கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>டி.இ.டி., தேர்வு தள்ளி போகுமா?

டி.இ.டி., மறுதேர்வு, அக்., 3ம் தேதி நடக்குமா அல்லது தள்ளிப் போகுமா என, தெரியாததால், தேர்வர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஜூலை, 12ம் தேதி நடந்த, ஆசிரியர் தகுதித் தேர்வை (டி.இ.டி.,) எழுதிய, 5.5 லட்சம் பேரில், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்வில் தோல்வி அடைந்தவருக்கு, அக்., 3ல், மறுதேர்வு நடத்தப்படும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. "அக்டோபரில் நடக்கும் தேர்வில், புதிய தேர்வர் பங்கேற்க முடியாது' என, டி.ஆர்.பி., ஏற்கனவே அறிவித்தது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இம்மனுவிற்கு விரிவாக பதிலளிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, 17ம் தேதிக்கு கோர்ட் தள்ளி வைத்தது. தேர்வு தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், திடீரென புதிய தேர்வர்களை அனுமதித்தால், புதிதாக விண்ணப்பம் வழங்குவது, கூடுதலாக கேள்வித்தாள் அச்சடிப்பது என, பல்வேறு பணிகளை, டி.ஆர்.பி., செய்ய வேண்டியிருக்கும். இப்பிரச்னை குறித்து, தமிழக அரசுடன், டி.ஆர்.பி., அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த குழப்பங்களால், அக்., 3ல், திட்டமிட்டபடி டி.இ.டி., தேர்வு நடக்குமா என்ற குழப்பத்தில், தேர்வர்கள் தவித்து வருகின்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DMK will be cheated in 2026 if it cheats Teachers, Government Employees - JACTTO GEO

 ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை ஏமாற்றினால் 2026ல் திமுக ஏமாந்து விடும் - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் DMK will be cheated in 2026 if it...