கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>முப்பருவ கல்வி முறையில் முதல் பருவத்தேர்வு நடத்தப்படாதது ஏன்?

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முதல் பருவத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன. ஆனால், முப்பருவக் கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ள, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு மட்டும், முதல் பருவத் தேர்வுகள் நடத்தப்படவில்லை.
மாணவருக்கு, மூன்று பருவத் தேர்வுகள் வழக்கமாக நடத்தப்படும். காலாண்டுத் தேர்வுக்கு முன் முதல் பருவத் தேர்வும், அரையாண்டுத் தேர்வுக்கு முன் இரண்டாவது பருவத் தேர்வும், முழு ஆண்டு தேர்வுக்கு முன் மூன்றாவது பருவத் தேர்வும் நடக்கும்.
ஆனால், முப்பருவக் கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இதுவரை முதல் பருவத் தேர்வுகள் நடத்தப்படவில்லை.
இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் தேவராஜன் கூறியதாவது: எட்டாம் வகுப்பு வரையான மாணவ, மாணவியருக்கு, 60 மதிப்பெண்கள் எழுத்துத் தேர்வுக்கும், 40 மதிப்பெண்கள் செய்முறைகளுக்கும் என பிரிக்கப்பட்டு உள்ளது.
இந்த மாணவருக்கு, பருவத் தேர்வுகளுக்குப் பதிலாக, ஒவ்வொரு பாடம் நடத்தி முடிக்கப்பட்டதும், உடனடியாக மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. எனவே, இவர்களுக்கு தனியாகப் பருவத் தேர்வுகள் கிடையாது. காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வை, மற்ற மாணவரைப்போல் எழுதுவர். 60 மதிப்பெண்களுக்கு, எழுத்துத் தேர்வு நடக்கும்.இவ்வாறு தேவராஜன் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி - Palli Chalararam பக்கத்தில் தோன்ற வேண்டிய தகவல்கள் - TNSED Parents செயலியில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக NSNOP உறுப்பினர் செயலாளரின் செயல்முறைகள்

    Namma School, Namma Ooru Palli நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி - Palli Chalararam பள்ளிச் சாளரம் பக்கத்தில் தோன்ற வேண்டிய தகவல்கள் - TNSED P...