வெற்றியை காட்சிப்படுத்தியே நாம் முயற்சிகளை
முன் வைக்கிறோம். பல நேரங்களில் செயல்படுகிறபோதே ஜெயித்துவிட்டதாகக்
கருதுகிறோம். நாம் செல்கிற வேகத்தில் தோல்வி ஏற்பட்டால் துவண்டு
விடுகிறோம். அடுத்து புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் சுணங்கி விடுகிறோம். வெற்றி என்கிற ஆளுயர மாலையை அநாயசமாகத் தாங்குகிற நாம், தோல்வி என்கிற
சின்ன கருப்புத்துணியின் பாரம் தாங்கமுடியாமல் அமுங்கி விடுகிறோம். வெற்றி
மினுமினுக்கிற பொன்னாடையை அணிவிக்கின்றது. தோல்வி கண்ணீரை ஒற்றிக் கொள்ளும்
கைக்குட்டையை மட்டுமே காணிக்கை ஆக்குகிறது. முதல் மதிப்பெண்
கிடைக்கவில்லையே, நினைத்த படிப்பில் சேர முடியவில்லையே என்றெல்லாம் நம்மை
நாமே தாழ்த்திக்கொண்டு வாழ்க்கையை சேதப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம்
இல்லை. உற்று நோக்குபவர்களுக்கு மட்டுமே உண்மை தெரியும். வெற்றி
தரக்கூடிய களிப்பைவிட, தோல்வி வழங்குகிற அனுபவம் ஆழ மானது. வெற்றி
அஜாக்கிரதையையும், தோல்வி விழிப்புணர் வையும் அள்ளித்தருகின்றன. ஒரு முறை
கிடைத்த பரிசு அதீத நம்பிக்கையையும், அலட்சிய மனப்பான்மையையும் அபரிமித
மாகத் தந்துவிடுகிறது. மேடையில் ஒருமுறை நின்றுவிட்டதாலேயே நாம்
அனைவரையும்விட உயரமானவர்கள் என்ற எண்ணம் உதித்துவிடுகிறது. அதே நேரம்
வெற்றி பெறுகிற தருணத்தில் கவனக்குறைவாக இருந்து கேடயத்தை தவறவிட்டவர்களின்
வாழ்க்கைக் குறிப்புகள் வரலாறானது. ஜெயித்தவர்கள் தன் திறமையால்
வென்றதாகக் கருதிக்கொள் கிறார்கள். தோற்றவர்கள், தான் குழுவைச் சரியாக
வழிநடத்த வில்லையென்று சுயவிசாரணை செய்கிறார்கள். எதனால் வெற்றி பெற்றோம்
என்று நாம் ஒரு நிமிடம்கூட அலசுவதில்லை. ஆனால், தோல்வி நம்மைத்
துருவித்துருவி ஆராய வைக்கிறது. வெற்றியால் கிடைக்கின்ற பெருமை மின்னலாக மறைந்து விடுகிறது. தோல்வியால் பெற்ற அவமானங்கள் மழையாய் நம்மை நனைத்து விடுகிறது. ஒவ்வொரு தோல்வியும் மிகப் பெரிய வெற்றிக்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறது.
சின்னச் சின்ன வெற்றிகளில் சிலிர்த்து போகிறவர்கள், பெரிய முயற் சியில்
பாதாளத்தில் விழுந்து பரிதவிக்கிறார்கள். பதக்கங்களை காட்டிலும்
நோக்கங்கள் முக்கியம். உயர்ந்த நோக்கத்துக்காக அடைகிற தோல்வி சின்ன
சுகத்துக்காகக் கிடைக்கிற வெற்றியைக் காட்டிலும் உன்னதமானது. இன்று பெறுகிற தோல்வி வேறொரு உயர்ந்த லட்சியத் திற்காக நம்மை
தயார்படுத்துகிறது எனக் கருதி, அதை சுட்டு விரலால் சுண்டி உதறி விட்டு நாம்
முன்னேற வழிவகுப்போம்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
CM Formed Minister's Committee to consider the demands of various Tamil Nadu Government Officer Associations and find appropriate decisions on them
பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்...
