கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>குரூப்-2: இரண்டாம் கட்ட கலந்தாய்வு துவங்கியது

குரூப்-2 தேர்வில் தேர்வானவர்களில், நேர்முகத் தேர்வு அல்லாத, 3,220 பணியிடங்களை நிரப்புவதற்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, நேற்று துவங்கியது. குரூப்-2 நிலையில், 6,000க்கும் அதிகமான பணியிடங்களை நிரப்புவதற்கு, தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரரில், நேர்முகத் தேர்வு உடைய, 3,000 பணியிடங்களை நிரப்ப, கடந்த மாதம், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், பணி ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடந்தது.
இதைத் தொடர்ந்து, நேர்முகத் தேர்வு அல்லாத, 3,220 பணியிடங்களை நிரப்ப, நேற்று கலந்தாய்வு துவங்கியது. டிச., 1ம் தேதி வரை, தொடர்ந்து கலந்தாய்வு நடக்கிறது. ஒவ்வொரு நாளும், கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளவர்களின் விவரங்கள், தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு உள்ளன. அதன்படி, விண்ணப்பதாரர்கள், கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என, தேர்வாணைய செயலர் விஜயகுமார் கேட்டு கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

BLO பணியை செய்யாத ஆசிரியருக்கு "கண்டனம்" என்ற தண்டனை வழங்கி அதனை அவரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் செயல்முறைகள்...

   BLO பணியை செய்யாத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியருக்கு "கண்டனம்" என்ற தண்டனை வழங்கி அதனை அவரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய காஞ...