கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பிளஸ் 2 தனித்தேர்வு: தத்கால் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தனித்தேர்வு எழுதத் தவறியவர்கள், தத்கால் திட்டத்தில், இன்றும், நாளையும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு மையம் சென்னையில் மட்டுமே அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின், www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில், வழங்கப்பட்டுள்ள அறிவுரைப்படி, நாளை மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்-லைனில், பதிவிறக்கம் செய்யப்பட்ட, "சலான்" மூலம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகளில், "அரசுத் தேர்வுகள் இயக்குனர், சென்னை - 6&' என்ற பெயரில், கட்டணம் செலுத்த வேண்டும்.
ஒரு பாடம் மட்டும் எழுதுவோர், ஒரு பாடத்திற்கு, 50 ரூபாய், இதர கட்டணம், 35 ரூபாய்; அனைத்துப் பாடங்களையும் எழுதுவோர், 187 ரூபாய், மற்றும், "தத்கால்" திட்டத்திற்கு, 1,000 ரூபாயை, செப்டம்பர் 24ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உரிய இணைப்புகளுடன், செப்டம்பர் 28, 29ம் தேதிகளில், அரசுத் தேர்வுகள் இயக்குனர் அலுவலகத்தில், நேரில் சமர்ப்பித்து, "ஹால் டிக்கெட்" பெற்றுக் கொள்ளலாம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Student arrested for stabbing schoolgirl

 பள்ளி மாணவியை கத்தியால் குத்திய மாணவன் கைது Student arrested for stabbing schoolgirl கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன் செம்ப...