கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>விடுதலைப் போரின் தாய் ரோசா பார்க்ஸ் ...

 
மார்டின் லூதர் கிங் எனும் பெயருக்கு இணையாக உலக வரலாற்றில் கறுப்பின மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிரான போரில் உச்சரிக்கபட வேண்டிய இன்னொரு பெயர் ரோசா பார்க்ஸ்.

மாண்டிகோமேரி பேருந்தில் டிக்கெட் எடுத்து இருக்கையில் அமர்ந்தவண்ணம் போய்க்கொண்டு இருந்தார் ரோசா பார்க்ஸ். பிறப்பால் ஆப்பிரிக்க அமெரிக்கர் அவர். வெள்ளையர்கள் நிற்கவே இவரை கறுப்பர்களுக்கு என ஒதுக்கப்பட்ட அவரின் இருக்கையை விட்டு எழச்சொன்னார் நடத்துநர்.

‘‘முடியாது!’’ என இவர் மறுக்க, ‘‘மறுத்தால் கைது செய்வோம்’’ என கண்டக்டர் பயமுறுத்த, ‘‘செய்யுங்கள்’’ என கம்பீரமாக சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டார் அவர். கைது செய்யப்பட்டார்; கறுப்பின மக்கள் கொதித்தெழுந்தார்கள். லூதர் கிங் பின் அணி திரண்டார்கள்; நடந்தே போனார்கள், டாக்சியில் போனார்கள். குழந்தைகள் கூட பள்ளிக்கு நடந்து போனார்கள். முதியவர்கள் தள்ளாத நிலையிலும் தங்கள் இனம் தலை நிமிர ஒரு வாய்ப்பு என இன்னல்களை பொறுத்துக்கொண்டார்கள்.

ரோசாவுக்கு நீதி கிடைக்கும் வரை பேருந்தில் ஏறமாட்டோம் என ஒரு மாகாணமே தீர்க்கமாக நின்றது வரலாறு. ஒரு நாள் இரண்டு நாளில்லை ஒரு வருடம் முழுக்க தீராத நெஞ்சுரத்தோடு (சரியாக 381 நாட்கள்) அப்படியே போராடி வென்றார்கள் அவர்கள். இதில் ஓர் அவலம்... கீழ்கோர்ட் ஒன்று ரோசாவை கைது செய்தது செல்லும் என்றது தான். சமமான இருக்கை வசதி உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு பின் அவர்களுக்கும் கிடைத்தது.

தன் கணவர், பிள்ளை,சகோதரர், தாய் என அனைவரையும் கேன்சருக்கு இழந்து தனிமையில் இருந்த பொழுதும் தனக்கிருந்த புகழை பொருள் சம்பாதிக்க அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

மக்களின் உரிமைக்காக பேசி அதில் கிடைத்த வருமானத்தை கறுப்பின மக்களின் நலனுக்கே செலவிட்டார்.

‘‘விடுதலைப் போரின் தாய்!’’ என அழைக்கப்படும் அவரின் 100வது பிறந்தநாள் இன்று (பிப்.4).

"அன்று அவர் எழ மறுத்ததால்தான் இன்று நாங்கள் தலைநிமிர்ந்து நடக்கிறோம்!’’ என அவரின் மரணத்தின் பொழுது கண்ணீரோடு குறித்தார்கள் கறுப்பின பெண்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

BLO பணியை செய்யாத ஆசிரியருக்கு "கண்டனம்" என்ற தண்டனை வழங்கி அதனை அவரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் செயல்முறைகள்...

   BLO பணியை செய்யாத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியருக்கு "கண்டனம்" என்ற தண்டனை வழங்கி அதனை அவரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய காஞ...