கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மைசூர் நிறுவனத்துக்கு செல்லும் எஸ்.எஸ்.ஏ., பள்ளி வளர்ச்சி நிதி: ஆசிரியர், கிராம கல்வி குழு எதிர்ப்பு

"அனைவருக்கும் கல்வி திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.,) கீழுள்ள அனைத்து பள்ளிகளில் இருந்து, மைசூரில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு தலா ரூ.2 ஆயிரம் "டிடி' அனுப்ப வேண்டும்' என்ற உத்தரவுக்கு ஆசிரியர்கள் மற்றும் கிராம கல்வி குழு உறுப்பினர்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாநிலத்தில் 2009லிருந்து ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை அனைவருக்கும் கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு பள்ளிக்கும் பராமரிப்பு நிதி ரூ.7,500, வளர்ச்சி நிதி ரூ.8 ஆயிரம் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்நிதி மூலம் பள்ளிகளுக்கான அடிப்படை வசதிகள், பணிகள் மேற்கொள்ளப்படும். எஸ்.எஸ்.ஏ., திட்டம் செயல்படும் அனைத்து பள்ளிகளும் இந்நிதியில் கர்நாடக மாநிலம் மைசூர் "லியோ லிட்டரேச்சர் அன்ட் சில்டரன் மெட்டீரியல்ஸ் பேங்க்' பெயருக்கு, தலா ரூ.2 ஆயிரம் "டிடி' எடுத்து அனுப்ப வேண்டும், என்ற உத்தரவு, மாநில எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் அலுவலகத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்டது. என்ன காரணத்துக்காக என்ற விவரம் தெரியவில்லை என, தலைமையாசிரியர்கள், கிராம கல்வி குழு உறுப்பினர்கள் புலம்புகின்றனர். எஸ்.எஸ்.ஏ., பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது: எந்த தகவலும் தெரிவிக்காமல் மைசூர் முகவரிக்கு ரூ.2 ஆயிரம் அனுப்ப மட்டும் உத்தரவு வந்தது. மாணவர்களுக்கு கற்றல் "மெட்டீரியல்ஸ்'க்காக இத்தொகை அனுப்பப்படுவதாக கூறுகின்றனர். அப்படி பார்த்தால், இதற்குமுன் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மூலம் புத்தகங்கள் பெற, கோவை நிறுவனத்துக்கு ரூ.5 ஆயிரம் "டிடி' அனுப்பினோம். கல்விக்கான "மெட்டீரியல்ஸ்' அனைத்தும் தமிழகத்தில் கிடைக்கும்போது, தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா மாநில நிறுவனம் மீது மட்டும் எதற்கு இந்த பாசம், என்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர்கல்வி வழிகாட்டல் செய்திகள் 06.07.2025

  உயர்கல்வி வழிகாட்டல் செய்திகள் 06.07.2025 ஞாயிறு நாளை 07.07.2025 தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் +2 மதிப்பெண் அடிப்படையில் BSC Nurs...