கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ராகிங் செயல்பாட்டிற்கெதிரான வலைத்தளம் மற்றும் ஹெல்ப்லைன்

ராகிங் செயலுக்கெதிரான வலைதளத்தையும், ஹெல்ப்லைனையும் மனிதவள அமைச்சர் கபில்சிபல் டெல்லியில் தொடங்கி வைத்தார்.
இந்த போர்டல், ராஜேந்திர கச்ரூ என்பவரின் கீழ் செயல்படும் அமன் சத்யா கச்ரூ ட்ரஸ்ட் என்ற அமைப்பால் ஏற்படுத்தப்பட்டது.
கடந்த 2009ம் ஆண்டில், ராகிங் செயல்பாட்டிற்கு எதிரான ஒரு போர்டலை உருவாக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
இந்நிகழ்ச்சியில் பேசிய சிபல், "ராகிங் என்பது ஒரு பெருங்குற்றம். இது, ஒரு மாணவரின் தன்னம்பிக்கையை அழித்து, அவரை தற்கொலைக்கும் தூண்டுகிறது" என்றார்.
"இந்த புதிய போர்டல், ராகிங் பற்றிய புகார்களுக்கு, அரைமணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கும்" என்று கச்ரூ நம்பிக்கை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: இந்த போர்டலில் புகார் அளித்தவுடன், உடனடியாக கல்லூரி முதல்வர் அல்லது நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அவர்களை தொடர்புகொள்ள முடியாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட பகுதியின் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும்.
ராகிங் செயல்பாட்டிற்கு எதிரான புகாரை 18001805522 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் அல்லது www.antiragging.in மற்றும் www.amanmovement.org. என்ற இணையதளங்களில் பதிவு செய்யலாம்.
நாடு முழுவதும் ஏறக்குறைய 40 ஆயிரம் கல்லூரிகள் உள்ளன. அனைத்து கல்லூரிகளின் தரவுகளும்(Data base) உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Science Competition for School Students

  பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் போட்டிகள் Science Competition for School Students >>> Click Here to Download