கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ராமேஸ்வரம் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் உரை



 ராமேஸ்வரம் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் உரை


ராமேஸ்வரத்தில் நடைபெறும் விழாவில், ‘வணக்கம், என் அன்பு தமிழ் சொந்தங்களே' எனக்கூறி தமிழில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி.


விழாவில் ஆளுநர் ரவி, மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் பங்கேற்பு.


தமிழ்நாட்டின் கட்டமைப்பே மத்திய அரசின் முதன்மை நோக்கம்; கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையில் தமிழ்நாட்டில் 7 மடங்கு அதிக நிதி ஒத்துக்கப்பட்டுள்ளது.


இதெல்லாம் செய்த பிறகும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்; அவர்களுக்கு அழுவதற்கு மட்டுமே தெரியும், அழுது விட்டு போகட்டும் - பிரதமர் மோடி.


2014-க்கு முன்பு ரயில்வே துறையில் குறைவாகவே தமிழ்நாட்டிற்கு நிதி கிடைத்தது; அப்போதெல்லாம் கூட்டணியில் யார் இருந்தார்கள் என நான் சொல்லத் தேவையில்லை.


கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 3 மடங்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; இந்த ஆண்டு ரூ.6,000 கோடிக்கும் அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் ஏழை மக்களுக்காக 12 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.


10 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிகமானோருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.


தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்களுக்கு குழாய் வழியே குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.


மருத்துவப் படிப்பை தமிழ் மொழியில் வழங்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம்; ஏழை மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழில் மருத்துவப் படிப்பு வேண்டும்.


மருத்துவப் படிப்பை தமிழில் வழங்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன் - பிரதமர் மோடி.


தமிழ்நாட்டின் மீனவர்கள் மிகவும் கடினமாக உழைப்பவர்கள்.


மத்திய அரசு மீனவர்களின் சங்கட காலங்களில் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது; கடந்த 10 ஆண்டுகளில் 3,700க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கையில் இருந்து மீட்பு.


தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு எழுதும் கடிதங்கள் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருக்கும்; தமிழ்நாட்டில் உள்ள தலைவர்களின் கையெழுத்து கூட ஆங்கிலத்தில் உள்ளது.


தலைவர்களின் கையெழுத்தாவது தமிழில் இருக்கக் கூடாதா- பிரதமர் மோடி கேள்வி.


தமிழகத்தில் உள்ள மக்கள் மருந்தகங்கள் மூலம் 80 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள் கிடைக்கிறது.


மலிவு விலை மருந்தகங்கள் மூலம் பொதுமக்களுக்கு ரூ.700 கோடி லாபம்.


தமிழகத்தில் லட்சக்கணக்கான சிறு விவசாயிகளுக்கு பிரதமரின் கிஷான் திட்டத்தின் மூலம் ரூ.12 ஆயிரம் கோடி நிதி.


தமிழகத்தில் மீன்வள கட்டமைப்புகளை மேம்படுத்த மாநில அரசுக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

No Work No Pay - One Day All India Strike

இன்று (09.07.2025) நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work - No Pay" என்ற அடிப்படையில் ஊதியப் பிடித்தம் ச...