கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>நெல்சன் மண்டேலா....

 
கடல் கடந்து உலகமெல்லாம் வியாபாரம் செய்யபோன ஐரோப்பியர்களின் கண்ணில் ஆப்பிரிக்காவும் பட்டது. அதனுள் நுழைந்து அங்குள்ள பூர்வ குடிகளை தோற்கடித்து அவர்களை அடிமைப்படுத்தி ஆட்சி செலுத்தி வந்தனர். தன் நிறமே உயர்ந்தது என்கிற கீழ்த்தரமான எண்ணம் கொண்டு அவர்களை வாட்டி வதைத்தனர்.

பெரும்பான்மை மக்களான அவர்களுக்கு எந்த உரிமையும் தராமல் அடக்கி வைத்து எண்ணற்ற துன்பங்களை தந்தனர். அதில் சிலரை கடல் கடந்து தங்கள் பண்ணைகளில் வேலை செய்ய கொண்டு போனதில் உருவானது தான் அமெரிக்க ஆப்பிரிக்க இனம்.

தங்கள் சொந்த மண்ணில் அவர்கள் மட்டுமல்ல; இந்தியர்களும் அவ்வாறே நடத்தப்பட்டனர். தன் நண்பர் ஒருவருக்காக வாதாட தென் ஆப்பிரிக்கா போயிருந்த காந்தி, பீட்டர் மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் நிறத்தால் கறுப்பர் என்பதால் பயணச்சீட்டு எடுத்திருந்தும் நள்ளிரவில் வெளியே தள்ளப்பட்டார். யோசித்த காந்தி தன் வலியை தன் மக்களின் வலி என உணர்ந்தார். -அமைதி வழியில் போராடினார். ஓரளவிற்கு தன் மக்களின் உரிமைகளை மீட்டார்.

நெல்சன் மண்டேலா எனும் மாமனிதர் காந்திக்கு சில காலம் கழித்து அங்கே களத்துக்கு வந்தார். வக்கீலாக தன் வாழ்க்கையை நடத்தி பல கறுப்பின மக்களின் விடுதலைக்கு உழைத்தார். அப்பொழுது உதித்து கறுப்பின மக்களுக்காக போராடிக்கொண்டு இருந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரசில் இணைந்தார்.

எளிய போராட்டங்களின் மூலம் உரிமையை வென்றெடுத்து விடலாம் என்கிற அவரின் கனவு ஆங்கிலேய ஆட்சியின் அணுகுமுறையால் தகர்ந்தது. ஆயுதம் ஏந்தி தன் நாட்டுக்காக போராடினார்; சிறையில் அடைக்கப்பட்டார். 27 ஆண்டுகள் சிறையில் வாடினார். காந்தியின் போராட்ட முறை அவரை ஈர்த்தது.

தன் இனத்துக்காக மட்டும் போராடாமல் இரு இனத்துக்கும் சம உரிமை என யோசித்தார். அமைதி வழியில் மக்களை போராட சொன்னார். மகன் இறந்தபொழுது சிறையை விட்டு வெளியேறி வர மன்னிப்பு கேட்டால் என்ற விடுவிக்கிறோம் என்றபொழுது மறுத்தார். கிளார்க் அங்கே பதவிக்கு வந்த பின் இவரை விடுதலை செய்தார். 50,000 மக்கள் திரண்டிருந்தார்கள். பலர் ஆடிப்பாடி குதூகலித்தனர்.

சன்னமான ஆனால் தீர்க்கமான குரலில்: "Our struggle has reached a decisive moment. Our march to freedom is irreversible" என அவர் சொன்னார்.

44 வயதில் சிறை சென்ற அவர் சிறை மீளும்பொழுது 71 வயது முதியவராகி இருந்தார். யாரையும் சந்திக்க முடியாமல் சூரியனின் வெளிச்சமே பெரும்பாலும் கண்ணில் படாமல் இருந்தாலும் காந்தி வழியில் வெள்ளையின மக்களையும் நேசித்தார்.

நேர்மையான மனிதர் என்பதற்கு எடுத்துகாட்டாக மண்டேலாவை எடுத்துக்கொள்ளலாம். அடக்குமுறைக்கு அடிபணியாத, துணிச்சலும், தீர்க்கமும், அறிவும் கொண்ட செயல்வேகம் கொப்பளிக்கும் ஒரு நாயகன் தேவையென்றால் மண்டேலாவை அதற்கு நிகரில்லா எடுத்துக்காட்டு இருக்க முடியாது.

இந்த சகாப்தத்தின் அசாத்தியமான ஓர் அடையாளமாக அவர் என காஸ்ட்ரோ சொன்ன வரிகளே போதும் அவரின் பெருமையை உணரப்போதும்.

பிப். 11: நெல்சன் மண்டேலா இருபத்தி ஏழு ஆண்டுகால சிறைவாசத்துக்கு பின் விடுதலை செய்யப்பட்ட நாள் இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NEET (UG) 2026 Final Answer Key

  The NEET (UG) 2026 Final Answer Key has been released. Visit the official portal to check the Final Answer Key: https://neet.nta.nic.in