கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஈட்டிய விடுப்பு (EARNED LEAVE) - கணக்கிடப்படும் முறை குறித்த முழு தகவல்கள்...

 3.EARNED LEAVE

Introduction

Earned Leave is the leave earned by an employee by virtue of duty. The employee was earning leave at the rate of 1/11 or 1/22. With effect from 1.7.94. this procedure is replaced by the advance credit of leave introduced in G.O.Ms.No.157 P & A.R. dt.24.6.94. Hereafter the condition that leave is earned by duty has also been dispensed with by the procedure of advance credit.

Advance Credit of E.L. – The salient features

(a) This system came into effect from 1.7.94.

(b) In respect of Approved Probationers, Permanent employees 15 days E.L.will be credited in advance, on 1st January and 1st July every year.

(c) For example, the closing balance of E.L.as on 30.6.97 is 160days on 1.7.97, 15days will be credited in advance increasing the credit to 175days. The leave taken by him form 1.7.97 to 31.12-97 will be deducted against this 175days.

The balance will be the closing balance at the end of the half year viz.on 31.12.97 on 1.1.98 again 15 days will be credited in advance.

(d) If the closing balance of EL falls in between 226-240days at the opening of an half year, 15days will not be added to 226-240, it will be shown separately. If any leave is taken during that half year, it will first be adjusted in the 15days and the leave taken exceeding 15days will be adjusted in the 226-240 days and balance struck at the end of the half year. The closing balance at the end of the half year shall be limited to 240days.

(i) C.B. on 31.12.96

238

(ii) Advance Credit on 1.1.97 = 15days (show separately)

238+15

(iii) Leave taken from 1.1.97 to 30.6.97

28 days

(iv) C.B.on 30.6.97 (Adjust 15days and deduct 13days in 238days) (238-13)

225

(v) Add : Advance credit on 1.7.97 (Now the O.B.is 225 (i.e) not between 226-240. separately.

240

(vi) Leave taken from 1.7.97 to 31.12-97

10days

(vii) Balance at the end of 31.12.97 (240-10)

230

(viii) Advance Credit on 1.1.98 (Since the C.B.falls in between 226-2240, the credit of 15days, should be shown separately)

230+15

(K) Leave availed of between 1.1.98 to 30.6.98

Nil

M C.B.on 30.6.98 = 230 + 15 = 245

Limit to 240

(xi) Add : Advance credit as on 1.7.98 (Since the O.B. is between 226-240 show the 15days separately).

240+15

(e) During the half year, if L.L.P.is taken it shall be adjusted in the next half year, for

example an employee takes 22 days of L.L.P. in that case,2days at the rate of one day for every 10days shall be reduced in the next half year (Please note that no leave be deducted in the currently half year).

(f) If an employee takes U.E.L. etc., after crediting E.L. in advance, whether leave should be reduced from the advance credit already made? No. It is not necessary – Govt.Lr.No.60665/F.R. – III /95-1 P &A.R. dt.2.11.90 and Govt.Lr.No.60094/F.R.-III/94-14 p&A.R.dt.21.6.96. (Can you ever analyse why leave is not reduced? It is because, 30days E.L.is credited for a year instead of 33days leave earned @ 1/11).

(g) In the case of an employee, who is due for retirement in an half year E.L.will not be credited in advance, in this case, E.L.will be calculated at the rate of 2 ½ days for every full months of the remaining Service and credited. If he is due for retirement on 31.5.98 he has got five full months. Hence, 2 ½ x 5 = 12 ½ = rounded to 13days to be credited in his leave account.

(h) In the case of an employee, 15days leave have already been credited. He dies on 30.9.98 In this case, is it necessary to reduce the leave already credited? No. It is not necessary. Neither leave be cut for salary recovered for the excess leave availed – Govt.Lr.No.60094/F.R.HI/9 14 P &A.R.dt.21.6.96.

(i) While crediting E.L.fraction of a day shall be rounded off to nearest one day- Govt.Lr.No.60094/F.R.III/94-14 P&A.R.dt.21.6.96

(j) In the case pf am employee whose opening balance is Nil, 15days is credited on the opening of a half year. In this case, he can either avail the entire 15days or surrender 15days on the same day itself. (on the 1st January or 1st July Govt.Lr.No.60094/ F.R.III/94-14 P&A.R.dt.21.6.96 and Govt.Lr.No.60695/F.R.III/95-1 P& A.R. Dt.2.11.95. (The clarification sought for is unnecessary. He gets leave to his credit on 1st January or 1st July. When credit is there, entitlement avail of the leave naturally accrues. Then, how the leave applied be rejected on the ground of non availability of leave? These kind of clarification exposes the dwindling standards of the administrative people.

Temporary, Probationers and Basic Servants

(a) Temporary employees, Probationers and Basic servants are not eligible for advance credit of E.L. they shall be allowed leave at the rate of 2 ½ days for every completed two calendar months. They can accumulate leave up to the maximum of 30days – Govt.Lr.No.60094/F.R.III/94-14 P&A.R.dt. 21.6.96.

(b) In the case of Basic servants who have completed five years of regular Service (five years from the date of regularization) are however eligible for the advance credit of E.L.- Govt.Lr.No.60665/F.R.III/95-1 P&A.R.Dt.2.11.95.

(c) If probation is completed in the middle of an half year, in that case, EL shall be calculated at the rate of 2 ½ days for every two completed months of Service upto the month of completion of probation. From the next month E.L.shall be calculated at the rate of 2 ½ days for each completed calendar month Govt.Lr.No.60094/F.R.III/94-14 P&A.R.dt.21.6.96.

Table

Categories

Eligibility

Temporary, Probationer and Basic Servants

Eligible for leave @ 2 ½ days for every completed two calendar months. (Max.30days).

Basic Servants Completed five years

Eligible for advance credit of leave.

Probation if completed in the middle of half year

Leave shall be calculated @ 2 ½ days for every completed two months upto the month of completion of Probation. From the next month. EL shall be calculated @ 2 ½ days for each completed month.


Maximum Accumulation of EL at a time

The EL can be accumulated upto a maximum as detailed below. The leave accumulation exceeding the limit will lapse.

Period

Maximum Limit

Upto 31.3.55

90days

From 1.4.55 to 31.3.66

120days

From 1.4.66 to 3.1.3.74

180 days and can be availed of 120 days at a time

From 1.4.66 to 31.3.74

180days and can be availed of at a time (G.O.Ms.No.444 dt.30.3.74 Finance dt. 30.3.74)

From 30.10.87

240 days and can be availed of at a time(G.O.Ms.No.999, P&A.R. dt.30.10.87)

தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு - செய்தி அறிக்கை வெளியீடு...

 >>> 31-12-2020 வரை ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் -செய்தி அறிக்கை...


டிசம்பர் 7 முதல் கல்லூரிகள் திறப்பு - முதல்வர் அறிவிப்பு...

 


டிசம்பர் 7 முதல் கல்லூரிகள் திறப்பு - முதல்வர் அறிவிப்பு...



கல்லூரி இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிச.7ம்தேதி தொடங்க அனுமதி.

மருத்துவக் கல்லூரிகள் 7ஆம் தேதி முதல் திறக்க அனுமதி.

மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் பிப்ரவரி.1ம் தேதி முதல் தொடங்கும்.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விளையாட்டு பயிற்சிக்கு மட்டும் நீச்சல் குளங்கள் செயல்படலாம்.

சமுதாய, அரசியல் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் டிச.1 முதல் 31 வரை நடத்த அனுமதி.

கூட்டங்களில் அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கலாம்.

கூட்டங்கள் நடத்த காவல்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் முன்அனுமதி பெறுவது அவசியம்.

அரசு உதவிபெறும் கல்லூரி - நிரந்தரப் பணியிடங்கள் - உதவிப் பேராசிரியர்கள், தட்டச்சர், பதிவு எழுத்தர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 07-12-2020...

 


அரசு ஊழியர்களுக்கு சாதி, மதம் சார்ந்த சங்கங்களை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது? - உயர்நீதிமன்ற மதுரை கிளை...

 


அரசு ஊழியர்களுக்கு சாதி, மதம் சார்ந்த சங்கங்களை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது? - உயர்நீதிமன்ற மதுரை கிளை...

மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு அதிகாரிகள் முதலில் தங்கள் பணியை முறையாக செய்ய வேண்டும்.

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் அரசியல்வாதிகள் &  அரசு ஊழியர்கள் & அமைப்பு தலைவர்கள் சமூகத்திற்கு எதிரானவர்களாக கருதப்பட வேண்டும்.

 முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் அப்போதுதான் முறைகேடுகள் போன்ற குற்றங்கள் தடுக்கப்படும்

- உயர்நீதிமன்ற மதுரை கிளை...

பள்ளிக் கல்வித்துறைக்கு எதிரான வழக்குகளில் பாதகமான தீர்ப்புகள் - கல்வித்துறை எச்சரிக்கை...

 


ஆசிரியர்கள் நியமனம் - CROSS MAJOR - ஏஐசிடிஇ புதிய சுற்றறிக்கை...

ஆசிரியர்கள் நியமனம் - CROSS MAJOR - ஏஐசிடிஇ (AICTE) புதிய சுற்றறிக்கை...

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் ( ஏஐசிடிஇ ) கல்விப்பிரிவு ஆலோசகர் திலீப் என்.மால்ஹீடே , உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

 ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கிராஸ் மேஜர் ( பாடப் பிரிவு மாறி படிப்பவர்கள் ) முடித்தவர்களை ஆசிரியராக நியமிப்பது குறித்து பல கோரிக்கைகள் வருகின்றன. ஆனால் , இதற்கு ஏஐசிடிஇ சார்பில் வழிமுறைகள் வழங்கப் படவில்லை. எனவே , உயர்கல்வியில் கிராஸ் மேஜர் முடித்தவர்களுக்கு பணி வழங்குவதில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே முடிவெடுக்கலாம். கூடுதல் விவரத்தை www.aicte-india.org இணையத்தில் அறியலாம்.

பிரகதி இலவச பெண் கல்வி உதவித்தொகை திட்டம்...

 


அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு...


மாநில மொழிகளில் தொழில்நுட்பக் கல்வி புத்தகம் எழுதும் ஆசிரியா்களுக்கு நிதியுதவி - ஏஐசிடிஇ...

 தொழில்நுட்பக் கல்விக்கான புத்தகத்தை மாநில மொழிகளில் எழுத விரும்பும் ஆசிரியா்களுக்கு நிதியுதவி அளிக்க, 'தொழில்நுட்பக் கல்வி புத்தகம் உருவாக்கம்' திட்டத்தை ஏஐசிடிஇ உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் (ஏஐசிடிஇ) உறுப்பினா் செயலா் ராஜீவ் குமாா் வெளியிட்ட அறிவிப்பு:

தொழில்நுட்பப் படிப்புகளில் அண்மைக்கால வளா்ச்சி குறித்து புத்தகம் எழுதுதல், ஏற்கெனவே உள்ள புத்தகத்தை பட்டியலிடப்பட்ட உள்ளூா் மொழிகளில் மொழி மாற்றம் செய்தல் ஆகியவற்றின் தேவை தற்போது எழுந்துள்ளது.

இதற்காகவே அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமமானது 'தொழில்நுட்பக் கல்வி புத்தகம் உருவாக்கம்' என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது.

அதிகளவிலான எழுத்தாளா்கள், மொழிபெயா்ப்பாளா்கள், ஆசிரியா்களுக்கு நிதி வழங்கி உறுதுணையாக இருந்து அவா்களை ஊக்குவித்து, தொழில்நுட்பக் கல்வி சாா்ந்த புத்தகங்களை, சம்பந்தப்பட்ட மாநில, உள்ளூா் மொழிகளில் வெளியிட வைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஐடிஐ, பாலிடெக்னிக், இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவா்களுக்கான புத்தகத்தை அவா்கள் உருவாக்க வேண்டும்.

ஏஐசிடிஇ அங்கீகரித்த பாடத்திட்டத்தின்படி, குறிப்பாக முதலாமாண்டு புத்தகத்தை எழுத மற்றும் மொழிமாற்றம் செய்ய விரும்பும் அனைத்து ஆசிரியா்களும் இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது - தடுப்பு மருந்து எதுவும் தேவையில்லை என அறிவியல் வல்லுனர் கருத்து...

 


தமிழ்நாடு சீருடைப் பணியாளர் பொதுத் தேர்வு 2020 நுழைவுச்சீட்டு வெளியீடு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் பொதுத் தேர்வு 2020 நுழைவுச்சீட்டு வெளியீடு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் இரண்டாம் நிலை காவலர்¸ இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு 2020-க்கான நுழைவுச்சீட்டு (Hall Ticket) வெளியீடப்பட்டுள்ளது. தேர்வர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இன்றைய செய்திகள் தொகுப்பு... 30.11.2020 (திங்கள்)...

 🌹நமக்கு பிடித்தவர்கள் நம்மை காயப்படுத்தும் போது தான் இல்லாதவற்றையும்,

இழந்தவற்றையும் பற்றி ஆழமாக யோசிக்க தோன்றும்.!

🌹🌹யாராவது கோபத்தில் பேசும் போது அசட்டையாக இருக்காதீர்கள் கவனமாக கவனியுங்கள்.

ஏனெனில் அதுதான் அவர்கள் உண்மை சொல்லும் நேரமாக இருக்கலாம்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⛑⛑பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்ற தகவல் தவறானது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார் 

⛑⛑மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை சேர்க்கக் கோரி மனு.. இட ஒதுக்கீடு சதவீதம் அதிகரித்து பல மாணவர்கள் பயனடைவர் என கோரிக்கை 

⛑⛑திருத்திய அட்டவணை வெளியீடு.  மருத்துவ கவுன்சலிங் 30ம் தேதி தொடக்கம் . 30ம் தேதி 850 பேர் கவுன்சலிங்கில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். டிசம்பர் 12ம் தேதி வரை நடக்கும் கவுன்சலிங்கில் மொத்தம் 5 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். 

⛑⛑'நிவர்' புயலுக்கான அரசு விடுமுறை முடிந்துள்ள நிலையில், பள்ளி, கல்லுாரிகளில், 'ஆன்லைன்' வகுப்புகள் மீண்டும் துவங்கின. 

⛑⛑சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகைக்காக மாணவர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்ய மேலும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் உள்ளீடு செய்ய 31.12.2020 அன்றும், பள்ளி நிர்வாகம் உள்ளீடு செய்ய 15.1.2021 அன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

⛑⛑கோவை எலச்சிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியைத் தரம் உயர்த்த அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் திரு.இராமமூர்த்தி அவர்கள், ரூ.3 கோடி மதிப்புள்ள 1.50 ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்கியுள்ளார்.                                                          ⛑⛑ஊதியம் குறைப்பு; நீதிபதி முருகேசன் குழு பரிந்துரைகளை தமிழக அரசு நிராகரிக்க கோரிக்கை

⛑⛑ஊரடங்கு நேரத்தில் பணிபுரிந்த அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் -அனைத்து துறை ஊழியர் சங்கம் கோரிக்கை

⛑⛑கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலரை அவதூறாக பேசிய பட்டதாரி ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்து - முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு.

⛑⛑தமிழகத்தில் 74,212 புதிய வேலைவாய்ப்பு இளைஞர்களுக்காக  உருவாக்கப்பட்டுள்ளது  -முதல்வர் தகவல்

⛑⛑சமக்ரா சிக்ஷா - 2020--2021 கல்வி ஆண்டு - மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

⛑⛑பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழக்கு: மத்திய அரசு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

⛑⛑தமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

⛑⛑தமிழகத்தில் டிசம்பர் 2ம் தேதி அதி கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

⛑⛑நிபந்தனையுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என மத்திய உள்துறை அமைச்சர் அறிவித்திருந்த நிலையில் அதனை புறக்கணிப்பதாக 30க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் அறிவிப்பு

⛑⛑இந்தியா முழுவதும் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் மாநில மொழி சேனல்களில் 15 நிமிடங்கள் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்புமாறு மத்திய பிரச்சார் பாரதி உத்தரவு.

⛑⛑இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை வென்றது ஆஸ்திரேலியா.

இந்திய அணிக்கு எதிரான  இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி 

⛑⛑ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலைகொண்டுள்ளது - வானிலை ஆய்வு மையம்

⛑⛑கொரோனா தடுப்பு மருந்து அளிக்கும் பணியை மாநில, மாவட்ட அளவில் கண்காணிக்க குழுக்கள் அமைத்து தமிழக அரசு உத்தரவு.

⛑⛑ரயில் நிலையங்களிலும் இனி பிளாஸ்டிக் கோப்பைகளுக்கு பதிலாக மண்பாண்ட கோப்பைகளில் டீ விற்பனை

- மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்

⛑⛑காங்கிரஸ் பொருளாளராக பன்சால் நியமனம்: பொதுச்செயலாளர் அறிவிப்பு

⛑⛑ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழகத்தில் டிசம்பர் 15-ம் தேதிக்குள் 2,000 மினி கிளினிக்குகள் தொடங்கப்படவுள்ளது -முதல்வர் பழனிசாமி.

⛑⛑தமிழ்நாடு அரசு கொரோனா தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்தி வருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு தெரிவித்துள்ளார்.

⛑⛑ஜூன் 1, 2021 முதல் பி.ஐ.எஸ் தரச்சான்று இல்லாத ஹெல்மெட் தயாரிப்பு, விற்பனைக்கு தடை விதிப்பு.

⛑⛑திருப்பதி  ஏழுமலையான் கோயிலில்  டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் அறைகளை இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

⛑⛑டிசம்பர் 1, 2 தேதிகளில் கேரளாவில் பலத்த மழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்.

⛑⛑8 கோடி வாக்குகள் சரியானவை என்று ஜோ பைடன் நிரூபித்த பின்னர் தான், வெள்ளை மாளிகைக்குள் வர முடியும் - டிரம்ப்.

⛑⛑பயோ என் டெக்-பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசிக்கு அடுத்தவாரம் பிரிட்டன் ஒப்புதல் தர திட்டம்.

⛑⛑ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் மாநாடு இன்று தொடங்குகிறது.. இந்தியா தலைமையில் நடப்பதால் பாகிஸ்தான் புறக்கணிப்பு. மொத்தம் எட்டு உறுப்பு நாடுகளும் நான்கு பார்வையாளர் நாடுகளும் கொண்டது ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு. இந்த மாநாட்டுக்கு குடியரசுத்துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தலைமை தாங்குகிறார்.

⛑⛑நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று திங்கட்கிழமை மீண்டும் தொடங்குகிறது.

👉பொது பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இதனிடையே, நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவம்பர் 29-ம் தேதி வரை 4 நாட்களுக்கு மருத்துவ கலந்தாய்வு நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அந்த நாட்களில் ஏற்கெனவே நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கத்தில் இன்று தொடங்கி டிசம்பர் 10-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

⛑⛑நாடு முழுவதும் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் ஒரே மாதிரியான 'மாசுக் கட்டுப்பாடு சான்றிதழை' அறிமுகப்படுத்த சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. கியூஆர் குறியீட்டுடன் கொண்டுவரப்படவுள்ள இந்தச் சான்றிதழில் வாகன உரிமையாளர், மற்றும் வாகனம் உமிழும் புகையின் நிலைக் குறித்த விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.இது குறித்த வரைவு அறிவிப்பை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக வரும் பரிந்துரைகளையும் பின்பற்றி செயல்படுத்த அமைச்சகம் முடிவு செய்துள்ளது.                                                             

⛑⛑தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய முன் வருபவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கும் : தொழில்துறை அமைச்சர் சம்பத்

⛑⛑எட்டு மாதங்களுக்கு பின், முதுநிலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு, வரும், 2ம் தேதி முதல் கல்லுாரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

கொரோனா தொற்று பரவலால், மார்ச்சில் பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்டன. புதிய கல்வி ஆண்டில், ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் வழிகாட்டுதலின்படி, முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும், வரும், 2ம் தேதி கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளன.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில், முதுநிலை பட்டப் படிப்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும், ஆராய்ச்சி படிப்பு மாணவர்களும், 2ம் தேதி முதல் கல்லுாரிகளுக்கு வந்து, நேரடி வகுப்புகளில் பங்கேற்க வேண்டும்.வெளி மாவட்ட மாணவர்கள், அவரவர் கல்லுாரிகள் உள்ள பகுதியில் ஏற்கனவே தங்கிய விடுதிகளில், தங்கி கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. எட்டு மாத இடைவெளிக்கு பின், மீண்டும் கல்லுாரிகள் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

⛑⛑பாடத்திட்டம் குறைப்பது குறித்து நிபுணர் குழுவின் அறிக்கை இன்று (திங்கட்கிழமை) முதலமைச்சரிடம் வழங்கப்படும் என்றும், அதனை தொடர்ந்து சில நாட்களில், இதற்கான அரசாணை வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                              

  என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இன்று 2020-ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்....!

 


இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நவம்பர் 30 திங்கட்கிழமை அன்று நிகழ உள்ளது.

2020-ஆம் ஆண்டின் நான்காவது மற்றும் இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இதுவாகும். பூமி, சந்திரன், சூரியன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது. சூரியனின் ஒளி சந்திரன் மீது படாமல், பூமி இடையில் வந்து மறைப்பதே சந்திர கிரகணம்.

நவம்பர் 30ஆம் தேதி நிகழப்போகும் சந்திர கிரகணம், புறநிழல் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

இந்தியாவில், இந்த நிகழ்வு மதியம் 1:04 மணி முதல் மாலை 5:22 மணி வரை நிகழும். மேலும் 3:13 மணி அளவில் சந்திர கிரகணம் உச்சத்தில் இருக்கும். இந்த சந்திர கிரகணத்தை கருவிகள் உதவியின்றி வெறும் கண்ணால் பார்க்க முடியாது, ஆனால் நிலவை சுற்றி வரும் லூனார்ரெக்கனைசன்ஸ் ஆர்பிட்டர் என்று அழைக்கப்படும் விண் சுற்றுக்கலத்திற்கு கிடைக்கும் சூரிய மின்னாற்றல் குறைவதைக் காண முடியுமாம்.

CPS ஒழிப்பு இயக்கம் - இரண்டாம் கட்டப் போராட்டம்...

 


மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக...

CPS திட்டத்தை இரத்து செய்ய கோரிக்கை அஞ்சல் அட்டை இயக்கம் 30.11.2020 முதல் 04.12.2020 வரை நடத்துவது என்கிற முடிவின் அடிப்படையில்,

 கீழ்க்கண்டவாறு எழுதி கையொப்பமிட்டு அனுப்ப கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.


ஐயா,


மாண்புமிகு முன்னாள் முதல்வா் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவா்கள் அளித்த தோ்தல் வாக்குறுதிப்படியும், சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்பின் படியும் 6 இலட்சம் அரசு ஊழியா் / ஆசிாியா்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை ஓய்விற்கு பின் பாதிக்கும் CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்திடுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.


        தங்கள் நம்பிக்கையுள்ள,

         ××××××××××××


பெறுநர்:

மாண்புமிகு. முதலமைச்சர், அவர்கள்,

தலைமைச்செயலகம்,

புனித ஜார்ஜ் கோட்டை,

சென்னை _9.


நம்பிக்கையுடன், 

களத்தில்

மாநில ஒருங்கிணைப்பாளர்கள்,

CPS ஒழிப்பு இயக்கம்.

தணிக்கை தடை (AUDIT OBJECTION) எழாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள்...


 வட்டாரக் கல்வி அலுவலகங்களில்  மண்டல தணிக்கைத் துறை அலுவலர்களால், ஆசிரியர்களின் பணிப் பதிவேடு தொடர்பான தணிக்கை நடைபெறும் போது, தணிக்கை அலுவலர்களால் பொதுவாக சுட்டிக் காட்டப் படும் சிறு சிறு குறைபாடுகள்:


1. ஒரு ஆசிரியர் அரசுப் பணிக்கு வரும் முன்னரே, கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருந்தால், பணியில் சேரும் முன்னரே உயர் கல்வி பெற்றுள்ளார் என்ற பதிவை வட்டாரக் கல்வி அலுவலருக்கு விண்ணப்பித்து பணிப் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.


2. உயர் கல்வி பயில்வதற்கான முன் அனுமதி ஆணை வழங்கப் படும் விவரம், 2012 ஆம் ஆண்டிற்கு பின்பு தான், பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப் படுகிறது. அதற்கு முன்னர் ஆணை மட்டும் தான், வழங்கப் பட்டது. ஆனால் தற்போது தணிக்கைத் துறை அலுவலர்கள், பணி நியமன நாள் முதல் இன்று வரை, பணிப் பதிவேட்டில் பதிவு செய்துள்ள அனைத்து கூடுதல் கல்வித் தகுதிகளுக்கும் முன் அனுமதி அல்லது பின்னேற்பு பதிவு செய்வது கட்டாயம் என வலியுறுத்துகின்றர். ஊக்க ஊதியம் பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும் முன் அனுமதி / பின்னேற்பு ஆணையை வட்டாரக் கல்வி அலுவலரிடம் காண்பித்து, பணிப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.


3. 10 ஆம் வகுப்பு முதல், நாம் பணிப் பதிவேட்டில் பதிவு செய்திருக்கும் அனைத்து கல்வித் தகுதிகளுக்கும் உண்மைத் தன்மைச் சான்றினைப் பெற்று பணிப் பதிவேட்டில் பதிவு செய்திருக்க வேண்டும். அதன் நகலும் ஆசிரியர் கைவசம் வைத்திருக்க வேண்டும்.


4. பணிப் பதிவேட்டில், தற்காலிக தேர்ச்சி சான்று மட்டும் பதிவு செய்திருத்தல் கூடாது. அப்படிப்பிற்கான பட்டச் சான்றை பணிப் பதிவேட்டில் பதிவு செய்திருக்க வேண்டும்.


5. இதற்கு முந்தைய தணிக்கையின் போது, ஏதேனும் குறைபாடுகள் சுட்டிக் காட்டப் பட்டிருந்தால், அவற்றை நிவர்த்தி செய்திருக்க வேண்டும்.


6. பணியிட மாறுதல் ஏதேனும் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப் படாமல் விடுபட்டிருந்தால், அவற்றை உரிய ஆவணங்களின் அடிப்படையில் விடுதல் பதிவாக பதிவு செய்ய விண்ணப்பித்து, பதிவு செய்ய வேண்டும்.


7.  CL, RH தவிர பிற அனைத்து விடுப்பு வகைகள், ஈட்டிய விடுப்பு பணப் பயன், ஈட்டிய விடுப்பு கையிருப்பு, பணிக் காலம் சரி பார்ப்பு இவற்றில் ஏதேனும் விடுபட்டிருந்தால் சரி செய்து கொள்ள வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்ட காலம், ஊதியமில்லா விடுப்பாக பதிவு செய்யப் பட்டிருக்க வேண்டும். கலந்து கொண்ட போராட்ட நாட்களுக்கு ஏற்ப, ஆண்டு ஊதிய உயர்வு தள்ளி போயிருக்க வேண்டும்.


8. குடும்ப உறுப்பினர் விவரம், வாரிசு நியமனம் இவற்றில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் உடனே விண்ணப்பித்து சரி செய்து கொள்வது நல்லது.


9. பி.எட். கற்பித்தல் பயிற்சிக்காக, அரைச் சம்பள விடுப்பு எடுத்திருந்தால், அதை ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.


10. பணிப் பதி வேட்டின் நகல் தங்களிடம் இருந்தால், அனைத்து பதிவுகளும் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்த்துக் கொள்வது நல்லது.

போலி கல்வி சான்றிதழ் (FAKE CERTIFICATE ) கொடுத்து பணி - பள்ளிகளில் விசாரணை...

 மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஊழியர்கள் பலர் பணியில் சேர்ந்தபோது கொடுத்த கல்வி சான்றிதழ் உண்மைதானா என சம்பந்தப்பட்ட பள்ளிகளில் கோயில் நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.

இக்கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன் சேவுகர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டனர். பள்ளிகள் வழங்கிய கல்விச்சான்றிதழ் அடிப்படையில் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

இதில் சேவுகர் காமாட்சி என்பவர் கொடுத்த 10ம் வகுப்பு சான்றிதழ் போலியானது என கோயில் நிர்வாக அதிகாரி செல்லத்துரைக்கு கடிதம் வந்தது.

விசாரணையில் உண்மை எனத் தெரியவந்ததை தொடர்ந்து அவர் 'சஸ்பெண்ட்' செய்ய பட்டார். இதேபோல் சிலரும் பணியில் சேர்ந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து காமாட்சியுடன் பணியில் சேர்ந்தவர்களின் கல்விச்சான்றிதழ்களை ஆய்வு செய்ய உத்தரவிடப் பட்டது. முதற்கட்டமாக பள்ளி சான்றிதழ் உண்மைதானா என சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் கேட்டு கோயில் நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது.

இணைகமிஷனர் செல்லத்துரை கூறுகையில், ''பள்ளி நிர்வாகங்கள் அளிக்கும் பதிலை பொறுத்து நடவடிக்கை இருக்கும்'' என்றார்

அறுவை சிகிச்சை - மத்திய அரசின் அறிவிப்பு ஆபத்தானது -டாக்டர் அமலோற்பவநாதன் ரத்தநாள அறுவைசிகிச்சை நிபுணர்...

 


சீர்காழி அருகே 3 மாதம் சம்பளம் வழங்காததால் அரசு பள்ளி ஆசிரியர் தர்ணா...

 

சீர்காழி அருகே அரசு பள்ளி ஆசிரியருக்கு மூன்று மாதங்கள் சம்பளம் வழங்காததை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தியநாதபுரம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலை பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியர் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த தைரியநாதன் (48). இவருக்கு அரசு வழங்கக்கூடியது பணப் பயன்கள் மற்றும் கடந்த மூன்று மாதங்களாக வழங்கக்கூடிய மாத சம்பளம் ஆகியவற்றை வழங்காமல் பள்ளி தலைமையாசிரியர் பழிவாங்குவதாக ஆசிரியர் தைரியநாதன் மாவட்ட கல்வி அலுவலருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர் தைரியநாதன் நேற்று பள்ளி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தற்பொழுது கொரோனா காலத்தில் தனக்கு சம்பளம் வழங்காததால் தன் குடும்பம் வறுமையில் வாடுவதாகவும், மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வராமல் பள்ளி பூட்டியே கிடப்பதால் தான் தினந்தோறும் பள்ளிக்கு வந்து பள்ளி வாசலில் உட்கார்ந்து செல்வதாகவும் ஆசிரியர் தைரியநாதன் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு கேட்டபோது தலைமையாசிரியர் மீதுள்ள புகார் மீது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், ஆசிரியருக்கு அவருக்கு வழங்கக்கூடிய சம்பளத்தை உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒரு நாளில் பதிவு செய்யப்பட்ட 94% ஆவணங்கள் திருப்பி அளித்து சாதனை: 14,591 ஆவணங்கள் அன்றைய தினமே வழங்கப்பட்டது; பதிவுத்துறை தலைவரின் புதிய முயற்சிக்கு பலன்...

 தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு திட்டம் கடந்த 2018 பிப்ரவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் பத்திரப்பதிவுக்கு பொதுமக்கள் விண்ணப்பித்தவுடன், அவர்கள் குறிப்பிடும் தேதியில் பத்திரம் பதிய பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் பத்திரம் பதிவு செய்தவுடன் அன்றைய தினமே திருப்பி தர வேண்டும். ஆனால், பல்வேறு காரணங்களுக்காக 70 % ஆவணங்கள் மட்டுமே திருப்பி தரப்பட்டன. ஆனால், 30% ஆவணங்கள் பத்திரப்பதிவு செய்தவுடன் அவை திருப்பி தருவதில்லை என்ற புகார் எழுந்தது. இது தொடர்பாக பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் சீராய்வுக்கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், ஐஜி சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பத்திரம் பதிவு செய்த அன்றே பத்திரத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக பதிவுத்துறை தலைவர் சங்கர் தினமும் நேரடியாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். ஆவணங்களை திருப்ப ஒப்படைப்பதை கம்ப்யூட்டரில் குறிப்பிட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து கண்காணித்து உரிய உத்தரவுகளை வழங்கி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (27.11.2020) பதிவு செய்யப்பட்டு திரும்ப வழங்கக்கூடிய 15,433 ஆவணங்களில் 14,591 ஆவணங்கள் அன்றைய தினமேதிரும்ப வழங்கப்பட்டன. இது பதிவு செய்த ஆவணங்களில் 94 % ஆகும். இதன் மூலம் பொதுமக்கள் மீண்டும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு ஆவணங்கள் திரும்ப பெற வரவேண்டிய நிலை தவிர்க்கப்பட்டுள்ளது என்று பதிவுத்துறை தலைவர் சங்கர் தெரிவித்தார்.

கோவிசீல்டு மருந்தைச் சோதனைக்குச் செலுத்தியதில் கடும் பக்கவிளைவு - ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்...

 ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியைச் சோதனை முறையில் போட்டுக்கொண்டவர் கடுமையான பக்க விளைவுக்கு ஆளானதாகக் கூறி 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரியுள்ளார்.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 40 வயதானவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ராசெனேக்கா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தான கோவிசீல்டைச் சோதனை முறையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் உடலில் செலுத்திக் கொண்டார்.

அதன்பின் 14 நாட்களுக்குக் கடுமையான தலைவலி இருந்ததாகவும், உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தனக்குப் பக்க விளைவு ஏற்பட்டதற்கு இழப்பீடாக 5 கோடி ரூபாயை 2 வாரங்களில் வழங்கவும், கோவிசீல்டு மருந்தை மேற்கொண்டு சோதிக்கத் தடை விதிக்கவும் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்தியாவின் மோசமான சுகாதார அமைப்புகளால் உருவானது கொரோனா வைரஸ் - சீனா குற்றச்சாட்டு...

 


இந்தியாவின் மோசமான சுகாதார அமைப்புகளால் உருவானது கொரோனா வைரஸ் - சீனா குற்றச்சாட்டு...

கொரோனா வைரஸால் உலகமே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வைரசின் தீவிரம் மீண்டும் அதிகமாகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், வைரஸ் உருவான இடம் பற்றி சீனா மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  சீனாவின் உகான் நகரில் கொரொனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.  தற்போது கொரோனா வைரஸ்  உலக நாடுகளை உலுக்கி வருகிறது.

தொற்று பரவி ஏறத்தாழ ஒரு வருடங்கள் ஆக உள்ள நிலையில், இன்னும் இந்த வைரசைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  தடுப்பூசிகளும் இன்னும் பொது பயன்பாட்டுக்கு வரவில்லை. தொற்று பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.  ஆனால் வைரசை பரப்பிய சீனாவில் இந்த கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

தற்போதைய நிலவரப்படி உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  6.19  கோடியாக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை   4,27,66,954- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால்  14,48,183- பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உகானில் தொற்று பரவுவதற்கு முன்னர், இந்த தொற்று இத்தாலி உள்பட உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியதாக சீன அரசு கூறி வந்தது . தற்போது கொரோனா வைரஸ் இந்தியாவில் இருந்து உலகிற்கு முதன்முறையாக பரவியதாக இப்போது சீன விஞ்ஞானி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். 

சீன அறிவியல் அகாடமியின் விஞ்ஞானிகள் குழு கூறி உள்ளதாவது:-

கொரோனா வைரஸ் இந்தியாவில் 2019 கோடையில் தோன்றியிருக்கலாம். கொரோனா வைரஸ் விலங்குகளால் அசுத்தம் செய்யப்பட்ட நீர் மூலம் மனிதர்களுக்குள் நுழைந்தது . கொரோனா வைரஸ் இந்தியாவிலிருந்து  உகானை அடைந்தது என்றும் அங்கு அது அடையாளம் காணப்பட்டது . 

உகானில் காணப்பட்ட கொரோனா வைரஸ் ஒரு உண்மையான வைரஸ் அல்ல . விசாரணையில் வங்காளதேசம் , அமெரிக்கா, கிரீஸ், ஆஸ்திரேலியா, இந்தியா, இத்தாலி, செக் குடியரசு, ரஷியா அல்லது செர்பியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் தோன்றியதற்கான அறிகுறிகள் தெரியவந்துள்ளது. இந்தியா மற்றும் வங்காள தேசத்தில் பலவீனமான பிறழ்வு மாதிரிகள் காணப்படுவதால், அங்கு முதல் தொற்று ஏற்பட்டிருக்கலாம்.

தண்ணீர் இல்லாததால், குரங்குகள் போன்ற காட்டு விலங்குகள் பெரும்பாலும் தண்ணீருக்காக கடுமையாக போராடுகின்றன. இது நிச்சயமாக மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான தொடர்பு அபாயத்தை அதிகரிக்கும். விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவது அசாதாரண வெப்பத்தால் என்று நாங்கள் கருதுகிறோம்.  இந்தியாவின் மோசமான சுகாதார அமைப்பு மற்றும் இளம் மக்கள் தொகை காரணமாக, இந்த நோய் பல மாதங்களாக கண்டறியப்படாமல் தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸின் மூலத்தை தீர்மானிக்க சீன குழு பைலோஜெனடிக் பகுப்பாய்வை (கொரோனா வைரஸ் பிறழ்வு பற்றிய ஆய்வு) பயன்படுத்தியது.

இதற்கிடையில், சீன விஞ்ஞானிகளின் இந்த தவறான கூற்று மற்ற விஞ்ஞானிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர் டேவிட் ராபர்ட்சன் டெய்லி மெயிலிடம் சீன ஆராய்ச்சி அதிக குறைபாடுகளைக் கொண்டுள்ளது என்றும் கொரோனா வைரஸ் குறித்த நமது புரிதலை சிறிதும் மேம்படுத்தவில்லை என்றும் கூறினார். கொரோனா வைரஸ் உகானில் தோன்றியதை மறைக்க சீனாமற்ற நாடுகளை நோக்கி கையை நீட்டுவது இது முதல் முறை அல்ல.

இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பு  தற்போது சீனாவில் கொரோனா வைரஸின் மூலத்தை கண்டுபிடிக்க முயற்சிக்கிறது. கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றியதாக உலக சுகாதார அமைப்பு சான்றுகள் காட்டுகின்றன. உலக சுகாதார அமைப்பு  தனது விசாரணைக் குழுவை சீனாவுக்கு அனுப்பி உள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஆய்வு - 3 நகரங்களுக்கு ஒரே நாளில் பிரதமர் மோடி பயணம், ஒரு மணிநேரம் ஆய்வு - விஞ்ஞானிகளுக்கு பாராட்டு...

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஆய்வு - 3 நகரங்களுக்கு ஒரே நாளில் பிரதமர் மோடி பயணம், ஒரு மணிநேரம் ஆய்வு - விஞ்ஞானிகளுக்கு பாராட்டு...

நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்து ஆய்வு நடத்த 3 நகரங்களுக்கு ஒரே நாளில் பயணம், ஒரு மணிநேரம் ஆய்வு மேற்கொண்டார் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அந்த நிறுவனங்களின் தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதித்து பார்ப்பது, 2 மற்றும் 3-வது கட்டங்களில் இருக்கிறது. இந்தநிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் 3 நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி இன்று சென்றார் 

முதல் கட்டமாக குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே சாங்கோதர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஜைடஸ் காடிலா நிறுவன ஆலைக்கு  இன்று காலை நேரில் சென்றார்.  அந்நிறுவனம் தயாரிக்கும் ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசியின் 2-வது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. அதன் முன்னேற்றம் குறித்து மோடி கேட்டறிந்ததோடு  தடுப்பூசி உற்பத்தி பணிகளை பார்வையிட்டார்.          

டெல்லியிலிருந்து இன்று காலை புறப்பட்ட பிரதமர் மோடி காலை 9.00 மக்கு அகமதாபாத் சென்றடைந்தார். அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள சாங்கோதர் தொழிற்பூங்காவில் இருக்கும் ஜைடல் கெடிலா நிறுவனத்துக்கு பிரதமர் மோடி சென்றார்.


ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, நிர்வாகிகள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருடன் கொரோனா தடுப்பு மருந்து தயாரி்க்கும் பணி, பரிசோதனை நிலவரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

பிபிஇ ஆடை அணிந்து, முகக்கவசம் அணிந்து நிறுவனத்துக்குள் சென்ற பிரதமர் மோடி, கொரோனோ தடுப்பு மருந்துப் பணிகளை நேரில் ஆய்வுசெய்தார். அப்போது பிரதமர் மோடியிடம் கொரோனா தடுப்பு பணிகள், பரிசோதனையின் கட்டம் ஆகியவற்றை ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர். அவர்களிடம் பிரதமர் மோடியும் பல்வேறு சந்தேதகங்களைக் கேட்டு விளக்கம் பெற்றார் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

2021-ம் ஆண்டு மார்ச் மாதம் கெடிலா நிறுவனத்தின் சார்பில் கொரோனா தடுப்பு மருந்து மக்களின் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது. ஏறக்குறைய ஒரு மணிநேரம் கெடிலா நிறுவனத்தில் இருந்த பிரதமர் மோடி காலை 11.30 மணிக்கு அங்கிருந்து ஐதராபாத்துக்குப் புறப்பட்டார். 

அதன்பின் பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில் “ அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் கெடிலா பயோடெக் பார்க் நிறுவனத்துக்கு சென்றேன். அங்கு கொரோனா வைரஸுக்கு எதிராக உள்நாட்டிலேயே டிஏன்ஏ அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படும் தடுப்பு மருந்து குறித்த விவரங்களைக் கேட்டறிந்தேன்.

இந்த பணிக்கு பின்புலத்தில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு என்னுடைய பாராட்டுகள். இந்த மருந்து தயாரிக்கும் குழுவின் பயணத்துக்கு அரசு தேவையான உதவிகளை அளித்து துணையாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக்கில் தயாரிக்கப்படும் உள்நாட்டு தடுப்பூசி குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இது குறித்து அவரது டுவிட்டரில் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக்கில் தயாரிக்கப்படும் உள்நாட்டு தடுப்பூசி குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இதுவரை சோதனைகளில் வெற்றிகண்ட விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள். விரைவான முன்னேற்றத்தை எளிதாக்க அவர்களின் குழு இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சிலுடன் நெருக்கமாக செயல்படுகிறார்கள் என கூறி உள்ளார்.

ஐதராபாத்தில், சுமார்  ஒரு மணி நேர ஆய்வுக்குப் பிறகு, பிரதமர், புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுக்குச் சென்றார்.அகமதாபாத், ஐதராபாத்தை தொடர்ந்து புனே வந்தடைந்தார் பிரதமர் மோடி; அங்கு கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார்.



சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா ஒரு தனியார் மருந்து உற்பத்தி நிறுவனம் ஆகும். இது ஆஸ்ட்ராசெனகா மருந்து உற்பத்தி நிறுவனம் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துடன்  இணைந்து ஒரு கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது.

சீரம் இன்ஸ்டிடியூட் பரிசோதனை செய்து கொண்டு இருக்கும் கொரோனா தடுப்பு மருந்தின் உற்பத்தி மற்றும் விநியோகம் குறித்தும், எப்போது முறையாக தடுப்பூசி வழங்கல் தொடங்கப்படும் எனவும் பிரதமர் அங்கு கேட்டறிந்தார்.

முதன்மைக் கல்வி அலுவலரை அவதூறாக பேசிய பட்டதாரி ஆசிரியரை பணியிட மாற்றம் செய்து கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு...


 

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - டிசம்பர் 2ம் தேதி தென் தமிழகத்தை நோக்கி நகரக்கூடும்...

 


பள்ளி பாதுகாப்பு திட்டம் (School Safety Plan) - புதிய படிவங்கள்...

 >>> Click here to Download பள்ளி பாதுகாப்பு திட்டம் (School Safety Plan) - புதிய படிவங்கள்...


இன்றைய செய்திகள் தொகுப்பு... 29.11.2020 (ஞாயிறு)...

 

🌹உதிக்கும்போதும் மறையும்போதும் ரசிக்கும் உலகம்.

உச்சிக்கு வந்தால் திட்டி தீர்க்கும்.

சூரியனை மட்டுமல்ல மனிதனின் வளர்ச்சியையும் கூட.!

🌹🌹சண்டை போட்டு பேசாமல் இருக்கும் காலம் போய் 

பேசினால் சண்டை வரும் என்று பயந்து பேசாமல் இருக்கும் காலத்தில் வாழ்கிறோம்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍒🍒தமிழகத்தில் பாடத்திட்டம் குறைப்பு குறித்த அறிக்கை நாளை திங்கட்கிழமை அன்று முதல்வரிடம் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

👉40 லிருந்து, 50 சதவீதமாக பாடத்திட்டங்களை குறைக்க -பள்ளிக் கல்வித்துறை முடிவு

🍒🍒நிவர் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 10 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

🍒🍒வேளாண் சட்டங்களை எதிர்க்கும் பஞ்சாப் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் - மத்திய அரசு.

🍒🍒முதுநிலை 2-ம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் - அமைச்சர் கே.பி.அன்பழகன்.

🍒🍒டிசம்பர் மாத ரேஷன் பொருட்களைப் பெற இன்று டோக்கன் விநியோகம் தொடங்குகிறது.

🍒🍒அரசின் நடவடிக்கையை பாராட்ட மனமில்லாமல், திமுக தலைவர் ஸ்டாலின் தினம் ஒரு அறிக்கையை வெளியிடுவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

🍒🍒தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

🍒🍒இஸ்ரோ -ரஷ்யா அனுப்பிய இரண்டு செயற்கைக் கோள்கள் விண்ணில் மோதுவதைப் போல மிகவும் அருகருகே வந்ததால் விஞ்ஞானிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.

🍒🍒அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாட்டின் செயற்கைக் கோளையும் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட புதிய ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. 14Ts033 நுடோல் என்று பெயரிடப்பட்ட அந்த ஏவுகணை புவி வட்டப் பாதையின் குறைந்த உயரத்தில் சுற்றித் திரியும் எந்த செயற்கைக் கோளையும் அழிக்கும் வல்லமை கொண்டது.

🍒🍒அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை மக்கள் பிரதிநிதி வாக்காளர்கள் குழு உறுதி செய்து அறிவித்தால், வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறுவேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

🍒🍒கொரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க பொது இடங்களில் முகக்கவசம் பயன்படுத்துவதையும் சமூக இடைவெளி பின்பற்றுவதையும் கண்டிப்பாக அமல்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.

🍒🍒 பள்ளிகள் திறந்தபின் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த சுவரொட்டி வெளியீடு

🍒🍒தமிழ் வழியில் பொறியியல் கல்வி: மத்திய அரசின் முயற்சிக்குத் தமிழக அரசு துணை நிற்கும்- அமைச்சர் பாண்டியராஜன் உறுதி

🍒🍒தமிழ் வழியில் பயின்று பணியில் சேர்ந்தவர்கள் விவரத்தை தர TNPSC-க்கு நீதிமன்றம் உத்தரவு.

🍒🍒பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் , இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன .

👉தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகையை அரசு வழங்குகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் விபரங்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்,டிச., 4 வரை பதிவு செய்யலாம்.

👉அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்கள், விருப்பமுள்ள மாணவர்களின் விபரங்களை, பள்ளிக்கல்வி மேலாண்மை இணையதளம் வழியாகவும், கூடுதல் விபரங்களை மாணவர்களிடம் பெற்றும், பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் முடிந்த அறிக்கையை, தலைமையாசிரியர்கள், மாவட்ட உதவி இயக்குனர் அலுவலர்களிடம், டிச., 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

🍒🍒அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 6-வது இடத்தை பிடித்துள்ளது

🍒🍒சிறுநீரக தொற்று, நீரிழிவு சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி

🍒🍒நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மாஸ்டர்’. அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

🍒🍒கொரோன தொற்று இல்லை என மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மழைக்காலம் மிகவும் சவாலானது; கவனமாக இருக்க வேண்டும் என சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

🍒🍒 தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் செயலாளராக கார்த்திகேயன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

🍒🍒நிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் நாளை திங்கட்கிழமை தமிழகம் வருகின்றனர்

மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் அசுதோஸ் அக்னிகோத்ரி தலைமையில் குழு அமைப்பு

7 அதிகாரிகள் கொண்ட மத்திய குழுவினர் தமிழகம் வந்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்கள்

🍒🍒சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவ.16 முதல் நேற்று வரை கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 39-ஆக உயர்வு: இனி பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு.

🍒🍒போராடிப் பெற்ற சமூகநீதியின் பயன் இந்த ஆண்டே அரசு மருத்துவர்களுக்குக் கிடைக்காமல் போகும் வகையில், கூட்டணியாகத் துரோகம் செய்த முதலமைச்சர் திரு. பழனிசாமிக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கும் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

🍒🍒வரலாற்றில் முதல் துறையாக உச்ச நீதிமன்றத்துக்கு ஜனவரி 14, 15ம் தேதிகளில் பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற தேசிய அளவிலான பண்டிகைகள், வடமாநில பண்டிகைகள் சிலவற்றுக்கும் மட்டுமே உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்

🍒🍒சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கும் தேதி  மேலும்  நீட்டிக்கப்பட்டுள்ளது

🍒🍒மேல்நிலை,உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக்கவேண்டும்" - தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

🍒🍒வரும் கல்வியாண்டு முதல் தாய்மொழியில் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை பயிலும் நடைமுறை; மத்திய அரசு அறிவிப்பு

🍒🍒ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் அதிருப்தி ஊதிய உயர்வு மற்றும் ஊதிய நிர்ணயத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை

🍒🍒கடந்த வாரம் தொடங்கிய மருத்துவ கலந்தாய்வு நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒத்திவைக்கப்பட்டது. நவ.29 வரை 4 நாள்களுக்கு மருத்துவக் கலந்தாய்வு நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

நாளை நவம்பர் 30 (திங்கள்கிழமை) முதல் நடைபெறும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

🍒🍒அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் கூடுதல் ஒதுக்கீடு தேவை - ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தல்.

🍒🍒வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக  10 நாட்கள் சொர்க்கவாசலை திறக்க அறங்காவலர் குழு முடிவு

டிச. 25 முதல் ஜனவரி 3 வரை திருப்பதி திருமலையில் சொர்க்கவாசல் திறப்பு 

- கோயில் நிர்வாகம்

🍒🍒ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் மெதுவாக பந்து வீசிய இந்திய அணிக்கு அபராதம் 

🍒🍒இந்த ஆட்சி சுற்றுப்புறச் சூழலையோ, நீர்நிலைகளையோ பாதுகாக்கும் மனநிலையில் இல்லை

திமுக ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கி ரொம்ப நாள் ஆகிவிட்டது. இந்த நாள் அந்த நாள் என எந்த வேறுபாடும் கிடையாது

- கனிமொழி

🍒🍒கொரோனா தடுப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தி முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் - தலைமை செயலாளர் உத்தரவு

🍒🍒வரும் 30ஆம் தேதி ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை ராகவேந்திரா மண்டபத்தில்  சந்திக்கிறார் ரஜினி. அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்க உள்ளதாக தகவல்

🍒🍒ஐதராபாத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தில் பிரதமர் மோடி நேற்று ஆய்வு செய்தார்

🍒🍒அதிமுக செய்தி தொடர்பாளராக அப்சரா ரெட்டி நியமனம்

🍒🍒யோகி ஆதித்யநாத் அமைச்சரவை கொண்டு வந்த கட்டாய மதமாற்ற தடை அவசரச் சட்டத்துக்கு (லவ் ஜிகாத்) உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் ஒப்புதல்

இந்த அவசரச் சட்டத்தின்படி, திருமணத்துக்காக மட்டும் பெண்கள் மதம் மாறினால் அது செல்லாது என அறிவிக்கப்படும்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                              

  என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

ஒருங்கிணைந்த கல்வி - 2020-2021ஆம் கல்வி ஆண்டு - மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள்...

 ஒருங்கிணைந்த கல்வி (சமக்ர சிக்சா) - 2020-2021ஆம் கல்வி ஆண்டு - மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள்...

>>> வழிகாட்டு நெறிமுறைகள் (PDF)...


டிசம்பர் 15-ம் தேதிக்குள் 2000 மினி கிளினிக்குகள் துவங்கப்படும் - தமிழ்நாடு முதலமைச்சர்...

 


ஏழை, எளிய மக்களுக்காக தமிழகம் முழுவதும் தலா 1 மருத்துவர், 1 செவிலியர் மற்றும் 1 உதவியாளர் கொண்ட 2000 மினி கிளினிக் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முன்பே அறிவித்த நிலையில்,வரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் இந்த மினி கிளினிக் துவங்கப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

- தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி...

தமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு...

 


தமிழகத்தில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறை முதன்மை செயலாளராக ராஜேஷ் லக்கானி நியமனம்.

வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை செயலாளராக கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் நியமனம்.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலராக ஷன்சொங்கம் ஜடாக் சிரு நியமனம்.

அரசு உதவிபெறும் கல்லூரி - நிரந்தர பணியிடம் - இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆய்வக உதவியாளர், பதிவறை எழுத்தர், நூலக உதவியாளர் தேவை - விண்ணப்பிக்க கடைசி நாள்: 14-12-2020...

 


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர்(75 இடங்கள்), தட்டச்சர்(87 இடங்கள்) பணிக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...

 


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில்  இளநிலை உதவியாளர்(75 இடங்கள்), தட்டச்சர்(87 இடங்கள்) பணிக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...


TAMIL NADU VETERINARY AND ANIMAL SCIENCES UNIVERSITY

Madhavaram Milk Colony, Chennai-600 051.

Advertisement No. 04/2020

Notification No. 1695/2020 Dated:23.11.2020

Applications are invited from the eligible candidates to fill up the following non-teaching posts by recruitment based on the marks obtained by the candidates  in the written examination followed by counselling in Tamil Nadu Veterinary and  Animal Sciences University. 

The number of posts, communal rotation, qualification(s) and scale of pay to  theposts as per TANUVAS Regulations / Service Rules are as follows:

Sl. 

No. Name of the Post

No. of Post(s)

Regular + Backlog

1. Junior Assistant 74 + 1

2. Typist 78+ 9

Total 152 +10

II. AGE LIMIT (as on 31.10.2020): 

Minimum : 18 years 

Maximum : OC - 30 Years, BC and BCM and MBC/DC - 32 Years; SC/ST- 35 Years 

Note: 

1) Relaxation of rules to the candidates of Ex-Servicemen, Destitute  Widow and Disabled persons will also be applicable as per Tamil  Nadu Govt. norms and pending clarifications from the Government

2) The relaxation in age to the candidates (BC, BCM, MBC/DC, SC and ST only) for possessing higher qualifications is applicable to these posts as per Tamil Nadu Government norms).

3) The relaxation in age to the candidates those who are working permanent employee of TANUVAS and Casual Labourer who were recruited originally through Employment Exchange. 

III. Qualification and Scale of Pay (Pay Matrix)

(1) Junior Assistant - Rs.19,500-62,400/- (Pay Matrix Level-8)

Pass in HSC or any other qualification recognized equivalent thereto.

(2) Typist - Rs.19,500-62,400/- (Pay Matrix Level-8)

i) Minimum General Educational Qualification viz. must have passed SSLC Public Examination or its equivalent with eligibility for admission to Higher Secondary Courses of studies or to College Courses of studies.

ii) (a) Typewriting English and Tamil Higher (or)

(b) Typewriting English Lower and Tamil Higher (or)

(c) Typewriting English Higher and Tamil Lower

Explanation

Item (b) will be recruited if item (a) is not available and item (c) will be 

recruited if item (a) and (b) are not available.

Note:

 Certificate course in “Computer on Office Automation” awarded by the 

Directorate of Technical Education is essential.

i) “Candidates who do not possess the Computer on Office Automation qualification awarded by Technical Education Department may also apply. If selected, they should acquire such qualification within the period of their probation. The probation will be declared in their cases only after getting a pass in the said Certificate course. Otherwise, they will be dealt with as per the provision under General Rule 27 of Tamil Nadu State and Subordinate services”.

ii) Those who possess Degree or Diploma in Computer Science or Computer Engineering as one of the subjects approved by the University Grants Commission / All India Council for Technical Education / Directorate of Technical Education or an equivalent body may be exempted from passing the “Certificate Course in Computer on Office Automation” conducted by the Directorate of Technical Education.

The candidates are informed to apply the posts now called for through online in the webportal, “tanuvas1.ucanapply.com” only. Application form(s) sent in any other modes will not be considered.

The prescribed registration fee for the candidates belong to MBC/DC, BC, BCM and OC is Rs.500/- (Rupees Five hundred only) and Rs.250/- (Rupees Two hundred and fifty only) in case of SC/ST candidates. The candidates irrespective of communities from other States/Union Territories will be treated under “OC” category only and registration fee is 

Rs.500/- (Rupees Five hundred only).

The details of qualification(s) and scale of pay (Pay Matrix) are as per TANUVAS Regulations / Service Rules, etc. The cut-off date for age, qualification(s) and technical qualification(s) is 31.10.2020.

The last date for submitting the application(s) online in the webportal 

(tanuvas1.ucanapply.com) is on 22.12.2020 up to 05.00 p.m.

Note: i) The applicants who possess Diploma/UG/PG degrees through Open University System after passing the SSLC and HSC Examinations / basic Degree alone will be considered as possessing a UG/PG degree as per GO.Ms.No.107, P&AR (M) Dept.dt.18.8.2009 for claiming age relaxation.

ii) Mere submitting of application will not confer any right of getting appointment in TANUVAS.

iii) The University reserves the right to fill up (or) modify (or) not to fill up the posts advertised without assigning any reason whatsoever.

Any queries/clarifications on filling the application / technical issues shall be addressed only to recruitment@tanuvas.org.in and no other means in this regard will be entertained.

For updates on the recruitment process, keep looking thewebportal (tanuvas1.ucanapply.com) / website of the University (www.tanuvas.ac.in)

Date : 23.11.2020                           Registrar

Place : Chennai - 51.                     TANUVAS

-***

>>> Click here to Download Notification...



கொரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க பொது இடங்களில் முகக்கவசம் பயன்படுத்துவதையும் சமூக இடைவெளி பின்பற்றுவதையும் கண்டிப்பாக அமல்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்...

 >>> Click here to Download Chief Secretary Letter...


மத்திய அரசின் அச்சகத்தில் பி.இ.,/ பி.டெக்., / ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு...


மகாராஷ்டிராவில் நாசிக்கில் உள்ள இந்தியன் செக்யூரிட்டி பிரஸ் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 காலியிடங்கள் 

வெல்பேர் ஆபீஸர் 1 சூப்பர்வைசர் 40 (டெக்னிக்கல் ஆப்பரேஷன் 8, டெக்னிகல் கண்ட்ரோல் 7, டெக்னிக்கல் ஆப்பரேஷன் ஸ்டூடியோ 2, டெக்னிக்கல் ஆப்பரேஷன் மெக்கானிக்கல் 9, எலக்ட்ரிக்கல் 8, டெக்னிக்கல் ஆப்பரேஷன் டிராக்& டிரெஸ் 2, எலக்ட்ரானிக்ஸ் 2, சிவில் 2, ஜூனியர் டிராப்ட்ஸ்மேன் 1 என மொத்தம் 42 இடங்கள் உள்ளன

வயது : 

21-12-2020 அடிப்படையில் ஜூனியர் டிராப்ட்ஸ்மேன் பதவிக்கு 28, மற்ற பதவிகளுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

கல்வித்தகுதி

 சூப்பர்வைசர் பதவிக்கு தொடர்புடைய பிரிவில் பிஇ/ பிடெக் முடித்திருக்க வேண்டும். ஜூனியர் டிராப்ட்ஸ்மேன் பதவிக்கு ஐடிஐ முடித்திருக்க வேண்டும் என விதிமுறை.

 ஆன்லைன் விண்ணப்ப கட்டணம்

 ரூபாய் 600 (எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூபாய் 200) கடைசி நாள் 21 12 2020 

விவரங்களுக்கு

>>> Click here to Download Notification...



அரசு உதவி பெறும் கல்லூரி - நிரந்தர பணியிடங்கள் - தமிழ், வணிகவியல் உதவி பேராசிரியர் பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 14-12-2020...

 


ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தைத் அரசுப்பள்ளிக்கு தானமாக வழங்கிய தொழிலதிபர்...

 கோவை எலச்சிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியைத் தரம் உயர்த்த அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் '' ரூ.3 கோடி மதிப்புள்ள 1.50 ஏக்கர் நிலத்தைத்'' தானமாக வழங்கியுள்ளார்.

கோவை கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட எலச்சிபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 

அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் படிக்க ஏதுவாக 1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தப் பள்ளியில் தற்போது 174 மாணவர்கள் படித்து வருகின்றனர். 

இடப்பற்றாக்குறை நிலவி வந்ததால் உயர் நிலைப்பள்ளியாக அப்பள்ளி தரம் உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. இதனால் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டுமெனில் மாணவர்கள் 15 கிலோமீட்டர் பயணித்து அரசூர், தெக்கலூர், சூலூர் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.

எனவே, அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள், பொதுமக்கள் இணைந்து பள்ளியைத் தரம் உயர்த்த முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். அரசுத் தரப்பை அனுகியபோது, இடம் இருந்தால் கட்டிடத்தைக் கட்டிக்கொடுப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தியிடம் தெரிவித்தவுடன், அவர் தனக்குச் சொந்தமான ரூ.3 கோடி மதிப்புள்ள 1.50 ஏக்கர் நிலத்தைத் தானமாக எழுதிக் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து எலச்சிபாளையம் கிராம மக்கள் கூறுகையில், "கருமத்தம்பட்டி பேரூராட்சிப் பகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். இருப்பினும், அரசு உயர்நிலைப்பள்ளி இல்லாததால் எலச்சிபாளையத்தில் பள்ளியைத் தரம் உயர்த்தத் தொடர்ச்சியாகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தோம். 

தொழிலதிபர் ராமமூர்த்தியிடம் தெரிவித்தவுடன் நடுநிலைப் பள்ளிக்கு அருகே 1.50 ஏக்கர் பரப்பளவிலான தனது நிலத்தை வழங்கி உயர் நிலைப்பள்ளி கட்ட ஆவன செய்துள்ளார். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்மூலம், தொலைவில் உள்ள பள்ளிகளுக்குத் தங்கள் குழந்தைகள் சென்று வீடு திரும்பும் வரை அச்சத்துடனேயே பெற்றோர் இருக்கும் சூழல் தவிர்க்கப்படும். 

இடத்தைத் தானமாக அளித்த ராமமூர்த்திக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஊர் மக்கள் சார்பில் நாளை (நவ.29) பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். இடம் கிடைத்துள்ளதால் உயர் நிலைப்பள்ளியாக உடனே தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

 தந்தை வழியில் மகனும் உதவி

இதுகுறித்துத் தொழிலதிபர் ராமமூர்த்தி கூறுகையில், "எலச்சிபாளையம் கிராமம் விவசாயம் மற்றும் விசைத்தறித் தொழிலைப் பிரதானமாகக் கொண்டுள்ளது. இங்கு குழந்தைகள் படிப்பதற்காக 1957-ல் என்னுடைய தந்தை பள்ளிக்கு நிலத்தைத் தானமாகக் கொடுத்து, பள்ளியும் கட்டிக் கொடுத்துள்ளார். தற்போது மாணவர்களின் படிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளதால் கருமத்தம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இல்லாததால் அதைக் கட்ட கிராம மக்கள் முயற்சிகள் மேற்கொண்டுவந்தது குறித்து என்னிடம் தெரிவித்தனர்.

அதன்படி நிலத்தை அரசுக்குத் தானமாக வழங்கி உள்ளேன். இதனால் இந்தப் பகுதியில் உள்ள மாணவர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் கல்வி பயில முடியும். இந்த இடத்தில் மேல்நிலைப்பள்ளி கட்டப்பட்டு, இங்கு பயிலும் மாணவர்கள் வாழ்வில் முன்னேறினால் அதுவே எனக்கு மிகுந்த மனநிறைவைத் தரும். மேலும் பள்ளிக்காக நிலம் வழங்க எனக்கு வாய்ப்புக் கொடுத்த கிராம மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பள்ளிக்குத் தேவையான உதவிகளை இயன்றவரை செய்யத் தயாராக உள்ளேன்" என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு... 27-04-2024 – Press News – Date Extension for Online Application - Direct R...