இடுகைகள்

மருத்துவ தகவல்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கீரை வகைகளும் அவற்றின் முக்கிய பயன்களும் (Types of greens and their main uses)...

படம்
கீரை வகைகளும் அவற்றின் முக்கிய பயன்களும்  (Types of greens and their main uses)...  🌿❤️40 வகை கீரைகளும் அவற்றின் முக்கிய பயன்களும்❤️🌿: 🌿💚அகத்திக்கீரை - இரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். 🌿💚காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். 🌿💚சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும். 🌿💚பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும். 🌿💚கொடிபசலைக்கீரை - வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும். 🌿💚மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும். 🌿💚குப்பைகீரை – பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும். 🌿💚அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும். 🌿💚புளியங்கீரை - சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும். 🌿💚பிண்ணாருக்குகீரை - வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும். 🌿💚பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும். 🌿💚பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும். 🌿💚சுக்கா கீரை - இரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும். 🌿💚வெள்ளை கரிசலைக்கீரை - இரத்தசோகையை நீக்கும். 🌿💚முரங்கைக்கீரை - நீர

பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள் (Diseases caused by increased bile)...

படம்
பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள் (Diseases caused by increased bile)... பித்தம் சிறிது எண்ணெய்ப்பசையுடன் கூடியது, செயலில் கூர்மையானது, சூடானது, லேசானது, துர்நாற்றமுடையது, இளகும் தன்மையுடையது, நீர்த்தது ஆகிய குணங்களைக் கொண்டது. தொப்புள், இரைப்பை, வியர்வை, நிணநீர், இரத்தம், கண்கள், தோல் இவற்றை இருப்பிடமாகக் கொண்டுள்ளது. உடலுக்குப் பித்தம் பல நன்மைகளைச் செய்கிறது. உண்ட உணவை சீரணிக்கச் செய்தல், உடலுக்குத் தேவையான வெப்பம், விருப்பம், பசி, தாகம், ஒளி, தெளிவு, பார்வை, நினைவாற்றல், திறமை, மென்மை போன்ற நல்ல செயல்களைச் செய்து உடலைப்பாதுகாக்கிறது. தன் நிலையிலிருந்து பித்தம் சீற்றம் கொண்டு உடலில் அதிகரித்து விட்டால் - தோலில் மஞ்சள் நிறம் உண்டாகுதல், சோர்வு, புலன்களுக்கு வலுவின்மை, உடலில் சக்திக்குறைவு, குளிர்ச்சியில் விருப்பம், எரிச்சல், வாயில் கசப்புச்சுவையை ஏற்படுத்துதல், நாவறட்சி, மூர்ச்சை, தூக்கம் குறைதல், கோபம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. பித்தம் ஐந்து வகையான பிரிவுகளைக் கொண்டது. அவை: - 1 பாசகம்: இரைப்பை, சீரணப்பை இவற்றின் நடுவில் இருந்து கொண்டு ஐம்பெரும்பூதங்களால் ஆக்கப்பட்

🍁🍁🍁 கொரோனா ஃபேக்ட்ஸ் (CORONA FACTS)... Dr.A.B.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை...

  இதுவரை கடந்த பத்து மாதங்களாக கொரோனா தொற்றை உலகம் முழுவதும் ஆய்வு செய்ததில் கிடைத்த முக்கிய முடிவுகள்   🏁கொரோனா தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்து தொற்று ஏற்பட்ட  5 முதல் 6 நாட்களுக்குள்  அறிகுறிகள் தோன்றும் (mean Incubation period - 5 to 6 days) 🏁அறிகுறிகள் தோன்றுவதற்கு ஓரிரு நாட்கள் முன்பிருந்தே பிறருக்கு பரவும் தன்மை கண்டறியப்பட்டுள்ளது ( High chance of Presymptomatic spread)  🏁அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்கள் தொற்றைப்பிறருக்கு பெரிய அளவில் பரப்புவதில்லை ( very low chance of asymptomatic spread)  🏁சாதாரண முதல் மிதமான கொரோனா தொற்று  1முதல் 10 நாட்கள் நீடிக்கிறது . இதில் நோய் எதிர்ப்பு சக்தி எளிதாக வைரஸை முறியடித்து விடுகின்றது. 🏁தீவிர  தொற்று நிலை 1 முதல் 13  நாட்கள் வரை .  🏁அதிதீவிர கவலைக்கிடமான நிலை ஏற்பட்டால்  14 நாட்களுக்கு மேலும் 28 நாட்கள் வரை கூட நோயின் தன்மை இருக்கிறது. இதில் எதிர்ப்பு சக்தியானது மிக அதிக அளவில் தூண்டப்பட்டு அதன் விளைவாக முக்கியமான உறுப்புகள் பழுதாகின்றன.  🏁கொரோனா தொற்று ஏற்பட்டு அதிகமான மருத்துவமனை அட்மிசன்கள்  நோய் அறிகுறி ஆரம்பித்த ஏழாவது நாள்

🍁🍁🍁 பற்களைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழிமுறைகள்...

படம்
 

🍁🍁🍁 மைக்ரேன் எனும் ஒற்றைத்தலைவலியைக் கட்டுப்படுத்த சில டிப்ஸ்...Dr.A.B.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை...

மைக்ரேன் எனும் ஒற்றைத்தலைவலியானது வெடீர் வெடீர் என்று சுத்தியலைக்கொண்டு தலையில் அடித்தாற் போன்ற வலியை ஏற்படுத்துவதாக மக்கள் கூறுவதைக் கேட்கும் போது உண்மையில் அது எத்தனை பிணி தரும் அனுபவமாக இருக்கும் என்பதை யூகிக்க முடியும். ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.  குடும்பத்தில் தாய் அவரது மகள்கள் முதல் பேத்திகள் வரை அனைவருக்கும் மைக்ரேன் இருக்கும் குடும்பங்களை பார்த்து வருகிறோம். வாழ்க்கைத்தரத்தை வெகுவாக பாதிக்கும் இந்த தலைவலியானது. பாதிப்புக்குள்ளாகும் நபரின் செயல்திறனை வெகுவாக குறைக்கும் தன்மை கொண்டதாக இருக்கின்றது. நன்றாக படிக்கும் ஒரு மாணவிக்கு அவர் பரீட்சை எழுதும் நாட்களுக்கு முன்பு மைக்ரேன் வந்தால் அத்தோடு படிப்பின் மீது கவனம் குவிக்க இயலாமல் முழு மூச்சுடன் படிக்க இயலாது. மதிப்பெண்ணும் சரியும்.   இல்லற வாழ்வில் உள்ள பெண்களுக்கு இந்த தலைவலி வரும் போது குடும்ப உறுப்பினர்கள் மீது சினத்தை கக்கும் போது தேவையற்ற பல மனக்கசப்புகளும் சண்டை சச்சரவுகளும் நேருகின்றன. அலுவலகங்களில் மைக்ரேன் வலி ஏற்பட்டால் அன்றைய நாள் அத்தோடு முடிந்தது என்ற நிலை தான். எந்த செயலிலும் முழுமையாக ஈடுபாடு இ

🍁🍁🍁 மிகப் பெரிய கெட்ட பழக்கம் எது..? - மருத்துவர் அஸ்வின் விஜய்(காணொளி)...

  >>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...

🍁🍁🍁 காய்ச்சலின் போது கடைபிடிக்க வேண்டிய உணவு முறை... Dr.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை...

கடுமையான காய்ச்சல் அடிக்கும் போது உடலில் இருந்து நமது நீர்ச்சத்து வெளியேறிக்கொண்டிருக்கும் ஆகவே நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ள தேவையான  அளவு நீரை எடுக்க வேண்டும்.  தேவையான அளவு நீர் என்றால் எவ்வளவு?  ஒரு நோயாளி தனது சிறுநீரின் தன்மையை கவனித்து வர வேண்டும்  - ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறையேனும் சிறுநீர் கழித்தாக வேண்டும்  - சிறுநீரின் அளவை தோராயமாகவாவது அளக்க வேண்டும். குழந்தைகளாக இருப்பின் சிறுநீரை பேனில் பிடித்து அளக்கலாம். சராசரி  சிறுநீர் வெளியேறும் அளவு என்பது 1-2 மில்லி லிட்டர் / கிலோ கிராம் உடல் எடை / மணிநேரம் .  அதாவது ,  20 கிலோ எடை இருக்கும் ஒரு குழந்தை  சராசரியாக ஒரு மணிநேரத்திற்கு 20 முதல் 40 மில்லி சிறுநீர் கழிக்க வேண்டும்.  ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறை 120 முதல் 240 மில்லி கழித்தாலும் சரியே.  24மணிநேரம் கணக்கிடுகையில் 480 முதல் 960 மில்லி கழித்திருக்க  வேண்டும் எது அபாயகட்டம் ???  0.5 மில்லி சிறுநீர் / கிலோகிராம் உடல் எடை/ மணி நேரம் மற்றும் அதற்கும் குறைவாக சிறுநீர் கழித்தால் ஆபத்தான கட்டம் என்று பொருள்.  உதாரணம் -  ஒரு 20 கிலோ எடை உள்ள குழந்தை , ஆறு மணிநேரமாக சிறுநீரே கழிக்கா

🍁🍁🍁 கொரோனா அப்டேட் - இந்தியாவில் தடுப்பூசிகளின் நிலையில் தற்போதைய முன்னேற்றம் - Dr.A.B.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை...

கொரோனா தொற்றின் முதல் அலை சற்று மட்டப்படுத்தப்பட்டு நாடு இரண்டாம் அலைக்கு தயாராகி வரும் நிலையில்  கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி எப்ப கிடைக்கும்?  என்ற கேள்விகள் அதிகமாயிருக்கின்றன. .  அந்த வகையில் இந்தியாவில் தற்போது ஐந்து தடுப்பூசிகள் ஆராய்ச்சியில் இருக்கின்றன அவற்றைப்பற்றி சுருக்கமாகக் காண்போம்  1.கோவிஷீல்டு  (COVISHIELD)  ஆக்ஸ்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரா செனிகா ஆகிய இரண்டு பெருந்தலைகளின் கூட்டுத்தயாரிப்பான AZD1222 எனும் இந்த தடுப்பூசியானது  தற்போது இந்தியாவில் மூன்றாம் நிலை பரிசோதனையில் இருக்கிறது.  இந்த தடுப்பூசியின் இரண்டாம் கட்ட ஆய்வு முடிவில் சிறப்பான அளவில் எதிர்ப்பு சக்தியை தருவதாகவும் பாதுகாப்பனதாக இருப்பதாகவும் இருப்பதாக முடிவுகள் வந்தன.  இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையின் போது பிரிட்டனில் ஒருவருக்கு விரும்பத்தகாத ஒவ்வாமை ஏற்பட்டு சில காலம் இந்த ஆராய்ச்சி தடை பட்டிருந்தது. பிறகு அந்த தடுப்பூசி உற்பத்தியில் பங்குபெறாத நடுநிலையான வல்லுனர்கள் குழுவின் ஆய்வுக்குப் பிறகு அந்த விரும்பத்தகாத ஒவ்வாமைக்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தமில்லை என்றும் அந்த நபருக்கு m

🍁🍁🍁 மனத்தாழ்வு நிலையில் சிக்காமல் வாழ்வதற்கான சில பயிற்சிகள்... Dr.A.B.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை...

1. ஒரே மாதிரி வாழ்கை முறையை மாற்ற வேண்டும்( try to avoid  monotonous life style)  அன்றாட வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன மாற்றங்களையும் மகிழ்ச்சியுடன் ரசிக்க வேண்டும்.  இருவாரத்திற்கு ஒருமுறையேனும் ஏதேனும் உறவினர் வீடுகளுக்கு சென்று வரலாம் .   இரண்டு மாதம் ஒருமுறையேனும் சிறு சுற்றுலாத்தலங்களுக்குச் செல்லலாம். புதிதாக ஒரு இசை ஆல்பத்தைக் கேட்கலாம் அதை ரசிக்கலாம்  ஒரு புத்தகத்தில் மனதை சிறிது தொலைக்கலாம்  சிலருக்கு திரைப்படம் காண்பதில் சிறிது ரிலாக்சேசன் கிடைக்கும்.  ஒய்வு என்பது வெறுமனே படுத்து தூங்குவது அன்று. நாம் அன்றாடம் செய்யும் வேலைகளில் இருந்து மாற்றமாக வேறொன்றைச்செய்வதே ஓய்வு.  2.  சிறுசிறு விஷயங்களையும் ரசிக்கப் பழக வேண்டும்( try to appreciate small things , which are so big for our mind )  புதிதாக வெளியிடப்பட்ட இசைக்கோர்வை,  வீட்டு பூந்தொட்டியில் அன்று மலர்ந்த ரோஜாப்பூ,  சிறிது நேரமே தோன்றும் வானவில்,  அம்மா / மனைவி செய்த புதிய வகை சிற்றுண்டி குழந்தையின் புன்னகை இவ்வாறு ரசிக்க எவ்வளவோ இருக்கின்றன.  அதை விடுத்து எப்போதும் நம்மிடம்  ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் தேவையற்றது.  3. "

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...