கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>இன்று சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம்

உலக மக்கள்தொகையில் 15 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகள். உடலளவில் பலவீனமாக இருந்தாலும் , மனதளவில் தைரியமாக உள்ளனர். இவர்களுக்குள் பல்வேறு திறமைகள் மறைந்து கிடைக்கின்றன. உடல் குறையை வைத்து, சம உரிமை வழங்க சமூகம் மறுக்கிறது.

அரசியல், சமூக, கலாசாரம், பொருளாதாரத்தில் மற்றவர்களைப் போல, மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிய வாய்ப்பு வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் 1992 முதல், டிச., 3ம் தேதி, சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

15 சதவீதம் பேர் :

இவர்கள் வேலைவாய்ப்பு அற்றவர்களாக உள்ளனர். மேலை நாடுகளில், ஊனம் வெளியே தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சிறுநீரகத்துடன் வாழ்பவர்களை கூட மாற்றுத்திறனாளிகளாக கருதுகின்றனர். இன்னும் சில நாடுகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களையும், மாற்றுத்திறனாளிகளாக கருதி சலுகைகள் அளிக்கின்றன. இந்தியாவில், வெளியில் தெரியும் ஊனத்தை தான் அரசு ஏற்கிறது. அப்படியும் சிறப்பு சலுகைகள் கிடைப்பதில்லை.

தனி வசதிகள்:
பொது இடங்களில் சக்கர நாற்காலியுடன் ஏறுவதற்கு வசதி தேவை என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும், சில இடங்களை தவிர மற்றவற்றில் நிறைவேற்றப்படவில்லை. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் விதமாக, தனி பொருட்கள் தயாரிக்கப்பட வேண்டும். இவர்களை வேலைக்கு எடுக்க தயங்குவதை தவிர்க்க வேண்டும்.

பொருளாதர வளர்ச்சி:
மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை ஏற்காமல், நாடு வளர முடியாது. சமூகத்தின் இரங்கல் பார்வையை பெற்றுக்கொண்டு, மாற்றத்திறனாளிகள் ஒதுங்கி வாழ வேண்டும் என நினைப்பது தவறு. தனியார் வேலைவாய்ப்பில் அவர்களுக்கு சலுகை அளிக்காவிட்டாலும், மாற்றுத்திறனாளிகள் என்பதற்காக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமையை பறித்து விடக்கூடாது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Off-road jeep safariயின் பொழுது நூலிழையில் யானைகளிடமிருந்து உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்

  ஆஃப் ரோடு ஜீப் சஃபாரியின் பொழுது நூலிழையில் யானைகளிடமிருந்து உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள் Tourists narrowly escape from elephants durin...