கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தந்தைக்கு சமர்ப்பணம்...!


ஒவ்வொரு தந்தைக்கும் சமர்ப்பணம்...!

ஈரைந்து மாதங்கள்
எனை சுமந்த அன்னைக்கு பின்
இது வரைக்கும் என் வாழ்வை
தோள் சுமந்த தோழன்.

என்னை கருவாக்க சில நேரம்
இன்பம் கண்டார் ..
என்னை உருவாக்க இன்று
வரை எல்லாம் துறந்தார்.

இரவெல்லாம் கண்ணீர்
இதழ் எல்லாம் உமிழ் நீர்
அன்று மாடியில் தூங்கும் போது
நிலவை ரசிதேன் _ அவர்
மடியிலே தூங்கிய பின்
நிலவை மறந்தேன்.

நான் கண்மூடி படுக்கும்
வரை தூக்கம் இழந்தார் _ நான்
கால் எடுத்து நடக்கும் வரை
தோளில் சுமந்தார்.

மாலையில் கைபிடித்து
மலையோரம் நடப்போம்
அவர் கை பிடித்து போனது
வெறும் பாதை அல்ல.

நான் கால் வைத்த முதல்
பள்ளிக்கூடம் அதுவே
நிலவிலே மனிதன் போன
கதைகள் சொன்னார்
நான் நீதியில் வாழ பல
வழிகள் சொன்னார்.

அன்று கதிரவன் மறையும்
வரை கால் சென்றது
அந்த காட்சி மட்டும் இன்று
வரை கண்ணில் உள்ளது.

உழவாத நிலத்திலே உணவு இல்லை
உருகாத தங்கத்தில் உருவம் இல்லை
ஊதாத குழலுக்கு இசையும் இல்லை
உதை வாங்கா பிள்ளைக்கு உயர்வும் இல்லை.

என்னை அடித்தவுடன்
அழுவது ஆறு கண்கள்
தாயின் கண்கள் எனை
துடைக்க ஓடி வந்தது
தந்தையின் கண்கள்
அழுவதற்கு மறைவில் சென்றது.

நான் படிக்காமல் தூங்கி இருந்த
நேரத்தில் கூட _ நான்
படிப்பதற்கு தூங்காமல்
வேலை பார்தார்.

என் எதிர்கால வாழ்கையில்
பூக்கள் வளர
தன் நிகழ் கால வாழ்வையே
பணயம் வைத்தார்.

நான் வளரும் வரை
தோளில் தூக்கி வழி காட்டினார்
நான் வளர்ந்த பின்
தோளில் தட்டி வழி அனுப்பினார்.

எனை கல்லூரி சேர்க்க உடமை
இழந்தார் _ என் கல்விக்கு ஒளி
ஏத்த உடலை வருத்தார்.

என் கல்வியின் காசுக்கு தூக்கம்
இழந்தார் _ என் கண்ணீரின்
சமயம் எல்லாம் ஊக்கம்
கொடுதார்.

தியாகிகள் எல்லாம்
தந்தையாய் ஆகிறார்கள்
பல தந்தைகள் எல்லாம்
தியாகியாய் வாழ்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்று (17.04.2026) TNSED Attendance Appல் ஆசிரியர் வருகைப்பதிவு செய்யும் முறை

இன்று (17.04.2026) TNSED Attendance Appல் ஆசிரியர் வருகைப்பதிவு செய்யும் முறை வணக்கம்  17.04.2026 Friday Today Attendanceல்  Fully Not worki...