கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு ஆகஸ்ட் 24 வரை விண்ணப்பிக்கலாம்

தையல், ஓவியம் உள்ளிட்ட தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வுத்துறை அறிவிப்பு: வரும் நவம்பர் மாதம், தொழில்நுட்பத் தேர்வுகள் நடக்கின்றன. ஓவியம், தையல், இசை, நடனம், அச்சுக்கலை, விவசாயம் மற்றும் கைத்தறி நெசவு ஆகிய பிரிவுகளின் கீழ், தொழில்நுட்பத் தேர்வுகள் நடக்கின்றன. தேர்வுகள், கீழ்நிலை மற்றும் மேல்நிலை ஆகிய இரு நிலைகளில் நடக்கின்றன.
விண்ணப்பதாரர்களின் தேர்வுகளுக்கான கல்வித் தகுதி, கீழ்நிலை தேர்வுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சியும், மேல்நிலை தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்கள், அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகங்கள் மற்றும் தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் கிடைக்கும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, "கூடுதல் செயலர் (தொழில்நுட்பத் தேர்வு), அரசுத் தேர்வுகள் இயக்ககம், கல்லூரி சாலை, சென்னை-6" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்கறிஞர் வில்சன் MP அவர்களின் பேட்டி

TET Review Petition filed by our Tamilnadu State Govt : Advocate Wilson  தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்...