கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாழ்தல் இனிது

 


வாழ்தல் இனிது


பசியறிந்து சோறு போட 

ஒருவர் இருக்கும் வரை..


சாப்பிட்டாயா எனக் கேட்க 

ஒருவர் இருக்கும் வரை..


தாமதமாகும் இரவுகளில் 

எங்கிருக்கிறாய் என விசாரிக்க

ஒருவர் இருக்கும் வரை..


நோய் வந்தால் இரவுகளில் 

கண் விழித்துப் பார்த்துக் கொள்ள 

ஒருவர் இருக்கும் வரை..


குரல் மாறுபாட்டில் மன 

நிலையைக் கணிக்க

ஒருவர் இருக்கும் வரை..


போய்ச் சேர்ந்ததும் கூப்பிடு என 

வழியனுப்ப 

ஒருவர் இருக்கும் வரை..


 எத்தனை படி ஆனாலும் வீட்டில்  கதவைத் திறந்து விட

ஒருவர் இருக்கும் வரை..


தோற்றுப் போய் திரும்புகையில் 

தோள் சாய்த்துக்கொள்ள 

ஒருவர் இருக்கும் வரை..


போ என்றாலும் விட்டுப் போகாது

சண்டை போட்டுக் கொண்டேனும் 

உடனிருக்க 

ஒருவர் இருக்கும் வரை..


மனம் கனக்கும் நினைவுகளைப் பகிர்ந்து 

கொள்ள  ஒருவர் இருக்கும் வரை..


நம் கனவுகளை தம் கனவுகளாகத் 

தோள்களில் தூக்கி சுமக்க 

ஒருவர் இருக்கும் வரை..


எதற்காகவும் எவரிடமும் 

நம்மை விட்டுக் கொடுக்காத

ஒருவர் இருக்கும் வரை..


கூட்டத்தின் நடுவே தனித்துப் போகையில் கரங்கள் பற்றி 

நானிருக்கிறேனென உணர்த்த

ஒருவர் இருக்கும் வரை..


தவறுகளைத் தவறென 

சுட்டிக் காட்டித் திருத்தும் 

ஒருவர் இருக்கும் வரை..


துயர் அழுத்தும் கணங்களில் 

அருகிருந்து கண்ணீர்த் துடைக்க

ஒருவர் இருக்கும் வரை..


மனக் குறைகளைப் புலம்பித் 

தள்ளுகையில் காது கொடுத்துக் கேட்க 

ஒருவர் இருக்கும் வரை



 *வாழ்தல் இனிது.


 *இந்த வாழ்க்கையும் இனிது.

💖💖💖💖💖💖💖💖💖💖


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNTET 2026 Notification For Working Teachers

    TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST FOR WORKING TEACHERS - 2026 NOTIFICATION பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு கு...