கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ராண்ட்ஜன்....

ராண்ட்ஜன் இளம் வயதில் அறிவியலின் மீது தீராத ஆர்வம் கொண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார். ஜெர்மனியில் பல்வேறு பல்கலைக்கழங்களில் வேலைபார்த்த அவர், அமெரிக்காவின் ஐயோவா பல்கலைகழகத்திற்கு பேராசிரியர் பணி செய்ய டிக்கெட் எல்லாம் எடுத்து கிளம்பும் பொழுது உலகப்போர் வந்து விட்டதால் ஜெர்மனியிலேயே இருந்துவிட்டார்.

பேரியம் பிளாடினோ சயனைட் பூச்சு பூசிய திரை மற்றும் க்ரூக்ஸ் குழாய் ஆகியவற்றை கருப்பு கார்ட்போர்டில் சுற்றி வைத்துக்கொண்டு கேதோட் கதிர்களை பற்றி ஆய்வு செய்கிற பொழுது திரையில் மங்கலான பச்சை ஒளிரலை அவர் கண்டார்; அதற்கு காரணமான கதிரை எக்ஸ் கதிர் என அழைத்தார்.

அவை புத்தகங்கள் வழியாகவும் மனித உடல்களின் வழியாகவும் கடந்து போவதை கண்டார்; நடுவில் இந்த கதிர்களின் மீது மனைவியின் கைபட்டு அவரின் எலும்புகள் அப்படியே பதிவான பொழுதுதான் எலும்புகளை கடந்து எக்ஸ் கதிர்கள் செல்லாது என்பதும் அதைக்கொண்டு குண்டுகள் ஏதேனும் குறைகள் மற்றும் எலும்பு முறிவுகள் இருப்பின் கண்டறிய பயன்படுத்தலாம் என உணர்ந்து அதை செயல்படுத்தினார்.

பியரி கியூரியை போலவே தன் கண்டுபிடிப்புகளை அவர் காப்புரிமை செய்யவில்லை. மனித குலத்துக்கே அவை பயன்படட்டும் என உறுதியாக இருந்தார். அவருக்கு இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டது; அதில் கிடைத்த பணத்தை தான் வேலை பார்த்த பல்கலைகழகத்திற்கே கொடுத்து விட்டார். பல்வேறு அயனிகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளை பற்றி தொடர்ந்து ஆய்வு செய்த இவர் இதே நாளில் (பிப்.10) மறைந்தார். அவரின் பெயரில் தனிம அட்டவணையின் 111 வது தனிமம் வழங்கப்படுகிறது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Off-road jeep safariயின் பொழுது நூலிழையில் யானைகளிடமிருந்து உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்

  ஆஃப் ரோடு ஜீப் சஃபாரியின் பொழுது நூலிழையில் யானைகளிடமிருந்து உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள் Tourists narrowly escape from elephants durin...