கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தகவல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தகவல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Ambedkar Law University introduces LLD - Doctor of Law - a higher research degree - for the first time in Tamil Nadu


 அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் புதிய ஆராய்ச்சிப் படிப்பு அறிமுகம்


அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் LLD - Doctor of Law என்னும் உயரிய ஆராய்ச்சிப் படிப்பு - தமிழ்நாட்டில் முதல் முறையாக அறிமுகம்


Ambedkar Law University introduces LLD - Doctor of Law - a higher research degree - for the first time in Tamil Nadu


தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி ஆய்வுப் படிப்புக்கு மேலாக எல்எல்டி எனும் மிக உயரிய ஆராய்ச்சிப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து சட்டப்பல்கலைக்கழக பதிவாளர் கவுரி ரமேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் முதல் முறையாக இந்தாண்டு முதல் எல்எல்டி (Doctor of law) என்ற மிக உயரிய ஆராய்ச்சி பட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இதை தொடங்கி வைத்தார். வரும் கல்வியாண்டில் (2025-26) இந்த படிப்பில் சேர விரும்புபவர்கள் https://tndalu.ac.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.


இதையடுத்து நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். சட்டத்தில் பிஎச்டி ஆராய்ச்சி படிப்பை முடித்தவர்கள் எல்எல்டி படிக்க தகுதியானவர்கள். முழு நேர படிப்பாகவும் அல்லது பகுதி நேரமாகவும் படிக்கலாம். பிஎச்டி பட்டம் பெற்று 5 ஆண்டுகள் கழிந்த பின்னரே எல்எல்டி படிப்பில் சேர முடியும். இதில் சேர விரும்பும் தகுதியானவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.2,500 செலுத்த வேண்டும். மேலும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.2,000 செலுத்தினால் போதுமானது.


ஆய்வு குறித்த தகவல்கள் மற்றும் முந்தைய ஆய்வு கட்டுரைகள் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த படிப்புக்கு பதிவு கட்டணமாக ரூ.15,000, ஆண்டு கட்டணமாக ரூ.30,000 மற்றும் வைப்பு தொகையாக ரூ.10,000 செலுத்த வேண்டும். கூடுதல் அவகாசம் எடுத்துகொள்ளும் ஆய்வு மாணவர்கள் ரூ.20,000 கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கான நுழைவுத் தேர்வு உட்பட கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Apply for Agristack / Grains - Unique Identification Number for Farmers by 31-03-2025



 31-03-2025க்குள் அக்ரிஸ்டாக் / கிரைன்ஸ் - விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் பெற விண்ணப்பிக்கவும்


Apply for Agristack / Grains - Unique Identification Number for Farmers by 31-03-2025




Birth Certificate Mandatory for Passport - Central Govt



கடவுச்சீட்டு பெற பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு


Birth Certificate Mandatory for Passport - Central Govt


பாஸ்போர்ட்  - பிறப்பு சான்றிதழ் கட்டாயம்


2023 அக்டோபர் 1ம் தேதிக்கு பின் பிறந்தவர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம்


மற்றவர்கள் பாஸ்போர்ட் திருத்த விதிகள் 2025-ன் படி பிறப்பு சான்றாக மாற்று ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவிப்பு



2023 அக்டோபர் 1ஆம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் புதிதாக கடவுச்சீட்டு பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம்.


இந்திய கடவுச்சீட்டு சட்டம் 1980 விதிகளில் மத்திய வெளியுறவு அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. இதன்படி கடவுச்சீட்டு பெறுவதற்கு இனி பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.



இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,


'கடந்த, 2023ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் புதிதாக கடவுச்சீட்டு பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம்.


மாநகராட்சி, நகராட்சி அல்லது அதற்கு நிகரான அமைப்புகள் வழங்கும் பிறப்பு சான்றிதழ் ஆவணமாக ஏற்கப்படும். அரசிதழில் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.


எனினும் 2023, அக்டோபர் 1ஆம் தேதிக்கு முன்பு பிறந்தவர்களுக்கு இத்தகைய பிறப்பு சான்றிதழ் தேவை இல்லை.


பள்ளிச் சான்றிதழ், நிரந்தர கணக்கு அட்டை, ஓய்வூதிய உத்தரவு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை கடவுச்சீட்டு விண்ணப்பத்துக்கு பிறந்த தேதிக்கான ஆவணங்களாக பயன்படுத்தலாம்.


இது குறித்து பேசிய அதிகாரிகள், நாட்டில் பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருந்து வருபவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் இல்லை. இருப்பினும், 1969 ஆம் ஆண்டு பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டத்தை அமல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதால், பிறப்புச் சான்றிதழ்களை மட்டுமே பிறந்த தேதிக்கான சான்றாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


TNSED Parents App Update new version 0.0.44 - Updated on 26-02-2025

 

 



TNSED PARENTS APP UPDATE NEW VERSION 0.0.44

 

Updated on 26 February 2025


👉👉 Bug Fixes & Performance Improvements


👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent




For parents of students from Tamil Nadu for information and school management


Parent App is an app created by the Tamil Nadu State Education Department with a goal of engaging parents and the larger community towards the development of schools. 


Parents can access information about their children’s attendance, scholastic and co-scholastic performance. Feedback can be provided on the management of the school and welfare schemes and scholarships offered. 


Parents can view all data about the school - student enrollment, teacher details and infrastructure. 


Members of the School Management Committee can collect data of the school and surrounding habitation to plan for the development of the school. All parents of the school can access the resolutions passed by this committee.  


Parents can offer feedback across various categories like infrastructure, safety, learning and welfare schemes.  


Parents can access resources on child development, education schemes and career options to support their children.


FY 2025 - 2026 - Who among monthly salary earners need not deduct income tax

 

2025 - 2026 ஆம் நிதியாண்டு - மாத ஊதியம் பெறுவோரில் யாரெல்லாம் வருமான வரி பிடித்தம் செய்ய தேவையில்லை?


FY 2025 - 2026 - Who among monthly salary people need not deduct income tax


வருமான வரி யாருக்கெல்லாம் இல்லை..? 

2025 -26 ஆம் நிதியாண்டு


     மார்ச் 2025 -ஆம் மாதம் அடிப்படை ஊதியம் ₹. 59900 & ஏப்ரல் 2025 முதல் பிப்ரவரி 2026-ஆம் மாதம் வரை அடிப்படை ஊதியம் ₹ 61700 வரை பெறுபவர்கள் அடுத்த நிதியாண்டிற்கு (2025-26) வருமான வரி  ஏதும் செலுத்த தேவையில்லை.


எனவே அவர்கள் ADVANCE TAX  மார்ச் 2025 மாத ஊதிய கேட்பு பட்டியலில் பிடிக்க வேண்டாம்.



>>> மாதிரி வருமான வரி கணக்கீடு படிவம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Things to be followed by the students writing the public exam




 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பின்பற்ற வேண்டியவை


Things to be followed by the students writing the public examination


பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் புலனக் குழுக்களில் பகிர....


12th Std - 11th - 10th Std 

👉


👉 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பின்பற்ற வேண்டியவைகள்:


Examக்கு எடுத்து செல்ல வேண்டியவை


1) Hall Ticket ( 2 copies)

2) Blue Pen -2

( Ball Point / Ink / Gel )

3) Long Size Scale / Pencil / Sharpener /  ink & pencil Eraser / 

For Maths: Geometry Box & Pro-circle


*தேர்வு நடைபெறும் நேரம்

: காலை 10 மணி முதல் - மதியம் 1:15 மணி வரை ( 10:00 - 1:15 )


Rules:

1) தேர்வு எழுதும் பள்ளிக்கு சரியாக தேர்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு (அதாவது 9:30 மணிக்குள்) முன்பே சென்றுவிடவேண்டும்.


2) HALL TICKETஐ கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.


3) Blue  பேனாவில் மட்டும்தான் தேர்வு எழுத வேண்டும். வேறு எந்தப் பேனாவிலும் தேர்வு எழுதக் கூடாது. Sketch / Colour pencil பயன்படுத்தக்கூடாது.


4) Blue & Black pen இரண்டிலும் கலந்து கலந்து Answer எழுதக் கூடாது. 


5) Uniformல் தான் Examக்கு போக வேண்டும்.


6) தேர்வு அறைக்குள் Electronic devices, Cell Phone, Kerchief, Scientific Watch, Calculator, Purse, Towel, Bag, Empty Box, Water bottle ஆகியவற்றை வகுப்பறைக்குள் எடுத்துச் செல்ல கூடாது.


7). சாதாரண Watchஐ அணியலாம். மேலு‌ம் Chappal, Shoe, Belt வகுப்பறைக்குள் அணிந்து செல்லக் கூடாது.


8) 10 மணிக்குமேல் தேர்வுக்கு சென்றால் தேர்வு எழுத முடியாது. 9:30 மணிக்குள் செல்ல வேண்டும். 


விடை எழுத வேண்டிய முறைகள்:

1) Answer Sheetன் முன்பக்கம் உள்ள உங்களுடைய 

Exam Roll No / Name / 

Date of Birth / Subject Name / Medium / Date / Photo ஆகிய விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கின்றதா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.


2) விடையை எழுதுவதற்கு முன் பாடத்தின் பெயரை மேலே தெளிவாக எழுத வேண்டும்.


3) 100 Markக்கும் விடைகளை எழுத வேண்டும். Pass ஆனால் போதும் என்று வெறும் 40, 50 Markக்கு மட்டும் விடை எழுதி விட்டு மீதமுள்ளதை விட்டு விடக்கூடாது. 100/100ம் விடைகளை எழுத வேண்டும்.


4) சரியான Answer தெரிந்தாலும் தெரியாமல் போனாலும் தாங்கள் படித்த விடைகளை எழுதலாம்.


5) எழுதிய விடையையே மீண்டும் மீண்டும் எழுதக்கூடாது.


6) தாங்கள் விடைகளை எழுதி, ஒருவேளை அது தவறாக இருந்து அதனை அடித்து விட்டால், உடனடியாக அதனை ஆசிரியரிடம் தெரிவித்துவிட்டு, பின்னர் "இது என்னால் அடிக்கப்பட்டது" என்று விடைத்தாளில் அடித்த வினாவின் பக்கத்தில் எழுத வேண்டும்.


7) எதனையும் அடித்தோ, திருத்தியோ, கிறுக்கியோ, Whitener உபயோகப்படுத்தியோ எழுதக்கூடாது.


8) குறைந்தது 15 to 20 பக்கங்களுக்கு மேல் விடை எழுத வேண்டும். வெறும் 4 பக்கங்கள் 5 பக்கங்கள் என விடை எழுதினால் Pass ஆக முடியாது. 


9) குறிப்பாக விடையை எழுதாமல் Gap விடக்கூடாது.


10) Question Numberஐ கவனமாக எழுத வேண்டும். Question Numberஐ எழுதாமல் விட்டால் Answerஐத் திருத்த மாட்டார்கள்.


11) Question Paperல் இருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் விடை எழுத வேண்டும். எதனையும் விட்டுவிடக்கூடாது.


12) அனைத்துப் பகுதிகளுக்கும் விடை அளித்தால் மட்டுமே Passஆக முடியும்.


13) தேர்வு எழுதி முடித்தவுடன் Question Number & Page Number அனைத்தும் சரியாக உள்ளதா என கவனமாக சரிபார்க்க வேண்டும்.


14) Page Numberஐ கவனமாக Answer Sheetன் முன்பக்கம் எழுத வேண்டும்.


16) எந்த சந்தேகம் இருந்தாலும் தேர்வு அறையில் உள்ள ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெறவும்.


17) Question Paperல் எதற்கும் விடையை எழுதவோ, குறிக்கவோ கூடாது.


18) தேர்வின்போது Rough Work, Maths sum calculation போடுவதற்கு விடைத்தாளின் கீழ்ப்பகுதியை மட்டுமே  பயன்படுத்த வேண்டும். Sideல் Calculation எழுதக்கூடாது.


19) Answer Sheetல் Answer எழுதும்போது உள்பக்கம் எந்த இடத்திலும் உங்களுடைய Name & Exam Numberஐ எழுதக்கூடாது.


20) தேர்வு அறையில் தங்களுக்குக் கொடுக்கும் Attendance Sheetல் மாணவர்கள் கண்டிப்பாக கையெழுத்து போட வேண்டும்.


21) விடைத்தாளின் முன்பக்கம் உள்ள Present என்னுமிடத்தில் (√) Tick குறி போட  வேண்டும்.


22) Choose the correct answer சரியான விடை எழுதும் போது கண்டிப்பாக option ( a/ b/ c/ d)  (அ/ஆ/இ/ஈ) ( i, ii, iii, iv ) answer எழுத வேண்டும். a b c d என்னும் option போடாமல் விடை எழுதினால் அது தவறு ஆகும்.


23) எந்த விடையும் கலந்து கலந்து எழுதாமல் இருப்பது நல்லது. அதாவது தெரிந்த விடைகளை முன்னரும், தெரியாத விடைகளை யோசித்துப் பின்னரும் எழுதாமல் இருப்பது நல்லது.

Order மாறாமல்  வரிசை மாறாமல் ஒரே சீராக எழுத முயற்சிக்கவும்.


24) எந்த விடையும் incomplete ஆக எழுதக் கூடாது. முழுமையாக விடை எழுத வேண்டும்.


General Advice: 👇👇👇👇

Bit அடிப்பது /பிறரைப் பார்த்து எழுதுவது / 

பிறர் சொல்லித் தருவார்கள் என்று எதிர்பார்ப்பது போன்று தேர்வில் நேர்மை இல்லாமல் நடந்து கொள்ளக் கூடாது. தேர்வை நேர்மையாக எழுத வேண்டும். 

👇👇👇👇


தேர்வை நல்ல முறையில் எழுதி அதிக மதிப்பெண்கள் பெறவும்.


*அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்!*

👍👍👍


All the Best


👍🏽👍🏽👍🏽

💯💯💯💯🙏


Best diet for students at public exam times



பொதுத் தேர்வுகள் எழுதவுள்ள மாணவ மாணவிகளுக்கான உணவுகள்


Best diet for students at public exam times


பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளின் கவனத்திற்கு


பிளஸ்-2 தேர்வுகள் நாளை தொடங்க உள்ளது. ஆண்டு முழுக்க கண்விழித்து படித்தாலும், தேர்வு காலங்களில் நமது படிப்பு, மனநிலை, உடல் நிலை, உணவு முறை போன்றவையும் நாம் பெறும் மதிப்பெண்ணில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேர்வு தருகின்ற மன அழுத்தத்தால் மாணவர்கள் உணவு விஷயத்தில் கவனம் செலுத்த மாட்டார்கள். ஆகவே, தேர்வு நேரத்தில், மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், அவர்கள் நல்ல மதிப்பெண் பெற ஊக்குவிப்பதற்கும் உதவுகின்ற வகையில் உணவு முறைகளை அமைத்துக் கொள்ளவேண்டியது முக்கியம். அதுபற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணர் சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். 


இவர், பொது தேர்வை எதிர்நோக்கி இருக்கும் மாணவ-மாணவிகளுக்கு தரும் ஆலோசனைகள்... 


 *காலை உணவு...* 


‘‘மூளை சீராக இயங்க அதிக ஆக்சிஜனும், சீரான ரத்த ஓட்டமும் அவசியம். எல்லா சத்துகளும் கொண்ட சமச்சீரான உணவு மட்டுமே மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். மூன்று வேளை சாப்பிட வேண்டும். என்ன காரணமாக இருந்தாலும் காலை உணவை தவிர்க்கக் கூடாது. காலை உணவு தான் உடலுக்கு அதிக சக்தியைத் தருகிறது. தேர்வு நேரத்தில் காலையும், மதியமும் நன்றாக சாப்பிட வேண்டும். எளிதில் ஜீரணமாகக்கூடிய இட்லி, இடியாப்பம், புட்டு ஆகியவை காலை உணவுக்கும், இரவு உணவுக்கும் நல்லது. தோசை, பூரி, நூடுல்ஸ் போன்றவற்றை காலை வேளையில் தவிர்ப்பது நல்லது. தேவைப்பட்டால், தினை பொங்கல், சேவை நூடுல்ஸ் போன்றவைகளை காலை உணவாக சாப்பிடலாம். 


 *மன அழுத்தம் நீங்க...* 


அரிசி சாதம், தக்காளி சாதம், பருப்பு சாதம், ரசம் சாதம், கீரை சாதம் மதிய உணவுக்கு நல்லது. புளியோதரை, லெமன் சாதம் போன்ற புளிப்புள்ள சாத வகைகளைத் தவிர்க்க வேண்டும். அதுபோல் இரவில் வயிறு நிறைய சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இரவில் படுக்கச்செல்லும் போது பால் சாப்பிடலாம். பாலில் உள்ள ‘டிரிப்டோபென்' எனும் அமினோ அமிலம் மன அழுத்தத்தைத் தவிர்க்கும் அற்புத மருந்து. அதுமட்டுமல்ல, மூளையில் நினைவாற்றலுக்கு உதவும் நரம்பு செல்களை உறுதியாக வைத்திருப்பதும் இதுதான். 


*மோர் அவசியம்...* 


மதிய உணவில் தினமும் ஒரு பருப்பு, ஒரு கீரை, ஒரு காய்கறி, தயிருக்கு மாற்றாக நீர் மோர் இருக்க வேண்டும். கேரட், பீட்ரூட், அவரை, முட்டைக்கோஸ் போன்ற அடர்ந்த நிறமுள்ள காய்கறிகள் தேர்வு நேரத்தில் ஏற்றவை. மூளையை இயக்குகின்ற சத்து இவற்றிலிருந்து கிடைக்கும். வைட்டமின் ஏ நிறைந்த முருங்கைக் கீரை கண்களுக்கு மிகவும் நல்லது. மாணவர்கள் அதிக நேரம் படிக்கும் போது கண்ணில் எரிச்சல் ஏற்படாமல் பாதுகாக்கும். தேர்வு நேரத்தில் ஏற்படுகின்ற மன அழுத்தத்தால் மாணவர்களுக்கு வயிற்றில் அதிகமாக அமிலம் சுரந்து அல்சர், அஜீரணம் போன்றவை தலை காட்டும். மோர், அமிலம் சுரப்பதைக் கட்டுப்படுத்துவதோடு, ஜீரண சக்தியை ஒழுங்குபடுத்தும். 


*மாலை நேர ஸ்நாக்ஸ்* 


 மாலை நேரத்தில் சுண்டல், வேகவைத்த வேர்க்கடலை, பாதாம் பருப்பு, தேனில் ஊறவைத்த பேரீட்சை, அத்திப்பழம், முளைகட்டிய பயறுகள், காய்கறி சாலட், பழ சாலட் போன்றவற்றை சாப்பிடலாம். பாதாம் பருப்பில் உள்ள ‘செலினியம்' நினைவாற்றலுக்கு மிக நல்லது. ஊறவைத்த பாதாமை அரைத்து சூடான பாலில் கலந்து தினமும் இரண்டு வேளை குடிப்பது படித்தது மறக்காமல் இருக்க உதவும். 


*பழம் நல்லது...* 


 தேர்வு நேரங்களில் நோய்வராமல் பாதுகாக்க வேண்டுமானால் தினமும் ஏதாவது ஒரு பழம் சாப்பிட வேண்டும். பழங்களில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. நார்ச்சத்து ஜீரணத்துக்கு உதவுகிறது. வாழைப்பழம், திராட்சை, ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை, தக்காளி, பப்பாளி ஆகியவை உடனடியாக புத்துணர்வைத் தருபவை’’- இவ்வாறு தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்கு ஊட்டச்சத்து நிபுணர் ரேணுகா தேவி அதுதொடர்பான தகவல்களை வழங்கி, புத்துணர்வை ஊட்டினார். 


*முத்திரை...* 


 மறந்த விஷயங்களை நினைவுக்கு கொண்டு வருவதில் யோக முத்திரைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அந்தவகையில் தேர்வறையில் படித்த பாடங்கள் மறந்துபோனால், சின் முத்திரையை செய்து பாருங்கள். மோதிர விரலும், கட்டை விரலும் தொடும்படி மற்ற விரல்களை நேராக நீட்டுங்கள். இப்படி செய்யும்போது, படித்த விஷயங்கள் நினைவுக்கு வரும். திரும்பவும் கூறுகிறேன்.... படித்த விஷயங்கள் மட்டுமே நினைவுக்கு வரும். 


*இரவு கண்விழித்து படிக்கும்போது...* 


மாணவர்கள் தூக்கம் வராமல் இருக்க காபி, டீ அருந்துவது வழக்கம். ஆனால் இவையும் மந்தத்தன்மையை உண்டாக்கும். இவற்றுக்கு பதிலாக, இரவில் சூடான பால், லெமன் டீ, காலையில் எலுமிச்சை பழச்சாறு அல்லது காய்கறி சூப், கீரை சூப் சாப்பிடலாம். தண்ணீர் நிறைய பருகுவது, படிக்கும் போது ஏற்படுகின்ற தலைவலியைக் குறைக்கும். படிக்கின்ற நேரத்தில் சிப்ஸ், சீவல் போன்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிட வேண்டாம். தேர்வு முடியும் வரை கொழுப்பு மிகுந்த அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. முடியாத பட்சத்தில் மீன், முட்டை சாப்பிடலாம். அதுவும் இரவில் நிச்சயம் வேண்டாம். கொழுப்பு உணவு மூளையை மழுங்கடித்து தூக்கத்தை வரவழைக்கும். 

  

*தேர்வுக்கு செல்வதற்கு முன்...* 


 பரீட்சைக்கு செல்லும் முன்பு, சப்போட்டா, அத்தி இது போன்ற பழங்களை அதிகமாக சாப்பிடலாம். வால்நட்ஸ், பாதாம், உலர் திராட்சை, பேரீட்சை போன்றவை நல்ல ஆற்றலை கொடுக்கும் என்பதால் தேர்வுக்கு செல்லும் முன்பு இவற்றை சாப்பிடலாம். பசி தாங்கும். 


 *துரித உணவுகள்..* 


 குழந்தைகளுக்கு இனிப்பு சாக்லெட், நூடுல்ஸ், பாஸ்ட் புட் போன்றவை ரொம்ப பிடிக்கும். ஆனால் தேர்வு முடியும் வரை அவற்றை தவிர்ப்பது நல்லது. அதற்கு மாற்றாக, பாதாம், வால்நட், பேரீட்சை இவை மூன்றையும் நன்றாக அரைத்து, லட்டு போல உருவாக்கி உண்ண கொடுக்கலாம். இது படிக்கும்போதும், தேர்விற்கு செல்லும்போதும் சிறப்பான ஸ்நாக்ஸாக இருக்கும்.


March 2025 - School Calendar



மார்ச் 2025  - பள்ளி நாள்காட்டி


March 2025 - School Calendar 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



01-03-2025 -சனி - ஆசிரியர் குறை தீர் நாள் 


03-03-2025 - திங்கள் - +2 பொதுத் தேர்வு ஆரம்பம்.


05-03-2025- புதன் - 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஆரம்பம்.


28-03-2025 -வெள்ளி -10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஆரம்பம்.


22-03-2025 - சனி - பள்ளி முழு வேலை நாள்.


🌟அரசு விடுமுறை நாள்


31-03-2025 - திங்கள் - ரம்ஜான் பண்டிகை 


🌟RL / RH வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்...


04-03-2025 - செவ்வாய் - அய்யா வைகுண்ட சாமி பிறந்தநாள்


05-03-2025 - புதன் - சாம்பல் புதன்


12-03-2025 - புதன் - மாசி மகம்


27-03-2025 - வியாழன் - ஷபே காதர்



2024-2025ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டி - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 10-10-2024...



Revised Calendar for Academic Year 2024-2025 - Proceedings of Director of School Education, Dated : 10-10-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Sub Registrar Offices will function on Saturdays - Head of Registration Department


சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்படும் - பதிவுத் துறை தலைவர் 


Offices of the Sub Registrars will function on Saturdays - Head of Registration Department


 அரசின் வருவாயை பெருக்கும் வகையில். மாநிலம் முழுவதும் பதிவுத்துறையில் 578 சார்பதிவாளர் அலுவலகங்கள் அனைத்து சனிக்கிழமைகளில் செயல்படும் என்று பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு



Comparison of UPS , NPS & OPS



ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம், புதிய ஓய்வூதிய திட்டம் மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் - ஒப்பீடு


Unified Pension Scheme, New Pension Scheme and Old Pension Scheme - Comparison


Comparison of UPS , NPS & OPS



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Temporary removal of admission form from EMIS website

 

 EMIS Website ல் மாணவர் சேர்க்கைப் படிவம் தற்காலிகமாக நீக்கம்


இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி (ந.க.எண் : 002596/ஜெ2/2025; நாள் : 18.02.2025) 2025-2026 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1, 2025 முதல் தொடங்க இருப்பதால் பழைய மாணவர் சேர்க்கைப் படிவம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பப் படிவம் விரைவில் இங்கு கொடுக்கப்படும்.




Details of school education related cases to be heard in the Supreme Court today (27.02.2025)


உச்சநீதிமன்றத்தில் இன்று (27.02.2025) விசாரணைக்கு வரும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த வழக்குகள் விவரம்


Details of school education related cases to be heard in the Supreme Court today (27.02.2025)


 இன்றைய தினம் (27.02.2025) பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்பது தொடர்பான வழக்கின் இறுதி விசாரணையும், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கும் விசாரணைக்கு வருகிறது.


Record of Proceedings - Supreme Court of India



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




Information about the talks held with the Chief Minister and Ministers and protests

 

 முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை மற்றும் போராட்டம் குறித்த தகவல்கள் 


JACTTO GEO Information about the talks held with the Chief Minister and Ministers and protests



தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில மாவட்ட வட்டார பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம் 


இன்று மாலை எட்டு முப்பது முதல் ஒன்பது மணி வரை நடைபெற்ற மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் அவர்களுடன் பேச்சு வார்த்தையில்


 அமைச்சர்கள், முதல்வர் மற்றும் நிதித்துறை செயலாளர் , அரசு முதன்மைச் செயலாளர் ஆகியோருடன் நடைபெற்ற ஆலோசனையின் பின்பு பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் அவர்கள்  ஜாக்டோ ஜியோ  சார்பாக இன்றைய கூட்டு தலைமை பொறுப்பை ஏற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் கே பி ரக் ஷித், தமிழக தமிழாசிரியர் கழக கௌரவத் தலைவர் புலவர் ஆறுமுகம், அரசு ஊழியர் சங்க தலைவர் சீனிவாசன் ஆகியோரை அழைத்து அரசின் நிலைப்பாடு குறித்து தமது நிலையை விளக்கினார்கள் 


அரசு கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து நான்கு வாரத்திற்குள் அறிவிப்பு வெளியிடுவதாக, அரசுக்கு நான்கு வார காலம் கால அவகாசம் கேட்டு போராட்டத்தை ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்கள் 


அதன் பின்பு நடைபெற்ற ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் 


அரசு நான்கு வருட காலம் அவகாசம் எடுத்துக் கொண்டதாலும், மேலும் கால அவகாசம் அளிப்பதை அடிமட்ட தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் என்ற நிலையில்  நாளைய போராட்டத்தை தொடர்வது என்றும், மதுரை உயர்நீதிமன்ற தடையாணைக்கு இணங்க மறியல் போராட்டத்தை மாற்றி அமைத்து 


ஒட்டுமொத்த தற்செயல்விடுப்பு போராட்டம் மற்றும் காலை 11 மணிக்கு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஏகமனதாக தீர்மானித்து ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது 


அதன் அடிப்படையில் செயல்பட மாநில மாவட்ட வட்டார பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் நன்றி


Details of today's talks of JACTTO GEO officials with ministers









அமைச்சர்களுடன் ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்களின் இன்றைய பேச்சுவார்த்தை விவரங்கள்


Details of today's talks of JACTTO GEO officials with ministers


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம் 


இன்றைய தினம் காலை 11 மணி அளவில் தலைமைச் செயலகம் பத்தாவது மாடியில் மாண்புமிகு நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு  எ வ வேலு அவர்கள் தலைமையில் மாண்புமிகு நிதியமைச்சர் மற்றும் மாநில பள்ளி கல்வி அமைச்சர் மற்றும் மாண்புமிகு மனிதவளமேம்பாட்டு துறை அமைச்சர் ஆகியோர் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் உடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது


 பேச்சுவார்த்தைக்கு சுழல்முறை தலைமையாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் திரு  கே பி ரக் ஷித், அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் திரு சீனிவாசன் , தமிழக தமிழ் ஆசிரியர் கழக கௌரவத் தலைவர் புலவர் திரு ஆ ஆறுமுகம் ஆகியோர் தலைமை ஏற்றனர்


 பேச்சுவார்த்தையில் 32 ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டு தமது கருத்துகளை எடுத்துரைத்தனர் 


ஜாக்டோ ஜியோவின் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு மற்றும் ஈட்டிய விடுப்பு சரண் ஒப்படைப்பு, அரசாணை 243 ரத்து உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளும் முழுமையாக அமைச்சர் குழுவிடம் மிக விளக்கமாக தெரிவிக்கப்பட்டது 


இறுதியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அவர்கள் நமது கருத்துகள் அனைத்தையும் உள்வாங்கி இன்றைய தினம் மாலை 7 மணி அளவில் முதல்வரை சந்தித்து 8 மணி அளவில் மீண்டும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை தலைமைச் செயலகத்திலேயே சந்தித்து விவரங்களை தெரிவிப்பதாக தெரிவித்து கூட்டம் முடிவடைந்தது 


உறுதியான எந்த முடிவும் எட்டப்படாத காரணத்தினால் போராட்ட நடவடிக்கைகள் எந்தவித தடையும் இன்றி தொடர்கின்றன 


இரவு 8 மணிக்கு நடைபெறும் அமைச்சர் குழு உடனான பேச்சுவார்த்தைக்கு பின் முடிவுகள் தெரிவிக்கப்படும் 


கே பி ரக் ஷித் மாநிலத் தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி


JACTTO GEO negotiation results

 


ஜாக்டோ ஜியோ பேச்சுவார்த்தை முடிவுகள் 


JACTTO GEO negotiation results


🔥 பேச்சுவார்த்தை முடிவுற்றதை தொடர்ந்து நான்கு அமைச்சர்கள் குழு முதலமைச்சர் அவர்களை சந்தித்து விவாதிக்க உள்ளது. முதலமைச்சருடன் விவாதித்து கோரிக்கைகள் ஏற்கப்பட்டது குறித்த மற்ற விவரங்கள் தெரிவிக்கப்படும் 


🔥 முதலமைச்சருடனான சந்திப்புக்கு பிறகு அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் போராட்டத்தை தொடர்வதா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் போராட்டம் வாபஸ் பெறப்படும். இல்லையேல் போராட்டம் தொடரும்.


🔥 ஜாக்டோ ஜியோ குழு மீண்டும் 7:00 மணிக்கு அமைச்சர் பெருமக்களுடன் சந்திப்பு


TNSED Schools App New Version: 0.3.0 - Updated on 22-02-2025 - Bug Fixes & Performance Improvements

 


TNSED Schools App


What's is new..?


*🎯Bug Fixes and Performance Improvement...


*_UPDATED ON  22 February 2025


*_Version: Now 0.3.0


Link:

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis



Official app for the teachers by State School Education Department, Tamil Nadu


The app will be used by the teachers, Heads of schools, and other administrative staff to enter student, staff and school data and track the same. The app currently has modules for entering students and staff attendance, modules for screening the health of the students and referring them to the doctors, module for identifying and tracking the out of school students and module for teachers to register for teacher training.


Important notes for students who are going to write NMMS exam tomorrow 22-02-2025

 

 

 நாளை 22-02-2025 NMMS தேர்வினை எழுதவுள்ள மாணவர்களுக்கான முக்கியக் குறிப்புகள்


Important notes for students who are going to write NMMS exam tomorrow 22-02-2025


🔹 மாணவர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையம் சென்று விடுங்கள். பதற்றம் தவிர்க்கலாம். காலை 8.30 - 9.00


🔸 9.15 தேர்வறைக்கு செல்லுதல்


🔹 9.30- 11.00 : MAT


🔹11.00 - 11. 30 இடைவேளை


🔹 11. 30 - 1.00 : SAT


🔸 தேர்வு முடிந்தவுடன் கவனமாக OMR தாளினை தேர்வறை கண்காணிப்பாளரிடம்  வழங்கிய பின் - இரு வினாத்தாள்களையும் எடுத்து கொண்டு வெளியே வரலாம்.


🔹  OMR தாளில்  விடைக்கான பகுதியில் சரியாக வட்டமாக Shade செய்யவும். 


🔸 கணினி மதிப்பீடு என்பதால் - இரு விடையை Shade செய்தாலோ - அல்லது ஒயிட்னர் மூலம் அழித்து வேறு ஒரு விடை Shade  செய்தாலோ அது தவறாக எடுத்து கொள்ளப்படும். மதிப்பெண் கிடைக்காது.


🔹 OMR தாளில் பெயர் - புகைப்படம் விவரம் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. 

செய்ய வேண்டியவை - உங்கள் கையெழுத்து இடுதல் மற்றும் அறை கண்காணிப்பாளரிடம் Present shade செய்து கையெழுத்து பெறுதல் மட்டுமே.


🔹 வினாத்தாளில் உட்பகுதிகளில் குறித்தல் கூடாது. இறுதி இரு பக்கம் Rough work செய்து பார்க்க வெள்ளைத் தாள் இணைக்கபட்டுள்ளது. அதில் செய்து பார்க்கலாம்.


🔸 OMR தாளினை கருப்பு பால் பாயிண்ட் பேனா மட்டுமே பயன்படுத்தி shade செய்ய வேண்டும்.


🔹 பொதுவாக செய்யும் தவறு : 5 வது கேள்வி தெரியாததால் Shade செய்யாமல் விட்டிருப்போம். 6வது கேள்வி எழுதும் போது 5வது கேள்வியில் shade செய்வோம். 


இது அடுத்து வரும் அனைத்து வினாக்களும் தவறாக Shade செய்யும் வாய்ப்பினை உருவாக்கும்.


அதனை தவிர்க்க குறிக்கப்படாத வினாவிற்கான விடையின் மீது அளவுகோல் / ஹால் டிக்கெட் வைத்து மறைத்துவிடலாம்.


🔸எனவே ஒவ்வொரு வினாவிற்கும் விடையளிக்கும் போது வினா எண் பார்த்து shade செய்யவும்.


🔹 180 வினாக்கள் - 180 நிமிடங்கள். ஒரு வினாவிற்கு 1 நிமிடம். நீண்ட நேரம் ஒரே வினாவை தீர்வு காணாமல் அடுத்த கேள்விக்கு செல்லவும்.


🔸 MAT பகுதி விடையளிக்கும் போது அனைத்து வகையிலும் யோசிக்க முயற்சிக்கவும்.


சிறந்த முறையில் தேர்வு எழுதி - வாழ்வின் முன்னேற்ற படியின் முதல் படியாக இந்த தேர்வின் அனுபவத்தை ஏற்று பயணிக்க வாழ்த்துகள்.


NMMS : தேர்வறையில்  மாணவர்களுக்கு சில Tips...


வினாத்தாளில் கடைசி பக்கத்தில் (Rough work) எழுத வேண்டியவை


🔸 ஆங்கில ALPHABET சார்ந்த வினாக்கள் அதிகம் இடம் பெறுவதால்


ABCDE... எழுதி 1234...

ZXYWV ... எழுதி 1234...


🔸 8 திசைகள்


🔸 வர்க்க எண்கள் 20 வரை

1² = 1

2² = 4

3² = 9

4² = 16

5² = 25

6² = 36

7² = 49

8² = 64

9² = 81

10² = 100

11² = 121

12² = 144

13² = 169

14² = 196

15² = 225

16² = 256

17² = 289

18² = 324

19² = 361

20² = 400


🔸கன எண்கள் 10 வரை

1³ = 1

2³ = 8

3³ = 27

4³ = 64

5³ = 125

6³ = 216

7³ = 343

8³ = 512

9³ = 729

10³ = 1000


🔸பகா எண்கள் 100 வரை

2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97



நினைவில் கொள்க :


🔸 காலம் கணக்குகள் 


🔸BIDMAS


🔸 இரு எண் கூடுதல் மூன்றாவது எண்


🔹 மூன்று எண் கூடுதல் நான்காவது எண்


🔸 முதல் எண் - மூன்றாவது எண்

இரண்டாம் எண் - நான்காம் எண் தொடர்பு


🔹 வரிசை கணக்குகளில் இடது , வலது


🔸 கடிகார திசை - கடிகார எதிர் திசை


🔸 வர்க்கம் + 1 / வர்க்கம் - 1


🔹 கனம் + 1 / கனம் - 1


🔸 இரு எண் பெருக்கல் மூன்றாவது எண்


🔹 எண்களின் மடங்கு எ. கா. x 3 , x 4


🔸 எண்களின் அடுக்கு

எ. கா. 2 x 2 , 2 x 2 x 2 , ...


🔹பகா எண்ணின் கூடுதல்


🔸 எண்கள் / எழுத்துகளின் கண்ணாடி பிம்பங்கள்


கவனம் தேவை


🔹 SAT கூற்று, காரணம் கேள்விகள்


🔸 பொருத்துக விடைகள் எ. கா 

i-a, ii -C , iii - d , iv_ b


🔹 தவறான கூற்று எது ? கேள்வியை சரியாக கவனிக்காமல் சரியான 3ல் ஒன்றை டிக் செய்வது


🔸 இயன்றவரை சிந்தித்து விடை தரவும்


🔹 இறுதி 10 நிமிடத்தில் விடுபட்ட அனைத்து வினாக்களுக்கான விடைகளையும் shade செய்யவும்.


🔸 Minus மதிப்பெண் இல்லை. எனவே அனைத்து கேள்வியும் விடை தருவது அவசியம்.


🔹 ஒவ்வொரு மதிப்பெண்ணும் அவசியம். 


எதிர்கால போட்டி தேர்வுகளுக்கு விதையாக இத்தேர்வு அமையட்டும்.


அன்பும் வாழ்த்துகளும்💐💐💐💐


IFHRMS Guidelines regarding GPF Loan for all DDOs


 அனைத்து ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு GPF Loan தொடர்பான IFHRMS வழிகாட்டுதல்


மதிப்பிற்குரிய ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர் அவர்களே, 

பொது வருங்கால வைப்பு நிதி தற்காலிக முன்பணம் மற்றும் பகுதி இறுதித் தொகை கோரிக்கை களஞ்சியம் செயலி மூலம் விண்ணப்பிக்கவும், பின்னர் IFHRMS இலிருந்து பெறப்பட்ட IFHRMS செயல்முறைகளை கேட்புப் பட்டியல் உடன் இணைக்கவும்.


IFHRMS Guidelines regarding GPF Loan for all Paying Drawing Officers


Respected  DDO's,

GPF temporary adavance and PFW request apply through Kalanjiam app then proceeding ibtained  from Ifhrms and attached the  IFHRMS proceedings in bills


World Mother Language Day pledge to be taken today (21-02-2025) at 11 am



 இன்று (21-02-2025) அனைத்து அரசு அலுவலகங்களிலும் காலை 11மணிக்கு எடுக்க வேண்டிய உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி


World Mother Language Day pledge to be taken today (21-02-2025) at 11 am in all government offices



>>> உறுதிமொழி - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



2572 Assistant Surgeons (General) appointment - Provisional Selection List Released by MRB


2572 உதவி அறுவை சிகிச்சை நிபுணர்கள் (பொது) நியமனம் - தற்காலிகத் தேர்வுப் பட்டியல் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது


2572 Assistant Surgeons (General) appointment - Provisional Selection List Released by MRB


GOVERNMENT OF TAMIL NADU

MEDICAL SERVICES RECRUITMENT BOARD (MRB)

th Floor, DMS Building, 359, Anna Salai, Teynampet, Chennai-600 006.

Website: www.mrb.tn.gov.in e–mail: mrb.tn.nic@gmail.com

Phone no: 044 -24355757

PSL No. 01/MRB/2024 , Dated: 20.02.2025

Provisional selection List for the post of Assistant Surgeon (General)

Sub: Medical Services Recruitment Board – Assistant Surgeon (General), 2024 - List of Provisionally selected candidates - Published.

Ref: Notification No.01/MRB/2024, Dated: 15.03.2024

*******

 The list of candidates selected provisionally for appointment to the post of Assistant Surgeon (General) in Tamil Nadu Medical Service is published in Annexure – I.

 The provisional selection of candidates whose names are withheld are shown in the Annexure – II



>>> Click Here to Download...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Local holiday declared for Pudukkottai district on March 10

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 10 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு Local holiday declared for Pudukkottai district on March 10. புதுக்கோ...