சமூக வலை தளங்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்க, அவற்றை கண்காணிக்கும்
வகையிலான அமைப்பை ஏற்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அசாமில்,
சமீபத்தில் நடந்த கலவரத்தை அடுத்து, சமூக வலை தளங்கள் மற்றும் இணையதளங்கள்
மூலம், வட கிழக்கு மாநிலத்தவரை அச்சுறுத்தும் வகையிலான, தகவல்கள், படங்கள்
வெளியிடப்பட்டன. இதனால், சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில்
வசித்த, வட கிழக்கு மாநிலத்தவர், பீதியடைந்து, தங்களின் சொந்த ஊர்களுக்கு
புறப்பட்டுச் சென்றனர். எதிர்காலத்தில், இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுவதை
தடுப்பது குறித்து ஆலோசிப்பதற்காக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்
மேனன் தலைமையில், சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், மத்திய
உள்ளதுறை அமைச்சகம், பிரதமர் அலுவலகம், புலனாய்வு அமைப்புகள் உள்ளிட்ட
துறைகளைச் சேர்ந்த, அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நடந்த
நிகழ்வுகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்
கூறப்பட்டுள்ளதாவது: சமூக வலை தளங்கள் மற்றும் இணையதளங்கள் தவறாக
பயன்படுத்துவதை தடுப்பதற்கு, மூன்று அம்ச திட்டங்கள்
உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, இவற்றில் வெளியாகும் தகவல்களை
கண்காணித்து, அதில், தவறான நோக்கத்துடன் கூடிய தகவல்கள் இடம்
பெற்றிருந்தால், அதுகுறித்து முன் எச்சரிக்கை செய்யும் வகையிலான, தனி,
கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்படும். நெருக்கடியான நேரங்களில் ஏற்படும்
பிரச்னைகளை எதிர்கொள்வதில், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சட்டத்தில்,
தற்போது சில குறைகளை உள்ளன. இவற்றை போக்கும் வகையில், இது குறித்து
நடவடிக்கை எடுப்பதற்கான, சட்டப்பூர்வமான ஒப்புதல், அரசிடம் இருந்து
பெறப்படும். பீதியை ஏற்படுத்தும் தகவல்களை வெளியிடுவதை தடுக்கும் வகையில்,
தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, வழிகாட்டும் குறிப்புகள்
உருவாக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
3201 Elementary School HM Vacancies : District wise
தமிழ்நாடு முழுவதும் உள்ள 3201 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரம் - மாவட்ட வாரியாக Details of 3201 Primary School Headmas...
