கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அக்.31 - இந்திரா காந்தி நினைவு தினம்.

 
இந்திரா ப்ரியதர்ஷனி 1917 நவம்பர் 19-ல் ஜவஹர்லால் நேரு-கமலா அம்மையாருக்கு மகளாகப் பிறந்து அரசியல் பின்புலம் கொண்ட தன் குடும்பச் சூழலைச் சாதுர்யமாகப் பயன்படுத்தி, இந்தியாவின் முதல் பெண் பிரதமர் ஆனார். இந்திரா காந்தியின் ஆட்சியில் பல அதிரடி நடவடிக்கைகள் அரங்கேறின. வங்கிகளை நாட்டுடமை ஆக்கினார். மன்னர் மானியங்களை ஒழித்தார். பாகிஸ்தானுடன் போரிட்டு, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்த வங்கதேசத்துக்கு விடுதலை வாங்கித்தந்தார். தான் நினைத்தைச் செய்து முடிக்கும் ஆற்றல் நிறைந்தவராக அவர் விளங்கினார். இந்தப் பெருமைகளுக்கு எல்லாம் உரிய இந்திரா, தன்னுடைய பிரதமர் பதவிக்கு ஆபத்து வந்தபோது, நாட்டில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார். இது அவருடைய அரசியல் வாழ்வில் பெரும் விமர்சனத்தைத் தேடித் தந்தது.  அவர் தனது இறப்புக்கு முந்தைய நாள் 1984 அக்டோபர் 30 அன்று, ஒரிசாவில் (இன்றைய ஒடிசா) இவ்வாறு பேசினார்... ''நான் இன்று உள்ளேன், நாளை நான் இல்லாமலும் போகலாம். என் இறுதி மூச்சு வரை என் நாட்டுக்கான சேவையைச் செய்வேன். என் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்தியாவை வலிமைப்படுத்தும்." இன்று - அக்.31 - இந்திரா காந்தி நினைவு தினம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Leopard attacks 13-year-old at Bannerghatta National Park

பன்னர்கட்டா தேசியப் பூங்காவில் 13 வயது சிறுவனை சிறுத்தை தாக்கிய காணொளி Leopard attacks 13 years old at Bannerghatta National Park  பெங்களூரு...