கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மாணவர்களை அடித்தால் ஆசிரியருக்கு 3 ஆண்டு சிறை - புதிய சட்டம்

பள்ளிகளில் மாணவர்களை அடித்தால் ஆசிரியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது.பள்ளிகளில் மாணவர்களை சிறிய தவறுக்காக கூட ஆசிரியர்கள் கடுமையாக அடிப்பதாவும் மாணவர்கள் குறிப்பிட்ட கடையில்தான் பொருட்களை வாங்க வேண்டும் என்று நிர்பந்திப்பதாகவும் புகார்கள் வந்தன. இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் ‘பள்ளிகளில் நேர்மையற்ற நடவடிக்கைகள் தடுப்பு மசோதா 2012 என்ற பெயரில் புதிய வரைவு மசோதாவை மத்திய அரசு தயாரித்துள்ளது. மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் கூட்டம் டெல்லியில் நடக்கிறது. இக்கூட்டத்தில் இந்த மசோதா ஆய்வுக்காக தாக்கல் செய்யப்படுகிறது. மசோதாவில் மாணவர்களை அடித்தால் ஆசிரியருக்கு ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டு வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனினும், அபராத தொகை எவ்வளவு என்பது கூறப்படவில்லை. மேலும், சீருடைகள், புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களை குறிப்பிட்ட கடையில் வாங்க சொல்லி மாணவர்களை கட்டாயப்படுத்தினாலும் சிறை தண்டனை விதிக்கப்படும். மாணவர்களிடம் இருந்து சேர்க்கைக்காக எந்தவிதமான நிதியோ அல்லது நன்கொடையோ பெறக்கூடாது. மீறி பெறப்பட்டால் கல்வி தீர்ப்பாயம் மூலம் அந்த தொகை பறிமுதல் செய்யப்படும். படிப்பில் சுமாராக இருந்தால் மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்குவதோ அல்லது பெயில் ஆக்குவதற்கோ மசோதா தடை விதிக்கிறது. மேலும், தகுதி உள்ள மாணவர்களை பரிட்சைக்கு செல்ல விடாமல் தடுப்பதும் கூடாது என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.மாணவர்களுக்கான கையேடு, விண்ணப்ப படிவங்கள் போன்றவற்றுக்கும் கட்டணம் வசூலிப்பதை மசோதா தடை செய்கிறது. பள்ளி நேரம் முடிந்தபின் பள்ளியிலோ அல்லது வெளியிலோ டியூஷன் சேரச் சொல்லி மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
யாரும் பதட்டமடையாதீங்க....    உத்தரவுகள் அரசுப்பள்ளிகளுக்கு மட்டும்தானாம்....

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்கறிஞர் வில்சன் MP அவர்களின் பேட்டி

TET Review Petition filed by our Tamilnadu State Govt : Advocate Wilson  தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்...