கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>புதிய விதிகளுக்கு எதிர்ப்பு : தனியார் பள்ளி வாகனங்கள் ஒரு நாள் "ஸ்டிரைக்'

பள்ளி வாகனங்களுக்கான, புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 ஆயிரம், தனியார் பள்ளி வாகனங்கள், ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. சென்னை சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சுருதி, ஜூலை, 25ம் தேதி பள்ளி பஸ்சில் இருந்த, ஓட்டை வழியாக விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து, பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை, செப்., 3ம் தேதி, தமிழக அரசு ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில், பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் உதவியாளர் நடத்துனருக்கான உரிமம் வைத்திருக்க வேண்டும்; ஓட்டுனர் பகுதி, தனி கேபினாக பிரிக்கப்பட வேண்டும்; மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று பெற வேண்டும் உட்பட, 22க்கும் மேற்பட்ட விதிமுறைகள் இடம்பெற்றன. இந்த புதிய விதிமுறைகளில், உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, செப்., 26ம் தேதி அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து, இம்மாதம், 1ம்தேதி முதல், நடைமுறைக்கு வந்தது. புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 ஆயிரம் தனியார் பள்ளி வாகனங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.
வழக்கு தொடர முடிவு : தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலர் நந்தகுமார் கூறியதாவது: மாநிலம் முழுவதும், 19 ஆயிரம் பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இவை உரிய அனுமதி பெற்றவை. பள்ளி வாகனங்களுக்கான, புதிய விதிகளை, தனியார் பள்ளிகள் உடனே அமல்படுத்த வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. வாகன உதவியாளர் நடத்துனருக்கான உரிமம் வைத்திருக்க வேண்டும்; மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று பெற வேண்டும் என்பன உள்ளிட்ட, ஆறு விதிகளை செயல்படுத்துவதில் சிரமம் உள்ளது.
வேலை நிறுத்தம் : இப்புதிய விதிகளை செயல்படுத்த, கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும். ஒரு சில விதிகளுக்கு தடைகோரி, ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம். ஒரு சில விதிகளை தளர்த்த அரசிடம் வலியுறுத்தியும், அதை ஏற்கவில்லை. இப்புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நவ., 19ம் தேதி, அனைத்து பள்ளி வாகனங்களும், ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

BLO பணியை செய்யாத ஆசிரியருக்கு "கண்டனம்" என்ற தண்டனை வழங்கி அதனை அவரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் செயல்முறைகள்...

   BLO பணியை செய்யாத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியருக்கு "கண்டனம்" என்ற தண்டனை வழங்கி அதனை அவரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய காஞ...