கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கல்வித் துறையில் டாப் 15ல் இரு இந்தியர்கள்

அமெரிக்காவில் வெளியாகும் போர்ப்ஸ் பத்திரிகை, உலகளவில் பணக்காரர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பல துறைகளில் உலகில் சிறந்து விளங்குவோரின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. போர்ப்ஸ் வெளியிட்ட கல்வித் துறையில் சாதனை படைத்த டாப் 15 பேரின் பட்டியலில் 2 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
முதல் நபர், ‘டேட்டாவின்ட்’ நிறுவனத்தின் சி.இ.ஓ., சுனித் சிங் துலி. இவர் உலகின் குறைந்த விலை கம்ப்யூட்டரான, ‘ஆகாஷ் டேப்லெட்’ கம்ப்யூட்டரை கண்டுபிடித்தவர். இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களின் கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வழி வகுத்துள்ளார்.
இரண்டாவது நபர், அமெரிக்காவின் எம்.ஐ.டி., பல்கலைக்கழக கம்ப்யூட்டர் சயின்ஸ் பேராசியர் ஆனந்த் அகர்வால். இவர், ஆன்லைன் வழி கல்வியை அறிமுகப்படுத்தியவர். இவரது கண்டுபிடிப்பால் 4 லட்சத்துக்கும் மேலான மாணவர்கள் ஆன்லைன் வழி கல்வியை பயன்படுத்துகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர்கல்வி வழிகாட்டு செய்திகள் 14.07.2025

    உயர்கல்வி வழிகாட்டு செய்திகள் 14.07.2025  👉 இன்று 14.07.2025 BE online General & 7.5 Quota Counselling தொடங்குகிறது. 👉 General Ran...