கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஆலிஸ் - லூயிஸ் கரோல்

 
கதை கேட்பது எல்லாருக்கும் பிடித்த விஷயம் இல்லையா? அதிலும் நமக்கு ரொம்பவே பிடித்த ஒரு கதை, கேட்க கேட்க சலிப்பே தராத அந்த கதை தான் 150 வது வருடத்தில் அடியெடுத்து வைக்கபோகிறது. எந்த கதை அது? வாட்ச் கட்டி கொண்டு ஓடும் முயல், சீட்டு கட்டு சிப்பாய்கள், கிடு கிடு பள்ளங்கள், பேசும் மிருகங்கள், கண்ணீரில் உண்டாகும் வெள்ளம்...

இப்போது ஞாபகம் வந்துடுச்சா? நம்ம செல்லத் தோழி ஆலிஸின் அற்புத உலகமே அது. இந்தக் கதையை எழுதிய லூயிஸ் கரோல் ஒரு தேவலாயத்தில் ஃபாதராக இருந்தார். அவர் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலை.யில் கணித விரிவுரையாளராக இருந்து இருக்கிறார். அவர் இறுதி வரை திருமணமே செய்து கொள்ளவில்லை. ஆனால் குட்டிஸ் என்றால் அவருக்கு கொள்ளை ஆசை. அதனால் அவர்களுக்கு பிடித்த மாதிரி கதை சொல்வதை வழக்கமாக வைத்து இருந்தார்.

அதிலும் ஆலிஸ் லிடெல் என்கிற சுட்டி அவருக்கு ரொம்பவே செல்லம். ஆலிஸ் மற்றும் அவளின் இரு சகோதரிகள் என மூவரையும் ஒரு குட்டி படகில் உட்கார வைத்து அழகான ஆற்றில் அப்படியே சவாரி செய்வார் அவர். இரண்டரை மணி நேரம் படகில் போகிறபொழுது ஆலிஸ் ஏகத்துக்கும் படுத்தி எடுத்த விடுவாள். ஆலிஸின் வார்த்தைகளிலே அதை கேட்போம்...

"எப்போதும் வெயில் சுள்ளென அடிக்கிற மதிய வேளையில்தான் எங்கள் பயணம் இருக்கும். அங்கிளை கதை சொல்ல சொல்லி நச்சரிப்போம். அவரும் விதவிதமாக சொல்வார். நாங்கள் கண்கள் விரய கேட்டுகொண்டே இருக்கும் பொழுது, "இன்னைக்கு இது போதும்... வீட்டை நெருங்கி விட்டோம் என முடித்து விடுவார்" அப்படி முடிக்கிற இடம் ரொம்பவே சுவாரசியமான கட்டமாக இருக்கும். ஆனால் பின் மீண்டும் அதை கேட்கலாம் என அடுத்த சவாரியில் முயன்றால் தூங்குகிற மாதிரி நடித்து ஏமாற்றி விடுவார். எழுப்பினால் எழுந்திருக்கவே மாட்டார் ! ஆனால் கதைகள் மாறி கொண்டே இருக்கும்," என்கிறாள்.

கரோல், ஆலிஸ் இன் அற்புத உலகம் கதையை முதலில் சொல்கிற தருணங்களில் அதை நூலாக ஆக்க வேண்டும் என நினைக்கவில்லை. ஆலிஸ் அக்கதைகளை எழுதித்தர சொல்ல கிறிஸ்துமஸ் பரிசாக அவற்றை தொகுத்து தந்தார். கணித பேராசிரியரான இவரின் கதையில் வரும் வரிகளே சார்பியல் தத்துவத்தை ஐன்ஸ்டீன் உருவாக்க ஊக்கம் தந்ததாம். நல்ல கவிஞர், புகைப்பட நிபுணர் என பல முகம் இருந்தாலும், குழந்தைகளின் கதைசொல்லியாக அவர் பெருமைப்பட்டார்.

"ஆலிஸின் கனவுகளின் தோளின் மீது ஏறிக்கொண்டு நான் கதை சொன்னேன். அது மறையும் சூரியன் போல அன்றன்றைக்கு மறைந்து போகும்" என சொன்ன அவரின் நினைவு நாள்  - ஜன.14.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

HC directs TN Govt to remove temporary employees and take disciplinary action against appointees

2020ஆம் ஆண்டிற்குப் பிறகு அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிகப் பணியாளர்களை நீக்கவும், பணி நியமனம் செய்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்...