கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 காய்ச்சலின் போது கடைபிடிக்க வேண்டிய உணவு முறை... Dr.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை...

கடுமையான காய்ச்சல் அடிக்கும் போது உடலில் இருந்து நமது நீர்ச்சத்து வெளியேறிக்கொண்டிருக்கும் ஆகவே நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ள தேவையான  அளவு நீரை எடுக்க வேண்டும். 

தேவையான அளவு நீர் என்றால் எவ்வளவு? 

ஒரு நோயாளி தனது சிறுநீரின் தன்மையை கவனித்து வர வேண்டும் 

- ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறையேனும் சிறுநீர் கழித்தாக வேண்டும் 

- சிறுநீரின் அளவை தோராயமாகவாவது அளக்க வேண்டும். குழந்தைகளாக இருப்பின் சிறுநீரை பேனில் பிடித்து அளக்கலாம்.

சராசரி  சிறுநீர் வெளியேறும் அளவு என்பது 1-2 மில்லி லிட்டர் / கிலோ கிராம் உடல் எடை / மணிநேரம் . 

அதாவது , 

20 கிலோ எடை இருக்கும் ஒரு குழந்தை 

சராசரியாக ஒரு மணிநேரத்திற்கு 20 முதல் 40 மில்லி சிறுநீர் கழிக்க வேண்டும். 

ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறை 120 முதல் 240 மில்லி கழித்தாலும் சரியே. 

24மணிநேரம் கணக்கிடுகையில் 480 முதல் 960 மில்லி கழித்திருக்க  வேண்டும்

எது அபாயகட்டம் ??? 

0.5 மில்லி சிறுநீர் / கிலோகிராம் உடல் எடை/ மணி நேரம் மற்றும் அதற்கும் குறைவாக சிறுநீர் கழித்தால் ஆபத்தான கட்டம் என்று பொருள். 

உதாரணம் - 

ஒரு 20 கிலோ எடை உள்ள குழந்தை , ஆறு மணிநேரமாக சிறுநீரே கழிக்காமல் இருந்தாலோ , வெறும் 60 மில்லி அல்லது அதற்கும் குறைவாக கழித்தால் ஆபத்து என அறிக. 

அடுத்து சிறுநீரின் நிறம் - இளமஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். அடற் மஞ்சள் நிறத்தில் சென்றாலோ  சிவப்பு நிறத்தில் சென்றாலோ ஆபத்தென அறிக. 

ஒருவருக்கு காய்ச்சல் அடித்தால் அவரை பட்டினியாய் போடுவது தவறு. 

அவரது உடலுக்கு தேவையான சக்தியை நீர் மற்றும் நீராகாரங்கள் வழி வழங்க வேண்டும். 

ஓ.ஆர் எஸ் எனும் உயிர் காக்கும் அமுதத்தை வர லிட்டர் நன்னீரில் கலந்து அதை குடிக்க கொடுக்க வேண்டும். 

இளநீர்,  மோர் போன்றவற்றை கொடுக்கலாம்

சாதமாக இல்லாமல் கஞ்சியாக வடித்து மூன்று வேளையும் கொடுக்கலாம்

கொரோனா தொற்று கண்ட பேலியோ கடைபிடிக்கும் மக்கள் வீட்டில் தனிமைப்படுத்தி இருந்தால் உங்களது உடல் நிலை ஒத்துழைத்தால் தாராளமாக பேலியோ உணவு முறையை தொடரலாம் 

அல்லது

மேற்சொன்ன உணவு முறையை காய்ச்சல் இருக்குமட்டும் தொடர்ந்து விட்டு பிறகு பேலியோவுக்கு மாறலாம் 

வாய்வழியாக உணவு எடுக்க இயலா நிலைவரின், மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து நாளம் வழியே திரவங்கள் ஏற்றப்படும்

மேலும் வாந்தி இருப்பின் 

அதை உடனடியாக மருத்துவரிடம் சென்று காட்டி வாந்தியை சரி செய்து கொள்ள வேண்டும். வாந்தி தொடர்ந்து இருந்தால் மாத்திரைகள் எதையும் விழுங்கினாலும் ப்ரயோஜனமில்லை.  

குறிப்பு - நீர்ச்சத்து நம்மை காக்கும் . அதை சரியாகப் பராமரிக்க வேண்டியது நமது பொறுப்பு. 

Dr.ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர்

சிவகங்கை

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiyam Mobile App New Version Update - Version 1.22.2 - Updated on 13-05-2025

      KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.22.2 *  IFHRMS   Kalanjiyam Mobile App New App New Update  *  Version 1.22.2 *  Updated on 13-05-2...