கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

BLO பணியை செய்யாத ஆசிரியருக்கு "கண்டனம்" என்ற தண்டனை வழங்கி அதனை அவரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் செயல்முறைகள்...

 

 BLO பணியை செய்யாத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியருக்கு "கண்டனம்" என்ற தண்டனை வழங்கி அதனை அவரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு...



>>>  காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


PRESS, Secretariat, TNEB, GCC, Defence, Police, Doctor, EB போன்ற வாசகங்களை வாகனங்களில் ஒட்டினால் மே 2 முதல் அபராதம்...

 


PRESS, Secretariat, TNEB, GCC, Defence, Police, Doctor, EB போன்ற பெயர்களை வாகனங்களில் ஒட்டத் தடை...


மே 2 முதல் இதுபோன்ற வாசகங்களை வாகனங்களில் ஒட்ட சென்னை காவல்துறை தடை, மீறினால் அபராதம்...



>>> காவல் துறை செய்தி வெளியீடு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



மே மாத (May Bank Holidays List) வங்கி விடுமுறை நாட்களின் முழு விவரம்...

 


*💢பேங்க் போறீங்களா? மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை தெரியுமா?*



*_Bank Holidays In May: மே மாதம் பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது வரும் மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என்று தெரிந்துக்கொள்வோம்._*


மே மாத (May Bank Holidays List) வங்கி விடுமுறை நாட்களின் முழு விவரம் :


மே 1 - மே தினம் / மகாராஷ்டிரா ஸ்தாபன நாள் (சென்னை, கொச்சி, பெங்களூர், தெலுங்கானா, ஆந்திரா, இம்பால், கொல்கத்தா, நாக்பூர், மும்பை, பனாஜி திருவனந்தபுரம் மற்றும் பாட்னா) வங்கி விடுமுறை.


மே 5 - ஞாயிற்றுக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.


மே 7- மூன்றாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வங்கி விடுமுறை.


மே 8 - இரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள் (கொல்கத்தா) வங்கி விடுமுறை.


மே 10 - அட்சய திருதியை / வாசவ ஜெயந்தி (பெங்களூரு) வங்கி விடுமுறை.


மே 11 - இரண்டாவது சனிக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.


மே 12 - ஞாயிற்றுக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.


மே 13 - நான்காம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வங்கி விடுமுறை.


மே 16 - மாநில தினம் (காங்டாக்) வங்கி விடுமுறை.


மே 19 - ஞாயிற்றுக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.


மே 20 - ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வங்கி விடுமுறை.


மே 23 - புத்த பூர்ணிமா (ஐஸ்வால், பேலாப்பூர், அகர்தலா, போபால், டேராடூன், இட்டாநகர், சண்டிகர், கொல்கத்தா, லக்னோ, ஜம்மு கான்பூர், நாக்பூர், மும்பை, ராஞ்சி, புது டெல்லி, ஸ்ரீநகர், சிம்லா மற்றும் ராய்ப்பூர்) வங்கி விடுமுறை.


மே 25 - நான்காவது சனிக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.


மே 26 - ஞாயிற்றுக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.


மெட்ராஸ் உயர் நீதிமன்றம் - 2329 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு & விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள்...

 


மெட்ராஸ் உயர் நீதிமன்றம் - 2329 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு & விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள்...




>>> விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள் - JUDICIAL RECRUITMENT CELL, HIGH COURT, MADRAS - COMMON INSTRUCTIONS TO THE CANDIDATES APPLYING FOR VARIOUS POSTS IN THE SUBORDINATE JUDICIAL SERVICE IN THE STATE OF TAMIL NADU (Notification Nos. 75 to 171/2024, dated 28.04.2024)...



>>> மாவட்ட வாரியான காலிப்பணியிடங்கள் & அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஆரஞ்சு நிறமாக மாறிய கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரம் - காரணம் என்ன...?



ஆரஞ்சு நிறமாக மாறிய கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரம் - காரணம் என்ன...?


கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரம் திடீரென ஆரஞ்சு நிறமாக காட்சியளித்ததால் அங்குள்ள பொதுமக்கள் பீதியடைந்தனர்.


தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஒன்றான கிரீஸ் பல்வேறு சிறப்புகளுக்கு பெயர் பெற்றது. பால்கன் தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ள இந்த நாட்டின் தலைநகரமாக ஏதென்ஸ் நகரம் உள்ளது. 



அட்டிக் சமவெளியில் அமைந்துள்ள இந்த நகரம் மிகப்பெரிய பரப்பளவை கொண்டது. 3 பக்கம் மலைகளால் சூழப்பட்ட ஏதென்ஸ் நகரம் உலகின் மிகவும் தொன்மையான நகரங்களில் ஒன்றாக உள்ளது. 


கிரேக்க சாம்ராஜ்யத்தின் மையப்புள்ளியாக விளங்கும் ஏதென்ஸ் நகரம் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நவீன ஒலிம்பிக் போட்டியின் தாயகமாக விளங்கும் கிரீஸ் நாட்டில் பல்வேறு சிறப்பு வாய்ந்த நினைவு சின்னங்களும், பண்டைய கால கட்டடங்களும் உள்ளது. இதனால் வெளிநாட்டினர் விரும்பி சுற்றுலா செல்லும் நகரமாக உள்ள ஏதென்ஸ் உள்ளது.


இந்நிலையில் இந்த நகரில் உள்ள சிண்டக்மா சதுக்கம், பார்த்தியான் ஆலயம், லிகாப்டஸ் குன்று உள்ளிட்ட பகுதிகள் நேற்று ஆரஞ்சு நிறமாக மாறியது. இதனால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் அதிர்ச்சியடைந்தனர்.



பார்ப்பதற்கு செவ்வாய் கிரகத்தை காண்பது போல காட்சியளிக்க என்ன காரணம் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விளக்கமளித்துள்ளது. அதாவது, “வட ஆப்பிரிக்காவில் இருந்து மேக கூட்டங்கள் இந்த காலக்கட்டத்தில் கிரீஸ், மாசிடோனியா, சிப்ரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு நகர்வது இயற்கையான ஒன்று தான். 


இந்த மேக கூட்டத்துடன் சஹாரா பாலைவனத்தின் மண் துகள்கள் கலந்ததால் புழுதி புயல் தாக்கியுள்ளது. இதனால் அந்நகரம் ஆரஞ்சு கலரில் தெரிந்தது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சிறந்த ஆசிரியரால் மட்டுமே மிகச் சிறந்த குடிமகனை உருவாக்க முடியும்...



''சிறந்த ஆசிரியரால் மட்டுமே மிகச் சிறந்த குடிமகனை உருவாக்க முடியும்...''



_*ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது என்பது நூறு சதவீதம் உண்மை. தாய், தந்தையை விட, ஆசிரியரிடம் தான் ஒரு குழந்தை அதிக நேரம் செலவழிக்கிறது.*_ 


_எனவே தான், ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோர் என அழைக்கப்படுகின்றனர். தன்னிடம் படிக்கும் மாணவர்களை, சமுதாயத்துக்கு ஏற்ற வகையில் மனிதனாக மாற்ற வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உண்டு._ 


_*மாணவனுக்கு சமூகத்தில் கிடைக்கும் வெற்றி தான் கற்பித்த ஆசிரியரின் வெற்றி.*_


_பிலிப் என்கின்ற மன்னனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஊர் மக்களை ஓன்று திரட்டி தனது உப்பரிகை மேல் நின்று கொண்டு தங்க நாணயத்தை திரண்டு நின்று கொண்டு இருந்த மக்கள் வீது அள்ளி வீசினான்.._


_*அங்கு நின்று கொண்டு இருந்த கடைசி மனிதன் கையில் நாணயம் கிடைக்கும் வரை வீசிக் கொண்டே இருந்தான்..*_


_அப்போது மக்கள் எல்லாம் மகிழ்ச்சி பொங்க மன்னனின் குழந்தையை வாழ்த்துவது கண்டு மனம் பூரித்தான்.._


_*மன்னனின் அமைச்சர் ஒருவர் சொன்னார். ''மன்னர் ஆண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியை' மக்களிடம் தங்கக் காசு கொடுத்து அதனை தெரிவித்து மகிழ்கிறார் என்று சொன்ன போது..*_


_மன்னன் குறுக்கிட்டுச் சொன்னான்,_


_*''இல்லை இல்லை, எனக்கு ஆண்மகவு*_ _*பிறந்ததற்காக நான் தங்கக் காசு கொடுக்கவில்லை .*_


_எனக்குப் பாடம் நடத்தி என்னைச் சிறந்த மனிதனாக உருவாக்கிய ஆசிரியர் அரிஸ்டாட்டில் இருக்கும் போது என் மகன் பிறந்து விட்டான்.._


_*அவர் என் மகனை மிகப் பெரும்*_ _*அறிவாளியாக இந்த உலகத்திற்கு உருவாக்கித்*_ _*தருவார் என்ற மகிழ்ச்சியில் தான் இந்தப் பொற்காசுகளை அள்ளித்*_ _*தூவுகிறேன் என்று சொல்லி மீண்டும் அள்ளித்*_ _*தூவினான் ..*_


_அவன் சொன்னபடி பிற்காலத்தில் மிகப் பெரும் அறிவாளியாக உருவெடுத்தவன் தான் பிலிப் என்ற மன்னனின் மகன் மாவீரன் அலெக்சாண்டர்.._



_*ஆசிரியர் என்பது பணி அல்ல, ஒரு தொண்டு. மாணவர்களின் அறியாமை எனும் இருளை நீக்கி அவர்களது வாழ்வில் ஒளி ஏற்றுகின்றனர்..*_

 

_மாணவர்கள் கல் என்றால், ஆசிரியர்கள் சிற்பிகள் போன்ற பொன்மொழிகள் ஆசிரியர்களுக்குப் புகழ் சேர்க்கின்றன._


_*ஆம்..,ஒரு சிறந்த ஆசிரியரால் மட்டுமே ஒருவனை மிகச் சிறந்த குடிமகனாக உருவாக்க முடியும்..*_



உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...


27-04-2024 – Press News – Date Extension for Online Application - Direct Recruitment to The Posts of Assistant Professors in Tamilnadu Collegiate Educational Service for Govt. Arts & Science Colleges and Govt. Colleges of Education. 





>>> ஆசிரியர் தேர்வு வாரியம் - பத்திரிகை செய்தி - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மின் வாரிய பணிகளுக்கு செலுத்திய தேர்வு கட்டணத்தை திரும்ப பெற மே 5 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்...


மின் வாரிய பணிகளுக்கு செலுத்திய தேர்வு கட்டணத்தை திரும்ப பெற மே 5 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்...



மாணவர்களின் மூன்றாம் பருவ மதிப்பெண் விவரங்களை வகுப்பு ஆசிரியர் EMIS வலைத்தளத்தில்பதிவு செய்யும் முறை...

 


*💫EMIS-III TERM MARK ENTRY...


*📝மாணவர்களின் மூன்றாம் பருவ மதிப்பெண் விவரங்களை வகுப்பு ஆசிரியர் EMIS வலைத்தளத்தில்பதிவு செய்யும் முறை...


*LOGIN : Class teacher individual ID & password


*🔖மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் பதிவு செய்யும்போது கவனிக்க வேண்டியவை...


*▪️1 முதல் 5 ஆம் வகுப்பு வரை


*மொத்த மதிப்பெண்-60*-க்கு பதிவு செய்யவும்.


*➡️அதற்குமேல் பதிவு செய்தாலும் பதிவு ஆகாது...*


*➡️6 முதல் 8 ஆம் வகுப்பு வரை 100 க்கு பதிவு செய்யவும்...*


*➡️தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு A (Absent) என பதிவு செய்யவும்...*


 *▪️SA -க்கு வரவில்லை என்பதால் FA மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டாம்..*


▪️A என பதிவு செய்தால் Remarks காலத்தில் Absent என வரும்..


▪️தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு FA மதிப்பெண்களை பதிவு செய்யும்போது ஒரு மாணவருக்கு FA மதிப்பெண் 30 என்றால் அந்த மதிப்பெண்களை பதிவு செய்தால் Remarks காலத்தில் Fail என வரும்..


எனவே FA மதிப்பெண் 40-க்கு 35 ஆக இருந்தாலும் SA-க்கு வரவில்லை எனில் A என பதிவு செய்யவும்...



>>> மாணவர்களின் மூன்றாம் பருவ மதிப்பெண் விவரங்களை வகுப்பு ஆசிரியர் EMIS வலைத்தளத்தில்பதிவு செய்யும் முறை...


கருணை அடிப்படையில்‌ பணி நியமனம்‌ - பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர்களின்‌ திருமணமான பெண்‌ வாரிசுதாரர்களுக்கும்‌ கருணை அடிப்படையில்‌ பணி நியமனம்‌ வழங்குதல்‌ - அரசாணை (நிலை) எண்: 78, நாள்: 21-04-2017 வெளியீடு...


கருணை அடிப்படையில் (Compassionate Ground Basis Appointment - G.O.Ms.No. 78, Dated: 21-04-2017) பணி நியமனம்‌ - பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர்களின்‌ திருமணமான பெண்‌ வாரிசுதாரர்களுக்கும்‌ கருணை அடிப்படையில்‌ பணி நியமனம்‌ வழங்குதல்‌ - அரசாணை (நிலை) எண்: 78, நாள்: 21-04-2017 வெளியீடு...



>>> அரசாணை (நிலை) எண்: 78, நாள்: 21-04-2017 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



கருணை அடிப்படையில்‌ பணி நியமனம்‌ - பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர்களின்‌ திருமணமான பெண்‌ வாரிசுதாரர்களுக்கும்‌ கருணை அடிப்படையில்‌ பணி நியமனம்‌ வழங்குதல்‌ - ஆணை வெளியிடப்படுகிறது.

அரசாணை (நிலை) எண்‌.78. நாள்‌ 21.04.2017.

ஹேவிளம்பி வருடம்‌, சித்திரை மாதம்‌ 8 -ஆம்‌ நாள்‌, திருவள்ளுவர்‌ ஆண்டு 2048.

படிக்க:

1 அரசாணை (நிலை) எண்‌.560, தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌ துறை, நாள்‌ 03.08.1977.

2. அரசாணை (நிலை) எண்‌.8, தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌ துறை, நாள்‌ 07.01.1987.

3... அரசாணை (நிலை) எண்‌:155, தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌ துறை, நாள்‌ 16.07.1993.

4... அரசாணை (நிலை) எண்‌. 135, தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌ துறை, நாள்‌ 04.10.2006.
 
5: அரசாணை (நிலை) எண்‌.165, தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌ துறை, நாள்‌ 30.08.2010.

6. அரசாணை (நிலை) எண்‌.96, தொழிலாளர்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புத்‌ (க்யூ) துறை, நாள்‌ 18.06.2012.

7. சென்னை, உயர்நீதிமன்ற நீதிப்பேராணை மனு எண்‌.14344/2012, தீர்ப்பு நாள்‌ 17.4.2014.

8. அரசு தலைமை வழக்குரைஞரின்‌ கருத்து எண்‌.82/15, நாள்‌ 8.6.2015.


ஆணை.

மேலே ஒன்றில்‌ படிக்கப்பட்ட அரசாணையில்‌, நெருங்கிய உறவினர்கள்‌ என வரையறுக்கப்பட்டுள்ள, பணியிடை மரணமடைந்த அரசு ஊழியரின்‌ மனைவி / கணவர்‌ / மகன்‌ / திருமணமாகாத மகள்‌ ஆகியோர்‌ கருணை அடிப்படையில்‌ பணி நியமனம்‌ பெறத்‌ தகுதியுடையவர்‌ என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 

2. மேலே இரண்டில்‌ படிக்கப்பட்ட அரசாணையில்‌, இறந்த அரசு ஊழியரின்‌ கணவன்‌ / மனைவி கருணை அடிப்படையில்‌ பணிநியமனம்‌ கோரி, தங்களின்‌ வாரிசுதாரர்களில்‌, யாரை பரிந்துரை செய்கிறார்களோ, அவர்களுக்கே பணிநியமனம்‌ வழங்கப்பட வேண்டும்‌ என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.



யார் யாரெல்லாம் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்?

 

யார் யாரெல்லாம் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்?



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியருடன் உபரியாக உள்ள 2236 இடைநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நிரவல் கலந்தாய்வு - 30-4-2024க்குள் கூடுதல் மாணவர்களை சேர்த்துவிட்டால் பணிநிரவலில் இருந்து தவிர்ப்பு வழங்கப்படும் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 020254/ இ1/ 2023, நாள்: 23-04-2024...


 தொடக்கக்கல்வி துறையில் ஆசிரியருடன் உபரியாக உள்ள 2236 இடைநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நிரவல் கலந்தாய்வு - Surplus Teacher with Post...


30-4-2024க்குள் கூடுதல் மாணவர்களை சேர்த்துவிட்டால் பணிநிரவலில் இருந்து தவிர்ப்பு வழங்கப்படும் - தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்...



>>> தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 020254/ இ1/ 2023, நாள்: 23-04-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2023-2024ஆம் கல்வி ஆண்டு - பள்ளி வேலைநாட்கள் விவரம்...

 

 2023-2024ஆம் கல்வி ஆண்டு - பள்ளி வேலைநாட்கள் விவரம்...


Academic Year 2023-2024 - Details of School Working Days...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



55 ஆசிரியர்களுக்கு பின்லாந்து & ஸ்வீடன் சுற்றுலா - 325 ஆசிரியர்களுக்கு டேராடூன் சுற்றுலா - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - இணைப்பு: ஆசிரியர்கள் பட்டியல்...



55 ஆசிரியர்களுக்கு பின்லாந்து & ஸ்வீடன் சுற்றுலா - 325 ஆசிரியர்களுக்கு டேராடூன் சுற்றுலா - கனவு ஆசிரியர் விருது பெற்றவர்களுக்கு உலக அளவில் / இந்திய அளவில் சுற்றுலா - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - இணைப்பு: ஆசிரியர்கள் பட்டியல்...



>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> 325 ஆசிரியர்கள் பட்டியல் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




கோடை விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மற்றும் பயிற்சிகள் நடத்துதல் கூடாது - திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்...

 

 கோடை விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மற்றும் பயிற்சிகள் நடத்துதல் கூடாது - திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள், நாள்: 16-04-2024...





22-04-2024 முதல் 26-04-2024 வரையிலான பள்ளி நாட்காட்டி & TN Attendance Appல் பதிவு செய்யும் முறை...

 

 

* 22-04-2024 - திங்கள் - அறிவியல் தேர்வு

 

* 23-04-2024 -சமூக அறிவியல் தேர்வு.


* 22,23 வருகைப் பதிவு "Partially working" in TN Attendance App...


* 24,25,26 தேதி -- வருகைப் பதிவு FULLY NOT WORKING in TN Attendance App...


*26-04-2024 - வெள்ளி -- கல்வி ஆண்டின்  பள்ளி இறுதி வேலை நாள்...



மருத்துவ காப்பீட்டுக்கான வயது வரம்பு நீக்கம் - இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு...



தனிநபர் மருத்துவ காப்பீட்டுக்கான வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளதாக இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது...



>>> செய்தியை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பொருட்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை...


 வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பொருட்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை...


Things to be observed while handing over the items to the Zonal Officer at each polling station after polling is over...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வாக்காளர்களுக்காக புதிய வசதி அறிமுகம் - QUEUE AT POLLING STATION / வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவரின் எண்ணிக்கை அறிய புதிய இணையதளம் அறிமுகம்...

 


வாக்காளர்களுக்காக புதிய வசதி அறிமுகம் - QUEUE AT POLLING STATION / வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவரின் எண்ணிக்கை அறிய புதிய இணையதளம் அறிமுகம்...


வாக்காளர்களுக்காக புதிய வசதி அறிமுகம் - 


Click Here: https://erolls.tn.gov.in/Queue/


இந்த வலைத்தளத்தில் மாவட்டம், தொகுதி, வாக்குச்சாவடி எண் தேர்வு செய்து Submit கொடுத்தால் வரிசையில் காத்திருப்பவர்கள் எண்ணிக்கையை அறிந்து கொள்ளலாம்...


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - 2023 -24 ஆம் நிதியாண்டு அனைத்து வகை அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை (Composite School Grant / Sim for Tablet - June 24) - இரண்டாம் கட்டமாக மீதம் உள்ள 50% மானியத்தொகை அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 20932/ சி4/ இ1/ 2024, நாள்: 15-04-2024...



ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - 2023 -24 ஆம் நிதியாண்டு அனைத்து வகை அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை (Composite School Grant / Sim for Tablet - June 24) - இரண்டாம் கட்டமாக மீதம் உள்ள 50% மானியத்தொகை அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 20932/ சி4/ இ1/ 2024, நாள்: 15-04-2024...



>>> பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 20932/ சி4/ இ1/ 2024, நாள்: 15-04-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பணி ஆணை (Duty Order) வழங்கப்படும் நேரம் - மாவட்ட தேர்தல் அலுவலரின் செய்தி...

 

 


 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பணி ஆணை (Duty Order) வழங்கப்படும் நேரம் - மாவட்ட தேர்தல் அலுவலரின் செய்தி...


2024 பாராளுமன்ற பொதுத் தேர்தல் பணிக்கு வாக்குச்சாவடி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள தங்களுக்கான 3-வது பயிற்சி வகுப்பு (3rd Training) 18.04.2024 வியாழக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு ஏற்கனவே பயிற்சி நடந்த இடத்தில் நடைபெறும். வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பணி ஆணை (Duty Order) வழங்கப்படும். 


- மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர், கடலூர்.


--------


*பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024*


********* (*******) அவர்களே, தாங்கள் 2024 பாராளுமன்ற பொதுத் 

தேர்தலுக்கு 135 - கரூர் சட்டமன்ற தொகுதியில் PO - ஆக 

Team Code :  *** -ல் நியமனம் செய்யப்பட்டுள்ளீர்.  


எனவே, தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் பணி புரிவதற்கு ஏதுவாக தேர்தல் பணி ஒதுக்கீடு ஆணையை நேரில் வந்து பெற்றுக்   கொண்டு உடன் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு செல்லுமாறு தெரிவிக்கப்படுகிறது.


தேர்தல் பணி ஆணை வழங்கும் இடம் : 

Govt. Arts College, Thanthoni.


நாள் : 18.04.2024


நேரம் : 9:30 am.


ARO/RDO Karur

135 Karur Assembly Constituency


Poll Monitoring System - PMS_GELS 2024 App தற்போதைய Update...

  


Poll Monitoring System - PMS_GELS 2024 App தற்போதைய Update...


PMS_GELS 2024 App Download Link...



>>> Click Here to Download PMS_GELS 2024 App...



PMS_GELS 2024 App பயன்படுத்தும் முறை...


Log in Screen ல், Mobile Number என்னும் இடத்தில் உங்களுடைய, தேர்தல் அலுவலகத்தில் பதிவு செய்த Mobile No.ஐ உள்ளீடு செய்யவும்.


Enter Pin என்னும் இடத்தில் உங்கள் Mobile எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை உள்ளீடு செய்யவும். PMS Appஐ பயன் படுத்தலாம்..




தீர்க்கப்படுமா தேர்தல் பணி ஊழியர்களின் பிரச்சினைகள்?


தீர்க்கப்படுமா தேர்தல் பணி ஊழியர்களின் பிரச்சினைகள்?


ஜனநாயகத்தின் அடையாளம், தேர்தல்கள். இந்தத் தேர்தல்களை நடத்தும் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் ஆணையத்தின் நேரடிக் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடுவார்கள்.                  


🌻அப்போதிலிருந்து தேர்தல் ஆணையம் கூறும் எந்தப் பணியையும் எந்தக் காரணம் கொண்டும் அவர்களால் மறுக்க முடியாது.        


🌻ஆணைகளை மீற முயன்றால், ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்’ பாயும். எனவே, தேர்தலை நடத்த வருவாய்த் துறை ஊழியர்களின் தொடர் பணியும், அதைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பணியும் இன்றியமையாதவை ஆகின்றன.      


🌻அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் எந்த வகையிலும் தேர்தல் பணியை மறுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அல்ல. மனிதாபிமானமற்ற அணுகுமுறைகள்தான் அவர்களை அவ்வாறு எண்ண வைக்கின்றன.    


🌻வீடு வீடாக பூத் ஸ்லிப் (வாக்காளர் விவரச் சீட்டு) விநியோகித்தல், தேர்தல் பயிற்சி வகுப்புகள், அதைத் தொடர்ந்து தேர்தலுக்கு முந்தைய நாளே வாக்குச்சாவடிக்குச் சென்று, தேர்தல் முடிந்து அனைத்தையும் ஒப்படைக்கும்வரை அங்கேயே இருப்பது எனத் தொடர்ந்து பல்வேறு பணிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும் .        


🌻ஆனால், எந்தப் பணியிலும் அடிப்படை வசதிகள் இருப்பதில்லை. வாக்குச்சாவடி அலுவலர் பணியில் பட்டதாரி ஆசிரியர்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது.               


🌻 *நடைமுறைச் சிக்கல்கள்:* தேர்தல் பணியில் அமர்த்தப்பட்ட அரசு ஊழியர்கள் தேர்தலுக்கு முந்தைய நாள் காலையிலேயே வந்துவிட வேண்டும்.       


🌻அப்போதுதான் அவர்கள் எங்கு பணிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆணை வழங்கப்படும். அங்கிருந்து நேரடியாக வாக்குச்சாவடிக்குச் சென்றுவிட வேண்டும்.        

🌻அந்த இடத்தில்தான் தேர்தல் நடத்துவதற்கான கருவிகளும், பிற ஆவணங்களும் வழங்கப்படும். தேர்தல் நடத்தும் பி.ஆர்.ஓ.தான் அனைத்துக்கும் பொறுப்பானவர். எனவே, அவர்களும் பெரும்பாலான பிற ஊழியர்களும் அங்குதான் இரவு தங்க வேண்டும்.         


🌻முந்தைய நாளே பணிக்கு வந்துவிடுவதால் அவர்களால் தேர்தல் அன்று உணவைக் கொண்டுவர முடியாது. தேர்தல் ஆணையம் அதற்குப் பொறுப்பேற்காது. காலை 5.30 மணிக்குத் தொடங்கும் பணி மாலையில் இயந்திரங்களை ஒப்படைக்கும் வரை நிறைவடையாது.                  


🌻அதிகாலையில் கருவிகளைச் சரியான இடத்தில் பொருத்தி, தேர்தல் தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாக அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு இயக்கிக் காட்ட வேண்டும். அவர்கள் ஒப்புதல் தந்த பிறகுதான், தேர்தல் தொடங்கும்.      


🌻 *உணவு இடைவேளை கிடையாது.* தேர்தல் தொடங்குவதற்கு முன் இரண்டு மணி நேரம் தயாரிப்பு, தேர்தல் பன்னிரண்டு மணி நேரம், பிறகு ஒப்படைக்கக் குறைந்தது இரண்டு மணி நேரம். உணவு இடைவேளை இன்றிப் பணிபுரியச் சொல்வது இந்திய நாட்டின் நடப்புச் சட்டங்களுக்கே எதிரானது.          


🌻உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, தேர்தல் ஒழுங்காக நடைபெற வேண்டும் என்ற மனஅழுத்தம் எனப் பல்வேறு அழுத்தங்களுக்கு இடையில், பட்டினியுடன் அவர்கள் போராட வேண்டிய நிலை தொடர்கிறது.      


🌻அவ்வப்போது கட்சி முகவர்கள் உணவு வழங்க முன்வந்தாலும், அதை ஏற்றால் அவர்களின் முறையற்ற கோரிக்கைகளை ஏற்க வேண்டி வரலாம் என்ற அச்சத்தில், பெரும்பாலான ஊழியர்கள் அவர்களிடமிருந்து எதையும் *பெறுவதைத் தவிர்த்துவிடுவர்* .                   


🌻மாலையில் தேர்தல் முடிந்த பிறகு பெட்டிகளை சீல் வைத்து, ஆவணங்களைத் தயார்செய்ய வேண்டும். பெட்டியை எடுத்துச் செல்லும் அதிகாரி முன்னதாக வந்துவிட்டால்கூடச் சமாளித்துவிடலாம்.                


🌻சில வேளை *நள்ளிரவையும் தாண்டித்தான் பெட்டியை எடுப்பார்கள்.* 

அதன் பிறகு தேர்தல் ஊழியர்களை *அப்படியே விட்டுவிட்டுச்* சென்றுவிடுவார்கள்.            


🌻அவர்களது பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் / துணை ராணுவப் படையினர் அப்படியே புறப்பட்டுவிடுவார்கள். ஊழியர்கள் பத்திரமாக வீடு திரும்பினார்களா என்பதை உறுதிசெய்வதெல்லாம் தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாக இல்லை.            


🌻சில தேர்தல் ஊழியர்கள் நள்ளிரவுக்கு மேல் புறப்பட்டு, *வீடு திரும்பும் தருணங்களில் விபத்தில் சிக்கி மரணமடைந்ததெல்லாம்* உண்டு.                


🌻அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தேர்தல் பணி குறித்து அச்சப்படுவதற்கு இப்படிப் பல காரணங்கள் உண்டு. பெருமையுடன் செய்யவேண்டிய ஒரு பணி, இப்படியான அலைக்கழிப்புகளால் அச்சம் கலந்த பணியாக மாறுகிறது.        


🌻 *தற்காலிகத் தீர்வுகள்:* வாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் குறைந்தபட்சம் கழிப்பறை, குளியலறை வசதிகள் சுத்தமாகக் கிடைக்கும் வகையிலாவது ஏற்பாடு செய்ய வேண்டும்.       


🌻தேர்தல் ஆணையம் நேரடியாகவோ யாரையாவது நியமித்தோ முந்தைய நாள் இரவிலிருந்து வாக்குப்பதிவு நாள் இரவு வரை தேநீர், உணவு உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.         


🌻உண்மையில், இவ்விஷயத்தில் பல நீண்ட காலச் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டியுள்ளன. எனினும், தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த அடிப்படை வசதிகளையாவது தேர்தல் ஆணையம் நிறைவேற்றித் தர வேண்டும் என அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் எதிர்பார்க்கிறார்கள்.



தபால் வாக்குகளை பதிவு செய்யும் தேதி நீட்டிப்பு - தபால் வாக்குகளை 18.4.2024 வரை பதிவு செய்யலாம் - தலைமை தேர்தல் அலுவலர் கடிதம்...

 

 அஞ்சல் வாக்குகளை 17.4.2024 மற்றும் 18.4.2024 ஆகிய நாட்களிலும் பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது...


எனவே விடுபட்டுள்ள அனைவரும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை அணுகி தபால் வாக்குகளை செலுத்தலாம்.



>>> தபால் வாக்குகளை 18.4.2024 வரை பதிவு செய்யலாம் - தலைமை தேர்தல் அலுவலர் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு Show cause notice வழங்கப்படும் - முதன்மைக் கல்வி அலுவலர்...

 


முதன்மைக் கல்வி அலுவலகம், செங்கல்பட்டு


நாடாளுமன்ற தேர்தலில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணி ஆணை இணைப்பில் கண்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் இது வரை தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வில்லை என தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது 


இவர்கள் மீது தேர்தல் கமிஷன் மூலம் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது இதை தவிர்க்கும் பொருட்டு உரிய ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் நாளை துரைப்பாக்கம் D B JAIN கல்லூரியில் நடைபெறும் தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் Show cause notice வழங்கப்படும்


முதன்மைக் கல்வி அலுவலர் செங்கல்பட்டு



>>> ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பெயர் பட்டியல்...


Teachers Transfer - New Module in EMIS Website...



 ஆசிரியர்கள் / அலுவலர்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளி / அலுவலகத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்கு மாறுதலில் செல்லும்போது EMIS ல் பெயரை ஏற்கெனவே பணிபுரிந்த இடத்திலிருந்து புதிதாக சென்ற பள்ளி / அலுவலகத்திற்கு மாற்ற வேண்டுமானால் அதற்கு சார்ந்த ஆசிரியர்/அலுவலர் emis.tnschools.gov.in என்ற websiteல் சென்று தங்களுடைய username மற்றும் password கொடுத்து login செய்து request கொடுக்க வேண்டும். தாங்கள் கொடுத்த request ஆனது மாவட்ட EMIS DC login ற்கு வரும். மாவட்ட அளவில் அதனை சரிபார்த்த பிறகு  ஆசிரியரின் / அலுவலரின் பெயரை புதியதாக சென்ற இடத்திற்கு மாற்றம் செய்யப்படும். அதற்கான வழிமுறைகள் அடங்கிய PDF கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Teachers Transfer - New Module in EMIS👇



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தேர்தல் பணியின் போது சாலை விபத்தில் உயிரிழந்த முதுகலை ஆசிரியரின் குடும்பத்திற்கு ₹15,00,000 இழப்பீட்டுத் தொகை வழங்கி அரசாணை G.O. 1D. No. 167, Dated: 16-04-2024 வெளியீடு...


தேர்தல் பணியின் போது சாலை விபத்தில் உயிரிழந்த முதுகலை ஆசிரியரின் குடும்பத்திற்கு ₹15,00,000 இழப்பீட்டுத் தொகை வழங்கி அரசாணை G.O. 1D. No. 167, Dated: 16-04-2024 வெளியீடு...



>>> Click Here to Download G.O. 1D. No. 167, Dated: 16-04-2024...

 

நாளை 17.04.24 புதன்கிழமை தேர்தல் ஆயத்த பணிகளை முன்னிட்டு பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் மையங்களுக்கு விடுமுறை...

 


நாளை 17.04.24 புதன்கிழமை தேர்தல்  ஆயத்த பணிகளை முன்னிட்டு பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் மையங்களுக்கு விடுமுறை...


வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் மையங்கள் காட்பாடி மற்றும் குடியாத்தம் ஆகிய இரண்டும் மையங்களும் நாளை17.04.24 புதன்கிழமை தேர்தல்  ஆயத்த பணிகளை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது.


72,    எல்எப்சி மேல்நிலைப்பள்ளி, இராணிப்பேட்டை விடைத்தாள் திருத்தும் மையம் பாராளுமன்ற பொது தேர்தல் முன்னேற்பாடுகளை முன்னிட்டு நாளை(17.04.2024) விலக்களிக்கப்படுகிறது. மேலும் வரும் திங்கட்கிழமை 22.4.2024 முதல் தொடர்ந்து நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


*முகாம் அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(த.ப), இராணிப்பேட்டை விடைத்தாள் திருத்தும் மையம்*


வணக்கம். நாகப்பட்டினம் மாவட்ட விடைத்தாள் திருத்தும் மையத்திலிருந்து ஒரு முக்கியச்செய்தி

நாளை 17.04.2024 புதன்கிழமை விடைத்தாள் திருத்தும் மையம் விடுமுறை. இனி திங்களன்றுதான் விடைத்தாள் திருத்தும் பணி.


முகாம் அலுவலரிடமிருந்து கிடைக்கப்பெற்ற அதிகாரப்பூர்வத்தகவல்🙏


நாகப்பட்டினம்  கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு   மற்றும் அரசு உதவி பெரும் மற்றும் மெட்ரிக்   உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் முக்கிய கவனத்திற்கு நாகப்பட்டினம் மாவட்ட கல்வி அலுவலகம் இடைநிலை கல்வியிலிருந்து ஒரு முக்கிய தகவல்  நாகப்பட்டினம்  நடராஜன் தமயந்தி  மேல்நிலைப் பள்ளியில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பத்தாம் வகுப்பு மைய மதிப்பீட்டு பணி நாளை 17 4 2024 அன்று கிடையாது   நாளைய தினம்  அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அயல் பணியாக கருதப்படும் எனவும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியருக்கும்  அறிவிக்கப்படுகிறது மாவட்ட கல்வி அலுவலகம் இடைநிலை கல்வி நாகப்பட்டினம்  .


31-03-2024ன் படி வேலைவாய்ப்பக பதிவுதாரர்களது விவரங்கள்...

 


31-03-2024ன் படி வேலைவாய்ப்பக பதிவுதாரர்களது விவரங்கள்...



Employment Exchange Statistics - Live Register status as on 31st March 2024 - English Version...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


நாளை 17.04.2024 மாலை 6:00 மணிக்கு பிறகு சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தை பகிர்ந்தாலும் தண்டனை - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை...



நாளை மாலை 6 மணிக்கு மேல் யாரும் பிரச்சாரம் செய்யக் கூடாது - தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர்...


நாளை 17.04.2024 மாலை 6:00 மணிக்கு பிறகு சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தை பகிர்ந்தாலும் தண்டனை - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை...



>>> செய்தி வெளியீடு எண்: 605 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



No one shall display to the public any election matter by means of cinematograph, television or other similar apparatus, like, FM Radios, WhatsApp, Facebook, Twitter, etc. This includes all electronic form of communication, including SMS and internet - Chief Electoral Officer Press Release No: 605, Dated: 16.04.2024...



>>> Click Here to Download Chief Electoral Officer Press Release No: 605, Dated: 16.04.2024...



குழு உறுப்பினர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவும்...



வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கையேடு - 2023 (Handbook for Presiding Officer English)...

 


வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கையேடு - 2023 (English)...


Presiding Officer Handbook 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Voter Helpline App மூலம் வாக்காளர்கள் Booth slip Download செய்யும் முறை & பாகம் எண், வரிசை எண் அறியும் முறை...

  


Voter Helpline App மூலம் வாக்காளர்கள் Booth slip Download செய்யும் முறை & பாகம் எண், வரிசை எண் அறியும் முறை...


அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே / தேர்தல் பணி அலுவலர்களே, 


தேர்தல் நாளன்று (19.04.2024) (வெள்ளிக்கிழமை) வாக்குச்சாவடி போவதற்கு முன் #BoothSlip #பூத்ஸ்லீப் ஆன்லைனில் நீங்களே download செய்துகொள்ளலாம்.


இதோ வழிமுறை.

1. Download Voter Helpline App from this website --> voters.eci.gov.in


இந்த வெப்சைட்டில் கிழே சென்று பார்த்தால் Mobile Apps பகுதியில் இருக்கும் "Voter Helpline App" for Android and Apple.

2. Install செய்த பின்னர், App open செய்தால் Login registration செய்து கொள்ளவும்.


3. Login செய்த பின்னர், உங்களின் mobile number + Password மூலம் உள்ளே செல்லுங்கள்.


4. App open செய்த பின்னர், மேலே "Search your name in electoral role" என search option இருக்கும். அதை கிளிக் செய்யவும்.


5. பின்னர் நான்கு வழிகள் மேலே தெரியும்.


     - Search by Mobile
     - Search by Bar / QR code
     - Search by Details
     - Search by EPIC No



6. நாம் உபயோகிப்பது "Search by EPIC No" option. அதை கிளிக் செய்து, உங்கள் Voter IDயில் உள்ள நம்பரை Enter செய்து Search பட்டனை அழுத்தவும்.


7. உங்களின் #பூத்ஸ்லீப் #BoothSlip வரும். அதில் பாகம் எண், வரிசை எண் அறிந்து கொள்ளலாம். அதை நீங்கள் சரிபார்த்த பின்னர், கீழே Share Option மூலம் உங்களின் இமெயிலுக்கோ, WhatsApp message ஆகவோ, அல்லது Print option கிளிக் செய்து PDF ஆக download செய்து கொள்ளலாம்.



வாக்காளர் பட்டியல் - பாகம் எண், வரிசை எண் எளிமையாக அறிந்து கொள்ளும் முறை...



வாக்காளர் பட்டியல் - பாகம் எண், வரிசை எண் எளிமையாக அறிந்து கொள்ளும் முறை...


Voter List - Part Number, Serial Number - Easy way to know...



1. கீழே உள்ள  Link ஐ Click செய்யுங்கள்...

👇🏼👇🏼👇🏼


https://electoralsearch.eci.gov.in/


*Search by EPIC* என்பதை Click செய்யுங்கள்


2. உங்கள் 

*Voter ID number* ஐ பதிவிடுங்கள்


3. "SUBMIT"

என்ற optionஐ 

Click செய்யுங்கள்


4. வாக்காளர் பட்டியலில் 

உங்கள் 

*பாகம் எண்

*வரிசை எண்

*முகவரி

போன்ற அனைத்து விவரங்களும் கிடைக்கும்.



FA(a) & FA(b) மதிப்பெண் பட்டியலை EMIS வலைத்தளத்தில் - எவ்வாறு பார்ப்பது? பதிவிறக்கம் செய்வது எப்படி?



FA(a) & FA(b) மதிப்பெண் பட்டியலை  EMIS வலைத்தளத்தில் - எவ்வாறு பார்ப்பது? பதிவிறக்கம் செய்வது எப்படி?


FA(a) & FA(b) Marks Download Procedure...


👇👇👇👇


EMIS Website


https://emis.tnschools.gov.in



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Marks for Third term Formative Assessment  are not published on EMIS website till now.  Currently only testing is underway. .Thank you.


       TN EE MISSION



மாணவர் சேர்க்கை - இயக்குநர் அலுவலகத் தகவல்...

 

மாணவர் சேர்க்கை - இயக்குநர் அலுவலகத் தகவல்...


 அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு,


     பொது சுகாதாரத் துறையின் மூலம் பெறப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் கடந்த 20 நாட்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் பெற்றோர்களுக்கு தலைமையாசிரியர் மூலமாக தொடர்பு கொண்டு பேசப்பட்டுள்ளது அதேபோல 14417 மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் பேசப்பட்டுள்ளது, பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள்பள்ளிக் கல்வித் துறையின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


         அந்த அடிப்படையில் பெற்றோர்களுக்கு நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.


எனவே மீதம் உள்ள பெற்றோர்களுக்கு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி மைய ஆசிரியர் பயிற்றுநர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வருகின்ற 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதிக்குள் முழுவதுமாக தொடர்பு கொண்டு தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்திட உரிய விழிப்புணர்வையும் உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



நாடாளுமன்றத் தேர்தல் 2024 - வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் - Timewise Check List...

 

 


 நாடாளுமன்றத் தேர்தல் 2024 - வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் - Timewise Check List...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



2024 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் செயல்பாடுகள் - ஒருபக்க சுருக்க கையேடு...

 

 


2024 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் செயல்பாடுகள் - ஒருபக்க சுருக்க கையேடு...




>>> PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வாக்குச்சாவடிக்கு வழங்கப்படும் பொருட்கள், படிவங்கள், உறைகள் - பட்டியல்...

 

 

 

வாக்குச்சாவடிக்கு வழங்கப்படும் பொருட்கள், படிவங்கள், உறைகள் - பட்டியல்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பூர்த்தி செய்யப்பட்ட தேர்தல் படிவங்கள் மாதிரிகள் - இராமநாதபுரம் - 2024...

 

 

 பூர்த்தி செய்யப்பட்ட தேர்தல் படிவங்கள் மாதிரிகள் - இராமநாதபுரம் - 2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Election - MASTER COVER - 6 குறித்த தகவல்கள்...

Election - MASTER COVER - 6 குறித்த தகவல்கள்...


 MASTER COVER - 6 (OTHER POLLING MATERIALS - COVER - ப்ளு கலர் (Blue) ( COVER  No. 6/1)  இதன் உள்ளே இக்கவரின் மேலே எழுதப்பட்டுள்ள (i) Candidate information Booklet, (ii) other unused forms, (iii) metal Seal of the presiding officer, (iv) Arrow Cross Mark rubber Stamp for making tender ballot papers, (v). Cup for setting the indelible ink இவற்றுடன் (vi) வாக்குச்சாவடி எண் Seal (vii) Mock poll slips Seal   ஆகிய அனைத்தும் வைத்து வழங்கிடவும்.


இவை தவிர இதர கையேடுகள் மற்றும் வாக்குப்பதிவு பொருள்கள் அனைத்தும் பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட துணிப்பையில் வைத்து ஒப்படைக்க வேண்டும்.


மேலும்  இதர படிவ அறிக்கைகள் கோரப்பட்டிருப்பின் அவற்றை மண்டல அலுவலரிடம் (தனி உறையிட்டு) வழங்கிடவும்.


- நன்றி.



Election - MASTER COVER - 5 குறித்த தகவல்கள்...

Election - MASTER COVER - 5 குறித்த தகவல்கள்...


 MASTER COVER - 5 (HAND B00KS, IINSTRUCTIONS - COVER - காக்கி கலர் (BROWN) ( COVER  No. 5/1)  இதன் உள்ளே இக்கவரின் மேலே எழுதப்பட்டுள்ள  Handbooks , instructions etc மற்றும் Indelible link Phials 2 அனைத்தும் (Cover எண்கள் 5/2, 5/3 என கவரிலே குறிப்பிடப்பட்டிருக்கும்) உள்ளே வைத்து வழங்கிடவும்...



Election - MASTER COVER - 4 குறித்த தகவல்கள்...

 Election - MASTER COVER - 4 குறித்த தகவல்கள்...


MASTER COVER - 4 ( NON  - STATUTORY COVER - மஞ்சள் கலர் (YELLOW )  ( COVER  No. 4/1)  இதன் உள்ளே இக்கவரின் மேலே எழுதப்பட்டுள்ள கவர்கள்  11  Cover கள் அனைத்தும் (Cover எண்கள் 4/2, 4/3, 4/4, 4/5 , 4/6, 4/7, 4/8, 4/9, 4/10, 4/11, 4/12  என கவரிலே குறிப்பிடப்பட்டிருக்கும்) உள்ளே வைத்து வழங்கிடவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

BLO பணியை செய்யாத ஆசிரியருக்கு "கண்டனம்" என்ற தண்டனை வழங்கி அதனை அவரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் செயல்முறைகள்...

   BLO பணியை செய்யாத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியருக்கு "கண்டனம்" என்ற தண்டனை வழங்கி அதனை அவரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய காஞ...