கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 10.02.2024க்குள் ஆண்டு விழா நடத்திட தொகைகள் ஒதுக்கீடு - DSE & DEE இணை செயல்முறைகள்...



அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 10.02.2024க்குள் ஆண்டு விழா நடத்திட வேண்டும் - பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் (DSE & DEE) இணை செயல்முறைகள்...



>>> பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் (DSE & DEE) இணை செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.01.2024...

 

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.01.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கேள்வி.


குறள் 415:


இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.


விளக்கம்:

வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.



பழமொழி : 


Every tide has its ebb.


ஏற்றம் உண்டானால் இறக்கமும் உண்டு.


பொன்மொழி:


You are never loser until you have quit trying...


 விடாமுயற்சி உங்களிடம் இருக்கும்வரை ஒருபோதும் நீங்கள் தோற்பதில்லை.



அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 இரப்பையில் ஏற்படும் அதிகப்படியான அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்தப் பயன்படும் வேதிவினை - நடுநிலையாக்கல்

இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கக்கூடிய வாயு - கார்பன் மோனாக்சைடு

புரதச் சேர்க்கையில் பயன்படுவது - நைட்ரஜன்

நீரேறிய காப்பர் சல்பேட்டின் நிறம் - நீலம்

எத்தில் ஆல்கஹாலின் கொதிநிலை - 78° C



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Choices - தெரிவுகள்

City - நகரம் 

Class - வகுப்பு 

Clay - களிமண்

Clean - சுத்தம் 



ஆரோக்கியம்


வாழைத்தண்டு, நீர்பூசணி, சுரைக்காய், புடலை, பீர்க்கங்காய் என பல காய்கறிகளில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. முட்டைகோஸ், காலிஃபிளவர், புரோக்கோலி போன்றவையும் உடலின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருப்பவை.



இன்றைய சிறப்புகள்


ஜனவரி 31


1961 – நாசாவின் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 விண்கலம் ஹாம் என்ற சிம்பன்சி ஒன்றை விண்ணுக்குக் கொண்டு சென்றது.


1966 – சோவியத் ஒன்றியம் தனது லூனா திட்டத்தின் கீழ் லூனா 9 என்ற விண்கலத்தை ஏவியது.


1968 – நவூரு ஆத்திரேலியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.



பிறந்த நாள் 

-


நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்


விடுதலை நாள் (நவூரு, ஆத்திரேலியாவிடம் இருந்து 1968)

தெருக் குழந்தைகள் நாள் (ஆஸ்திரியா)



நீதிக்கதை


தானம் அளிப்பது சிறந்தது 


மைசூரை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன் நீதியும், நேர்மையும் கொண்டவன். அன்பும், அருளும் நிறைந்தவன். அவன் ஒரு சமயம் காட்டுக்கு வேட்டையாட சென்றான்.


வழியில் வயதான விறகுவெட்டி ஒருவன் தலையில் விறகுகளை சுமந்தபடியே வந்தான். மன்னன் விறகுவெட்டியை பார்த்ததும் தள்ளாத வயதில் இவர் இப்படி கஷ்டப்படுகிறார் என்று வருந்தினான். 


பிறகு விறகு வெட்டியை பார்த்து, “ஐயா, உங்களுக்கு பிள்ளைகள் இல்லையா? இந்த வயதிலும் இப்படி பாடுபடுகிறீர்களே” என்று கேட்டான். அதற்கு விறகு வெட்டி அரசனை பார்த்து, “அரசே, எனக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். 


ஆனால் அவர்கள் இப்போது என்னுடன் இல்லை. அவர்கள் தங்களுடைய மனைவிமார்களின் பேச்சை கேட்டு தனிக்குடித்தனம் போய்விட்டார்கள். இப்பொழுது வீட்டில் நானும் என் மனைவியும் மட்டும்தான் இருக்கிறோம். 



அதனால், இப்படி பாடுபடும்படி ஆகிவிட்டது” என்றான். இதை கேட்டதும் அரசன் அந்த விறகுவெட்டியின் துன்பத்தைப் போக்குவதற்கு தன் நாட்டில் உள்ள சந்தன காட்டின் ஒரு பகுதியை அவனுக்கு தானமாக வழங்கினான். 


இதனால் விறகு வெட்டி பெரும் மகிழ்ச்சி அடைந்தான். விறகு வெட்டிக்கு தன்னுடைய சந்தன காட்டை நன்கொடையாக தந்ததில் அரசனுக்கு மிக்க மகிழ்ச்சி. ஏனெனில், கிழவனான அவன் சந்தன மரங்களை வெட்டி விற்பான். 


ஒவ்வொரு மரம் ஒரு லட்சம் விலை பெறும். அதைக் கொண்டு வீடு, நிலம் என்று வசதி எல்லாம் பெற்று சுகமாக இருப்பான் என்று எண்ணினான். அரசன் நினைத்தபடியே விறகு வெட்டியும் நடந்து கொண்டான். 


ஆண்டுகள் பல கடந்தன. அரசன் வழக்கம்போல் வேட்டைக்கு செல்கையில் எதிரே பெரிய செல்வர் ஒரு வருவதை கண்டான். மக்கள் அனைவரும் அவருக்கு மரியாதை அளித்தனர். அரசன் அந்தப் பெரியவரை தன் அரண்மனைக்கு அழைத்து வருமாறு காவலர்களை அனுப்பினான். 



அந்த பெரியவரும் அரசர் ஆணைக்கு கட்டுப்பட்டு பெரிதும் மகிழ்ந்து மன்னர் முன் வந்து நின்றார். அரசன் அந்த பெரியவரை பார்த்து, “ஐயா, பெரியவரே நீங்கள் யார்? உங்களுக்கு இந்த நாட்டு மக்கள் பெரிதும் மரியாதை கொடுக்கிறார்களே என்ன காரணம்?” என்று கேட்டார். 


உடனே அந்த பெரியவர் மன்னரை பார்த்து, “அரசே, என்னை தெரியவில்லையா? பல ஆண்டுகளுக்கு முன் உங்களிடம் அறிமுகமான விறகு வெட்டி நான். ஏழ்மையில் வாடுவதை கண்டு சந்தன காட்டை எனக்கு தானமாக வழங்கினீர்கள். நான் அந்த மரங்களை வெட்டி நல்ல விலைக்கு விற்று பெரும் பணக்காரன் ஆனேன்” என்றார்.


அரசருக்கு பெரும் மகிழ்ச்சி. பிறகு அவர் அந்த பெரியவரை பார்த்து, “மக்கள் உங்களை பெரிதும் மதிப்பதற்கு காரணம் என்ன?” என்று கேட்டார். 


“அரசே, எனக்கு கிடைத்த பெரும் பணத்தில் நான் பல ஏழை எளியவர்கள் பயன்பெற பள்ளிக்கூடம், மருத்துவமனை கட்டி உள்ளேன். சிலர் சொந்த தொழில் தொடங்க பணம் கொடுத்து உதவியுள்ளேன். 


அதனால் தான் மக்கள் என் மேல் பேரன்பு செலுத்துகிறார்கள்” என்றார். மன்னர் தான் செய்த தியானம் எப்படி எல்லாம் நற்பயங்களை விளைவிக்கிறது என்று எண்ணி மனதிற்குள் மகிழ்ந்தான்.


அந்த பெரியவரையும் பாராட்டினார். 


நீதி: தானம் செய்வது சிறந்தது. நாம் ஒருவர் ஒருவருக்கு தானம் அளிப்பதால் அதனால் பலரும் பயன்படுகிறார்கள். எனவே, அனைவரும் தானம் செய்யும் நற்பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.



இன்றைய முக்கிய செய்திகள் 


31-01-2024 


ஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல்...


குடியரசு தின விழா அணி வகுப்பு நிகழ்ச்சி தமிழ்நாடு மாநில அலங்கார வாகனத்திற்கு மூன்றாமிடம் மற்றும் கலைக் குழுவினருக்கு முதல் இடம்...


உங்களை தேடி உங்கள் ஊரில் புதிய திட்டம் இன்று முதல் தொடக்கம்: தமிழ்நாடு அரசு...


மதுரை விமான நிலையத்தில் பயணிகளின் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த விவகாரம்: வட மாநில ஊழியரை பணி நீக்கம் செய்து நடவடிக்கை...


கேலோ இந்தியா போட்டி : தமிழ்நாட்டுக்கு 2 தங்கம் வென்று ஆடவர், மகளிர் டென்னிஸ் இரட்டையர்கள் அசத்தல்...


கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் 82 பதக்கங்களுடன் 3வது இடத்தில் தமிழ்நாடு...


Today's Headlines:

31-01-2024


Parliament meeting starts today with President's speech: Interim budget presentation tomorrow... 


Republic Day Festival Team Class Performance Tamil Nadu State Decoration Vehicle 3rd and Art Group 1st... 


For you in your town, new program starts today: Tamil Nadu Govt...


Madurai airport charging extra for passengers' vehicles: Northern state employee sacked and action taken... 


Khelo India Tournament: Tamil Nadu wins 2 golds, men's, women's tennis doubles amazing... 


Tamil Nadu ranks 3rd with 82 medals in Khelo India...

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள் (05.02.2024 - 09.02.2024) பயிற்சி - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 30-01-2024...

 

 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள் (05.02.2024 - 09.02.2024) பயிற்சி - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 30-01-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


திருப்பூர் மாவட்டத்தில் பிப்ரவரி 2ஆம் தேதி அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை - பிப்ரவரி 3ஆம் தேதி பணி நாள் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...

 


அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு - திருப்பூர் மாவட்டத்தில் பிப்ரவரி 2ஆம் தேதி அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை - பிப்ரவரி 3ஆம் தேதி பணி நாள் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...






‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு...


மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது – பொதுமக்கள் முகாம்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசு வேண்டுகோள் - செய்தி வெளியீடு...



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை...

 TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவை - Things to keep in mind while applying for TNPSC Group 4 Exam...




நீட் MDS 2024 தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்...

 Applications Invited for National Eligibility cum Entrance Test NEET MDS 2024...


நீட் MDS 2024 தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்...



குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற 31-12-2024 வரை கால அவகாசம் - மாவட்ட பிறப்பு இறப்பு பதிவாளர் கடிதம்...


 குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற 31-12-2024 வரை கால அவகாசம் - மாவட்ட பிறப்பு இறப்பு பதிவாளர் கடிதம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசு தொடக்கப்பள்ளி காலை உணவில் பல்லி - 13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி...



அரசு தொடக்கப்பள்ளி காலை உணவில் பல்லி - 13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி...


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சமத்துவபுரம் கிராம அரசு தொடக்கப் பள்ளியில் பல்லி விழுந்த காலை உணவை சாப்பிட்ட 13 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தமிழக அரசின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு நேற்று காலை வழக்கம்போல, சேமியா உப்புமா சமைத்து வழங்கப்பட்டுள்ளது.


மாணவர்கள் உணவை உண்ட நிலையில், அதில் பல்லி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து கல்வி அலுவலர் சம்பந்தப்பட்ட தொடக்க பள்ளி ஆசிரியர்கள், சமையலரிடம் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



TNPSC - Combined Civil Services Examination - IV (Group 4 Services) - Advertisement No. 678 - Notification No. 1 / 2024, Date: 30.01.2024...

 

 TNPSC - Combined Civil Services Examination - IV (Group-IV Services) - Advertisement No. 678 - Notification No. 1 / 2024, Date: 30.01.2024...



TNPSC - Group 4 Services - Notification No. 1 / 2024, Date: 30.01.2024 Released...



>>> Click Here to Download Notification (English)...



>>> Click Here to Download Notification (Tamil)...



#Group4Notification 

Combined Civil Services Examination - IV (Group-IV Services)

Notification No.1/2024

Date of Notification: 30.01.2024

Last Date for Applying: 28.02.2024

Date of Examination: 09.06.2024

Vacancies as now: 6244


வட்டாரக் கல்வி அலுவலராக தேர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்...

 திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றியத்தில் 2012-ல் TET இடைநிலை ஆசிரியராகப் பணியேற்று சேலம் மாவட்டத்திற்கு மாறுதலில் சென்ற திரு. ரகுபதி அவர்கள் தற்போது கோவை மாவட்டம் பொள்ளாச்சி கல்வி மாவட்டம் வால்பாறை ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலராக தேர்வு பெற்றுள்ளார்...



நேரடி நியமனம் பெற்ற 33 வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...

 நேரடி நியமனம் பெற்ற 33 வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.01.2024...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.01.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கேள்வி.


குறள் 414:


கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை.


விளக்கம்:


நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.



பழமொழி : 


Every bird must hatch its own eggs.


அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.



பொன்மொழி:


“Change your thoughts and you change your world. ” ~ Norman Vincent Peale  


உங்கள் எண்ணங்களை மாற்றிக்கொண்டால், நீங்கள் உலகை மாற்றலாம் - நோர்மன் வின்சென்ட் பீலே...


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 ஒளிச் சேர்க்கை என்பது - வேதியியல் மாற்றம்

இயற்பியல் மாற்றம் - பதங்கமாதல்

வேதியியல் மாற்றம் - இரும்பு துருப்பிடித்தல்

பொதுவாக மாசு கலந்த சேர்மத்தின் கொதிநிலை - தூய சேர்மத்தின் கொதிநிலையை விட அதிகம்

யூரியாவின் உருகு நிலை - 135o C

இரும்பு துருபிடித்தல் என்பது - ஆக்சிஜனேற்றம்



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Certainty - அவசியம்

 Chair - நாற்காலி 

Centipede - பூரான் 

Chastity - மானம்

Chest - நெஞ்சு 



ஆரோக்கியம்


இந்தியாவில் பூசணி வகைகள் அதிகமாக கிடைக்கிறது. நார்ச்சத்து மிகுந்த இவை உடலுக்கும், சீதோஷ்ண நிலைக்கும் ஏற்றவை. குடலுக்கு நன்மை பயக்கும், மலச்சிக்கலை தீர்க்கும் திறன் கொண்ட பூசணியை பலவிதமாக சமைத்து சாப்பிடலாம். 100 கிராம் முலாம்பழத்தில் 34 கிலோ கலோரி சத்து உள்ளது. இதன் ஊட்டச்சத்து மதிப்பெண் 50.




இன்றைய சிறப்புகள்


ஜனவரி 30


1933 – ஹிட்லர் செருமனியின் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.


1948 – மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே என்ற தீவிரவாதி சுட்டுக் கொன்றான்.


1964 – ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது.


1976 – தமிழ்நாட்டில் கலைஞர் மு.கருணாநிதியின் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.



பிறந்த நாள் 

1950 – மு. க. அழகிரி - முன்னாள் மத்திய அமைச்சர் 



நினைவு நாள் 


1874 – இராமலிங்க அடிகளார், ஆன்மிகவாதி (பி. 1823)


1948 – மகாத்மா காந்தி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், சட்டவறிஞர் (பி. 1869)


1948 – ஓட்வில் ரைட், அமெரிக்க விமானி, பொறியியலாளர் (பி. 1871)



சிறப்பு நாட்கள்

ஆசிரியர் நாள் (கிரேக்கம்)

தியாகிகள் நாள் (இந்தியா)




நீதிக்கதை


நல்லவர்களைப் போல் நடிப்பவர்களும் நாளடைவில் நல்லவராகவே மாறிவிடுவர்...


ஒருமுறை திருடன் ஒருவன் சிம்மபுரி நாட்டு  மன்னரின் அரண்மனைக்குள் திருடுவதற்காக சென்றான். அந்த சமயம் அரசர் தமது குலகுருவுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்ததை கண்டான். 


மறைவாக ஒளிந்திருந்து அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று அவன் கேட்டான். அரசன் குல குருவை பார்த்து “குருவே, நீண்ட நாட்களாக எனது மகளுக்கு திருமணம் ஆகாமல் இருப்பது எனக்கு மிகுந்த மன வேதனை தருகிறது” என்றான்.


உடனே குலகுரு அரசனை பார்த்து, “அரசே, கவலைப்படாதே பொழுது விடிந்ததும் நம் ஊரின் எல்லையில் உள்ள நதி கரைக்கு உன் காவலர்களை அனுப்பு அங்கு பல துறவிகள் தவம் செய்து வருகிறார்கள். 


அவர்கள் பாவம் ஏதும் செய்யாத மிகவும் நல்லவர்கள். அவர்களில் ஒருவர்தான் உன் மகளுக்கு ஏற்ற கணவர்” என்றார். மறைவில் இருந்து இதை கேட்டுக் கொண்டிருந்த திருடனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. 



“நாம் போய் நதிக்கரையில் துறவி போல் அமர்ந்து கொண்டால் காவலர்கள் நம்மை அரசனிடம் அழைத்து செல்வார்கள். அரசனும் தன் குலகுரு சொன்னபடியே அவருடைய மகளை எனக்கு திருமணம் செய்து கொடுத்து விடுவார்.


நான் அரசனின் மாப்பிள்ளை ஆகி விடுவேன். பிறகு இந்த திருட்டு தொழிலை விட்டு விடுவேன்” என்று நினைத்து துறவி போல் வேடம் அணிந்து கொண்டு உண்மையான துறவிகளுடன் சேர்ந்து தியானம் செய்வது போல் அமர்ந்திருந்தான். 


பொழுது விடிந்ததும் தன் குலகுரு சொன்னபடியே அரசன் சில காவலர்களை நதிகரைக்கு அனுப்பி அங்குள்ள துறவிளுள் ஒருவரை தம் மகளை திருமணம் செய்து கொள்ள வருமாறு கூறி அழைத்து வர சொன்னார். 


காவலர்களும் அரசனின் ஆணைப்படி நதிகரைக்கு சென்று அங்கிருந்த துறவிகளிடம் அரசர் தம் மகளை மணந்து கொள்ள அழைத்து வருமாறு கூறியதாக ஒவ்வொருவரிடம் கூறினார்கள். 


அனைத்து ஆசிகளையும் துறந்து, இறைவனடி சேர்வதற்காக தவம் புரியும் அந்த துறவிகள் காவலர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. காவலர்கள் இறுதியில் துறவி வேடம் அணிந்திருந்த  திருடனிடம் வந்து, “சுவாமி, நீங்கள் தான் அருள் புரிய வேண்டும். 


எங்கள் அரசர் தமது மகளை இங்கிருக்கும் துறவிகளுள் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவெடுத்துள்ளார். நாங்கள் இங்கிருக்கும் துறவிகள் அனைவரிடம் கேட்டுவிட்டோம். ஒருவரும் வருவதாக தெரியவில்லை, தாங்கள் ஆவது அருள் கூர்ந்து எங்களுடன் வந்து எங்கள் இளவரசியை திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்றனர். 


இதை கேட்ட துறவி வேடத்தில் இருந்து திருடன் சற்றும் நேரம் சிந்தித்தான். இங்குள்ள அனைத்து துறவிகளும் உண்மையான துறவிகள், நல்லவர்கள் அதனால்தான் இவர்களுடைய வேண்டுகோளை அவர்கள் ஏற்கவில்லை. 


நாம் உடனே ஒப்புக்கொண்டால் நம் மீது மன்னர் சந்தேகப்படுவார், என்று மனதில்  நினைத்தான். இச்சமயத்தில் நாமும் உண்மை துறவிகளைப் போல இருக்க வேண்டும் என்று 


பொய் சாட்சி சொல்ல கூடாது...


ஓர் ஊரில் நல்லரசன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் பெயருக்கு தகுந்தார் போல் நற்குணங்கள் பெற்றவனாக இருந்தான். ஏழை எளியவர்களிடம் அன்பு காட்டும் குணமும் மற்றவர்களுக்கு உதவும் உயர்ந்த மனப்பான்மை அவனிடம் இருந்தன. 


யாராவது தவறு செய்தால் அதனை தட்டிக் கேட்கும் துணிவும் அவனிடம் இருந்தது. அதனால், அதனால் அந்த ஊர் மக்கள் நல்லரசன் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்கள். அந்த ஊரில் வசதியாக வாழ்ந்து வந்த சிலர் நல்லரசனின் செல்வாக்கு கண்டு அவர் மீது பொறாமை கொண்டனர். 


அவர் புகழை கெடுப்பதற்கு தங்களால் முயன்ற முயற்சிகளை எல்லாம் செய்தார்கள். ஆனால், அவர்களுடைய முயற்சிகள் யாவும் தோல்வியிலே முடிந்தன. பணக்காரர்கள் ஆகிய தங்கவேலும், கருப்பு சாமியும் இதனால் மனம் புழுங்கினர்.


ஏதேனும் ஒரு செயல் செய்த நல்லரசனை அவமானப்படுத்த வேண்டும் என்று துடியாய் துடித்தனர். அந்த பணக்காரர்களுக்கு நல்லரசன் எந்த தீங்குமே செய்யவில்லை. ஆனால், கோயில் திருவிழாவாக இருந்தாலும், வேறு பொது செயல்களாக இருந்தாலும் அந்த நல்ல அரசனுக்கே அனைவரும் முதல் மரியாதை கொடுத்தார்கள். இதைத்தான் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 



எப்படியாவது அந்த நல்லரசனை பழிவாங்க வேண்டும் என்று கங்கணம் கட்டி அவர்கள் அந்த ஊரில் வசித்து வந்து முனியாண்டி என்பவனை அழைத்து பேசினார்கள். அந்த முனியாண்டிக்கு ஊர் மக்களிடம் நல்ல பெயர் இருந்தது. அவனை பகடைக்காயாய் பயன்படுத்தி அந்த வல்லரசனை வீழ்த்தி விடலாம் என்று அவர்கள் எண்ணினார்கள். 


தங்கவேலும், கருப்புசாமியும் ஒன்று சேர்ந்து சதித்திட்டம் ஒன்றை தீட்டினார்கள். முனியாண்டியை தங்கள் வீட்டில் அழைத்து பேசினார்கள். “முனியாண்டி, எங்களுக்காக நீ ஒரு செயல் செய்யணும்” என்று கூறி கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை அவன் கையில் திணித்தனர். 


ரூபாய் நோட்டுகளை பார்த்ததும் முனியாண்டிக்கு ஆசை அதிகமானது. அவன் அவர்களை நோக்கி, “உங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன்”  என்றான். உடனே அவர்கள் அவனைப் பார்த்து இந்த வல்லரசன் தன்னை உத்தமன் போல் காட்டிக்கொண்டு, எங்களுக்கு இந்த ஊரில் மரியாதை இல்லாமல் செய்கிறான். 


அவனுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும். அதற்கு தான் உன்னுடைய உதவி தேவை என்றனர். மேலும் அவர்கள் தங்களுடைய சதி திட்டத்தை அவனிடம் விளக்கி கூறினார்கள். “எங்களுடைய மூன்று லட்சம் ரூபாய் பணத்தை எப்படியாவது அந்த நல்லரசனின் வீட்டில் நீ வைக்க வேண்டும். 



நாங்கள் போலீசில் புகார் கொடுத்து அவனை கைது செய்கிறோம் அவன் மூன்று லட்சம் ரூபாயை திருடியதற்கு நீ பொய் சாட்சி சொன்னால் போதும். மற்ற விஷயங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்று தங்கவேலும் கருப்புசாமியும் முனியாண்டியிடம் கூறினார்கள். 


முனியாண்டி அவர்களை பார்த்து நீங்கள் சொல்வது போலவே செய்கிறேன் என்று கூறிவிட்டான். தங்கவேலும் கருப்புசாமியும் இதை கேட்டு மகிழ்ந்தார்கள். இந்த சதி திட்டம் அவர்களின் எண்ணம் போலவே நடந்தது. தங்கள் பணம் மூன்று லட்சம் திருடு போய்விட்டதாக அந்த இருவரும் போலீசாரிம் புகார் கொடுத்தார்கள். 


உங்களுக்கு யார் மீது சந்தேகம் இருக்கிறதா என்று அவர்கள் கேட்டதற்கு உடனே முனியாண்டியை அழைத்து போய் காவல் நிலையத்தில் அந்த இருவரும் ஒப்படைத்தனர். அவன் காவல்துறை அதிகாரியிடம், “இந்த ஊரில் நல்லரசன் என்று ஒருவன் இருக்கிறான். 


நேற்று இரவு இவர்களுடைய வீட்டில் இருந்து பணத்தை திருடி கொண்டு வேகமாக போனது என் கண்களாலே பார்த்தேன். நீங்கள் அவனை விசாரித்தால் எல்லாம் உண்மைகளும் தெரிந்து விடும்” என்று அவன் கூசாமல் பொய் சாட்சி சொன்னான்.


காவலர்களும் நல்லரசன் வீட்டுக்கு சென்றனர். அவன் வீட்டை சோதனையிட்டனர் வல்லரசனுக்கு தெரியாமல் முனியாண்டி கொண்டு வந்த மூன்று லட்சம் ரூபாய் அந்த வீட்டு மூலையில் இருந்ததை காவல் அதிகாரிகள் கைப்பற்றினர். 


அவர்கள் நல்லரசனை பார்த்து, “இந்த பணம் உங்கள் வீட்டில் எப்படி வந்தது?” என்று கேட்டார்கள். நல்லரசன் நிதானத்தை இழக்காமல், “சார், இந்த பணம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது எப்படி இங்கே வந்தது என்பதும் எனக்கு தெரியாது. இதுல ஏதோ சதி திட்டம் இருக்கிறது. 


small tamil story 

அந்த முனியாண்டியை நீங்கள் கண்காணித்தால் உங்களுக்கு விஷயம் தெரிந்து விடும். உங்களோடு விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறேன்” என்றான். ஊர் மக்களின் நன்மதிப்புக்குரியவன் வல்லரசன் என்பதால் அவனுக்கு மதிப்பு கொடுத்து காவல் அதிகாரிகள் முனியாண்டின் வீட்டுக்கு சென்று சோதனை இட்டனர்.


அவன் வீட்டிலிருந்து சில ரூபாய் கட்டுகளை காவல்துறையினர் கைப்பற்றினார்கள். அந்த கட்டுகளை சோதித்ததில் அவை அனைத்துமே கள்ள நோட்டுகள் என்பது தெரிந்தது. முனியாண்டி சிறையில் அடைக்கப்பட்டான். 



கள்ள நோட்டு வழக்கில் அவன் பெயரை சேர்த்தார்கள். அதை அறிந்த முனியாண்டி, காவல் அதிகாரியை பார்த்து, “சார், எனக்கு அது போல் புத்தி எல்லாம் கிடையாது. பணத்துக்கு ஆசைப்பட்டு உத்தமரான நல்லரசனுக்கு எதிராக போய் சாட்சி கூறினேன். 


அதுக்கு கடவுள் எனக்கு சரியான தண்டனை கொடுத்துவிட்டார். தங்கவேலும், கருப்புசாமியும் இருவரும் என் தான் என்னை இவ்வாறு செய்ய சொன்னார்கள். மற்றபடி கள்ள நோட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது” என்று எல்லா உண்மையும் கூறிவிட்டான். 


உடனே காவல்துறை அதிகாரிகள் தங்கவேலு மற்றும் கருப்பசாமியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிகழ்ச்சியின் மூலம் நல்லரசின் மீது மக்களுக்கு இருந்தன் நன்மதிப்பு மேலும் கூடியது.


நீதி : யார் மீதும் எப்பொழுதும் பொய்சாட்சி சொல்ல கூடாது. அது ஒரு நாள் வெளிப்பட்டு பொய் சாட்சி கூறியவரே தண்டனைக்கு உட்படுத்தி விடும். எனவே, அனைவரும் மனசாட்சிக்கு உட்பட்டு நல்லவர்களாக வாழ வேண்டும்.



இன்றைய முக்கிய செய்திகள் 


30-01-2024 


தமிழ்நாடு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் உயிரியல் பூங்கா இடையே விலங்கு பரிமாற்றம்...


ஸ்பெயின் வந்தடைந்தேன்!.. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக ஐரோப்பியப் பயணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...


15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு...


நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதை ஒட்டி நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு...


நெருக்கடியை கையாளும் கலையை மாணவர்கள் அவசரமின்றி படிப்படியாக கற்க வேண்டும்: பிரதமர் மோடி...


பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை இழந்த எலான் மஸ்க் -  இனி பெர்னார்ட் அர்னால்ட் தான் நம்பர் 1 பணக்காரர்...


புதுச்சேரி தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த ராஜீவ் வர்மா சண்டிகருக்கு இடமாற்றம்...


Today's Headlines:

30-01-2024


Animal exchange between Tamil Nadu's Arignar Anna Zoo and Uttar Pradesh's Kanpur Zoo... 


Arrived in Spain!.. European tour for the first time after assuming power: Chief Minister M.K.Stalin...


 Notification of election date for 56 Rajya Sabha seats vacant in 15 states...


 Minister Prakalat Joshi has called for an all-party meeting tomorrow in connection with the commencement of the parliamentary session...


Students should learn art of crisis management step by step without rush: PM Modi... 


Elon Musk lost the top spot in the list of rich people - Bernard Arnold is now the No. 1 richest person... 


Rajeev Verma, who was serving as Puducherry Chief Secretary, has been transferred to Chandigarh...

புதிய கல்லூரிக் கல்வி இயக்குநர் பதவியேற்பு...

கல்லூரி கல்வி இயக்குநராக, மேனாள் தொடக்கக் கல்வி இயக்குநர், சேலம் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வகித்த திரு.கார்மேகம் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.


அவர் பணி சிறக்க வாழ்த்துகிறோம்..


கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் இயக்குனராக சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் கார்மேகம் பொறுப்பேற்றுக் கொண்டார்.


சென்னை: உயர் கல்வித்துறையின் கீழ் வரும் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் நிர்வாக செயல்பாடுகள் உள்பட அனைத்தையும் கல்லூரி கல்வி இயக்ககம் கண்காணித்து வருகிறது. மேலும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில், கல்லூரி கல்வி இயக்குனராக திருவாரூரில் உள்ள திரு.வி.க.அரசு கலைக் கல்லூரி முதல்வர் கீதாவை முழு கூடுதல் பொறுப்பாக நியமித்து உயர் கல்வித்துறை நியமனம் செய்தது. இதனைத்தொடர்ந்து அவர் செயல்பட்டு வந்தார். 


இந்த நிலையில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து ஜனவரி 27ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். இதனடிப்படையில், அவர் வெளியிட்ட அரசாணையில், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கல்லூரிக்கல்வி இயக்குனராக நியமனம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரிக்கல்வி இயக்குனரகத்தில் அதன் இயக்குனராக கார்மேகம் ஐஏஎஸ் இன்று (ஜனவரி 29) பொறுப்பேற்றுக் கொண்டார்.




கோவிட் தடுப்பூசி & பூஸ்டர் - பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரின் செய்தி...

கோவிட் தடுப்பூசி & பூஸ்டர் - பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரின் செய்தி - COVID Vaccination & Booster - Message from Director of Public Health and Preventive Medicine...



மதுபானங்களின் விலை 01-02-2024 முதல் உயர்கிறது - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு...

 டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விற்பனை விலை பிப்ரவரி முதல் உயர்கிறது...



விளையாட்டில் சாதிக்கும் மாணவர்களுக்கு ஐஐடியில் சிறப்பு ஒதுக்கீடு...

 விளையாட்டில் சாதிக்கும் மாணவர்களுக்கு ஐஐடியில் சிறப்பு ஒதுக்கீடு...



விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டண முறைகேடு...

 மதுரை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டண முறைகேடு - Irregular parking charges at Madurai airport...



20 நிமிட பார்க்கிங் நேரத்திற்கு முதலில் 60 ரூபாய் கேட்ட ஊழியர்...



கார் உரிமையாளர் காணொளி எடுத்து முறைகேட்டை அம்பலப்படுத்திய நிலையில், தான் 20 ரூபாய் மட்டுமே பார்க்கிங் கட்டணமாகக் கேட்டதாக ஊழியர் மழுப்பல்...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


30.01.2024 அன்று காலை 11 மணிக்கு அனைத்துப் பள்ளிகளிலும் எடுக்கவேண்டிய தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


 30.01.2024 அன்று காலை 11 மணிக்கு அனைத்துப் பள்ளிகளிலும் எடுக்கவேண்டிய தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Abolition of Untouchability Pledge to be taken in all schools on 30.01.2024 at 11 am - Proceedings of Director of School Education...



>>> தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி  & பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அரசாணை (நிலை) எண்: 01, நாள்: 02-01-2024 - மூடப்பட்ட கல்லூரிகளில் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெறுதல் - நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு - இணைப்பு : தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் - மாதிரி - Obtaining Certificate of Study in Tamil Medium in Closed Colleges - Issue of Ordinance to Issue Regulations - Attachment : Certificate of Study in Tamil Medium - Sample...


 அரசாணை (நிலை) எண்: 01, நாள்: 02-01-2024 - மூடப்பட்ட கல்லூரிகளில் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெறுதல் - நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு - இணைப்பு : தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் - மாதிரி - G.O. (Ms) No: 01, Dated: 02-01-2024 - Obtaining PSTM Certificate of Study in Tamil Medium in Closed Colleges - Issue of Ordinance to Issue Regulations - Attachment : Certificate of Study in Tamil Medium - Sample...



>>> அரசாணை (நிலை) எண்: 01, நாள்: 02-01-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி (Gold Appraiser Training) - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு...



தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி  (Gold Appraiser Training) - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு...



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Programme on “Gold Appraiser Training” Entrepreneurship Development and Innovation Institute (EDII), Chennai is organizing

an training program on Ten days “Gold Appraiser Training” from 05.02.2024 to 14.02.2024 (Time: 10.00 am to 2.00pm) at Entrepreneurship Development and Innovation Institute (EDII-TN), Metro Centre, opp. Guindy Railway Station, Guindy, Chennai-32, Chennai – 600 032.

Subjects covered under the topics on basic metallurgy of gold, silver and copper,

difference between Karat & Carat, calculation for purity of gold, jewel loan calculation, casting and filigree items, open and closed setting stone jewels, Hallmark procedures, types of assaying, touch stone practices will be covered by expert assessors and specialists. The trained candidates can find part-time employment in commercial and cooperative banks where loans are given on mortgaging of gold. The participants will also be taught the procedures of establishing a business enterprise to deal in gem & jewellery trade. Interested candidates (Male/Female) above 18 years of age with a minimum educational qualification of 10th Std may apply. For further information, please visit website www.editn.in. Please contact the following

telephone / mobile numbers on working days (Monday - Friday) between 10 A.M. to 05.45 P.M for further information.

Government certificate will be issued

Pre- registration compulsory Contact details:

Entrepreneurship Development and Innovation Institute, SIDCO Industrial Estate, EDII Office Road, Guindy, Chennai-600032.

8668102600 / 86681 00181 / 7010143022

044-22252081, 22252082 www.editn.in

Additional Chief Secretary / Director Issued By: - DIPR, Secretariat, Chennai – 9


அரசாணை நிலை எண்.02, நாள்: 05-01-2024 - பொதுச் சேவைகள் - பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், பெருநிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றின் பணி மற்றும் ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான விஷயங்கள் - மனித வள மேலாண்மைத் துறைக்கு கோப்புகளை அனுப்புதல் - வழிமுறைகள் - வெளியீடு...


அரசாணை நிலை எண்.02, நாள்: 05-01-2024 - பொதுச் சேவைகள் - பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், பெருநிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றின் பணி மற்றும் ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான விஷயங்கள் - மனித வள மேலாண்மைத் துறைக்கு கோப்புகளை அனுப்புதல் - வழிமுறைகள் - வெளியீடு - G.O.Ms.No.2, Dated: 05-01-2024 - Public Services - Referring files to Human Resources Management Department on service matters and disciplinary matters in respect of Public Sector Undertakings, Boards, Corporations, Local Bodies, Universities, etc., - Instructions - Issued...



>>> Click Here to Download G.O.Ms.No.02, Dated: 05-01-2024...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.01.2024...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.01.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கேள்வி.


குறள் 413:


செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்

ஆன்றாரோ டொப்பர் நிலத்து.


விளக்கம்:


குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்.



பழமொழி : 


East or West, Home is Best


எலி வளையானாலும் தனி வளை வேண்டும்.


பொன்மொழி:


 “A person who never made a mistake never tried anything new.” ~ Albert Einstein 


ஒரு மனிதன் தவறுகளே செய்யவில்லை என்றால் எந்த புதிதாக எதையும் முயற்சிக்கவில்லை என்று பொருள் - ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


ஆற்றல் மிகு ஆல்கஹால் என்பது - தனி ஆல்கஹால் + பெட்ரோல்

அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் ஒன்றின் பெயர் – புரோமின்

இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்

எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்)

ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Cardamon - ஏலக்காய் 

Care - கவனம் 

Cart - வண்டி

Cashew - முந்திரி

Cave - குகை 


ஆரோக்கியம்


மிகச்சிறந்த ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருள் (Antioxidant) கொண்ட மாதுளையில் இரும்புச் சத்தும் அதிகம் உள்ளது. தினமும் மாதுளம்பழம் சாப்பிட்டால் ரத்த சிவப்பணுக்களில் ஒருபோதும் குறைபாடு வராது.



இன்றைய சிறப்புகள்


ஜனவரி 29


1946 – ஐக்கிய அமெரிக்காவில் CIG எனப்படும் மத்திய உளவுத்துறைக் குழு அமைக்கப்பட்டது.


1980 – ரூபிக்கின் கனசதுரம் முதல் தடவையாக பன்னாட்டு அளவில் இலண்டனில் விற்பனைக்கு வந்தது.



பிறந்த நாள் 

1954 – ஓப்ரா வின்ஃப்ரே, அமெரிக்க தொலைக்காட்சி அரட்டைக் காட்சி தொகுப்பாளர்


1970 – ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், இந்திய துப்பாக்கி சுடு வீரர், அரசியல்வாதி



நினைவு நாள் 


2019 – ஜார்ஜ் பெர்னாண்டஸ், இந்திய அரசியல்வாதி (பி. 1930)




சிறப்பு நாட்கள்

-



நீதிக்கதை


நல்லவர்களைப் போல் நடிப்பவர்களும் நாளடைவில் நல்லவராகவே மாறிவிடுவர்...


ஒருமுறை திருடன் ஒருவன் சிம்மபுரி நாட்டு  மன்னரின் அரண்மனைக்குள் திருடுவதற்காக சென்றான். அந்த சமயம் அரசர் தமது குலகுருவுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்ததை கண்டான். 


மறைவாக ஒளிந்திருந்து அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று அவன் கேட்டான். அரசன் குல குருவை பார்த்து “குருவே, நீண்ட நாட்களாக எனது மகளுக்கு திருமணம் ஆகாமல் இருப்பது எனக்கு மிகுந்த மன வேதனை தருகிறது” என்றான்.


உடனே குலகுரு அரசனை பார்த்து, “அரசே, கவலைப்படாதே பொழுது விடிந்ததும் நம் ஊரின் எல்லையில் உள்ள நதி கரைக்கு உன் காவலர்களை அனுப்பு அங்கு பல துறவிகள் தவம் செய்து வருகிறார்கள். 


அவர்கள் பாவம் ஏதும் செய்யாத மிகவும் நல்லவர்கள். அவர்களில் ஒருவர்தான் உன் மகளுக்கு ஏற்ற கணவர்” என்றார். மறைவில் இருந்து இதை கேட்டுக் கொண்டிருந்த திருடனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. 



“நாம் போய் நதிக்கரையில் துறவி போல் அமர்ந்து கொண்டால் காவலர்கள் நம்மை அரசனிடம் அழைத்து செல்வார்கள். அரசனும் தன் குலகுரு சொன்னபடியே அவருடைய மகளை எனக்கு திருமணம் செய்து கொடுத்து விடுவார்.


நான் அரசனின் மாப்பிள்ளை ஆகி விடுவேன். பிறகு இந்த திருட்டு தொழிலை விட்டு விடுவேன்” என்று நினைத்து துறவி போல் வேடம் அணிந்து கொண்டு உண்மையான துறவிகளுடன் சேர்ந்து தியானம் செய்வது போல் அமர்ந்திருந்தான். 


பொழுது விடிந்ததும் தன் குலகுரு சொன்னபடியே அரசன் சில காவலர்களை நதிகரைக்கு அனுப்பி அங்குள்ள துறவிளுள் ஒருவரை தம் மகளை திருமணம் செய்து கொள்ள வருமாறு கூறி அழைத்து வர சொன்னார். 


காவலர்களும் அரசனின் ஆணைப்படி நதிகரைக்கு சென்று அங்கிருந்த துறவிகளிடம் அரசர் தம் மகளை மணந்து கொள்ள அழைத்து வருமாறு கூறியதாக ஒவ்வொருவரிடம் கூறினார்கள். 


அனைத்து ஆசிகளையும் துறந்து, இறைவனடி சேர்வதற்காக தவம் புரியும் அந்த துறவிகள் காவலர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. காவலர்கள் இறுதியில் துறவி வேடம் அணிந்திருந்த  திருடனிடம் வந்து, “சுவாமி, நீங்கள் தான் அருள் புரிய வேண்டும். 


எங்கள் அரசர் தமது மகளை இங்கிருக்கும் துறவிகளுள் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவெடுத்துள்ளார். நாங்கள் இங்கிருக்கும் துறவிகள் அனைவரிடம் கேட்டுவிட்டோம். ஒருவரும் வருவதாக தெரியவில்லை, தாங்கள் ஆவது அருள் கூர்ந்து எங்களுடன் வந்து எங்கள் இளவரசியை திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்றனர். 


இதை கேட்ட துறவி வேடத்தில் இருந்து திருடன் சற்றும் நேரம் சிந்தித்தான். இங்குள்ள அனைத்து துறவிகளும் உண்மையான துறவிகள், நல்லவர்கள் அதனால்தான் இவர்களுடைய வேண்டுகோளை அவர்கள் ஏற்கவில்லை. 


நாம் உடனே ஒப்புக்கொண்டால் நம் மீது மன்னர் சந்தேகப்படுவார், என்று மனதில்  நினைத்தான். இச்சமயத்தில் நாமும் உண்மை துறவிகளைப் போல இருக்க வேண்டும் என்று எண்ணியவனாய் அமைதியாக இருந்தான். 


காவலர் வெகு நேரம் கெஞ்சியும் கேட்டும் துறவி வேடத்திலிருந்து திருடன் ஒன்றும் கூறாமலேயே மௌனமாக இருந்தான். பின்னர் காவலர்கள் அரண்மனைக்கு திரும்பி சென்று அரசனை பார்த்து, “அரசே, நதிக்கரையில் தவம் செய்யும் துறவிகள் எல்லோரிடமும் தாங்கள் கூறியதை சொன்னோம். 


ஒருவர் கூட எங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. தனியாக உட்கார்ந்து இருக்கும் ஒரு துறவி மட்டும் ஒன்றும் கூறாமல் மௌனமாக இருக்கிறார். ஒருவேளை தாங்கள் நேரடியாக சென்று அழைத்தால் அவர் வருவார்” என்றனர். 


அரசனும் உடனே புறப்பட்டான். அரசன் துறவி வேடத்திலிருந்து திருடனைப் பார்த்து, “ஐயா, தாங்கள் அருள் கூர்ந்து என் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்றான். அரசன் கூறியதை கேட்டதும் துறவி வேடத்தில் இருந்த திருடன் ஒரு கணம் சிந்தித்தான். 


இந்த நிலையில் உண்மையான துறவி, என்ன பதில் கூறுவார்? என்று நினைத்துப் பார்த்தான். உண்மையான துறவி ஒன்றும் கூறாமல் மௌனமாக இருப்பார் என்பதை அறிந்தான். 


அவனும் அவ்வாறே மௌனமாக இருந்தான். அரசன் தன்னாட்டில் பாதியை அவனுக்கு அளிப்பதாகவும் தன் மகளை மணந்து கொள்ளுமாறும் வேண்டினான். அப்பொழுதும் திருடன் உண்மையான துறவி போல் மௌனமாகவே இருந்தான். 


முடிவில் அரசன், “சுவாமி, என் மகளை தங்களுக்கு தருவதுடன் என் நாடு முழுவதையும் உங்களுக்கு தருவதாக கூறியும் தாங்கள் என்னுடன் வர சம்மதிக்காமல் இருப்பதிலிருந்து தாங்களே உண்மையான, நல்ல துறவி என்று கண்டு கொண்டேன். 


தங்களைப் போன்ற ஒருவரை நான் இல்லற வாழ்க்கைக்கு அழைத்ததே பெரும் பாவம்” எனக் கூறியபடி துறவி வேடத்திலிருந்த திருடனிடம் காலில் விழுந்து வணங்கினான். 


இதை கண்ட துறவி வேடத்தில் இருந்து திருடன் ஆழமாக சிந்திக்க தொடங்கினான். “நாம் உண்மையான, நல்ல துறவி இல்லை நல்லவர்கள் போல் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த வேஷத்திற்கு இவ்வளவு மதிப்பு கிடைக்கிறது என்றால் உண்மையான நல்ல துறவியாக நாம் ஆகிவிட்டால் இதைவிட மிகப்பெரிய அளவில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் அல்லவா, 


நாம் ஏன் உண்மையான துறவி ஆகிவிடக் கூடாது” இவ்வாறு சிந்தித்து திருடன் அன்று முதல் உண்மையான நல்ல துறவியாகவே மாறிவிட்டான்


 நீதி : நல்லவர்களைப் போல் வேடம் அணிந்து நடிப்பவர்களும் கூட நாளடைவில் நல்லவர்களாகவே மாறிவிடுவர். உண்மையிலேயே நாம் நல்லவர்களாக இருந்துவிட்டால் நமக்கு கூடுதல் மதிப்பு தானே. எனவே நாம் நல்லவர்களாக இருப்போம்.


 

இன்றைய முக்கிய செய்திகள் 


29-01-2024 


உயர்கல்வி நிறுவனங்களில் SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை நீக்குவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள யுஜிசி: அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம்...


ரூ.17,930 கோடி செலவில் அமைக்கப்படும்; சென்னை – பெங்களூரு விரைவுச்சாலை பணிகள் மார்ச் இறுதியில் முடிக்கப்படும்: அதிகாரிகள் தகவல்...


உடல் உறுப்பு தானம் பாராட்டுக்குரியது: வானொலியில் பிரதமர் மோடி உரை...


7,600 பேர் பயணிக்கும் 1,200 அடி நீள உலகின் நீண்ட பயணிகள் கப்பல் பயணம் தொடங்கியது: ‘ஐகான் ஆப் தி சீஸ்’ என பெயர் சூட்டிய மெஸ்ஸி...


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 22 வயதே ஆன இத்தாலிய வீரர் ஜானிக் சின்னர் சாம்பியன்...


கேலோ இந்தியா விளையாட்டு ஆடவர் வாலிபால் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு தங்கம்...




Today's Headlines:

29-01-2024


UGC issues draft guidelines to remove reservation for SC, ST and OBC categories in higher education institutions: Minister Mano Thangaraj condemns... 


It will be set up at a cost of Rs.17,930 crore; Chennai-Bengaluru expressway to be completed by end of March: Officials inform... 


Organ donation is commendable: PM Modi's speech on radio...


7,600-passenger 1,200-foot-long world's longest passenger cruise begins: Messi named 'Icon of the Seas'... 


22-year-old Italian player Janic Sinner has won the Australian Open tennis men's singles... 


Tamil Nadu team wins gold in men's volleyball at Gallo India Games...


ஆசிரியர் இடமாற்றம் - மத்திய நிர்வாக தீர்ப்பாயம் சென்று அரசு உத்தரவுக்கு தடை பெற்ற ஆசிரியர்...



 ஆசிரியர் இடமாற்றம் - மத்திய நிர்வாக தீர்ப்பாயம் சென்று அரசு உத்தரவுக்கு தடை பெற்ற ஆசிரியர்...


புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளிக் கல்வித் துறையில் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த பி.சரவணன், இறுதி பட்டியலில் தனது பெயர் இடம்பெறாததை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் லிங்காரெட்டிபாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 2007ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தை 2016ம் ஆண்டு முதல் வரன்முறைபடுத்த ஆளுனர் உத்தரவிட்டிருந்தார்.


ஆனால், 2022ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி புதிதாக நியமன உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி முதல் புதுச்சேரி காந்தி நகரில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக சரவணன் நியமிக்கப்பட்டார். 


இந்த நிலையில் அவரை காரைக்காலுக்கு இடமாற்றம் செய்து நவம்பர் 27ம் தேதி பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி 54 வயதான சரவணன் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் எம்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சரவணன் ஆஜராகி, நியமனம் செய்யப்பட்ட இடத்தில் 3 ஆண்டுகளை நிறைவு செய்த பிறகே இடமாற்ற செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், விதிகளுக்கு முரணாக 11 மாதங்கள் மட்டுமே பணிபுரிந்துள்ள தன்னை இடமாற்றம் செய்துள்ளனர். 


வயதான மற்றும் உடல்நலக்குறைவுடன் உள்ள பெற்றோரை தனியாக விட்டுவிட்டு காரைக்கால் செல்ல முடியாது என்பதை கருத்தில் கொள்ளாமல் உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.


அதற்கு, புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக முதலமைச்சரிடம் மனு அளித்துள்ளார். அந்த இடமாற்ற உத்தரவை தடை செய்யும்படி முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளதால் எந்த தடை உத்தரவையும் தற்போதைய நிலையில் பிறப்பிக்க வேண்டாம் என்று கோரினார். 


இதனை ஏற்க மறுத்த தீர்ப்பாயம், சரவணனை புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு இடமாற்றம் செய்து பள்ளி கல்வி பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்காலத் தடைவிதித்து விசாரணையை பிப்ரவரி 20ம் தேதிக்கு தள்ளிவைத்தது.


அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2023 - 2024ஆம் ஆண்டுக்கான கற்பிப்பு மானியம் கணக்கீடு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் சார்பான அறிவுரைகள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 008684/ சி1/ 2023, நாள்: 23-01-2024...


அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2023 - 2024ஆம் ஆண்டுக்கான கற்பிப்பு மானியம் கணக்கீடு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் சார்பான அறிவுரைகள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 008684/ சி1/ 2023, நாள்: 23-01-2024...



>>> தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 008684/ சி1/ 2023, நாள்: 23-01-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் பள்ளிகளில் பணியாற்றக் கூடாது - தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை உத்தரவு...

 


இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் பள்ளிகளில் பணியாற்றக் கூடாது - தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை உத்தரவு (நாளிதழ் செய்தி)...


கரோனா பரவலால் 1 முதல் 8-ம் வகுப்புகள் வரை பயிலும் மாணவ, மாணவிகளிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்வதற்காக தமிழக பள்ளிக்கல்வித் துறை ‘இல்லம் தேடிக் கல்வித் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்தது.


இதில் பங்கேற்கும் தன்னார்வலர்களில் பெரும்பாலானோர் முழு ஈடுபாட்டுடன் கல்வி கற்பிப்பதால், அவர்களை சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து, பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.


இது தொடர்பான புகார்கள் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு சென்ற நிலையில், மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலகம், அனைத்து அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது.


அதில், “இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் பகல் நேரத்தில் பள்ளிக்கு வரவழைத்து, வகுப்பறையில் பாடங்களை நடத்தச் சொல்வதோ, பள்ளி வேலைகளை செய்யச் சொல்வதோ கூடாது. பள்ளியில் நாங்கள் ஆய்வு செய்ய வரும்போது, இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர் வகுப்பறையில் இருந்தால், தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.



தற்காலிக ஆசிரியர்கள்: 

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் மட்டும்தான், வகுப்பறையில் இருக்க வேண்டும். இவர்களைத் தவிர வேறு யாரையும் பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பணி நிரந்தரம்?:

தன்னார்வலர்கள் பள்ளிப் பணிக்குச் செல்வதன் மூலம், எதிர்காலத்தில் ஆசிரியர் பணியை நிரந்தரமாக பெற வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் பள்ளி பணிக்குச் செல்கின்றனர். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் ஒன்றியத்துக்கு ஒருவர் வீதம் பணியாற்றும் நிலையில், தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது.


அதே நேரத்தில், இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு மாதம் ரூ.1,000 மட்டும் ஊக்கத்தொகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


14 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (வாலாயம்) எண்: 334, நாள்: 27-01-2024 வெளியீடு...

 

14 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (வாலாயம்) எண்: 334, நாள்: 27-01-2024 வெளியீடு - Transfer of 14 District Revenue Officers - Ordinance G.O.(Government) No: 334, Dated: 27-01-2024 Issued...



>>> அரசாணை (வாலாயம்) எண்: 334, நாள்: 27-01-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட 11 IPS அலுவலர்கள் பணியிட மாற்றம் - உள்துறை ஆணை வெளியீடு...



 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட 11 இந்திய காவல் பணி அலுவலர்கள் பணியிட மாற்றம் - உள்துறை ஆணை (Police Note No.SC/ 02/ 2024, Dated: 27-01-2024 - 11 IPS Officers including District Superintendent of Police transferred - Home Department Order Issued) வெளியீடு...



>>> Click Here to Download Police Note No.SC/ 02/ 2024, Dated: 27-01-2024...

மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு...

 

 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (G.O.Rt.No.333, Dated: 27-01-2024 - 12 IAS Officers including District Collectors transferred - Ordinance Issued) வெளியீடு...



>>> Click Here to Download G.O.Rt.No.333, Dated: 27-01-2024...



ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 12 பேர் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு...


சென்னை: மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 12 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, கீழ்க்கண்டவாறு அவர்கள் புதியதாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

சேலம் மாவட்ட கலெக்டர்: பிருந்தா தேவி

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர்: தற்பகராஜ்

தென்காசி மாவட்ட கலெக்டர்: கமல் கிஷோர்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்: அருண் ராஜ்

வேலூர் மாவட்ட கலெக்டர்: சுப்புலட்சுமி

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்: பாஸ்கர பாண்டியன்

வேளாண்மைத்துறை இயக்குனர்: பி. முருகேஷ்

தோட்டக்கலை இயக்குனர்: பி.குமாரவேல் பாண்டியன்

அரசு துணைச் செயலாளர்: டி.ரவிச்சந்திரன்

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குனர்: எம். லட்சுமி

வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் துறை கமிஷனர்: ஜி. பிரகாஷ்

வருவாய் நிர்வாகக் கூடுதல் ஆணையராக எஸ். நடராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தமிழ்நாடு அரசு - பள்ளிக்கல்வித்துறை - மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் "பெற்றோர்களைக் கொண்டாடுவோம்" முதல் மண்டல மாநாடு - அழைப்பிதழ்...



 தமிழ்நாடு அரசு - பள்ளிக்கல்வித்துறை - மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் "பெற்றோர்களைக் கொண்டாடுவோம்" முதல் மண்டல மாநாடு - அழைப்பிதழ் - Government of Tamil Nadu - Department of School Education - State Parent Teacher Association "Let's Celebrate Parents" 1st Zonal Conference - Invitation...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசு வழங்கும் மான்ய கடன் திட்டங்கள் கையேடு 2023...



 அரசு வழங்கும் மான்ய கடன் திட்டங்கள் கையேடு 2023 - Government Free Loan Schemes Handbook 2023...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கர்நாடக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் (சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு) அமல் - கன்னட மொழியில் அரசாணை வெளியீடு - தமிழாக்கம் அதனைத் தொடர்ந்து....


கர்நாடக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் (சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு) அமல் - கன்னட மொழியில் அரசாணை எண்: 99, நாள்: 24-01-2024 வெளியீடு - தமிழாக்கம் அதனைத் தொடர்ந்து - Re-implementation of Old Pension Scheme (subject to certain conditions) to Karnataka Govt Servants - Issue of Ordinance G.O.No: 99, Date: 24-01-2024 in Kannada - Tamilization followed by....



>>> அரசாணை எண்: 99, நாள்: 24-01-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...









இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு... 27-04-2024 – Press News – Date Extension for Online Application - Direct R...