சுதந்திர தினம், குடியரசு தினம் இடையேயான வேறுபாடுகள் (Differences between Independence Day and Republic Day)...



சுதந்திர தினம், குடியரசு தினம் இடையேயான வித்தியாசங்கள் (Differences between Independence Day and Republic Day)...


 சுதந்திர தினத்தன்று இந்தியாவின் தேசியக்கொடி ஏற்றப்படும் (Flag Hoisting). ஆனால் குடியரசு தினத்தன்று தேசியக்கொடி அவிழ்க்கப்படும் (Flag Unfurling).


சுதந்திர தினத்தன்று, பிரதமர் கொடி ஏற்றுவார் (Flag Hoisting). குடியரசு தினத்தன்று, குடியரசுத் தலைவர் கொடியை அவிழ்ப்பார்(Flag Unfurling). இரண்டும் ஒரே மாதிரியாக இருந்தாலும், இரண்டு விழாக்களுக்கும் முக்கிய வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக இரண்டையுமே ஏற்றுவதாகத் தான் குறிப்பிடுவோம். ஆனால் அது தவறு.


காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட புதிய தேசத்தின் எழுச்சியைக் குறிக்கும் வகையில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி, கம்பத்தின் கீழிருந்து ஏற்றப்பட்டது. அதனால் அந்த சுதந்திரம் பெற்ற நாளின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் கம்பத்தின் கீழிருந்து கொடி ஏற்றப்படும்.


மறுபுறம், குடியரசு தினமான ஜனவரி 26 அன்று மூவர்ணக் கொடியை அவிழ்க்கும் போது, ​​​​கொடி மூடப்பட்டு கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும். இந்திய குடியரசுத் தலைவர் மூவண்ணக்கொடியை அவிழ்த்து விடுவார்.


முதல் சுதந்திர தினத்தன்று குடியரசு தலைவர் இல்லை. லார்ட் மவுண்ட்பேட்டன் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தார். அது ஆங்கிலேய அலுவலகம் அகற்றப்படுவதற்கு முன்பு, குடியரசுத் தலைவர் பதவிக்கு சமமான பதவியாக இருந்தது. புதிதாக சுதந்திரம் பெற்ற தேசத்தின் கொடியை ஏற்றுவதற்கு காலனித்துவவாதி பொறுப்பேற்க முடியாது. எனவே அந்தப் பணியை இந்திய மக்களின் பிரதிநிதியாக இருக்கும் ஒரு நபருக்கு மட்டுமே வழங்க முடியும்.


சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே தேர்தல் நடத்தி இடைக்கால இந்திய அரசை அமைத்திருந்தோம். அந்த அரசின் தலைமைப் பொறுப்பான பிரதமர் பதவியில் ஜவாஹர்லால் நேரு இருந்தார். அதனால் அவரே அந்த கொடியை ஏற்றினார். இதனால்தான் சுதந்திர தினத்தன்று இன்றும் நாட்டின் பிரதமர் கொடி ஏற்றுகிறார்.


இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டம் இயற்றப்பட்டு, இந்திய நாடு குடியரசு நாடு என்று அறிவிக்கும் தினத்தன்று நாட்டின் முதல் குடிமகனாக, அரசியலமைப்புத் தலைவராக குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏற்கனவே சுதந்திரம் பெற்ற நாடு இப்போது குடியரசு நாடாக மட்டும் மாறுவதால் புதிய குடியரசு தலைவராகப் பொறுப்பேற்ற ராஜேந்திர பிரசாத் கொடியை அவிழ்த்து  வைத்தார். அந்தப் பழக்கமே இன்றும் தொடர்கிறது.


அதேபோல் மாநிலங்களில் சுதந்திர தினத்தன்று முதலமைச்சரும், குடியரசு தினத்தன்று ஆளுநரும் கொடியேற்றுவார்கள். இந்த நிகழ்வு 1974ஆம் ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வந்தது.


இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையிலான மற்றொரு வித்தியாசம் இடம். பிரதமர் செங்கோட்டையில் இருந்து மூவர்ணக் கொடியை ஏற்றுகிறார், அதைத் தொடர்ந்து அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.


மறுபுறம், குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவர் ராஜபாதையில் கொடியேற்றுகிறார். அதைத் தொடர்ந்து இராணுவ வலிமை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையின் பாரிய நிகழ்ச்சி நாட்டின் வளத்தை உலகிற்குக் காட்டுவதற்காக நடைபெறுகிறது.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...