கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தகவல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தகவல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Kalanjiyam Mobile App New Version Update - Version 1.21.2 - Updated on 07-04-2025

 

 Kalanjiyam App Update செய்த பிறகு New / Old Regime தேர்வு செய்ய முடிகிறது


 KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.21.2


IFHRMS Kalanjiyam Mobile App New App New Update 


Version 1.21.2


Updated on 07-04-2025



*Whats New?


CPS Menus are updated

IT Regime selection updated for 25-26FY

Annual Mustering Enhancement

Minor Bug Fixes



👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾


https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam



Kalanjiyam app அப்டேட் செய்த பிறகு income tax option ல் சென்று வரும் 2025-26 நிதியாண்டிற்கான  வருமான வரி கணக்கீட்டு முறையை அதாவது புதிய முறையா அல்லது பழைய முறையா என்று தேர்ந்தெடுக்கும் வசதி enable செய்யப்பட்டுள்ளது.



About this App

Kalanjiyam is Employee / Pensioner management app, User can apply leaves, Payrolls


Kalanjiyam is Employee / Pensioner management app. User can apply their leaves and HR requests, also their monthly, annual payrolls and many more.


சென்னை உயர்நீதிமன்றம் - வேலைவாய்ப்புகள்


 சென்னை உயர்நீதிமன்றம் - வேலைவாய்ப்புகள் அறிவிப்பு, நாள் : 06-04-2025


Madras High Court Job Notification



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


08-04-2025 அன்று நடைபெற்ற JACTTO GEO மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்

 

08-04-2025 அன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்


இன்று 08-04-2025 சென்னையில் நடந்த JACTTO GEO மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.


1) 22-04-2025 ல் மாவட்டத் தலைநகரில் பேரணி



2) 24-05-2025ல் மாவட்ட அளவில் ஆயத்தக் கூட்டம்



3) ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் வேலை நிறுத்தம்


2025-2026ஆம் நிதியாண்டு - அடிப்படை ஊதியத்திற்கு ஏற்ப உத்தேச வருமான வரி விவரம்

 

 2025-2026ஆம் நிதியாண்டு - அடிப்படை ஊதியத்திற்கு ஏற்ப உத்தேச வருமான வரி விவரம்


Financial Year 2025-2026 - Proposed Income Tax Details Based on Basic Pay



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


களஞ்சியம் செயலியில் பழைய அல்லது புதிய முறையில் வருமான‌வரி பிடித்தம் தேர்வு செய்யும் முறை

 

களஞ்சியம் செயலியில் பழைய அல்லது புதிய முறையில் வருமான‌வரி பிடித்தம் தேர்வு செய்யும் முறை


How to choose old or new regime income tax deduction method in the Kalanjiyam app



🌹அனைவருக்கும் வணக்கம்...


களஞ்சியம் செயலி வழியே வருமான‌வரி பிடித்தம் செய்யும் பழைய அல்லது புதிய முறை தேர்வு செய்தல் தொடர்பாக...


🌹தாங்கள் களஞ்சியம் வழியே தேர்ந்தெடுக்கப்பட்ட முறை( Old or New) என்பது IFHRMS -ல் மாதம் தோறும் பிடித்தம் செய்வதற்காக மட்டுமே...*


1.New Regime தேர்ந்தெடுத்தால்‌ App -ல் மட்டும் select செய்தால் போதுமானது... இம்முறையில் துல்லியமாக கணக்கீடு செய்து பிப்ரவரி 2026 வரை பிரித்து சம தவணைகளாக வரும்....


2. Old Regime App-ல் தேர்ந்தெடுத்தால் தவறாது https://www.karuvoolam.tn.gov.in/web/tnta/ இணையதளத்திற்கு சென்று INCOME TAX Self declaration செய்ய வேண்டும்... அதில் நீங்கள் கழிக்க கூடிய அனைத்து தகவல்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்...


உதாரணமாக: Housing loan, LIC, PLI & NPS... அப்பொழுது தான் சரியான தொகையை பிடித்தம் செய்யும்...


நன்றி...


பணி நிறைவு பெற்ற அரசு ஊழியருக்கு, 8வது ஊதியக் குழுவின் புதிய ஓய்வூதியத்திற்கான நிர்ணயக் காரணி வழங்கப்படா விட்டால் ஏற்படும் இழப்பீடு எவ்வளவு?



எட்டாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறை படுத்தப்படும் முன்பு, பணி நிறைவு பெற்ற, ஒரு அரசு ஊழியருக்கு, ஊதியக் குழுவின் புதிய ஓய்வூதியத்திற்கான நிர்ணயக் காரணி வழங்கப்படா விட்டால் ஏற்படும் இழப்பீடு தோராயமாக எவ்வளவு?


பணிக் காலம் 31 ஆண்டுகள்


பணி நிறைவுத் தேதி 30.11.2025


பணி நிறைவடையும் போது பெற்ற அடிப்படை ஊதியம் ரூ 1,00,000


நிர்ணயம் செய்யப்படும் அடிப்படை ஓய்வூதியம் ரூ 50,000


8 வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஊதிய நிர்ணயக் காரணி 1.9 என வைத்துக் கொள்வோம்.


ஓய்வு பெற்றவர்களுக்கும், 8 வது ஊதியக் குழுவின் பரிந்துரை அமல் படுத்தப் பட்டால், 


01.01.2026 அன்று நிர்ணயிக்கப் படும், அடிப்படை ஓய்வூதியம் 

ரூ 50,000 x 1.9 = ரூ 95,000

DA ரூ 0

மொத்தம் = ரூ 95,000


ஓய்வு பெற்றவர்களுக்கு, 8 வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் வழங்கப்படா விட்டால், பெறும் ஓய்வூதியம் :


அடிப்படை ஓய்வூதியம் ரூ 50,000

01.01.2026 அன்று அகவிலைப்படி 61% (தோராயமாக) - ரூ 30,500


மொத்த ஓய்வூதியம் - ரூ 81,500


ஒவ்வொரு மாதமும் ஏற்படும் ஓய்வூதிய இழப்பு :


ரூ 95,000 - ரூ 80,500 = ரூ 14500.


ஒரு ஆண்டிற்கு இழப்பு:


ரூ 14500 x 12 = ரூ 1,64,000.


பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் மேற்கண்ட மாதிரி கணக்கீடு செய்யப் பட்டுள்ளது.


8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் அரசின் கொள்கை முடிவு பற்றிய அறிவிப்பு வந்தால் மட்டுமே, உண்மை நிலை தெரிய வரும்.


Kalanjiyam Mobile App New Version Update - Version 1.21.1 - Updated on 06-04-2025

 


 KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.21.1


* IFHRMS Kalanjiyam Mobile App New App New Update 


Version 1.21.1


Updated on 06-04-2025



*Whats New?


CPS Menus are updated

IT Regime selection updated for 25-26FY

Annual Mustering Enhancement

Minor Bug Fixes



👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾


https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam



Kalanjiyam app அப்டேட் செய்த பிறகு income tax option ல் சென்று வரும் 2025-26 நிதியாண்டிற்கான  வருமான வரி கணக்கீட்டு முறையை அதாவது புதிய முறையா அல்லது பழைய முறையா என்று தேர்ந்தெடுக்கும் வசதி enable செய்யப்பட்டுள்ளது.



About this App

Kalanjiyam is Employee / Pensioner management app, User can apply leaves, Payrolls


Kalanjiyam is Employee / Pensioner management app. User can apply their leaves and HR requests, also their monthly, annual payrolls and many more.


6, 7 & 8ஆம் வகுப்பு - முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் தரவிறக்கம் செய்ய வலைதள முகவரி

 

6, 7 & 8ஆம் வகுப்பு - முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள் தரவிறக்கம் செய்ய வலைதள முகவரி


Website address to download Annual exam question paper for 6th, 7th & 8th Standard



https://exam.tnschools.gov.in/#/


01-04-2025ல் இருந்து IFHRMSல் புதிய Update


01.04.2025ல் இருந்து IFHRMSல் புதிய Update


1. இனி வரும் நாட்களில் மின்சார கட்டணம் நேரடியாக EB account வில் செலுத்துவது போன்று இருக்கும்.


2. Selection grade arrear, increment arrear போன்றவற்றை தயார் செய்யும் பொழுது auto arrear calculation பயன்படுத்த வேண்டும். ( March 2024 முதல் எனேபிள் செய்யப்பட்டுள்ளது).


3. வங்கி கணக்கு எண் மாற்றம் செய்வதற்கு இனிமேல் கருவூலத்திற்கு செல்ல தேவையில்லை எப்பொழுதும் போன்ற DDO approval செய்தாலே போதுமானது.


4. புதிதாக பணியேற்றுள்ள பணியாளர்களுக்கு CPS நம்பர் புதிய IFHRMS number create செய்யும்பொழுது ஆட்டோமேட்டிக்காக generate ஆகும் இதில் basic pay zero என்றும் nominee details empty ஆகவும் இருக்கும் இதனை பின்னர் அப்டேட் செய்து கொள்ளலாம்.


5. Plus minus report சென்ற மாதம் வரை html file ஆக டவுன்லோட் ஆகியது இதில் *show all இன்று கொடுத்தோம் என்றால் மட்டுமே பில் குரூப்பில் உள்ள அனைத்து பணியாளர்களின் பெயரும் enable ஆகும்* இம்மாதத்தில் bill group வாரியாக plus minus report மற்றும் html பதிலாக pdf ஆக டவுன்லோட் ஆகும் என்று நம்புகிறோம்



வட்டாரக் கல்வி அலுவலர் மாறுதல் கலந்தாய்வு குறித்த தகவல்

 

வட்டாரக் கல்வி அலுவலர் மாறுதல் கலந்தாய்வு குறித்த தகவல் BEOs Transfer Counseling 


Information regarding the Block Education Officer transfer counselling 



 தமிழ்நாடு வட்டாரக் கல்வி அலுவலர் சங்கம்

❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️ 


      05-04-2025 காலை திருச்சி மாவட்டம் முசிறியில் திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்ட வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் நடத்தினார்.


  இக்கூட்டம் தொடங்கும் முன் நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்ட பொறுப்பாளர்களுடன் மதிப்பிற்குரிய தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து பணி ஓய்வு பெற்ற வட்டாரக் கல்வி அலுவலர்கள் பணிக்கொடை பெற இயலாமல் இருப்பது, தணிக்கைத் தடை மற்றும் கலந்தாய்வு குறித்து வலியுறுத்தப்பட்டது.


 07-02-2019 முதல் ஒரு ஆண்டு ஊதிய உயர்வு வழங்கி ஊதியம் நிர்ணயம்  செய்துள்ளது சரியானது என்பதை கூறியதோடு, கூட்டம் நடைபெறும் போது கூட்ட மேடையிலும் மதிப்பிற்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் தெரிவித்தார்.


 தணிக்கை நீக்கம் குறித்து நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரிடம்  விவரம் தெரிவிப்பதாகவும் கூறினார்.


100 days Challenge மற்றும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதால் முடிவுற்றவுடன் கலந்தாய்வு  நடத்திடுவதாகவும் கூறினார்.


- இரா. தமிழ்ச்செல்வன் பொதுச் செயலாளர் தமிழ்நாடு வட்டாரக் கல்வி அலுவலர் சங்கம்


முழு ஆண்டுத் தேர்வு 2025 - வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள்

 

முழு ஆண்டுத் தேர்வு 2025 - வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள்


Annual Exam 2025 - QP & Answer Key Download Schedule


Annual Examination 2025 - Dates to download question papers and answer keys


6 - 8ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு - 2025 வினாத்தாள்கள் மற்றும் விடைக் குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Hi Tech Lab, Smart Classrooms பயன்படுத்துதல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் அறிவுறுத்தல்

 

Hi Tech Lab, Smart Classrooms பயன்படுத்துதல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் அறிவுறுத்தல்


 உயர் தொழில்நுட்ப ஆய்வகம், திறன் வகுப்பறை பயன்படுத்துதல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் அறிவிப்பு


 Respected DEOs,


Kindly disseminate the following instructions to schools immediately.


தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு, 


 Hi-Tech labs & Smart Classrooms 100% பணிகள் நிறைவடைந்த பள்ளிகளில் ,


தினந்தோறும் காலை 10 am மணி முதல் மாலை 4 pm வரை 


Hi-Tech Lab & Smart Classroom ஆகியவற்றை on செய்து வைத்திருக்க வேண்டும்.


 கற்றல் கற்பித்தலுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும். 


வாரம் ஒரு முறை தூய்மைப்படுத்தி பராமரித்தல் வேண்டும். 


 தொழில்நுட்ப குறைபாடுகள் ( server computer not working, smart board not working, UPS Problem, meraki problem) இருப்பின் 044 - 40116100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு complaints - Raise கொடுக்க வேண்டும். 


Network problem இருப்பின் தங்கள் பள்ளிக்கு இணைய இணைப்பு கொடுத்த bsnl vendor ஐ தொடர்புகொண்டு உடனுக்குடன் சரி செய்யவும். 


Electrical problem- low/ high voltage, circuit problem, wiring problem இருப்பின் தங்கள் பகுதிக்கு உட்பட்ட  EB ( மின்சாரத்துறை) 


அலுவலகத்தை தொடர்பு கொண்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்கவும்.


 விடுமுறை நாட்களில் பாதுகாப்பாக அறையினை பூட்டி, தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், கண்காணிக்கவும் வலியுறுத்தப்படுகிறது.


Hi-Tech Lab and Smart Classroom இன் முக்கியத்துவம் உணர்ந்து அதனை முறையாக பயன்படுத்தவும், அனைத்து ஆசிரியர்களும் கற்றல் கற்பித்தலை வலுப்படுத்தவும், மாணவர்களின் திறனை கண்டறிந்து ஊக்கப்படுத்தவும் சிறந்த முறையில் ஒத்துழைப்பு அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.


தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.3250 வரை குறையும் - பங்கு சந்தை நிபுணர் கணிப்பு

 


தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.3250 வரை குறையும் - பங்கு சந்தை நிபுணர் கணிப்பு


தங்கத்தின் விலை 38% குறையும் என கணிக்கிறார் மில்ஸ்.


டிரம்ப் உலக நாடுகள் மீதான பரஸ்பர வரி விதிப்பை அறிவித்திருக்கிறார். அதன் எதிரொலியாக தங்கம் மீண்டும் உச்சம் தொட்டிருக்கிறது.


தங்கம் விலை சுமார் 38 சதவிகிதம் வரை வீழ்ச்சி அடையும் என நிபுணர் ஜான் மில்ஸ் கணிப்பு


நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-உம், பவுனுக்கு ரூ.400-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்துள்ளது.


இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.8,560 ஆகும். இதில் 38% என்பது ரூ.3250 ஆகும்.


இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.68,480 ஆகும்.


இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.112 ஆகும்.


என்ன சொல்கிறார் நிபுணர்?

தங்கம் விலை குறையும்! - எவ்வளவு?



உலகமே தங்கம் விலை உயர்ந்துகொண்டே வருகிறது, இன்னமும் உயரும் என்ற பயத்தில் இருக்கிறது. பெரும்பாலான நிபுணர்களின் கருத்து இந்தியாவில் தங்கம் விலை 2027-ம் ஆண்டிற்குள் ரூ.1 லட்சத்தை தொட்டுவிடும் என்பது ஆகும்.


ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, அமெரிக்காவை சேர்ந்த மூத்த பங்குச்சந்தை நிபுணரான ஜான் மில்ஸ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தங்கம் விலை 38% குறையும் என்று கூறியுள்ளார்.


அவர் தற்போதுள்ள தங்கத்தின் விலையில் 38 சதவீதம் வரை குறையலாம் என்று கூறியுள்ளார். அதன் அடிப்படையில் பார்க்கும்போது கிராம் ஒன்றுக்கு ரூ. 3,250 வரையில் தங்கத்தின் விலை குறையக்கூடும்


அவர், "அடுத்த ஐந்து ஆண்டுகளில், தங்கம் விலை ஒரு அவுன்ஸுக்கு 1,820 டாலர்களாக குறையும். இது கிட்டதட்ட 38 சதவிகித வீழ்ச்சி ஆகும்" என்று கணித்துள்ளார்.


இப்போதைய ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,153.64 டாலர்கள் ஆகும்.


சமீப நாள்களாகவே தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களிலேயே சவரன் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை உயர்ந்திருந்தது. அதிலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியே வரி விதித்து அதனை அறிவித்துள்ளார். இதுவும் உலக சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.


உச்சத்தில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் இந்திய ரூபாயில் 2 லட்சத்து 59 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது. ஒரு அவுன்ஸ் என்பது 28.3 கிராம் ஆகும். அந்த வகையில், சர்வதேச சந்தையில் கிராம் ஒன்று சுமார் ரூ.8,330 ஆக உள்ளது என கூறலாம். சென்னையை பொறுத்தவரை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதன்மூலம், ஒரு சவரன் தங்கம் ரூ.68,480 ஆகவும், ஒரு கிராம் ரூ.8,560 ஆகவும் உயர்ந்துள்ளது. விரைவில் கிராம் ரூ.10 ஆயிரத்தை எட்டும் என பலர் கூறி வருகின்றனர்.



தங்கம் விலை 38% குறையும் - கணிப்பு

உலக அளவில் தங்கத்தின் விலை அதிரடியாக 38% வரை குறையக் கூடும் என பங்குச் சந்தை நிபுணரின் கணிப்புதான் பலரையும் வியக்க வைத்துள்ளது. 


அதாவது, யாரும் எதிர்பார்க்காத உச்சத்தை தொட்டிருக்கும் தங்கத்தின் விலை சட்டென்று அதிரடியாக 38% வீழ்ச்சி அடையும் என அமெரிக்காவை சேர்ந்த பங்குச் சந்தை நிபுணரான ஜான் மில்ஸ் கணித்துள்ளாராம். அதாவது, கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.89,510 என்று இருந்த நிலையில், இதுவே அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.55,496 ஆகக் குறையலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.




Gold Price: ஜான் வில்ஸ் கூறும் 3 காரணங்கள்

ஜான் மில்ஸ் இதற்கு 3 காரணங்களை சொல்கிறார். தங்கம் விலை அதிகரிப்பால், தங்கச் சுரங்கங்களில் தங்கம் தோண்டுவது அதிகரிக்கும்; தங்கத்தின் மீதிருக்கும் தற்போதைய டிமாண்ட் எதிர்காலத்தில் குறைய வாய்ப்பிருக்கிறது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடு குறையாது; உலகில் உச்சம் தொடும் ஒன்று நிச்சயம் ஒருநாள் வீழ்ச்சி அடையும் என்பதை வரலாறு நெடுக பார்த்திருக்கிறோம் - என இந்த மூன்று காரணங்களால் தங்கம் விலை 38% குறையும் என்கிறார்.



Gold Price: கணிப்பு மெய்யாகுமா...?

ஆனால், இன்னும் சில பொருளாதார நிபுணர்களோ இவர் கூறும் காரணங்களை ஏற்க மறுக்கின்றனர். தங்கத்தின் டிமாண்ட் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றாலும் அது இந்தளவிற்கு வீழ்ச்சியை காணாது என்றும் சிலர் கூறுகிறார்கள். சர்வதேச அரசியல் நிலவரத்தை  ஜான் வில்ஸ் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள். நிச்சயம் தங்கம் விலை 38% வீழ்ச்சி அடையாது என பலரும் கருதுவது குறிப்பிடத்தக்கது.


ஜான் மில்ஸ் என்கிற அமெரிக்க அனலிஸ்ட் தங்கத்தின் விலை தற்போதைக்கு அதிகரித்தாலும், நீண்ட கால நோக்கில் கணக்கிட்டால் 38% வரை குறையும் என கணித்திருக்கிறார். அதே சமயம், தற்போதைய தங்கத்தின் விலைக்கும், இந்த கணிப்பிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.


இந்த மூன்று நிகழ்வுகள் நடந்தால், தங்கத்தின் விலை குறையும் என கணிக்கிறார் மில்ஸ்.



1. தங்கத்தின் விலை அதிகரிப்பதால், தங்கச் சுரங்கங்களில் தங்கம் தோண்டுவது அதிகரிக்கும் என கணிக்கிறார் மில்ஸ்.


2. தங்கத்தின் மீதிருக்கும் இந்த டிமாண்ட் எதிர்காலத்தில் குறைய வாய்ப்பிருக்கிறது. மத்திய வங்கிகளும், முதலீட்டாளர்களும் தங்கத்தில் இப்போது அதிக அளவில் முதலீடு செய்கிறார்கள். அதே சமயம், இந்த முதலீடு மேலும் அதிகரிக்காது என சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு இது குறையலாம் அல்லது இதே அளவில் இருக்கலாமே ஒழிய, முதலீடு அதிகரிக்காது .


3. பொதுவாகவே உச்சம் தொடும் எந்தவொரு விஷயமும் , கீழ் இறங்கும் என்பதே இத்தனை ஆண்டுகால வரலாறு நமக்கு கற்றுத் தந்திருக்கிறது.


ஜான் மில்ஸ் இப்படி கணித்திருந்தாலும், அமெரிக்க வங்கி, கோல்ட்மேன் சேக்ஸ் உள்ளிட்ட பிரபல கணிப்பாளர்கள் தங்கத்தின் விலை குறுகிய காலத்தில் உயரவே வாய்ப்பதிகம் என கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.


பதவி உயர்வுக்கு TET அவசியமா? என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு



பதவி உயர்வுக்கு TET அவசியமா?  என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு


Supreme Court order in the case of Is TET necessary for promotion?



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பதவி உயர்வுக்கு TET அவசியமா?  என்ற வழக்கில் 27-03-2025 அன்று மாண்பமை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் முடிவில்,


NCTE நிறுவனம் மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் அலுவலகத்திற்கு TET இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளவர்கள், TET யாருக்கெல்லாம் அவசியம் என்பது குறித்து தெளிவான விபரங்களை அளித்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணைக்கு உதவிட மாண்பமை உச்சநீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


UPON hearing the counsel the Court made the following

 O R D E R

1. Heard in part.

2. List on 03rd April, 2025 once again, high on board.

3. In the meanwhile, National Council for Teacher Education (NCTE) shall provide to the office of the learned Attorney General for India all data and information that is sought to facilitate advancement of submissions on the point of the Teachers’ Eligibility Test (TET) being a mandatory qualification for teachers in position although, in the past, NCTE has issued orders granting exemption to a specified class.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


அரசுப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கு சேர்ந்துள்ள மாணவர்கள் எண்ணிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தகவல்


 அரசுப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கு சேர்ந்துள்ள மாணவர்கள் எண்ணிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தகவல்


தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கு 1,17,310 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்


1 ஆம் வகுப்பில் மட்டும் 1,05,286 பேர் சேர்ந்துள்ளனர்


மாணவர் சேர்க்கை தொடங்கியது முதல் ஏராளமானோர் ஆர்வமுடன் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்"


 - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தகவல்



ஒரு மாதத்திற்கு முன்பே மியான்மர் நிலநடுக்கத்தை கணித்து சொன்ன ஹைதராபாத் புவியியல் ஆய்வாளர் : குவியும் பாராட்டுகள்

 


ஒரு மாதத்திற்கு முன்பே மியான்மர் நிலநடுக்கத்தை கணித்து சொன்ன ஹைதராபாத் புவியியல் ஆய்வாளர் - குவியும் பாராட்டுகள்


Hyderabad geologist predicts Myanmar earthquake a month in advance - heaps of praise



மியான்மருக்குப் பிறகு ஹைதராபாத் நில அதிர்வு ஆர்வலரின் X பதிவு விவாதத்தைத் தூண்டுகிறது 


கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, மியான்மரின் மண்டலே அருகே ஒரு நிலநடுக்கம் ஏற்படும் என்று ஹைதராபாத்தைச் சேர்ந்த பூகம்ப ஆர்வலர் ஒருவர் பிப்ரவரி 28 அன்று வெளியிட்ட X பதிவு, நில அதிர்வு வல்லுநர்கள் மற்றும் குடிமக்கள் மத்தியில் விவாதத்தைத் தூண்டியுள்ளது. 


கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, அந்தப் பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு. சைனிக்புரியைச் சேர்ந்த ஜிஐஎஸ் பொறியாளரும், இயந்திர பொறியியலில் டிப்ளோமா பெற்ற எலூரைச் சேர்ந்தவருமான சிவா சீதாராம் பகிர்ந்து கொண்ட இந்த கணிப்பு, மண்டலே, நெய்பிடாவ் மற்றும் சிட்வே போன்ற பகுதிகளை உள்ளடக்கிய ஆயத்தொலைவுகள் 21.54°N 94.34°E க்கு அருகில் ~6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. கணிப்பு தேதி பிப்ரவரி 28 ஆகும். 


மார்ச் மாத இறுதியில் மியான்மரின் சாகிங் ஃபால்ட்டில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 


அவர் ஹைதராபாத்தில் சீஸ்மோ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவினார். "நான் பல அளவுருக்களைப் பயன்படுத்தினேன். 100 இல் 18 வழக்குகள் என்பது நல்ல வெற்றி விகிதம். சில நேரங்களில் தேதி ஒன்று முதல் சில மாதங்கள் வரை மாறுபடலாம், ஆனால் உண்மையான மற்றும் கணிப்புகள் ஒரே மாதிரியாக இருக்கும், வெற்றிகரமான கணிப்புகளில் இடம் மற்றும் அதிர்வெண்" என்று அவர் மேலும் கூறினார்.


ஜிஐஎஸ் அமைப்புகளுடன் பணிபுரியும் சீதாராம், 2004 முதல் பூகம்பங்களை ஆராய்ந்து வருகிறார், ஆரம்ப எச்சரிக்கைகளை வெளியிடுவதற்கு சூரிய கதிர்வீச்சு வடிவங்கள், புவி காந்தப்புல மாற்றங்கள், வளிமண்டல தரவு மற்றும் வானிலை மாதிரிகள் போன்ற முறைகளின் கலவையைப் பயன்படுத்துவதாகக் கூறுகிறார். 







அவரது வலைத்தளமான seismo.in, 10க்கும் மேற்பட்ட நாடுகளில் நிலநடுக்கங்களைக் கண்காணித்து, ஜப்பான், எத்தியோப்பியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா போன்ற பகுதிகளுக்கான கணிப்புகளையும் உள்ளடக்கியது. அவர் ஆறு ஆண்டுகால பூகம்பத் தரவைப் பராமரித்து வருவதாகவும், 100க்கும் மேற்பட்ட கணிப்புகளைச் செய்துள்ளதாகவும், அவற்றில் சுமார் 18 கணிப்புகள் உண்மையான நிகழ்வுகளுடன் ஒத்துப்போகின்றன என்றும் கூறுகிறார். 


அடுத்த சில மாதங்களில் தர்மசாலாவில் 7க்கும் மேற்பட்ட ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை அவர் இப்போது கணித்துள்ளார். தற்செயல் நிகழ்வு இருந்தபோதிலும், நிபுணர்கள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். 


தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (NGRI) முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் ஸ்ரீநாகேஷ், சிவாவின் பணிகளைக் கவனித்து வருவதாக ஒப்புக்கொண்டார். "அவரது கணிப்புகளை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்க முடியாது, ஆனால் அவை அறிவியல் பூர்வமாக சரிபார்க்கப்பட வேண்டும்," என்று அவர் கூறினார். இந்திய மற்றும் மியான்மர் டெக்டோனிக் தட்டுகள் தொடர்பு கொள்ளும் சாகிங் ஃபாயில்ட்டில் சமீபத்திய நிலநடுக்கம் ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். 


அங்கு ஏற்பட்ட ஒன்பது பெரிய நிலநடுக்கங்களில், ஏழு ரிக்டர் அளவை விட 7 அதிகமாக இருந்தது. கடைசியாக 2012 இல் ஏற்பட்டது. அரசாங்கங்கள் கணிப்புகளை மட்டுமே நம்புவதற்குப் பதிலாக, அதிக ஆபத்துள்ள மண்டலங்களில் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்ரீநாகேஷ் வலியுறுத்தினார். 



X post by Hyderabadi Seismology Enthusiast Sparks Debate After Myanmar 


An X post on February 28 by a Hyderabad-based earthquake enthusiast predicting a tremor near Mandalay, Myanmar, has triggered discussion among seismologists and citizens alike, after a 7.7 magnitude quake struck the region nearly a month later.


The prediction, shared by Siva Sitaram, a GIS Engineer from Sainikpuri and a native of Eluru with a diploma in mechanical engineering, mentioned a potential ~6.5 magnitude earthquake near coordinates 21.54°N 94.34°E—covering regions like Mandalay, Naypyidaw, and Sittwe. The prediction date was February 28. A 7.7 magnitude quake eventually occurred along Myanmar’s Sagaing fault in late march.
He founded Seismo research and development center in Hyderabad.


“I used multiple parameters. 18 out of 100 cases is good success rate. Sometimes the date may vary one to few months but location and frequency in predictions that were successful where actuals and predictions are same” he added.


Sitaram, who works with GIS systems and has been researching earthquakes since 2004, claims to use a combination of methods—solar radiation patterns, geomagnetic field changes, atmospheric data, and weather models—to issue early warnings. His website, seismo.in, tracks earthquakes across more than 10 countries and includes predictions for regions like Japan, Ethiopia, the Philippines, and India.
He says he has maintained six years of earthquake data and made over 100 predictions, of which about 18 have matched with actual events. He now predicts quake of more than 7 magnitude in Dharamshala in next few months.
Despite the coincidence, experts remain cautious. Dr. Srinagesh, former Chief Scientist at the National Geophysical Research Institute (NGRI), acknowledged he has been observing Siva’s work. “We can’t dismiss his predictions outright, but they must be scientifically validated,” he said. He pointed out that the recent quake occurred along the Sagaing fault, where both the Indian and Myanmar tectonic plates interact. Of the nine major quakes there, seven exceeded magnitude 7. The last one was in 2012.
Srinagesh emphasized that instead of relying solely on predictions, governments should focus on strengthening infrastructure in high-risk zones. @epic_earthquake

#MyanmarEarthquake #Hyderabad


ஏப்ரல் 2025 - பள்ளி நாட்காட்டி



 ஏப்ரல் 2025-ஆம் மாதத்திற்கான பள்ளி நாட்காட்டி 


April 2025 - School Calendar 


05.04.2025 - சனிக்கிழமை BEO அலுவலகத்தில் ஆசிரியர் குறைதீர் நாள் 


ஏப்ரல் - வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள்


14-04-2025 - திங்கள் - அம்பேத்கர் பிறந்தநாள்

17-04-2025 - வியாழன் - பெரிய வியாழன்

20-04-2025 - ஞாயிறு - ஈஸ்டர்



ஏப்ரல் - அரசு விடுமுறை நாட்கள் 


மகாவீர் ஜெயந்தி (ஏப்.,10)- வியாழன்

தமிழ் வருடப் பிறப்பு (ஏப்.,14) - திங்கள்

புனித வெள்ளி (ஏப்.,18)- வெள்ளி




தேர்வுகள் விவரம் 


1 - 3ஆம் வகுப்புகள் (திருத்தப்பட்டது)

(முற்பகல் 10.00 - 12.00 வரை)


07-04-2025 (திங்கள்) - தமிழ்


08-04-2025 (செவ்வாய்) - விருப்பமொழி 


09-04-2025 (புதன்) - ஆங்கிலம்


11-04-2025 (வெள்ளி) - கணிதம்



4 & 5ஆம் வகுப்புகள்  (திருத்தப்பட்டது)

(பிற்பகல் 2.00 - 4.00 வரை)


07-04-2025 (திங்கள்) - தமிழ்


08-04-2025 (செவ்வாய்) - விருப்பமொழி 


09-04-2025 (புதன்) - ஆங்கிலம்


11-04-2025 (வெள்ளி) - கணிதம்


15-04-2025 (செவ்வாய்) - அறிவியல்


17-04-2025 (வியாழன்) - சமூக அறிவியல் 


18-04-2025 - கோடை விடுமுறை துவக்கம்



6-9ஆம் வகுப்பு தேர்வுகள்


08-04-2025 (செவ்வாய்) -- தமிழ் 


09-04-2025 (புதன்) - ஆங்கிலம் 


16-04-2025 (புதன்) - கணக்கு 


21-04-2025 (திங்கள்) - அறிவியல் 


22-04-2025 (செவ்வாய் ) -  உடற்கல்வி


23-04-2025 - (புதன்) - சமூக அறிவியல் (6,7)


24-04-2025 -(வியாழன்) - சமூக அறிவியல் (8)


📒 30.04.2025 புதன் - ஆசிரியர்களுக்கு இந்தக் கல்வியாண்டின் கடைசி வேலை நாள்.


Kind Attention Taxpayers, File Updated ITR for AY 2022-23, 2023-2024 & 2024-25 by March 31st, 2025

 


Kind Attention Taxpayers,  File Updated ITR for AY 2022-23, 2023-2024 & 2024-25 by March 31st, 2025


Kind Attention Taxpayers


Please file Updated ITR in ITR-U for AY 2022-23, 2023-2024 & 2024-25 by March 31st, 2025 (if applicable) to avail lower additional tax and interest.  


Don’t delay, file today!


1 முதல் 5ஆம் வகுப்பு திருத்தப்பட்ட மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை - தொடக்கக்கல்வி இயக்குநரகம் வெளியீடு

 

1 முதல் 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு  - திருத்தப்பட்ட மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை -  தொடக்கக்கல்வி இயக்குநரகம் வெளியீடு


1 - 5th Std Revised Annual Exam Time Table - DEE Press Release 


திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பத்திரிக்கை செய்தி 

நாள் : 30-03-2025 


தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 09-04-2025 முதல் 21-04-2025 வரை மூன்றாம் பருவத்தேர்வு / ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படியும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வருகின்ற 07-04-2025 முதல் 17-04-2025 வரை தேர்வுகள் நடைபெறும் என தொடக்கக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் , 1973 - தமிழில்




Tamil Nadu Government Employees Conduct Rules, 1973 - Released in Tamil


தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் , 1973 - தமிழில் வெளியீடு


Tamil Nadu Government Servants' Code of Conduct, 1973 - Released in Tamil



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiyam Mobile App New Version Update - Version 1.21.2 - Updated on 07-04-2025

   Kalanjiyam App Update செய்த பிறகு New / Old Regime தேர்வு செய்ய முடிகிறது  KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.21.2 *  IFHRMS   Kalanjiya...