கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>இன்று - பிப்.2 : உலக சதுப்பு நில தினம்!

 
ஈர நிலங்கள் என்கிற பட்டியலில் எதுவெல்லாம் வரும் எனப் பார்த்தாலே அவற்றின் பாதுகாக்க வேண்டியதன் அருமை உங்களுக்கு புரியக்கூடும்.

ஆறுகள், தாழ்நிலங்கள், ஈரமான புல்வெளிகள், கழிமுகங்கள், கழிமுக, கடலோர குடியிருப்பு பகுதிகள், சதுப்புநிலக்காடுகள், பவளத் திட்டுகள், மீன் குளங்கள், நெற்பயிர் நிலங்கள், நீர்த் தேக்கங்கள்....

உலகம் முழுக்க மனிதனின் தொடர் செயல்களால் இவை மிகப்பெரிய அழிவை சந்திக்கின்றன. சுற்றுலா தலங்களை உருவாக்குதல், ரியல் எஸ்டேட் தொழில்கள் ஆகியனவும் இத்தகைய நிலங்களை அழிக்கின்றன.

பல்லுயிரி வளம், நிலத்தடி நீர் வளம், நீரை வடிகட்டி நன்னீர் ஆக்குதல், உணவுச்சங்கிலியின் உறுதியான பிணைப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் இவற்றின் அழிவு மேற்சொன்ன எல்லாவற்றையும் காணாமல் செய்கிறது.

சுனாமி நம் நாட்டை தாக்கியபொழுது சதுப்பு நிலக் காடுகள் அதன் தாக்கத்தை பெருமளவில் குறைத்தது ஞாபகம் இருக்கலாம். வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுப்பதும் இடம் சார் காலநிலை, நுண்காலநிலை என ஒழுங்காக மழை, வெயில் ஆகியன அதனதன் காலங்களில் உண்டாவதையும் உறுதி செய்கிற வேலையையும் இவைதான் செய்து வந்திருக்கின்றன.

கடந்த 1971களில் ஈரானின் ரம்சார் நகரில் நாடுகள் பல சேர்ந்து சதுப்பு நிலப் பாதுகாப்பிற்கு கையெழுத்திட்டன. சதுப்பு நிலங்களை அடையாளப்படுத்தல், அதன் முக்கியத்துவத்தினை உணர்த்துவது, தேசிய சர்வதேச ரீதியில் பாதுகாப்பது ஆகியவற்றை நோக்கங்களாக கொண்டு ஆண்டுதோறும் பிப்ரவரி 2 ஆம் நாள் உலக சதுப்பு நில தினமாக கொண்டாடப்படுகிறது.

சதுப்பு நிலங்களை அழிவில் இருந்து காக்க, கொஞ்சம் ஈர நெஞ்சோடு உறுதிபூணுவோம்!

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNPSC Group 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

  TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு TNPSC Group 2 Exam Results Released TNPSC: குருப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு! - GROUP ...