கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>நெட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனிக்க...

வரும் டிசம்பர் 23ம் தேதி சி.எஸ்.ஐ.ஆர்-யு.ஜி.சி நடத்தும் நெட் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வெழுத, நாடு முழுவதிலுமிருந்தும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர்.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் பெயர் விபரங்கள் www.csirhrdg.res.in என்ற இணையதளத்தில், நவம்பர் 23ம் தேதி முதல் வெளியிடப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள், தங்களின் பெயர், நெட் தேர்வுக்கென, முறையாக பதியப்பட்டு விட்டதா என்பதை, இந்த இணையதளத்திற்கு சென்று சரிபார்த்துக் கொள்ளலாம்.
அவ்வாறு, தங்களின் பெயர் இடம் பெறாதவர்கள், நவம்பர் 23 முதல் 29ம் தேதிக்குள், தாங்கள் நிரப்பி அனுப்பிய விண்ணப்பத்தின் நகல்கள் மற்றும் அதை முறையான தேதிக்குள் அனுப்பியதற்கான சான்றுகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, தொடர்புடைய தேர்வு மையத்தை அணுகலாம். 29ம் தேதிக்குப் பிறகு வரும் வேண்டுகோள்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
தேர்வுக்காக பதிவு செய்து அனைவருக்கும், தேர்வு நடைபெறுவதற்கு 3 வாரங்களுக்கு முன்னதாக, அனுமதி சான்றிதழ்(Admission certificate) அனுப்பப்பட்டுவிடும். டிசம்பர் 17ம் தேதி வரை, அந்த சான்றிதழ் கிடைக்கப் பெறாதவர்கள், www.csirhrdg.res.in என்ற இணையதளத்தில் அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இல்லையெனில், 2 கருப்பு-வெள்ளை பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், டிசம்பர் 22ம் தேதி, சம்பந்தப்பட்ட தேர்வு மைய ஒருங்கிணைப்பாளரை அணுக வேண்டும்.
தேர்வு மைய ஒருங்கிணைப்பாளர்களின் முகவரிகள், www.csirhrdg.res.in என்ற இணையதளத்தில், டிசம்பர் 17 முதல் 23 வரை வெளியிடப்பட்டிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2025-2026 - Conducting "Kalai Thiruvizha" competitions - Guidelines

2025-2026 ஆம் ஆண்டு - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்   "கலைத்திருவிழா" "Kalai Thiruvizha" போட்டிகள் நடத்துதல் ...