கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>இந்திய விண் நாயகன்!

 
ஜன.13 : ராகேஷ் ஷர்மா எனும் விண்வெளிக்கு பயணம் போன முதல் இந்தியர் பிறந்த நநள்.

பாட்டியாலாவில் பிறந்த இவர் தன்னுடைய பதினேழு வயதில் பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்தார். இந்திய விமானப் படையில் சேர்ந்து சிறப்பாக பணியாற்றினார். குறிப்பாக, 1971 இந்திய - பாகிஸ்தான் போரில் மிக் ரக விமானங்களை மிகத்திறமையாக போர்களத்தில் இயக்கினார். 1982 இல் இந்தியா ரஷ்யாவின் சோயூஸ் 11 விண்கலத்தில் இரண்டு ரஷ்யர்களுடன் இந்தியர் ஒருவரை அனுப்பவது என முடிவெடுக்கப்பட்டதும் ராகேஷ் ஷர்மா அதற்கு தேர்வானார்.

பதினெட்டு மாதம் கடுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஈர்ப்பு விசையே இல்லாத சூழலில் செயல்பட வேண்டும் என்பதால் காலை தொட்டவாறு தலை பலமணிநேரம் இருக்குமாறு எல்லாம் பெண்டு வாங்கினார்கள்; ஃபிட்டாக இருக்க பல உடற்பயிற்சிகள் சொல்லித்தரப்பட இவரோ யோகா மட்டும் செய்தார்.

விண்வெளிக்கு போனதும், "இந்தியா அங்கிருந்து பார்க்க எப்படி இருக்கிறது?" என இந்திரா காந்தி கேட்க, "சாரே ஜஹான் சே ஹச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா!" என்றார் (உலகில் உள்ளவற்றிலே மிக அழகானது என் இந்தியா!). அதை தொலைக்காட்சியில் பார்த்து இந்தியர்கள் மெய்சிலிர்த்து போனார்கள். அவரும் நாயகன் ஆனார். மீண்டும் தரையிறங்கும் பொழுது தீப்பிடித்து கொள்ள பாராசூட்டில் குதித்து தப்பித்தார்.

கல்பனா சாவ்லா கொலும்பியா ஓடத்தில் இறந்த பொழுது, நீங்கள் இன்னுமா விண்வெளிக்கு போக விரும்புகிறீர்கள் என கேட்டபொழுது, "பரந்த அந்த விண்வெளியின் மீதான என் காதல் அப்படியே உள்ளது; சாகசத்துக்காக காத்திருக்கிறேன் இன்னமும் - கண்டிப்பாக போவேன் நான்!" என்றார் - அதுதான் ராகேஷ் ஷர்மா.

ஹாப்பி பர்த்டே ஹீரோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

Transfer counseling for Kallar Reclamation School teachers begins on 02.09.2026 – Circular from the Joint Director கள்ளர் சீரமைப்புப் பள்ளி ...