கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மூளைச்சாவு அடைந்த மாணவி உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில், மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு உள்ளன. சேலம், மிட்டாபுதூர், கார்மென்ட் ரோட்டை சேர்ந்த ஜேக்கப் - சந்திரா தம்பதியின் மூத்தமகள் ஐஸ்வர்யா,21. சேலம், தனியார் மகளிர் கலைக் கல்லூரியில், பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சைன்ஸ் முடித்துள்ளார். கடந்த 3ம் தேதி, சாமிநாத
புரத்தை சேர்ந்த தோழி பவித்ராவுடன், ஐஸ்வர்யா, இருசக்கர வாகனத்தில் சேலத்துக்குப் புறப்பட்டு உள்ளார். வாகனத்தை பவித்ரா ஓட்டியுள்ளார். நாமமலை பகுதியில் சென்ற போது, அவ்வழியாகச் சென்ற டாரஸ் லாரியின் முன் சக்கரம் கழன்று, மாணவியர் வந்த வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில், காயமடைந்த மாணவியர் இருவரும், சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இதில், கோமா நிலைக்குச் சென்ற ஐஸ்வர்யா, மேல் சிகிச்சைக்காக சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு, தீவிர சிகிச்சை அளித்தும், நினைவு திரும்பாத ஐஸ்வர்யாவுக்கு, மூளைச்சாவு ஏற்பட்டது. அதையடுத்து, மாணவியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதற்காக, சென்னை, அப்போலோ மருத்துவமனைக்கு ஐஸ்வர்யாவை அழைத்துச் சென்றனர். மருத்துவமனை நிர்வாகிகள் நிவேதிதா, வித்யா, பாலகிருஷ்ணன் ஆகியோர் ஒருங்கிணைப்புடன், மாணவியின் உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. மருத்துவக் குழுவினர், மாணவி ஐஸ்வர்யா உடலில் இருந்து கண்கள், இருதயம், சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றை அறுவைச் சிகிச்சை மூலம் தானமாகப் பெற்று, மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்தனர்.
நன்றி-தினமலர்

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

BLO பணியை செய்யாத ஆசிரியருக்கு "கண்டனம்" என்ற தண்டனை வழங்கி அதனை அவரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் செயல்முறைகள்...

   BLO பணியை செய்யாத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியருக்கு "கண்டனம்" என்ற தண்டனை வழங்கி அதனை அவரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய காஞ...