கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>'காமன்சென்ஸ்' ...!..?

அமெரிக்காவை கொலம்பஸ் முதன்முதலில் கண்டுபிடித்த பின் பல்வேறு ஐரோப்பிய நாட்டின் மக்கள் அங்கே குடியேறினார்கள். அவர்களுக்குள் சண்டையிட்டும், அந்நாட்டின் பூர்வகுடிகளான சிவப்பிந்தியர்களை கொன்றும் மோதிக்கொண்டார்கள். இறுதியில் இங்கிலாந்து வென்று ஆதிக்கம் செலுத்தியது. அவர்கள் நாட்டிலிருந்து குடியேறி இங்கு வந்து இங்கிலாந்தின் சட்டங்களுக்கு உட்பட்டே மக்கள் வாழ்ந்து வந்தார்கள். பின் பல சச்சரவுகள் இரண்டு பகுதிகளையும் சண்டைக்குள் இறக்கின. வரிவிதிப்புக்கு எதிராக கடலில் டீ தூளை கொட்டுவதெல்லாம் நடந்தது. ஆனால், பெரிய அளவில் எதிர்ப்புகள் கிளம்பவில்லை. அப்பொழுதுதான் தாமஸ் பெய்ன் எழுதிய 'காமன்சென்ஸ்' நூல் வெளியானது.

நாற்பத்தி எட்டு பக்கங்களே ஆன நூலில், "கண்டம் நாட்டை ஆளலாம், கண்டத்தை ஒரு நாடு ஆளலாமா?" என்கிற கேள்வியை எழுப்பியது. அந்த நூலின் கீழே நக்கலாக ஒரு ஆங்கிலேயனால் எழுதப்பட்டது என குறிப்பிட்டார் பெய்ன். அந்த நூல் அதிகாரப்பூர்வமாக ஒரு லட்சத்திற்கு மேலும், கள்ளசந்தையில் அதுபோல நான்கு முதல் ஐந்து மடங்கும் விற்றும் விடுதலை வேள்விக்கு எண்ணெய் வார்த்தது. அமெரிக்கா மிகப்பெரிய ஆங்கிலேய அரசை வீழ்த்தி தனி நாடானது!

அளவுக்கும், சாதனைகளுக்கும் சம்பந்தமில்லை என நிரூபிக்கும் ஒரு புத்தகமான 'காமன்சென்ஸ்' வெளியான நாள் இன்று (ஜனவரி 10).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Selection of outstanding teachers for Dr. Radhakrishnan Award | DSE Proceedings

 05-09-2026 அன்று ஆசிரியர் தின விழாவில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்க சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்தல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செ...