கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>காவலர், துப்புரவு பணியாளர் பணிக்கு 3,640 பேர் தேர்வு

அரசுப் பள்ளிகளில் பணிபுரிய, காவலர்கள், 1,470 பேர் மற்றும் துப்புரவு பணியாளர்கள், 2,170 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல், தமிழக அரசு இணையதளத்தில்  நேற்று வெளியிடப்பட்டன. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்வது தொடர்பான அறிவிப்பு, ஏற்கனவே வெளியாகி இருந்தது. வேலை வாய்ப்பு பதிவு அடிப்படையில், இவர்கள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில்,""இரு பணிகளுக்கும், குறிப்பிட்ட கல்வித்தகுதி நிர்ணயிக்கப்படவில்லை. வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், அனைவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிலர், 5ம் வகுப்பு படித்துள்ளனர். சிலர், 7ம் வகுப்பு படித்துள்ளனர். இவர்கள், விரைவில், பணி நியமனம் செய்யப்படுவர்'' என, தெரிவித்தன. சம்பளமாக, 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

December 2025 School Calendar

டிசம்பர் 2025 மாதத்திற்கான பள்ளி நாட்காட்டி December 2025 School Calendar  >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   >>> Be...