கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தனி தாசில்தாராக மாறிவிட்ட தலைமை ஆசிரியர்கள்...!

மாணவர்களுக்கு அரசு அறிவித்திருக்கும் 16 நலத்திட்ட உதவிகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதால் தலைமை ஆசிரியர்கள் தனி தாசில்தாராக மாறிவிட்டனர். பணியாளர் பற்றாக்குறை காரணமாக இந்த வேலையில் ஆசிரியர்களையும் பயன்படுத்துவதால் படிப்பு பாதிப்படைகிறது.

பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை முன்னாள், இந்நாள் அரசுகள் வாரி வழங்கியுள்ளன. விலையில்லா பாடநூல், நோட்டு, மடிக்கணினி, மிதிவண்டி போன்ற விலையில்லா திட்டங்கள் 12, மற்றும் இடைநிற்றலை தடுக்க மாணவர்களுக்கு வைப்புத்தொகை பத்திரம், குடும்பத்தலைவரை இழந்த குடும்பத்துக்கு அரசின் நிதியுதவி, மாணவர்களுக்கு சாதி, வருவாய், இருப்பிட சான்று, ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு பதிவு போன்ற அனைத்து சேவைகளையும் பள்ளிகள் மூலம் செய்யவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான பள்ளிகளில் ஆய்வக உதவியாளர், எழுத்தர் போன்ற ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 75 சதவீதம் காலியாக உள்ளன. சம்பள பில் தயாரித்தல், அதை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பித்தல், நூலக பதிவேடு பராமரித்தல் போன்ற வேலைகளை ஆசிரியர்களே இப்போது கவனித்து வருகின்றனர். கூடுதலாக தொடர் மதிப்பீட்டு திட்டத்துக்கும் பல பதிவேடுகளை பராமரிக்கின்றனர். இந்நிலையில் 16 நலத்திட்டங்கள் அவர்களை பெரிதும் பயமுறுத்துகின்றன.

இது குறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "இலவச பொருட்கள் வழங்குவதற்கு முன் பும், பின்பும் பட்டியல் தயாரிப்பது, விநியோகித்த விவரத்தை பதிவது போன்ற எழுத்து வேலைகள் உள்ளன. மடிக்கணினி வழங்கும் முன்பு மாணவரின் பெயர், முகவரி, வகுப்பு, பதிவெண், கணினி சீரியல் எண் போன்றவற்றை எழுதி தனி படிவம் தயாரிக்கவேண்டியுள்ளது. சாதி, வருவாய் சான்றிதழ்களுக்காக விண்ணப்பங்களை நிரப்பி, பெற்றோரிடம் அளித்து கையொப்பம் வாங்கி துணைத்தாசில்தாரிடம் பட்டியலில் கையொப்பம் பெற்று கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர்கள் கையொப்பமிடுவதை பார்த்து பின்தொடர்ந்து சான்றிதழ் வாங்கி கொடுக்கவேண்டும்.

இதுநாள்வரை இச்சான்றிதழ்களுக்கு அன்பளிப்பு பெற்றுவந்த அதிகாரிகள் சிலர் வேண்டுமென்றே சுணக்கம் ஏற்படுத்துகின்றனர். வங்கிகளில் மாணவர்கள் பெயரில் கணக்கு தொடங்குவதும் கஷ்டமாக உள்ளது
மாணவர்களின் போட்டோ, குடும்ப அட்டைகளை சேகரித்து, விண்ணப்பங்களை நிரப்பி, விவரங்களை பதிவேட்டில் எழுதிக்கொண்டு சென்றால் பல வங்கி கிளைகளில் அலைக்கழிக்கின்றனர். இதே போல் ஆன்லைன் வேலை வாய்ப்பு பதிவிற்கும் அதிக சிரமப்பட வேண்டியுள்ளது. இது தவிர, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், தொழிலாளர் கல்வி உதவித்தொகைகள் வழங்குவது தனி வேலை. மொத்தத்தில் பெற்றோர் பாரத்தை அரசு எங்கள் தோள்களில் ஏற்றியுள்ளது" என்றார்.

காலத்துக்கு உதவாதவை:
அறுசுவை உணவுக்கு பலவகை கூட்டுகள் போல் 16 நலத்திட்ட உதவிகள் பரவசப்படுத்தினாலும், இதுவரை பாடப்புத்தகம், நோட்டுகள், சீருடைகள் மட்டுமே அதுவும் முதல் பருவம் முடியும் தருவாயில் வந்து சேர்ந்துள்ளன. மிதிவண்டிகள் வந்தும் அரசியல் பிரமுகர்களை முன்னிறுத்தி வழங்கவேண்டியிருப்பதால் இன்னமும் விநியோகிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு மாணவர்களுக்கான மடிக்கணினிகளே இன்னமும் கை சேரவில்லை. படிப்புக்கு பயன்படவேண்டிய பை, வண்ண பென்சில்கள், உலக வரைபடம், கணித உபகரணங்கள் மற்றும் செருப்பு இன்னமும் வந்து சேரவில்லை. காலத்தில் உதவாத பொருட்களால் மாணவர்களுக்கு பயனில்லை. தேவையை கருதி பெற்றோர்கள் இப்பொருட்களை ஏற்கனவே வாங்கி விட்டனர்.

விலையுள்ள பொருட்கள்:
அரசு விலையில்லா பொருட்கள் என அறிவித்தாலும், மாணவர்கள் சிறிய விலை கொடுத்தே புத்தகம், சீருடை போன்றவற்றை வாங்குகின்றனர். இப்பொருட் களை கல்வி அலுவலகங்களிலி ருந்து எடுத்துவரும்போது சில அலுவலர்கள் ரூ.300 முதல் 500 வரை வாங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. இது மட்டுமின்றி, அங்கிருந்து எடுத்துவர ஆகும் செலவை மாணவர்களிடம் சில பள்ளிகள் வசூலித்து ஈடுகட்டுகின்றன.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2024-2025 Final Answer Key

  NMMS 2024-2025 Final Key Answer Released by DGE >>> Click Here to Download...