வாழ்க்கை மிக அழகானது - ரசித்துக் கொண்டே வாழுங்கள் - சவால்களுக்கும், அவற்றை கொடுத்தவர்களுக்கும் நன்றி கூறுங்கள் (Life is beautiful - enjoy it - be thankful for challenges and those who give them)...


வாழ்க்கை மிக அழகானது - ரசித்துக் கொண்டே வாழுங்கள் - சவால்களுக்கும், அவற்றை கொடுத்தவர்களுக்கும் நன்றி கூறுங்கள் (Life is beautiful - enjoy it - be thankful for challenges and those who give them)...


பூமியில் விழுந்த  விதை கூட எதிர்ப்பை சமாளித்து முளைத்து காட்டுகிறது...

 


ஒவ்வொரு நாளும்

காட்டில் சிங்கத்தால்

கொல்லப்படுகின்ற நிலையில்

உயிர் வாழும் மான் கூட

பிரச்சனைகளை சமாளிக்கின்றது 


பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக

விழுங்கப்படும் நிலையிலிருக்கும்

சிறிய மீன்களும் கடலில்

புலம்பாமல் வாழ்கின்றன 


மனிதர்களால் எப்பொழுது

வேண்டுமானாலும்

வெட்டப்படுகின்ற வாழ்க்கையை

அனுபவிக்கின்ற மரங்களும்

நிமிர்ந்து நிற்கின்றன 


ஒவ்வொரு நாளும்

ஆகாரத்திற்காக பல மைல்கள்

தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும் மனம் சலிப்படையாமல்

முயற்சி செய்கின்றன 


சிறியதான உடலையும்,

பல கஷ்டங்களையும் சமாளிக்க

வேண்டிய கட்டாயத்திலிருக்கும்

எறும்புகள் கூட துவண்டு போகாமல்

வாழ்ந்து காட்டுகின்றன 


தண்ணீரே இல்லாத பாலைவனத்தில்

உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும்

ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல் அதில் வாழ்ந்து காட்டுகின்றன 


ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை

என்ற நிலையிலிருக்கும் பலவகை

பூச்சிகளும், அந்த ஒரு நாளில்

உருப்படியாக வாழ்கின்றன 


இப்படி பலகோடி உயிரினங்கள்

உலகில் வாழ முடியுமென்றால்

உங்களால் வாழ முடியாதோ 


எப்படியும் வாழ்ந்தே 

ஆகவேண்டிய வாழ்க்கை 

அதை ஏன் புலம்பிக்கொண்டு

வாழ்கின்றீர்கள்...,


அதை ஏன் நொந்துபோய்

வாழ்கின்றீர்கள்...,


அதை ஏன் வெறுத்துக்கொண்டு

வாழ்கின்றீர்கள்...,


அதை ஏன் தப்பிக்கப் வாழ்கின்றீர்கள்..., 

அதை ஏன் அழுதுகொண்டு

வாழ்கின்றீர்கள்...,


சந்தோஷமாகத்தான் 

வாழ்ந்து பாருங்களேன்...


எனக்குப் பணிவைத்தந்த என் கஷ்டங்களுக்கு

மனதார நன்றி 


என்னை அவமரியாதை செய்து

எனக்கு வைராக்கியம் வரக்காரணமான

என்னைத் தன் விரோதியாய் பார்ப்பவருக்கு மனதார நன்றி 


எனக்கு வலியைத்தந்து

அடுத்தவரின் வலியை எனக்குப்

புரியவைத்த புரியாத நோய்களுக்கு

மனதார நன்றி 


எனக்கு ஆரோக்கியத்தின் அவசியத்தை உள்ளபடி சொல்லிக்கொடுத்த,

என் பலவீனத்திற்கும், உடலுக்கும்

மனதார நன்றி 


என்னை ஆழமாக சிந்திக்கவைக்க

எனக்கு மிகுந்த துயரத்தைத் தந்த

என்னுடைய பிரச்சனைகளுக்கு

மனதார நன்றி 


என் பலத்தை நான் உணர்ந்து

என் வாழ்வை நானே நடத்தக் காரணமான என்னை ஒதுக்கித் தள்ளியவர்களுக்கு

மனதார நன்றி 


என் உடல் உறுப்புகளின் மதிப்பை

எனக்கு தெளிவாய் சொல்லிக்கொடுத்த

மாற்றுத் திறனாளிகளுக்கு

என் மனதார நன்றி 


மனித வாழ்க்கை நிலையில்லாதது

என்பதை எனக்குத் தெளிவாகப்

புரியவைத்த மரணத்திற்கு

மனதார நன்றி 


என் பெற்றோரின் பெருமையை,

என் புத்தியில் அழுத்தமாய் பதித்த

அனாதை இல்லங்களில் வாழ்வோருக்கு

மனதார நன்றி 


ஒரு சிரிப்பினால் உலகையே

வசப்படுத்தமுடியும் என்பதை எனக்குச்

சுலபமாய் புரியவைத்த குழந்தைகளுக்கு

மனதார நன்றி 


பணத்தினால் மட்டுமே வாழ்வில்

எல்லா சுகமும் கிடைத்துவிடாது

என்பதைக் காட்டிய நிம்மதியில்லாத

பணக்காரர்களுக்கு மனதார நன்றி 


ஒவ்வொரு முறையும் மனிதர்களிடம்

ஏமாந்துக் கொண்டிருந்த / கொண்டிருக்கும் எனக்கு,

அவர்களின் சுயரூபத்தை எனக்கு உணர்த்திய

என் இறைவனுக்கு மனதார நன்றி 


இன்னும் பலருக்கு நன்றி சொல்லவேண்டும் 

இந்த வாழ்நாள் போதாது 


வாழ்க வளமுடன்....


🌷🌷






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...