிய பூங்காவில் 'வாழ்நாளில் ஒருமுறை காணக்கூடிய' வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இது வனவிலங்கு ஆர்வலர்களுக்கான அசாதாரண தருணங்களைக் கொண்டுள்ளது.
கிளிப்பில், மாநிலத்தின் மிகப்பெரிய புலிகள் காப்பகத்தில் ஐந்து குட்டிகள் தங்கள் தாயின் பின்னால் நடப்பதைக் காணலாம்.
சமூக ஊடக தளமான X இல் வீடியோவைப் பகிரும் போது, மஹிந்திரா இது தனக்கு "சனிக்கிழமை கவச நாற்காலி பார்வை" என்று கூறினார். அமைதியாக இருக்க வேண்டிய மக்கள் ஏன் இவ்வளவு பேசுகிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
"அற்புதம். தடோபா தேசிய பூங்காவில் 5 குட்டிகள் தங்கள் தாயுடன். இந்த பார்வையாளர்களுக்கு வாழ்நாளில் ஒருமுறை காணும் காட்சி. எனக்கு ஒரு சனிக்கிழமை நாற்காலி... (நான் சிறிது காலமாக சஃபாரியில் இல்லை, ஆனால் கடைசியாக நான் சென்ற பொழுது, முடிந்தவரை அமைதியாக இருக்கச் சொன்னார்கள், ஏன் இவ்வளவு உரையாடல்கள்?)," என்று அவர் எழுதினார்.
இந்த வீடியோ X இல் வைரலாகி, சுமார் 90,000 பார்வைகளைப் பெற்றுள்ளது.
Rarest of the rare sighting of tigress with 5 cubs in Tadoba, Maharashtra State
'Saturday armchair sighting': Anand Mahindra shares video of tiger with 5 cubs at Tadoba National Park
The video shared by Anand Mahindra features extraordinary moments for wildlife enthusiasts.
Anand Mahindra, Chairman of Mahindra Group, on Saturday (January 4) shared a video on social media featuring a ‘once-in-a-lifetime sighting’ at the Tadoba National Park in Maharashtra.
It features extraordinary moments for wildlife enthusiasts. In the clip, five cubs are seen walking behind their mother at the largest tiger reserve in the state. While sharing the video on social media platform X, Mahindra said it was "a Saturday armchair sighting" for him. He also questioned why people were chattering so much as they should remain silent.
"Magnificent. 5 cubs with their mother at Tadoba National Park. A once-in-a-lifetime sighting for these visitors. A Saturday armchair sighting for me… (I haven’t been on a safari for a while, but the last time I went, we were told to be as silent as possible. Why so much chatter??)," he wrote.
The video has since gone viral on X, garnering around 90,000 views.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் 1,00,008 வடை மாலை சிறப்பு அலங்காரத்தில்
On the occasion of Hanuman Jayanthi, Namakkal Anjaneyar in 1,00,008 Vadai Malai special decoration
மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாடு போற்றும் நாமக்கல் நாயகன் அருள்மிகு ஆஞ்சநேயர் பகவான் 1,00,008 வடை மாலை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு இன்று (30-12-2024) அதிகாலை முதல் அருள் பாலித்து கொண்டிருக்கிறார்
அனைத்து வகுப்புகளுக்கும் வீடியோ பாடம் தயாரிக்க நடவடிக்கை - ஆர்வம் உள்ள ஆசிரியர்களுக்கு அழைப்பு
பாடப்பகுதிகளில் சிக்கலான தலைப்புகளை எளிமையாகவும், சுவாரசியமாகவும், மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும், விளக்கும் திறன் கொண்ட ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பாக, கேமராவின் முன் காணொளி நிகழ்த்துவதில் முன் அனுபவம் இருப்பது கூடுதல் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
புதிய அணுகுமுறைகளை கற்றுக்கொள்ளும் ஆர்வமும், அதனை கற்றல், கற்பித்தலில் செயல்படுத்தும் திறனும் உள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம், என, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விருப்பமுள்ள ஆசிரியர்கள் சிறிய புதுமையான, கற்றல், கற்பித்தல் வீடியோக்களை அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் கூறுகையில், 'தற்போது, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உயர்தர ஆய்வகங்கள், ஆசிரியர்களுக்கு தொழில்நுட்ப உபகரணங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
அடுத்தடுத்த கல்வியாண்டில், இணையம் வாயிலாக பாடங்களுக்கு காணொளியில் மாணவர்களுக்கு எளிமையான விளக்கம் அளிப்பதற்கு இவ்வாறு தயாரிக்கப்படுகிறது.
கல்வி தொலைகாட்சியிலும் இந்த காணொளிகள் ஒளிப்பரப்படும்' என்றனர்.
ரயில் வரும் பொழுது தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய நபர் - வைரலாகும் காணொளி
Man survives by lying in the middle of the tracks when the train arrives - video goes viral
கேரளா: கண்ணூர், சிராக்கல் பகுதியைச் சேர்ந்த நடுத்தர வயது நபர் ரயில் வரும் போது தண்டவாளத்தின் நடுவில் படுத்து ஒருவர் அதிசயமாக உயிர் தப்பினார்.
நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, ரயில் நெருங்கியபோது அவர் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு எந்த காயமும் ஏற்படாமல் அவரை ரயில் கடந்து சென்ற பின் எழுந்து சென்றார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஸ்ரீஜித் என்பவர் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இந்தச் செயல் தற்செயலானதா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க அதிகாரிகள் இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பேஸ்புக், ட்விட்டர், யூ-ட்யூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தினந்தினம் பல்வேறு வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. இணையத்தில் கொட்டிக்கிடக்கும் வீடியோக்கள் அவ்வப்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரல் ஆகும். அதிர்ச்சியளிக்கும் வீடியோக்கள், விழிப்புணர்வு வீடியோக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களில் வீடியோக்கள், வினோதமான வீடியோக்கள் என பல்வேறு வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி மக்கள் மத்தியில் பேசுப்பொருளாக இருக்கும்.
தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடும் அதிகரித்துவிட்டது. ஸ்மார்ட்போனில் வீடியோ, புகைப்படங்கள் எடுக்கும் பழக்கங்களும் அதிகரித்துவிட்டது. யூ-ட்யூப் ஷார்ட்ஸ், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் வீடியோக்கள் பதிவிட்டு இன்டர்நெட் பிரபலமாகிவிட நினைக்கின்றனர். இதனால், எந்த இடமானாலும் சரி, எந்த நேரமானாலும் சரி ஸ்மார்ட்போனை வைத்து புகைப்படம், வீடியோ எடுப்பதை பலரும் ஒரு வேலையாகவே வைத்திருக்கின்றனர். தினமும் குறைந்தபட்சம் ஒரு வீடியோ அல்லது ஒரு புகைப்படத்தையாவது பதிவிட்டு தங்களின் இருப்பை இணையத்தில் பதிவு செய்துகொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.
வைரலாகும் கேரள வீடியோ
அப்படியிருக்க, உங்களின் கண் முன்னே எதாவது அசம்பாவிதம் நடந்தாலோ, குற்றச்செயல்கள் நடந்தாலோ அது தட்டிக்கேட்கிறார்களோ இல்லையோ தங்களின் ஸ்மார்ட்போனை வைத்து பதிவுசெய்துவிடுகின்றனர். இது ஒரு வகையில் நல்லதுதான், ஏனென்றால் அவை குற்றவாளிகளுக்கு எதிரான ஆதரமாகிவிடுகிறது. மறுபுறம் யாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களையும் இதேபோல் சில வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில், கேரளாவில் ஒருவர் தன் கண்முன் நடந்த ஒரு வியப்பான சம்பவத்தை வீடியோ எடுத்து இணையத்தில் உலாவாவிட்டார், தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வைரல் வீடியோ எதை பற்றியது, எதனால் அது இவ்வளவு தூரம் வைரலானது ஏன் என்பது குறித்து இங்கு காணலாம்.
வைரல் வீடியோ: திக் திக் காட்சிகள்
ரயில் வருவதை பார்க்காமல் தண்டவாளத்தை கடக்க நினைத்த ஒருவர், திடீரென தனது அருகே ரயில் வருவதை பார்த்து நொடிப்பொழுத்தில் தண்டவாளத்தில் அப்படியே படுத்து, உயிர்தப்பிய வீடியோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கேரளாவின் சிராக்கல் - கண்ணூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பன்னென்பாறை பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது.
கண்ணுார் : ரயில் வருவது தெரியாமல், தண்டவாளத்தில் நடந்து சென்ற முதியவர் சிக்கி, காயமின்றி உயிர் தப்பினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரயில் வருவதை பார்க்காமல் தண்டவாளத்தை கடக்க நினைத்த ஒருவர், திடீரென தனது அருகே ரயில் வருவதை பார்த்து நொடியில், தண்டவாளத்தில் அப்படியே படுத்து, உயிர்தப்பிய வீடியோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ நேற்று மாலை கேரளாவின் சிராக்கல் - கண்ணூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பன்னென்பாறை பகுதியில் எடுக்கப்பட்டது.
ரயில் வேகமாக சென்றுகொண்டிருக்க அதன் அடியில் ஒருவர் படுத்துக்கொண்டிருப்பதும், ரயில் கடந்து சென்ற பின்னர் அந்த நபர் எதுவும் நடக்காதது போல் சற்று தள்ளாடியபடியே தண்டவாளத்தை கடந்து செல்வதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. நல்லவேளையாக, அந்த நபருக்கு காயம் ஏதும் இல்லை என்பதையும் காண முடிந்தது. வீடியோ வைரலானதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த வீடியோவில் ரயில் அடியில் படுத்துக்கிடந்த நபர் யார் என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது. கண்ணூர் பன்னென்பாறை பகுதியை சேர்ந்த பவித்ரன் என்பது உறுதியாகி உள்ளது.
விபத்து குறித்து பவித்ரன் கூறுகையில், நான் மொபைல் போனை பார்த்துக்கொண்டே,தண்டவாளத்தில் நடந்து சென்றபோது, ரயில் வருவதைப் பார்த்தேன். என்னால் ஓட முடியவில்லை. அதனால் நான் தண்டவாளத்தில் அப்படியே படுத்துவிட்டேன். ரயில் கடந்து சென்றதும் நான் எழுந்து வந்துவிட்டேன்.
நான் பள்ளி வாகன கிளீனராக உள்ளேன்.அந்த சம்பவத்தின் போது, நான் மதுபானம் எதுவும் அருந்தவில்லை. அந்த வீடியோவை பார்த்ததும் உள்ளுக்குள் பயமாக இருந்தது. தான் தொடர்ந்து இவ்வழியே செல்வதாகவும், இதுதான் எனது முதல் அனுபவம்.
வயதான பறவைகளுக்கு உணவூட்டி பாதுகாக்கும் இளம் பறவைகளின் காணொளி
Video of young birds feeding and protecting older birds
வயது முதிர்ந்த பறவைகளுக்கு என்று முதியோர் இல்லங்கள் இல்லை.
தங்கள் இளமை பருவத்தில், தங்களைப் பாதுகாத்து வளர்த்த, இரை தேட முடியாத முதுமையடைந்த பறவைகளுக்கு (பெற்றோருக்கு) குழந்தைகளே உணவு தேடிக் கொண்டு வந்து ஊட்டி விடும் நெகிழ்ச்சியான காட்சி...
இந்த இளம் பறவைகளின் பெற்றோர் இவைகளுக்கு செலவு செய்து பள்ளியில் சேர்க்கவும் இல்லை..
இவைகள் பள்ளியில் சென்று இதனைக் கற்றுக்கொள்ளவில்லை.
ஆனாலும் இந்த இளம் பறவைகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுகின்றன ‼️❤️🥰
இவைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல பண்பு இது...
வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு - தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள காணொளி
Vaikom Struggle Centenary - Tamil Nadu Government released video
வைக்கம் போராட்டம் நடைபெற்று (1924) 100 ஆண்டு ஆகிவிட்டது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 6 நிமிட காணொளி
முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது முகநூல் பதிவு:
நூறாண்டுகளுக்கு முன்பு நமது சமூகம் எப்படியிருந்தது, இப்போது நாம் எங்கு வந்தடைந்திருக்கிறோம் என்று சற்று நினைத்துப் பாருங்கள். இந்த மாற்றங்களுக்கு விதை தூவிய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் நாளை நான் நேரில் கலந்துகொள்கிறேன்.
அதுகுறித்த காணொளி:
ഒന്നു ആലോചിച്ചു നോക്കൂ, നൂറ് വർഷങ്ങൾക്കു മുൻപ് നമ്മുടെ സമൂഹം എവിടെയായിരുന്നു, ഇപ്പോൾ നാം എവിടെ എത്തിനിൽക്കുന്നു...
ഈ മാറ്റങ്ങൾക്കു വിത്തു പാകിയ വൈക്കം സത്യാഗ്രഹത്തിന്റെ ശദാബ്ദി സമാപന ആഘോഷത്തിൽ നാളെ ഞാൻ നേരിൽ പങ്കെടുക്കുന്നതാണ്.
EMIS இணையதளத்தில் Login செய்து பயிற்சிக்கான LMS இணையதளத்திற்கு செல்லும் வசதி
EMIS இணையதளத்தில் Individual ID & Password பயன்படுத்தி Login செய்து அதிலிருந்தே LMS இணையதளத்திற்கு செல்வதற்கு Option கொடுக்கப்பட்டுள்ளது
1 வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் சிறப்பு கவனம் தேவையுடைய குழந்தைகளுக்கான "உள்ளடக்கிய கல்வி" தலைப்பில் இணைய வழியிலான பயிற்சிக்கு முதலில் emis.tnschools.gov.in என்ற இணையதளத்தில் EMIS INDIVIDUAL ID & PASSWORD பயன்படுத்தி Login செய்து அதிலிருந்தே Go To LMS இணையதளத்திற்கு செல்வதற்கு OPTION கொடுக்கப்பட்டுள்ளது.