கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு





அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


Extension of deadline for applying for admission to government arts and science colleges


அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு மே 30ஆம் தேதி வரை நீட்டிப்பு. 


விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாள் நேற்றுடன் முடிந்த நிலையில் மே 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு. 


அரசு கல்லூரிகளில் இதுவரை 2,25,705 பேர் விண்ணப்பம். 1,82,762 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர்.


தந்தை பெரியாரின் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் - UPSC தேர்வில் சர்ச்சை கேள்வி



யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயருக்கு பின் ஜாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்டுள்ளதால் சர்ச்சை


சாதியை ஒழிக்க பாடுபட்ட தந்தை பெரியாரின் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் - அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது UPSCன் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி


IAS, IPS உள்ளிட்ட நாட்டை முன்னேற்றும் பொறுப்புள்ள பணியில் ஈடுபட வேண்டியவர்களை தேர்ந்தெடுக்க நடத்தப்படும் UPSC தேர்வில் சாதிய சர்ச்சையை உள்ளடக்கிய விஷமத்தனமான கேள்வி கேட்கப்பட்டுள்ளது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


நாடு முழுவதும் நடைபெற்ற யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.


மத்திய அரசின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.






இந்நிலையில் யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வில் பெரியார் குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இதன்படி யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியவர் யார்..? என கேட்கப்பட்டுள்ள கேள்வியில் 4 விடைகளில் ஒன்றாக பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என சாதிப் பெயருடன் குறிப்பிடப்பட்டுள்ளது


முன்னதாக கடந்த 1929 ஆம் ஆண்டு நடைபெற்ற செங்கல்பட்டு மாநாட்டில் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் சாதி பெயரை நீக்குவதாக பெரியார் அறிவித்திருந்தார். சாதி ஒழிப்புக்காக போராடிய பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் பெயருக்கு பின்னால் சாதி பெயர் குறிப்பிடப்பட்டு கேள்வி கேட்கப்பட்டது தேர்வர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


மேலும் யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில், ஒரு மசோதாவை கவர்னர் எவ்வளவு நாள் வைத்துக் கொள்ளலாம், அதை ஜனாதிபதிக்கு அனுப்பக்கூடிய விவகாரம் தொடர்பாகவும் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. மேலும் நீதிமன்றம் கவர்னரை கேள்வி கேட்க அதிகாரம் உள்ளதா என்ற சர்ச்சை கேள்வியும் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

 


பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த பெண் காவலர் அபிநயா (29) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.


நேற்றிரவு பணிக்கு வந்த நிலையில், காலையில் தற்கொலை; மன உளைச்சலா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறை விசாரணை.


தற்கொலை தீர்வல்ல... 

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம்: 104 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளவும்.


மயிலாடுதுறை மாவட்டம் மணகுடி பகுதியைச் சேர்ந்தவர் அபிநயா (29). இவர் நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் பெண் போலீஸாக பணியாற்றி வருகிறார்.


திருமணம் ஆன இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவகாரத்து பெற்று விட்டதாக சொல்லப்படுகிறது. அபிநயா நாகை ஆயுதப்படை குடியிருப்பில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளார்.


நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கருவூலத்தில் அபிநயா, துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.



சுழற்சி முறையில் இந்த பணியை செய்து வந்ததாக சொல்கிறார்கள். இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் மாவட்ட கருவூலத்தில் அபிநயாவும், மற்றொரு பெண் காவலரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து இன்று காலை சுமார் 6 மணியளவில் அபிநயா தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.


 மற்றொரு பெண் காவலர் துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்துள்ளார். இதில் அபிநயா இடது கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறியுள்ளார்.


பின்னர், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே, ஆயுதப்படை டி.எஸ்.பி, நாகூர் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.


மேலும் அபிநயா உடலை நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகப்பட்டினம் எஸ்.பி அருண் கபிலன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டார். அபிநயா குறித்து பணியில் இருந்த மற்றொரு பெண் காவலரிடம் கேட்டுள்ளனர்.


மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து கூறப்படுவது, "அபிநயா பணியை சிறப்பாக செய்யக்கூடியவர். இதற்காக உயர் அதிகாரிகளிடம் பாராட்டு சான்றிதழ் வாங்கியுள்ளார். ஆயுதப்படையில் பணியாற்றிய ஆண் காவலர் ஒருவரும், அபிநயாவும்  பழகியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மே 1ஆம் தேதி அந்த ஆண் காவலர் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் அபிநயா.


இதையடுத்து 15 நாட்கள் விடுமுறை எடுத்துச் சென்றவர், கடந்த 5 நாட்களுக்கு முன்பு மீண்டும் பணிக்கு வந்துள்ளார். அவருக்கு தொடர்ந்து இரவுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இதுவும் அவருக்கு அழுத்தத்தை தந்துள்ளது. இந்த நிலையில் தான் அபிநயா தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இதற்கான காரணம் விசாரணை முடிவில் தெரிய வரும்" என்றனர்.


நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் அபிநயா உடல், உடற்கூறாய்விற்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தற்கொலை தீர்வல்ல... 

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம்: 104 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளவும்.


கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல் - பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை



கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல் - பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை


கேரளா அருகே கடலில் மூழ்கிய கப்பல் - ரசாயனம் பரவும் அபாயம்


திருவனந்தபுரம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி நோக்கி புறப்பட்ட சரக்குக் கப்பல் மூழ்கியது.


 கப்பலில்  25 பேர் இருந்த நிலையில் லைஃப் ஜாக்கெட் உதவியுடன் 9 பேர் கடலில் குதித்து தப்பித்தனர். 


கப்பலில் சிக்கிய 16 பேரை மீட்கும் பணி தீவிரம்.


கப்பலில் இருந்த கண்டெய்னர்களில் 367 மெட்ரிக் டன்  கந்தக எரிபொருள் உள்ளதால், அதனால் ஏதும் ஆபத்து நிகழலாம் என எச்சரிக்கை.


 கண்டெய்னர்கள் எங்காவது கரை ஒதுங்கும் போது மக்கள் யாரும் அருகே செல்ல வேண்டாம் என கேரள பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை.


கொச்சி செல்லவிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடல் அருகே மூழ்கி விபத்துக்குள்ளானது.


கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல், அரபிக் கடலில் மூழ்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கப்பலில் லைபீரியா நாட்டின் கொடி இருந்ததாகக் கூறுகின்றனர்.


இந்தக் கப்பல் இன்றிரவு 10 மணிக்கு கொச்சி சென்றடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கொச்சியை தொடர்ந்து, தூத்துக்குடிக்கும் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.


இந்த விபத்தின்போது, கப்பலில் 24 பேர் இருந்ததாகவும், அவர்களில் 9 பேர் பாதுகாப்பு உடைகளின் மூலம் தப்பித்ததாகவும் தகவல் தெரிவிக்கிறது. மீதமுள்ளவர்களை மீட்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தென்மேற்கு பருவமழையின் காரணமாக, கடலில் ஏற்பட்ட பாதகமான நிலைமையால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.


அதுமட்டுமின்றி, கப்பலில் இருந்த கன்டெய்னர்களில் 367 மெட்ரிக் டன் அளவில் கந்தக எரிபொருள் இருந்ததாகக் கூறுகின்றனர். ஆகையால், அவை கரை ஒதுங்கும் சமயத்தில், அதனருகே மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று பேரிடர் மேலாண்மை எச்சரித்துள்ளது.


மேலும், கடற்கரையில் அடையாளம் தெரியாத எந்தப் பொருளையும் அணுக வேண்டாம் என்றும், 112 என்ற அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு - தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியை வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு - Maternity Leave Case


 மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு - தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியை வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு - Maternity Leave Case


மகப்பேறு விடுப்பு அரசியலமைப்பு சட்டம் அளித்த உத்தரவாதம் - தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியை வழக்கில் Supreme Court Judgment - Maternity Leave Case


மகப்பேறு விடுப்பு என்பது மகப்பேறு சலுகைகளில் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்றும் இது பெண்களுக்கு அரசியலமைப்பு சட்டம் அளித்த உத்தரவாதம் என்றும் தமிழ்நாடு பெண் அரசு ஊழியர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.


தமிழ்நாட்டை சேர்ந்த ஆசிரியை ஒருவர் அரசு பணியில் சேருவதற்கு முன்பு முதலாவது திருமணத்தின் மூலம் இரண்டு குழந்தைகளின் தாயாக இருந்தார். முதல் திருமணத்தில் பிறந்த குழந்தைகள் இருவரும் முதல் கணவரிடம் உள்ளனர். இந்த நிலையில் அரசு பள்ளியில் ஆசிரியை பணியில் சேர்ந்த பின்னர் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அவர், கருவுற்றிருந்தார்.


இதற்காக அவர் தமது பள்ளிக்கல்வித்துறையின் வாயிலாக பிரசவ கால விடுமுறைக்காக விண்ணப்பித்த போது, ஏற்கனவே அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக அவருக்கு பிறக்க உள்ள குழந்தைக்கு பிரசவ கால விடுமுறை அளிக்க இயலாது என கூறப்பட்டது. 


இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு நபர் நீதிபதி அமர்வில் வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி பார்த்திபன், "ஆசிரியைக்கு 2021ஆம் ஆண்டு அக்டோபர் 11 முதல் 2022ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி வரை ஒரு ஆண்டு காலத்துக்கு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது," என்று உத்தரவிட்டார்.


இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் இருநபர் நீதிபதி கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து தீர்ப்பளித்த நீதிபதிகள், "திருமணம் ஆன அரசு பணியில் உள்ள பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு என்பது சட்டப்பூர்வமானதுதான். ஆனால், அடிப்படை உரிமை அல்ல," என்று கூறியது. எனவே, ஒரு நபர் நீதிபதி அளித்த உத்தரவுக்கு தடை விதித்தது.


இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆசிரியை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரின் மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, உஜ்ஜல் புயான் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "மகப்பேறு சலுகைச் சட்டம் என்பது பெண்களில் மகப்பேறு விடுமுறை உரிமையை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஒரு தாயாகவும், அரசு ஊழியராகவும் சுதந்திரமான வாழ்க்கை வாழ்வதற்கான சாத்தியங்கள் போன்ற நெகிழ்வு தன்மைகளை பெண்களுக்கு அளிக்கிறது,” என்றனர்.


மேலும் கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், “பெண் ஆசிரியைக்கு முந்தைய திருமணத்தின் மூலம் இரண்டு குழந்தைகள் பிறந்திருந்த போதிலும், இப்போதைய குழந்தைக்கும் அவருக்கு மகப்பேறு உரிமை உள்ளது. பெண் ஆசிரியை அரசு பணியில் சேருவதற்கு முன்பு முதல் இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். அரசு வேலையில் சேர்ந்த பின்னர், அவர் இரண்டாவது திருமணம் மூலம் குழந்தை பெற்றிருக்கிறார். எனவே, அரசு பணியில் சேர்ந்த பிறகு அவருக்கு குழந்தை பிறந்ததை முதல் குழந்தையாக கருத வேண்டும். மேலும் முதல் திருமணம் மூலம் பிறந்த இரு குழந்தைகள் அவரிடம் இல்லை. முதலாவது கணவரிடம் அதாவது குழந்தைகள் அவரது தந்தையுடன் வசிக்கின்றனர்.


எனவே, மகப்பேறு கால விடுமுறை என்பது மகப்பேறு கால பலன்களோடு இணைந்ததாகும். உடல் நல உரிமை, தனியுரிமை, சம உரிமை, பாகுபாடு காட்டாமை மற்றும் கண்ணியத்திற்கான உரிமை உள்ளிட்டவை போல சர்வதேச மனித உரிமை சட்டம் உள்ளிட்டவற்றில் இனப்பெருக்க உரிமைகள் இப்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளன.


தமிழ்நாடு அரசின் கொள்கையின்படி மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நிச்சயமாக பாராட்டத்தக்க நோக்கமாகும், மேலும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு சலுகைகளை வழங்குவதன் நோக்கமும் அதைப் போன்றதுதான். நாட்டில் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இரண்டு குழந்தைகள் விதிமுறை என்ற நோக்கமும், தற்போதைய வழக்கு சூழ்நிலைகளில் மகப்பேறு விடுப்பு உட்பட பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு சலுகைகளை வழங்குவதும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவை அல்ல. சமூக நோக்கத்தை அடைய, இரண்டும் ஒரு நோக்கமாக மற்றும் பகுத்தறிவு முறையில் இணக்கமாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.


சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 15,672 மாணவர்கள் சேர்க்கை



 சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 15,672 மாணவர்கள் சேர்க்கை


சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த 2 மாதங்களில் 15,672 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.


சென்னை மாநகராட்சி கல்வி துறையின் கீழ், 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலை, 46 உயர்நிலை, 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் இயங்கி வருகின்றன.


இந்த பள்ளிகளில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.


சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 2025-26-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் 15,672 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.


இதுதொடர்பாக மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சிப் பள்ளிகளில் ஆண்டுதோறும் 1.12 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் மார்ச் மாதத்துக்குப் பிறகு மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த ஆண்டு மே 23-ம் தேதிக்குள் 15,672 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மழலையர் வகுப்புகளில் மட்டும் 8 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 2 மாதங்களில் இவ்வளவு மாணவர்கள் சேர்ந்துள்ளது இதுவே முதல்முறை. விஜயதசமி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும்.


இந்த ஆண்டு 33 ஆயிரம் மாணவர்களைச் சேர்க்க ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். இதற்காக மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான சலுகைகள் குறித்தும், கல்வி தரம் மேம்பட்டிருப்பது குறித்தும், 45 ஆட்டோக்கள் வாயிலாக பொதுமக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


மழலையர் வகுப்புகளில் காற்றோட்டமான வகுப்பறைகள், பச்சை வண்ணப் பலகைகள், ஸ்மார்ட் போர்டு, விளையாட்டுடன் கல்வியில் ஆர்வத்தைத் தூண்டும் வண்ணமயமான புத்தகங்கள் உள்ளிட்டவை உள்ளன. புத்தகப் பைகள், காலணிகள், அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. பள்ளி சீருடைகள், எழுது பொருட்கள், பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், காலை சிற்றுண்டி, பள்ளிக்கு 100 சதவீதம் வருகை தந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, மாலை சிற்றுண்டியுடன், மாலைநேர சிறப்பு வகுப்புகள் உள்ளிட்டவை ஏற்படுத்தி தரப்படுகிறது.


மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், கல்வித் தரத்தை மேம்படுத்தவும், விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. போட்டித் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களை கல்வி சுற்றுலாவுக்கும் அழைத்து செல்கிறோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


மைசூர் அரச குடும்பத்திற்கு ரூபாய் 3400 கோடி இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

 


மைசூர் அரச குடும்பத்திற்கு ரூபாய் 3400 கோடி இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு


கர்நாடக மாநிலம், பெங்களூரின் பல்லாரி சாலை மற்றும் ஜெயமஹால் சாலை பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி மிக அதிகமாக உள்ளது.


இதற்கு தீர்வு காணும் நோக்கில், பல்லாரி சாலை, ஜெயமஹால் சாலையை அகலப்படுத்த, மாநில அரசு திட்டமிட்டது.


இப்பணிகளுக்காக, பெங்களூரு அரண்மனை மைதானத்தை சேர்ந்த 15.39 ஏக்கர் நிலத்தை, மாநில அரசு 2023ல் கையகப்படுத்தியது.


இதற்கு மைசூரு அரச குடும்பத்தினர் ஆட்சேபம் தெரிவித்தனர். நிலத்துக்கான நிவாரணம் வழங்கும்படி வலியுறுத்தினர். ஆனால், அரசு மவுனம் சாதித்தது.


இதுகுறித்து, உச்ச நீதிமன்றத்தில், அரச குடும்பத்தினர் மனு தாக்கல் செய்தனர். விசாரணை நடத்திய நீதிமன்றம், அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு ஏக்கருக்கு 220 கோடி ரூபாய் வீதம், 3,400 கோடி ரூபாய் டி.டி.ஆர்., எனும் மாற்றக்கூடிய மேம்பாட்டு உரிமை தொகையாக அளிக்க வேண்டும் என, கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.



இந்த தொகையை உச்ச நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யும்படியும் உத்தரவிட்டது. இதன்படி, கர்நாடக அரசும் உச்ச நீதிமன்ற பதிவாளர் பெயரில் 3,400 கோடியை டிபாசிட் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச குடும்பத்தினர் மனு தாக்கல் செய்தனர்.


மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், அரவிந்த்குமார் முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.


மன்னர் குடும்பத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 3,400 கோடி ரூபாயை உடனடியாக, அரச குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டனர்.



KTM பைக் நிறுவனத்தை வாங்குகிறது Bajaj



கேடிஎம் பைக் நிறுவனத்தை வாங்குகிறது பஜாஜ்


Bajaj to acquire KTM bike company


கேடிஎம் பைக்குகளை தயாரிக்கும் ஆஸ்திரிய நாட்டு நிறுவனத்தை கையகப்படுத்துகிறது பஜாஜ் நிறுவனம்


கேடிஎம் நிறுவனத்தில் ரூ.7,765 கோடி முதலீடு செய்து அதன் 4 பெரும்பான்மை பங்குகளை வாங்குகிறது பஜாஜ்


கேடிஎம்ஐ வாங்குவதன் மூலம் உயர் திறன் மோட்டார் பைக் சந்தையில் பஜாஜ் முக்கிய இடம் பிடிக்கிறது


பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. 2-வீலர்கள் மற்றும் 3-வீலர்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் உதவியுடன் சில ஐரோப்பிய பைக் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles), கேடிஎம் (KTM) மற்றும் ஹஸ்க்வர்னா (Husqvarna) என்பன அந்த சில ஐரோப்பிய பைக் நிறுவனங்கள் ஆகும். இவற்றில் சில நிறுவனங்கள் பஜாஜ் நிறுவனத்தின் மூலமாகவே,  இன்னமும் செயல்பட்டு வருகின்றன. அதாவது, ஐரோப்பிய நிறுவனங்கள் நம் இந்தியாவின் பஜாஜ் மூலமாகவே உயிர்பிப்புடன் உள்ளன.


ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் பஜாஜ் நிறுவனத்தை காட்டிலும் பழமையான பைக் உற்பத்தி நிறுவனம் ஆகும். இரு நண்பர்கள் மூலமாக 1934ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கேடிஎம் நிறுவனம் முதல் 55 வருட கால கட்டத்திற்கு பெரியதாக எந்தவொரு சறுக்கலையும் சந்திக்கவில்லை.


நிறுவனத்தை நிறுவிய நண்பர்கள் இருவரும் இறந்து போனாலும், அவர்களில் ஒருவரது மகன் கேடிஎம் நிறுவனத்தை தூக்கி பிடித்தது மட்டுமின்றி, மெல்ல மெல்ல நிறுவனத்தையும் வளர்க்க ஆரம்பித்தார். இருப்பினும், அவரும் 1989இல் இயற்கை எய்ததை அடுத்து, 1991க்கு பிறகு எந்த பக்கம் செல்வது என தெரியாமல் கேடிஎம் நிறுவனம் தடுமாறியது.


அப்போதுதான், ஆஸ்திரியா நாட்டை தாயகமாக கொண்ட பியரர் மொபிலிட்டி ஏஜி (Pierer Mobility AG) நிறுவனத்தால் கேடிஎம் நிறுவனம் வாங்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் சறுக்கலை சந்தித்துவரும் கேடிஎம் நிறுவனத்தை காப்பாற்றி இருப்பது, பியர் மொபிலிட்டி ஏஜி நிறுவனம் கிடையாது; இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ ஆகும்.


பல்சர் (Pulsar) பைக்குகள் மூலமாக இலாபத்தை சம்பாதிக்க ஆரம்பித்த 2007ஆம் ஆண்டு சமயத்தில் அந்த இலாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை பணத்தை பியர் மொபிலிட்டி ஏஜி நிறுவனத்தின் கேடிஎம் பிராண்டின் பங்கை வாங்க பஜாஜ் பயன்படுத்தியது. அதன்பின் ஒவ்வொரு வருடமாக கேடிஎம் பிராண்ட் மீதான தனது உரிமையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்த பஜாஜ் நிறுவனம், 2012ஆம் ஆண்டில் கேடிஎம் நிறுவனத்தை இந்தியாவிற்கு கொண்டுவந்தது.


இதன் மூலமாக பஜாஜ் ஆட்டோ உடன் இன்னும் நெருக்கமாகியதன் மூலம் 2013இல் கேடிஎம் நிறுவனத்தின் சுமார் 47.97% பங்கை பஜாஜ் பெற்றது. தற்போது, கேடிஎம் நிறுவனம் மீதான பஜாஜ் ஆட்டோவின் பங்கு மதிப்பு 49.9% ஆகும். இந்த நிலையில், கேடிஎம் நிறுவனத்தை பியர் மொபிலிட்டி நிறுவனத்திடம் இருந்து பிரித்து முழுவதுமாக தானே சொந்தமாக்கி கொள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாராகி வருகிறது.


இதன் ஒரு பகுதியாக, தனித்து செயல்பட வேண்டி கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் கேடிஎம் நிறுவனம் சார்பில் ஆஸ்திரியா நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு கேடிஎம் நிறுவனம் சார்பில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், எல்லா காரணங்களும் கேடிஎம் நிறுவனத்தை பெரியதாக்க வேண்டும் என்பதாக தான் இருந்தன. இந்த நிலையில், சுமார் 56.6 கோடி யூரோக்களை (ரூ.5,431 கோடி) பியர் மொபிலிட்டி நிறுவனத்திற்கு பஜாஜ் ஆட்டோ கடனுதவியாக வழங்க உள்ளது.



இதற்கான ஒப்பந்தங்கள் சமீபத்தில்தான் கையெழுத்தாகி முடிந்துள்ளன. கேடிஎம் நிறுவனத்தில் முதலீடுகள் வருகிற மே 23ஆம் தேதியோடு நிறைவடைய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. வழக்கம்போல், கேடிஎம் நிறுவனத்தின் வணிகம் சமீப காலமாக மிகவும் சரிவை சந்தித்து வருகிறது. இத்தகைய நேரத்தில் கடனுதவியை கொடுத்து, கேடிஎம் நிறுவனத்தை வளைத்து போடலாம் என்பதுதான் பஜாஜ் ஆட்டோவின் ராஜ தந்திரமாக உள்ளது.


5 வகை விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் - மாநகரக் காவல் ஆணையர்



5 வகை விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் - மாநகரக் காவல் ஆணையர் அருண் உத்தரவு


• ஒரு வாகனத்தில் 3 நபர்கள் பயணித்தல் 


• தலைக்கவசம் அணியாமல் பயணித்தல்


• தவறான திசையில் செல்வது (WRONG SIDE)


• மதுபோதையில் வாகனம் ஓட்டுதல்


• அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல்


போக்குவரத்துப் போலீசார் கும்பலாக நின்று கொண்டு வாகன ஓட்டிகளிடம் கெடுபிடி காட்டி அபராதம் வசூலிப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து போக்குவரத்து போலீசாருக்கு சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் உத்தரவு


தங்க நகைக்கடன் : Reserve Bank வெளியிட்டுள்ள புதிய விதிகள்



தங்க நகைக்கடன் : ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய விதிகள்


Gold and jewellery loans: New rules issued by the Reserve Bank


தங்க நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. 


ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய விதிகள்:-


 தங்க நகைகளை அடகு வைப்பதற்கு புதியதாக 9 விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது


வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள்:


தங்க நகையின் மதிப்பில் 75% தொகை மட்டுமே கடன் வழங்கப்படும்.

தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே நகைக்கடன் வழங்கப்படும். எடுத்துக்காட்டாக நகையின் மதிப்பு 100 ரூபாய் என்றால் 75 ரூபாய் வரை மட்டுமே நகைக்கடன் வழங்கப்படும்

* 

அடமானம் வைக்கப்படும் நகைகளுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

தங்க நகை கடன் வாங்குபவர்கள் நகைக்கு நீங்கள்தான் உரிமையாளர் என்ற ஆதாரத்தை வழங்க வேண்டும்.


வங்கிகள்(அ) வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தங்கத்திற்கான தூய்மை சான்றிதழை வழங்க வேண்டும்.

தங்க நகையின் தூய்மைத்தன்மை குறித்து வங்கியிடம் சான்றிதழ் பெற வேண்டும்

*


*

தங்க ஆபரணங்கள் மற்றும் வங்கிகளில் வாங்கிய தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் பெற முடியும்.

குறிப்பிட்ட வகையிலான தங்கங்களுக்கு மட்டுமே நகைகடன் வழங்கப்படும். நகை 22 காரட் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்

*

வெள்ளி நகைகளுக்கும் நகைக்கடன் பெறலாம். வெள்ளிப் பொருட்களுக்கும் கடன் வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி.


தனிநபர் ஒரு கிலோ தங்கம் வரையில் மட்டுமே அடமானம் வைக்க முடியும்.


அடகு வைக்கப்படும் நகைகள் 22 காரட் தங்கத்தின் விலையில் மட்டுமே மதிப்பிடப்படும்.


கடன் ஒப்பந்தத்தில் முழுமையான விவரங்கள் இருக்க வேண்டும்.


அடகு வைக்கப்பட்ட தங்கத்திற்கான முழு தொகையையும் வாடிக்கையாளர்கள் செலுத்திய 7 நாட்களுக்குள் நகைகளை திருப்பித் தரவேண்டும். 


தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குபவர்கள் 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.


நகைக்கடன் வாங்கியவர் அந்த கடனை திரும்ப செலுத்திய 7 வேலை நாட்களில் நகையை திரும்பி ஒப்படைக்க வேண்டும். 7 வேலை நாட்களில் ஒப்படைக்கவில்லையென்றால் கடன் கொடுத்தவர் (வங்கிகள்) ஒரு நாளைக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமாக கொடுக்க வேண்டும்.' என தெரிவிக்கப்பட்டுள்ளது



* 

* 

தனியார் மருத்துவமனைக்கு மாற்றி பணம் பெற்ற வழக்கு - அரசு மருத்துவரை டிஸ்மிஸ் செய்யவும், ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு ஆணையம் உத்தரவு



 சிகிச்சைக்கு வந்த நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி பணம் பெற்ற வழக்கு - அரசு மருத்துவரை டிஸ்மிஸ் செய்யவும், ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு


Human Rights Commission orders Tamil Nadu government to dismiss government doctor and pay Rs. 50 lakh as compensation for transferring patient to private hospital


கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி ஆதாயம் பெற்ற வழக்கில், மருத்துவர் பிரபாகரனை பணி நீக்கம் செய்து, அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு.


உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்த ஜெயா என்பவரின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழ்நாடு அரசுக்கு ஆணையம் உத்தரவு. 


இதில் ரூ.40 லட்சத்தை மருத்துவர் பிரபாகர் வழங்கவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிகிச்சைக்கு வந்த நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி பணம் பெற்ற வழக்கில் கோவில்பட்டி அரசு மருத்துவரை டிஸ்மிஸ் செய்யவும், உயிரிழந்த நோயாளிக்கு ரூ.40 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டு மனித உரிமை ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.


கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை தனது தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்த அரசு மருத்துவர் பிரபாகரன் மீது மனித உரிமைகள் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.


விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தலைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி. இவரது மனைவி ஜெயா 2018ஆம் ஆண்டு தீக்காயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பணியாற்றிய அரசு டாக்டர் பிரபாகரன், ஜெயாவை தனது தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். பல நாட்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ஜெயா உயிரிழந்தார்.


இதையடுத்து, அவரது கணவர் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார்.

 

இதுகுறித்து இராணுவ வீரர் எஸ். கருப்பசாமி தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், தனது மனைவியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்ததற்காக மருத்துவர் பிரபாகரன் ரூ.2 லட்சம் கேட்டதாகவும், தான் ரூ.20 ஆயிரம் கொடுத்ததாகவும், மீதி பணம் கொடுக்காததால் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்றும், தனது மனைவியை பார்க்கவும் அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். 


மேலும், தனது மனைவிக்கு ஆரம்பத்தில் 30% தீக்காயம் இருந்த நிலையில், மருத்துவரின் தவறான சிகிச்சையால்தான் 60% ஆகி உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.இந்த புகாரின் மீது மனித உரிமை ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன் விசாரணை நடத்தினார்.


 விசாரணையில், மருத்துவர் பிரபாகரன் அரசு மருத்துவமனை விதிமுறைகளை மீறி செயல்பட்டது உறுதியானது. குறிப்பாக, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணை தனது சொந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தது மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிரானது என ஆணையம் கண்டறிந்தது.


இதன் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட ஆணையம், இன்று (மே 19) வெளியிட்ட உத்தரவில், பின்வரும் தீர்ப்பை அறிவித்துள்ளது:


ராணுவ வீரர் கருப்பசாமிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீட்டுத் தொகையில், டாக்டர் பிரபாகரன் ரூ.40 லட்சமும், டாக்டர் வெங்கடேஸ்வரன் ரூ.2 லட்சமும், ஊழியர்கள் குமரேஸ்வரி மற்றும் குரு லட்சுமி தலா ரூ.1 லட்சமும், தமிழக அரசு ரூ.6 லட்சமும் வழங்க வேண்டும்.


டாக்டர் பிரபாகரனை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்; அவரை மீண்டும் அரசு பணியில் நியமிக்கக் கூடாது. அவர்மீது குற்றவழக்கு பதிவு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு டாக்டர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுவதை கண்காணிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புகார் பெட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என இந்த தீர்ப்பின் மூலம், அரசு மருத்துவர்களின் பொறுப்புணர்வையும், பொதுமக்கள் பாதுகாப்பையும் வலியுறுத்தியுள்ளது மனித உரிமை ஆணையம்.


சிவகிரி தம்பதி கொலை வழக்கில் 4 பேர் கைது - பல்லடம் மூவர் கொலையிலும் 3 பேருக்கு தொடர்பு

 


சிவகிரி தம்பதி கொலை வழக்கில் 4 பேர் கைது - பல்லடம் மூவர் கொலையிலும் 3 பேருக்கு தொடர்பு - மேற்கு மண்டல ஐஜி பேட்டி 


4 people arrested in Sivagiri couple murder case - 3 people involved in Palladam trio murder - Western Zone IG interview


சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை, தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட குற்றவாளிகளுக்கு பல்லடம் அருகே நடந்த மூவர் கொலை சம்பவம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த விளக்கேத்தி, மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த வயதான தம்பதிகளான ராமசாமி (வயது 72) - பாக்கியம் (63) ஆகியோர், பணம், நகைக்காக, கடந்த மாதம் 28-ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து பத்தே முக்கால் பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.


இந்த கொலை வழக்கு குற்றவாளிகளைக் கைது செய்ய, மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்குமார், டி.ஐ.ஜி சசிமோகன் ஆகியோர் மேற்பார்வையில், ஈரோடு எஸ்பி சுஜாதா தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.


இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை தனிப்படை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.


இதுகுறித்து மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் திங்கள்கிழமை காலை ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

சிவகிரியை அடுத்த மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த ராமசாமி - பாக்கியம் தம்பதியினர் கொலை வழக்கு தொடர்பாக பழங்குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதேபோல், கண்காணிப்பு கேமரா பதிவுகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.


இதில் அரச்சலூர் வீரப்பம்பாளையத்தைச் சேர்ந்த ஆச்சியப்பன் (48) அறச்சலூர் தெற்கு வீதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் (52), வீரப்பம்பாளையம் புதுக்காலனியைச் சேர்ந்த ரமேஷ் (54) ஆகிய மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராமசாமி - பாக்கியம் தம்பதியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர்.



கடந்த மாதம் 28ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல், இரு சக்கர வாகனத்தில் மூவரும் ராமசாமியின் தோட்டத்துக்கு வந்துள்ளனர். கரும்புக்காடு பகுதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு, வீட்டின் அருகே மறைந்து இருந்துள்ளனர். அப்போது மின் தடை ஏற்படுத்தி, பாக்கியத்தை வீட்டில் இருந்து வெளியே வர வைத்துள்ளனர். வெளியே வந்த அவரை, மரக்கட்டையால் தாக்கி கொன்றுள்ளனர். சத்தம் கேட்டு வந்த ராமசாமியையும், மூவரும் கட்டையால் தாக்கி கொன்றுள்ளனர்.


பாக்கியம் அணிந்திருந்த பத்தே முக்கால் பவுன் நகையை பறித்துக் கொண்டு மூவரும் தப்பியுள்ளனர். திருடிய நகையை சென்னிமலை பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரிடம் கொடுத்து உருக்கியுள்ளனர். உருக்கப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரனும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜூன் 2ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கொலையாளிகளிடம் இருந்து அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனம், கொலைக்கு பயன்படுத்திய மரக்கட்டை, கையுறை மற்றும் கொலையான ராமசாமியின் அலைபேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கொலை நடந்த வீட்டில் இருந்த கால்தடங்களுடன், குற்றவாளிகளின் கால் தடங்களை ஒப்பிட்டு பார்த்து உறுதி செய்ய தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குற்றவாளி ஆச்சியப்பன் தேங்காய் உறிக்கும் பணி மற்றும் தோட்ட வேலை செய்வது போன்று தனியாக உள்ள தோட்டங்களுக்கு சென்று நோட்டமிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.


அவர் கொடுக்கும் தகவலின் படி, மற்ற இருவரும் இணைந்து, தனியாக வசிக்கும் வயதானவர்களைக் கொலை செய்து நகையைத் திருடியுள்ளனர். சிவகிரி கொலை சம்பவத்துக்கு முன்பாக 15 நாட்களுக்கு முன்பு இப்பகுதியை நோட்டமிட்டுள்ளனர். குற்றவாளிகள் மூவரின் மீதும், 2015 ஆம் ஆண்டு 5 வழக்குகள் இருந்துள்ளன. இந்த வழக்குகளில் இருந்து இவர்கள் விடுபட்டுள்ளனர்.


பல்லடம் கொலை

திருப்பூர் மாவட்டம், அவிநாசிபாளையம், சேமலைக்கவுண்டன்பாளையத்தில் வசித்துவந்த தெய்வசிகாமணி (78), அவரது மனைவி அலமாத்தாள் (74) மற்றும் அவர்களது மகன் செந்தில்குமார் (44) ஆகியோர் கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஐந்தரை பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொலை வழக்கிலும் தற்போது பிடிபட்ட குற்றவாளிகள் மூவருக்கும் தொடர்புள்ளது.


இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருவதால், நீதிமன்றம் மூலம் இவர்களை காவலில் எடுத்து அந்த கொலை தொடர்பான விசாரணையை மேற்கொள்ள உள்ளனர். மேலும் ஈரோடு, திருப்பூர், கோவை பகுதியில் நடந்த குற்றச் சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் குற்றச் சம்பவத்தில் ஈடுபடும் போது போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை.


இதுபோன்ற குற்றச் சம்பவம் மேலும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு தீவிர பகல் மற்றும் இரவு ரோந்துகள், 35 இருசக்கர வாகன ரோந்துகள், 3 நான்கு சக்கர வாகன ரோந்து மற்றும் கீழ்பவானி பாசன வாய்க்கால் கரையோர பகுதிகளில் ஆயுதம் தாங்கிய 21 ரோந்து குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்


சிக்கியது எப்படி? 

கொலையாளிகளைப் பிடிக்க கண்காணிப்பு கேமரா பதிவுகள் உதவியாக இருந்துள்ளது. கொலை நடந்த பகுதியில் இருந்து இரவில் ஒரு இருசக்கர வாகனம் சென்றதைக் கண்டறிந்த போலீஸார், அந்த வாகனம் எதுவரை சென்றது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். அப்பகுதியில் வசிக்கும் பழங்குற்றவாளிகளை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த போது, கொலை குற்றவாளிகள் சிக்கியதாக தனிப்படையினர் தெரிவித்துள்ளனர்.




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


காருக்குள் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழப்பு

 



காருக்குள் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்த சோகம்


ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் கார் கதவுகள் ஆட்டோ லாக் ஆனதால் மூச்சுத் திணறி 4 குழந்தைகள் உயிரிழப்பு.


வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சென்று குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது காரின் கதவுகள் தானாக மூடிய நிலையில் வெளியே வர முடியாததால் மூச்சுத் திணறி உயிரிழப்பு. 


பக்கத்து வீட்டில் திருமண விழா இருந்ததால், குழந்தைகள் அங்கு சென்றிருப்பார்கள் என நினைத்து நீண்ட நேரம் பெற்றோர் தேடவில்லை.


ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் துவாரபுடி கிராமத்தில் காருக்குள் சிக்கி மூச்சுத் திணறி 4 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் துவாரபுடியைச் சேர்ந்த பார்லி ஆனந்த் – உமா தம்பதியினரின் மகள்கள் சாருமதி (8), சாரிஷ்மா (6), அதேபகுதியை சேர்ந்த சுரேஷ் – அருணா தம்பதியின் மகள் மானஸ்வி (6) மற்றும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் பவானியின் மகளான உதய் (8) ஆகிய 3 குடும்பமும் ஒரே பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டின் அருகில் திருமண விழா நடைபெற்று வந்த நிலையில், அங்கு பாடல் ஒளிபரப்பப்பட்டு இருந்தது.


இந்நிலையில் குழந்தைகள் விளையாடுவதற்காக வீட்டின் அருகே தெருவில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சென்று குழந்தைகள் விளையாடியுள்ளனர். காருக்குள் அமர்ந்து விளையாடியபோது திடீரென்று காரின் கதவு தானாக மூடிக்கொண்டது. கார் கதவுகள் ஆட்டோ லாக் ஆன நிலையில் வெளியே வர முடியாத குழந்தைகள் கூச்சலிட்டனர். அவர்கள் கத்தியது பாட்டு சத்தத்தில் கேட்காததால் 4 பேரும் காருக்குள் மூச்சுத் திணறி மயக்கமடைந்தார். இதையடுத்து நீண்ட நேரம் ஆகியும் குழந்தைகள் திரும்பி வராததால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களைத் தேடிப் பார்த்தபோது நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் அவர்கள் நான்கு பேரும் மயங்கி கிடப்பது தெரியவந்தது.


இதனையடுத்து கார் கண்ணாடியை உடைத்து கதவை திறந்து நான்கு பேரையும் மீட்ட பெற்றோர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நான்கு பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் துவாரபூடி கிராமத்தில் துக்கச் சூழல் நிலவியது. மரணமடைந்த சிறுவர், சிறுமிகளின் பெற்றோர் கதறி அழுதனர். தொடர்ந்து இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.



QR Code மூலம் மாணவர் சேர்க்கை - அரசுப் பள்ளிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் பாராட்டு



QR Code மூலம் மாணவர் சேர்க்கை - அரசுப் பள்ளிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் பாராட்டு



விரைவில் புழக்கத்திற்கு வரும் புதிய 20 ரூபாய் நோட்டு





 

விரைவில் புழக்கத்திற்கு வரும் புதிய 20 ரூபாய் நோட்டு


இந்திய ரிசர்வ் வங்கி விரைவில், புதிய 20 ரூபாய் மதிப்பிலான நோட்டுகளை வெளியிட உள்ளது


இந்த 20 ரூபாய் நோட்டின் வடிவமைப்பு,  தற்போதுள்ள மகாத்மா காந்தி படத்துடன் கூடிய  நோட்டுடன் ஒத்ததாகவே இருக்கும் 


ஏற்கனவே புழக்கத்தில் உள்ள 20 ரூபாய் நோட்டுக்களும், செல்லத்தக்கவையாகவே இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது


புதிய 20 ரூபாய் நோட்டில், மகாத்மா காந்தி புகைப்படமும், மற்ற விவரங்களும் அப்படியே இருக்கும். ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டுமே மாறியிருக்கும். புதிய ரூபாய் நோட்டில் முன்னாள் ஆளுநர் சக்தி காந்த தாஸ் அவர்களின் கையொப்பம் இருந்த இடத்தில், இனி புதிய ஆளுநரான சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பம் இடப்பட்டிருக்கும்.


ரிசர்வ் வங்கியில் ஆளுநர்கள் மாறும்பொழுது, மத்திய வங்கி செய்யும் வழக்கமான நடவடிக்கை என்பதால், மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் கூறியுள்ளது. இந்நிலையில் பழைய அதாவது இதற்குமுன் இருந்த கவர்னரின் கையொப்பம் உள்ள நோட்டுகள் நிலை என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.


ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, முன்னாள் கவர்னர் கையொப்பமிட்ட ரூபாய் நோட்டுகளும் செல்லும், இது வங்கியின் வழக்கமான நடவடிக்கை என்பதால் மக்கள் குழப்பமடைய வேண்டாம்.



தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதாரத்துறை தகவல்





 தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதாரத்துறை தகவல்


18 people infected with corona in Tamil Nadu - Health Department information


தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் மொத்தம் 93 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


சிங்கப்பூர், தாய்லாந்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை சொல்லியிருப்பது என்ன.? 


மீண்டும் பரவும் கொரோனா

சீனாவில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி, பெரும் உயிர்சேதத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. பல லட்சம் பேரை காவு வாங்கிய பின்னர், கொரோனாவிற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டது.


2 ஆண்டுகள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்த மக்கள், தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்தற்குப்பின் தான் நிம்மதி அடைந்தனர். ஆனாலும், 2 ஆண்டுகளுக்கு மேல் கொரோனா ருத்ர தாண்டவம் ஆடியதால், கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையே மாறியது. லாக் டவுன் இருந்ததால், ஏராளமானோர் வேலையையும், தொழிலையும் இழந்தனர். கொரோனா இல்லாமல் உலகம் சகஜ நிலைக்கு திரும்பினாலும், அவரவர் அடைந்த நஷ்டத்திலிருந்து இன்னும் மீளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங்கில் பரவல் அதிகரிப்பு

இந்த நிலையில், தற்போது சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனிடையே, ஹாங்காங்கில் ஒரே வாரத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் கொரோனா பரவல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


குறிப்பாக, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க அளவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சீனா மற்றும் தாய்லாந்திலும் கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளது.


இந்தியாவில் எத்தனை பேருக்கு தொற்று.? தமிழ்நாட்டில் எத்தனை.?

இதையடுத்து நடந்த பரிசோதனையில், இந்தியாவில் மொத்தம் 93 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல், புதுச்சேரியில் 13 பேருக்கும், கேரளாவில் 15 பேருக்கும், கர்நாடகாவில் 4 பேருக்கும், மகாராஷ்டிராவில் 7 பேருக்கும், டெல்லியில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.


எனினும், மத்திய அரசின் பொது சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மொத்தமாக 24 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிங்கப்பூரில், மே மாத முதல் வாரத்தில் 14,200 பேரிடம் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது நிலையைவிட 28% அதிகமாக இருப்பதால், ஓராண்டுக்குப் பிறகு அந்நாட்டு சுகாதார அமைச்சகம், கொரோனா குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.


தமிழ்நாடு சுகாதாரத்துறை சொல்வது என்ன.?

இதனிடையே, தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்துள்ள சுகாதாரத்துறை, வைரஸ் பாதிப்பு பெருமளவில் இல்லை எனவும், மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும், 8 முதல் 10 பேருக்கு தினசரி பரிசோதனை செய்யப்படுவதாகவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


இது வீரியமில்லாத கொரோனா என்பதால், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


Transfer Counseling for BEOs held on today

 


வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு மே 16-ல் மாறுதல் கலந்தாய்வு


Transfer Counseling for Block Education Officers held today, May 16th


வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு மே 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.


இந்தக் கலந்தாய்வில்... தற்போது பணியாற்றும் ஒன்றியத்தில், 30.04.2025 தேதியில், 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்கள் கட்டாயமாகக் கலந்து கொள்ள வேண்டும். அதேவேளையில் 30.06.2025 தேதிவரை ஓய்வு பெறவுள்ள வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. கலந்தாய்வில் கலந்து கொள்வோா் தற்போது பணிபுரியும் ஒன்றியம் மற்றும் அதற்கு முன்னா் பணிபுரிந்த ஒன்றியத்துக்கு மீண்டும் மாறுதல் கோரக் கூடாது. நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியராக கடைசியாகப் பணிபுரிந்த ஒன்றியத்துக்கு மாறுதல் கோரக் கூடாது. 


மாறுதல் முன்னுரிமைப் பட்டியல், தகுதி வாய்ந்தோா் பட்டியல் மற்றும் காலிப் பணியிடங்கள் விவரம் மே 15-ஆம் தேதி வெளியிடப்படும்.


இதற்கு முந்தைய பொது மாறுதல் கலந்தாய்வில் முதலில் மாவட்டத்துக்குள்ளும், பின்னா் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வும் நடத்தப்பட்டது. அதே முறை இந்த ஆண்டும் பின்பற்றப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


MADRAS UNIVERSITY FREE EDUCATION SCHEME 2025-2026

 


சென்னை பல்கலைக்கழகத்தில் இலவசமாக பட்டப்படிப்பு பயில வாய்ப்பு  


Opportunity to study for free degree courses at Madras University


சென்னை பல்கலைக்கழக மாணவர் இலவச கல்வி திட்டம் 2025-2026


 12ஆம் வகுப்பு படித்தவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் டிகிரி இலவசமாக படிக்க விண்ணப்பிக்கலாம் 


MADRAS UNIVERSITY FREE EDUCATION SCHEME 2025-2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழ்நாட்டில் 10, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன






 தமிழ்நாட்டில் 10, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (16-05-2025) வெளியாகின்றன


தேர்வு முடிவுகளை,

🔗 https://results.digilocker.gov.in,

🔗 www.tnresults.nic.in 

இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்!




                                

⭕ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 16.05.2025 வெள்ளிக்கிழமை காலை 9.10 மணிக்கு வெளியீடு

* உங்கள் மொபைலில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பார்க்க Mobile App &Result Link

 * மாணவர்கள்  தங்களுடைய பதிவெண் மற்றும்  பிறந்த தேதி  ஆகியவற்றை  பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.

பள்ளி சார்பில்  இணையத்தளத்தில் பதிவு செய்த தொலைப்பேசி எண்ணிற்கு மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக(SMS) அனுப்பப்படும்.
             
  

Mobile App Link
👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾👇🏾


💐💐💐💐💐💐💐💐💐

TNPSC Group 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

 




TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு


TNPSC Group 2 Exam Results Released


TNPSC: குருப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு! - GROUP 2 RESULT 2025


குருப் 2 பணிக்கான முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (மே 15) வெளியிட்டுள்ளது.


TNPSC Group 2 Result வெளியானது


Link: https://tnpsc.gov.in/results/grp2int/index.aspx?key=Ikwowr$wko032Awd1F32s2


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), குரூப்-2 மற்றும் 2 ஏ தேர்வின் மூலம் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள 2,540 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. இதன் மூலம் உதவி ஆய்வாளர், வணிக வரி துணை அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், சிறப்பு உதவியாளர், வனவர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


அதன்படி, கொள்குறி வகையிலான முதல் நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மொத்தம் 2,763 தேர்வு மையங்களில் 7,93,966 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டதில், 5,83,467 பேர் தேர்வினை எழுதினர்.


முதல் நிலைத் தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 82 மையங்களில் நடைபெற்ற தேர்வுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வு எழுதினர்.


குருப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு


இந்த நிலையில் குருப் 2 பணிக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று (மே 15) வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2ஏ பதவிகளில் 1,936 பேர் நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு பிப்ரவரி 8ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பிற விதிகளின் அடிப்படையில் இருவழி தொடர்பு முறையில் மதிப்பெண் மற்றும் தரவரிசை தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.


முதன்மைத் தேர்வு எழுதியவர்களில் 20,033 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என ஏற்கனவே தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் அறிவித்திருந்தார்.


இந்த நிலையில் குருப் 2 நிலையில் 15 பதவிகளில் காலியாக உள்ள 537 இடங்களில் நியமனம் செய்வதற்கான தகுதிப் பெற்றவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதிய முயற்சிகளை ஊக்குவிக்க அரசின் சார்பாக ஆண்டுக்கு 380 ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் - அரசாணை (நிலை) எண்: 125, நாள் : 21-05-2025 வெளியீடு

  G.O. (Ms) No. 125, Dated: 21-05-2025 அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் புதிய முயற்சிகளுக்கு அரசின் சார்பாக ஆண்டுக்கு 380 ஆசிரியர...