இடுகைகள்

CCL லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

🍁🍁🍁 குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள ஆண் அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்று மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்...

படம்
  குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள ஆண் அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்று மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.  ''பிரதமர் மோடியின் தலைமையிலான அரசில் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறையில் சில சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி, இனி மேல் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள ஆண் அரசு ஊழியர்களும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு (சைல்ட் கேர் லீவ் - சிசிஎல்) எடுக்கலாம். ஆனால், விடுப்பு எடுக்கும் அந்த ஊழியர் மனைவியை விட்டுப் பிரிந்தவராகவோ அல்லது மனைவியை இழந்தவராகவோ அல்லது திருமணம் ஆகாதவராகவோ இருக்க வேண்டும். அதாவது தந்தை மட்டுமே அந்தக் குழந்தைக்கு இருத்தல் வேண்டும். அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் மாற்றுத்திறனாளியாகவோ அல்லது சிறப்புக் குழந்தைகளாகவோ இருந்தாலும் சிசிஎல் எடுக்கலாம். இந்த முடிவு பல மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்டாலும், அதிகமான ஈர்ப்பை மக்கள் மத்தியில், அரசு ஊழியர்கள் மத்தியில் பெறவில்லை. சிசிஎல் விடுப்பு எடுக்கும் அரசு ஊழியர்கள் தங்கள் விடுப்பு குறித்தும் பணியாற்றும் துறையின் தலைமை அலுவலகத்தில் முன்கூட்டியே

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...