கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அரசு பள்ளி ஆசிரியர்களின் புலம்பல்...!

 
எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாங்கப்பா
 தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்களின் புலம்பல் இது ...

ஆசிரியர்கள் முன்பு ...
வகுப்பில் மாணவர் வருகையை பதிவு செய்வது , பாடமெடுப்பது , தேர்ச்சி குறைந்த மாணவர்களுக்கு கூடுதல் பாடம் எடுப்பது , உரிய விளக்கம் அளிப்பது, பள்ளி நிர்வாகப்பணி, தேர்தல் அலுவலர் ஆகியவற்றை நிறைவேற்றுபவர்.

ஆனால் தற்போது ...
மாணவர்களுக்கு பஸ் பாஸ், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பொறுப்பு, வங்கி கணக்கு துவக்கி தருவது, உதவித்தொகை பெற்று தருவது, இலவச புத்தகம், பை, ஜியோமெட்ரி பாக்ஸ், நோட்டு புத்தகம், காலணி, லேப்டாப், சீருடை, ரத்தவகை கண்டறிதல், ஜாதி மற்றும் வருமான சான்று பெற்றுத்தருதல், வாக்காளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் பணி, தொடர் மதிப்பீடு முறையில் மாணவர்களின் குறிப்பேடுகளை பாதுகாத்தல், கூடுதல் கல்வி அலுவலர் மற்றும் எஸ் எஸ் ஏ அலுவலக குறிப்புகளை பாதுகாத்தல், இந்த பணிகளை முடித்த பின்பு நேரம் இருந்தால் மாணவர்களுக்கு வகுப்பெடுத்தல் என்ற நிலையில் தான் இன்று ஆசிரியர்கள் உள்ளனர். இதில் பள்ளியின் தேர்ச்சி விகிதமும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் உள்ளது.

இப்போ சொல்லுங்க அவங்க புலம்பறதுல நியாயம் இருக்குதில்லே...

தினமலர் நாலாம் பக்கத்திலிருந்து...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்கறிஞர் வில்சன் MP அவர்களின் பேட்டி

TET Review Petition filed by our Tamilnadu State Govt : Advocate Wilson  தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்...