கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ரூ.10 கோடி மதிப்பில் இலவச தங்குமிடம்

தமிழக அரசு சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்திற்கென, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில், 10.14 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடத்தை, முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார். ஆண்டு வருமானம், ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் உள்ள, எஸ்.சி., - எஸ்.டி., - எம்.பி.சி., - பி.சி., வகுப்பினருக்கு, இலவச தங்குமிடம், உணவு ஆகியவற்றுடன் அரசின் சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சியளிக்கப்படுகிறது. இதுவரை, சென்னை அண்ணாநகரில், இந்த பயிற்சி மையம் இயங்கி வந்தது. ராஜா அண்ணாமலைபுரம், அண்ணா மேலாண்மை நிலைய வளாகத்தில், 76 அறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான அறைகள், அனைவருக்கும் குளிர்சாதன வசதியுடன் கூடிய வகுப்பறை என, 10.14 கோடி ரூபாயில், நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளன. ஒன்பது மாதங்களில், கட்டி முடிக்கப்பட்ட இக்கட்டடத்தை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, "வீடியோ கான்பரன்சிங்' மூலம் திறந்து வைத்தார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்

கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் - கடலூர் செம்மங்குப்பம் பகுதியி...