முதலமைச்சரின்  தனிபிரிவு 
 ஒரு பரிவுள்ள அரசு ஏழு தத்துவங்களில் நிலைகொண்டு பணியாற்றுகிறது.   அவையாவன, எளிதில் அணுகுதல், சமத்துவமாக நடத்துதல், தொடர்பாடல், பதில்  தருதல் , துரிதமாக செயல்படுதல் , திறமையுடன் கையாளுதல் மற்றும் பொறுப்பு  ஏற்றல் ஆகியன. இவைகளை உறுதிப்படுத்த வெவ்வேறு பின்னணி கொண்ட பொதுமக்கள்  அரசு சேவைகளைப் பெறுவதில் தடையின்மை உருவாக்குதல்,  தகுதியிருந்தும்  தடுக்கப்படும்போது உதவுதல்,  கோரிக்கைகளை எடுத்துரைக்க வசதி செய்து தருதல்,  உண்மையான கோரிக்கைகளுக்கு அதற்கேற்ற தீர்வு தருதல் ஆகிய காரணங்களுக்காக  முதலமைச்சரின் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது.  அனைத்து பொதுமக்களுக்கும்  அதிமுக்கிய காரணங்களுக்காக முதலமைச்சரின் தனிப்பிரிவானது,  மாண்புமிகு  முதலமைச்சரின் கோரிக்கை தீர்வு குழுவாக செயல்படுகிறது.  விதிமுறைகள்  உருவாக்கப்பட்டு பொதுமக்கள் அதிருப்திக்கு ஆளாகாமல் நியாயமாகவும்  பரிவுடனும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன. கோரிக்கைகள் சம்மந்தப்பட்ட  துறைகளுக்கு அனுப்பப்பட்டு பதில் நடவடிக்கைகள் இணைய வழி கண்காணிப்பு  முறைமை மூலம் கண்காணிக்கப்படுகிறது.  அனைத்து துறைகளிலிருந்தும்  உணர்திறனுடன்  தேவையான சரியான பயனுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு  காணப்படுகிறது.  ஆய்வு கூட்டங்கள் ஒவ்வொறு துறைதோறும் மற்றும்  மாவட்டங்கள்தோறும் தொடர்பு அலுவலர்களைக் கொண்டு நடத்தி தாமதங்கள்  தவிர்க்கப்படுகிறது.
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.